Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையில் சசிகலா - விதிமுறை மீறல்களின் முழுவிவரம் #RTI

Featured Replies

சிறையில் சசிகலா - விதிமுறை மீறல்களின் முழுவிவரம் #RTI

 
 

சசிகலா

 

சசிகலா சிறைக்குச் சென்ற நாளான 15.2.2017-லிருந்து 12.06.2017 வரை சிறையிலிருந்த போது யார் யாரெல்லாம் வந்து பார்த்தார்கள். எத்தனை முறை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. என்னென்ன விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்ற தகவல்கள் ஆர்டிஐ மூலம் வெளிவந்துள்ளன. ஆர்டிஐ ஆர்வலரான நரசிம்ம மூர்த்தி பெற்ற ஆர்டிஐ தகவல்கள் இதோ...

 

ஆர்டிஐ தகவல்கள் பெறப்பட்ட நாள்களின் அளவு 117 நாள்கள். கர்நாடக உயர்நீதி மன்ற விதிகளின் படி இந்தக் காலத்தில் 15 நாள்களுக்கு ஒரு சந்திப்பு என்ற அடிப்படையில் 8 முறை மட்டுமே நபர்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் 32 பார்வையாளர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பார்வையாளர் சந்திப்புக்கு 4 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் அதன்படி பார்த்தால் வெறும் 32 பார்வையாளர்கள் மட்டுமே சசிகலாவைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், சசிகலாவை சந்தித்தவர்களின் எண்ணிக்கை 82.

601வது சட்டப்பிரிவின் படி சிறையிலிருக்கும் நபரைச் சந்திக்க வழங்கப்படும் கால அவகாசம் 45 நிமிடங்கள்.  ஆனால், இந்தக் கால அவகாசங்கள் சிறை அதிகாரிகளின் உதவியோடு பார்வையாளர்களுக்கு அதிகமாக வழங்கபட்டுள்ளது.

சிறையில் உள்ள சசிகலாவைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் காலை 11 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  மூர்த்தி ராவ் எனும் வழக்கறிஞர் சசிகலாவைப் பார்க்கச் சென்ற போது மணி மாலை 6:40 வெளியே வந்த நேரம் இரவு 7:20. 

மாத வாரியாக வழங்கப்பட்ட பார்வையாளர் அனுமதி

பிப்ரவரி 16-28
மொத்த நாள்கள் = 13
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 7

மார்ச் மாதம்
மொத்த நாள்கள் = 31
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 12

ஏப்ரல் மாதம்
மொத்த நாள்கள் = 30
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 5

மே மாதம்
மொத்த நாள்கள் = 31
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 5

ஜூன் மாதம் 12ம் தேதி வரை
மொத்த நாள்கள் = 12
அனுமதி வழங்கப்பட்ட சந்திப்புகள் = 3

சசிகலாவை சிறையில் அதிக முறை சந்தித்தவர்கள்

விவேக் - 8 முறை
அசோகன் - 7 முறை
செந்தில் - 5 முறை
டிடிவி தினகரன் - 5 முறை

இதுமட்டுமில்லாமல் அக்டோபர் மாதம் 19 தேதிகளுக்குள்ளாகவே 3 சந்திப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மூன்று சந்திப்புகளின் விவரம்

6.10.2017 - அனுராதா
17.10.2017 - சுரேஷ் பாபு
24.10.2017 - அனுராதா 

பெறப்பட்ட இந்தத் தகவல்கள் அனைத்திலுமே சசிகலா விதிமுறைகள் மீறியுள்ளார் என்பது தெரிகிறது.

சசிகலா

சசிகலாவின் ஒருநாள்:

இதுமட்டுமில்லாமல் சசிகலாவின் ஒரு நாள் சிறையில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அவரது ஒருநாள் ஆச்சர்யமளிக்கும் விதமாக உள்ளது.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் கண் விழிக்கும் பழக்கம்கொண்ட சசி வழக்கமான நடைமுறைகளை முடித்துவிட்டு, ஒரு மணிநேரம் யோகா செய்யத் தொடங்குகின்றார். அதன்பிறகு சிறைவளாகத்தில் அரைமணி நேரம் நடைப்பயிற்சி, அதன்பிறகு குளித்து முடித்துவிட்டு சிறைக்குள் ஸ்பெஷலாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட லிங்கத்திற்கு, அன்றைய தினம் பறிக்கப்பட்ட வில்வ இலைகள், பூக்களைக் கொண்டு பூஜை செய்கின்றார். 

இந்தப் பூஜை மனஅமைதிக்காவும், இழந்த சக்தியை மீண்டும் சக்தி பெற ஆகமவிதிபடி இந்தச் சிவலிங்கத்திற்கு ரகசியமாக தேவதிராஜ் ஐயர் மந்திரங்களை ஓதி பூஜை செய்து கொடுத்து வருகின்றார். கடந்த 2018 ஜனவரி 30-ந் தேதி சிறையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து கொடுத்துள்ளார். 

காலை 8 மணிக்கு சசிகலாவுக்கு ஸ்பெஷலாகத் தயார் செய்யப்பட்ட உப்புமா அல்லது ரவை இட்லி தயாராக இருக்கும். சுகர் பேஷன்ட்டுகளான சசி, இளவரசி இருவருக்கும் காலை உணவு 8 மணிக்கு எல்லாம் முடிந்துவிடும். 

காலை உணவை முடித்த பிறகு தமிழகத்திலிருந்து வெளியாகும் தினசரி செய்தித்தாள்கள் படிப்பார். 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் அன்றைய தேதிக்கு யார் யாரைச் சந்திக்க வேண்டும் என்று விவரம் கிடைத்தவுடன், அதை துண்டுச்சீட்டு மூலம் தகவல் அனுப்பி அவர்களைச் சந்திப்பார். 

சரியாக 11 மணிக்கு சுகர் இல்லாமல் டீ மற்றும் சுகர்ஃப்ரீ பிஸ்கெட் கிடைக்கும். மதியம் 1 மணிக்குப் பழங்கள் மற்றும் வேகவைத்த காய்கறி மட்டுமே உணவாக எடுத்துக்கொள்ளும் சசிகலா சில சமயம் வெறும் மோர்சாதம் சாப்பிடுவார். 

மாலை 5 மணிக்கு வேகவைத்த சுண்டல் அல்லது பருப்பு வகைகள் ஒரு கப், சுகர் இல்லாமல் டீ எடுத்துக்கொள்கிறார். எப்போதுமே இரவு 7 மணிக்கு இரண்டு சப்பாத்தி, ராகியில் செய்யப்பட்ட உணவு சாப்பிட்டு வருகின்றார். இதுதான் சசிகலாவின் சிறை மெனு லிஸ்ட். 

 

இப்படி ஒட்டுமொத்தமாக சிறை அதிகாரிகளின் உதவியோடு சொகுசாக வாழ்ந்து வந்த சசிகலாவுக்கு டிஜிபி ரூபா செக் வைத்தார். ஷாப்பிங் செல்லும் வீடியோ வெளியானது என ஊழல், விதிமீறல்களின் ஒட்டுமொத்த உருவமாகவே சிறைக்குள்ளும் வாழ்ந்து வருகிறார் சசிகலா. 

https://www.vikatan.com/news/coverstory/116526-misconduct-of-sasikala-in-jail.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.