Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இந்தியாவை ஓரம் கட்ட சீனா எடுக்கும் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இந்தியாவை ஓரம் கட்ட சீனா எடுக்கும் முயற்சி

- பி.இராமன் -

பாகிஸ்தானிலுள்ள க்வாதார் துறைமுகம் இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மியன்மாரிலுள்ள சிட்வீ துறைமுகம் ஆகியன குறித்து 2002 ஆம் ஆண்டிற்கு முன்னர் உலக மக்கள் அதிக அளவில் அறிந்திருக்கவில்லை. மீனவர்களின் நடவடிக்கைகளுக்கான மீன்பிடித் துறைமுகங்களாக மட்டுமே இந்தத் துறைமுகங்கள் விளங்கின. இந்தத் துறைமுகங்களால் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என எந்தவொரு ஆய்விலும் இதுவரை குறிப்பிடப்படவில்லை.

2002 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவின் கடற் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் பின்னர் இந்த மூன்று துறைமுகங்களின் பெயர்கள் அடிபட ஆரம்பித்தன. ஆரம்பத்தில் க்வாதார் துறைமுகம் மீது கவனம் ஈர்க்கப்பட்டது.ஆனால் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம் மீது பலரது கவனமும் ஈர்க்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் சிட்வீ துறைமுகம் மீதும் கவனம் ஈர்க்கப்படலாம்.

இதுவரை காலமும் பெயர் அடிபடாமலிருந்த இந்த மூன்று துறைமுகங்களும் இந்தியக் கடற் பாதுகாப்பு வல்லுநர்களின் கவனத்தைத் திடீரென ஈர்த்ததற்கான காரணம் என்ன? இந்த மூன்று துறைமுகங்கள் மீதும் சீனா அக்கறை எடுக்கத் தொடங்கியதும் அந்தத் துறைமுகங்களை சர்வதேச துறைமுகங்களாக்குவதற்கு அந்தந்த நாடுகளுக்கு உதவிகளை வழங்குவது என சீனா முன்வந்ததுமே காரணமாகும். இந்தத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்தலாம்.

க்வாதார் மற்றும் சிட்வீ துறைமுகங்கள் தொடர்பாக சீனா கொண்டுள்ள பொருளாதார மற்றும் தந்திரோபாயமான ஆர்வங்கள் தெளிவானவை. மலாக்கா நீரிணை ஊடாக அரேபிய நாடுகளில் இருந்தும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியனவற்றை ஏற்றி வரும் கப்பல் மீது பயங்கரவாதிகளால் அல்லது கடற்கொள்ளையர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் காரணமாக தனது நாட்டில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் சீனாவைப் பீடித்துள்ளது. சீனா தனது நாட்டிற்குத் தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு மலாக்கா நீரிணை ஊடாக மட்டும் கொண்டு வருவது தொடர்பாக வைத்துள்ள நம்பிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை சீனாவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தனக்குள்ள மாற்று வழிகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய நிலைக்குச் சீனா தள்ளப்பட்டது. பொருத்தமான மாற்று வழிகளைச் சீனா தேடிக் கொண்டிருந்தது.

இது தொடர்பாக, இரு கட்டங்களைக் கொண்ட திட்டத்தை சீனா தயாரித்துள்ளது. அதன் முதலாவது கட்டத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியனவற்றை ஏற்றி வரும் கப்பல்களை பாகிஸ்தானிலுள்ள க்வாதார் துறைமுகத்திற்கு அனுப்பி வைப்பதாகும். அங்கிருந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசம் ஊடாகத் தரைவழியாக குழாய் மார்க்கமாக ஷிங்ஜியாங்க்கு அனுப்புவதாகும். மேலும், சில கப்பல்களை மியன்மாரிலுள்ள சிட்வீ துறைமுகத்திற்கு அனுப்பி வைத்து அங்கிருந்து எரிபொருள்கள் மற்றும் எரிவாயுவை சீனாவிலுள்ள யுனான் நகருக்கு குழாய் வழியாக அனுப்பி வைப்பது இரண்டாவது திட்டமாகும்.

எரிசக்தி விநியோகம் மீதான அச்சுறுத்தல்களைக் குறைப்பதுடன் சீனாவிலுள்ள ஷிங்ஜியாங் மற்றும் அதனை அண்டிய நகரங்களில் வெளிநாட்டுச் சந்தைகளை இந்த க்வாதார் துறைமுகம் ஊடாக உருவாக்குவதே சீனாவின் நோக்கமாகும். அதேபோலவே, சிட்வீ துறைமுகம் மூலமாக யுனான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெளிநாட்டுச் சந்தைகள் உருவாகலாம்.

க்வாதாரில் விசேட பொருளாதார வலயத்தை உருவாக்குவது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தனது இணக்கத்தை சீனாவுக்குத் தெரிவித்துள்ளது. இந்தப் பொருளாதார வலயத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஆபிரிக்க நாடுகளுக்கு மட்டுமே அனுப்பலாம் என்ற நிபந்தனைக்கு அமையவே பாகிஸ்தான் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்தத் தொழிற்சாலைகளை சீனாவில் அமைப்பதை விட க்வாதாரில் அமைப்பதால் உற்பத்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான செலவுகள் குறையும். ஆனால் சிட்வீ துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் இவ்வாறான பொருளாதார வலயத்தை உருவாக்கும் திட்டம் தற்போது சீனாவிடமில்லை.

க்வாதார் துறைமுகம் மீது சீனா அக்கறை கொள்வதற்குப் பொருளாதாரம் மற்றும் எரிசக்திப் பிரச்சினைகள் மட்டும் காரணம் அல்ல. பல்வேறு காரணங்கள் உள்ளன. சீனாவின் கடற்படைக்கு இந்தத் துறைமுகம் மிக முக்கியமானதொன்றாகும். இந்தப் பிரதேசத்தில் சீனக் கப்பல்கள் நுழையக்கூடிய வேறு துறைமுகங்கள் எவையுமில்லை. சீனக் கப்பல்களுக் எரிபொருள்களை வழங்க க்வாதார் துறைமுகம் வசதியாக இருக்கும். மேலும், வளைகுடாவில் இடம்பெறும் சம்பவங்கள் குறிப்பாக, அமெரிக்க கடற் படையின் நடமாட்டங்கள் ஆகியனவற்றைக் கண்காணிக்கவும் ஒற்றுக் கேட்கவும் ஒரு கட்டுப்பாட்டுக் கோபுரமாக க்வாதார் துறைமுகம் அமையும்.

க்வாதார் துறைமுகத்தை சர்வதேச மட்டத்திற்கு அபிவிருத்தி செய்யவும் கடற்படைத் தலைமையகமாக உருவாக்கவும் பாகிஸ்தான் 1971 ஆம் ஆண்டிலிருந்தே ஆர்வம்கொண்டிருந்தது. 1971 இல் இடம்பெற்ற யுத்தத்தில் கராச்சித் துறைமுகம் மீது இந்தியக் கடற்படை தீவிர தாக்குதலை மேற்கொண்டது. கராச்சித் துறைமுகத்தை மட்டுமே நம்பியிருந்ததால் ஏற்பட்ட நஷ்டங்கள் குறித்து அப்போது பாகிஸ்தான் இராணுவத் திட்டங்களை வகுப்பவர்கள் உணர்ந்தனர். இந்த யுத்தம் முடிவடைந்து பல வருடங்களுக்குப் பின்னர் க்வாதார் துறைமுகத்தைக் கடற்படைத் தளமாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இது தங்கள் கடற்படைக்கு மிகவும் சாதகமான நிலையைத் தோற்றுவிக்கும் எனப் பாகிஸ்தான் நம்பியது. அந்தத் திட்டம் தயாரிக்கப்பட்ட வேளையில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடிய நிதி வசதிகள் பாகிஸ்தானிடம் இருக்கவில்லை. மேலும், பொருளாதார ரீதியாகவும் அந்தத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

சோவியத் ரஷ்யா சிதைவுண்டதையடுத்து மத்திய ஆசியாவில் சுதந்திரமான பல நாடுகள் உதித்தன. இதனால் உருவான பொருளாதார வாய்ப்புகளால் மத்திய ஆசிய நாடான ஆப்கான் மற்றும் சீனாவின் ஷிங்ஜியாங் வலயங்களில் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகள் உருவாகும் என நம்பப்பட்டது.

2002 ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் ஆற்றல் பாகிஸ்தானிடம் இருக்கவில்லை. நிதி வசதியும் இருக்கவில்லை. அதேபோலவே, துறைசார் தொழில்நுட்ப வல்லுநர்களும் இருக்கவில்லை.

வளைகுடா நாடுகள் எவையும் பாகிஸ்தானின் இந்தத் திட்டத்திற்கு உதவிகளை வழங்க முன்வராத நிலையில் பெனாஷிர் பூட்டோ மற்றும் நவாஷ் ஷெரிப் ஆகியோரின் அரசாங்கங்கள் அமெரிக்காவின் அதிருப்தியைச் சம்பாதிக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாக சீனாவின் உதவிகளைப் பெற விரும்பவில்லை.

இருப்பினும், அமெரிக்காவால் உருவாகக் கூடும் அழுத்தங்கள் மத்தியிலும் ஜெனரல் பர்வெஸ் முஷாரப் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான உதவிகளைச் சீனாவிடம் கோரினார். இது 2001 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அவ்வேளையில் சீனாவின் பிரதமரான சுரோன்ஜி பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பாகிஸ்தானால் இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்து. சீனா இதற்கு நிதி வழங்க முன் வந்ததுடன் திட்டத்தை நிறைவேற்றும் பணியையும் ஆரம்பித்தது.

2006 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் க்வாதார் சர்வதேச வர்த்தகத் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் சீன பொறியியலாளர்களால் குறித்த கால எல்லைக்கு முன்னராக முடிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஜனாதிபதியால் இந்தத் துறைமுகம் அண்மையில் திறந்து வைக்கப்பட இருந்தது.இந்தத் துறைமுகத்தில் கடற்படைத் தளத்தை அமைக்கும் பணிகள் சீனப் பொறியியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் 2010 ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மாரிலுள்ள சிட்வீ துறைமுகத்தை சர்வதேச மட்டத்திற்கு அபிவிருத்தி செய்ய சீனா முன்வந்துள்ளது. மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்நோக்கும் மியன்மார் அரசு பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து தன்னை மீட்பதற்கு சீனாவின் இந்த ஒத்துழைப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டது.சீன அரசின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ள இந்தத் துறைமுக அபிவிருத்தி தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி சிட்வீ துறைமுகம் ஒரு பொருளாதாரத் துறைமுகமாக மட்டுமே விளங்கும். இராணுவ முக்கியத்துவம் எவையும் கிடையாது.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி தொடர்பான உதவிகளைச் சீனாவிடமிருந்து பெறுவது என்ற எண்ணம் முந்நாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்திலேயே உருவானது. 2005 ஏப்ரல் 10 ஆம் திகதி அப்போதைய சீனப் பிரதமர் சூ வென்ஜியாவோ இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் அம்பாந்தோட்டையில் கப்பல் கட்டும்தளம் அமைப்பதற்கும் எண்ணெய்க் குதங்களை அமைப்பதற்கும் துறைமுக அதிகார சபைக்கும் சீனாவைச் சேர்ந்த ஹுவாங்கியு கட்டிட மற்றும் பொறியியல் நிறுவனத்திற்குமிடையே புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது விரைவில் செயல்வடிவம் பெறாவிடினும் அண்மையில் ஜனாதிபதி சீனாவிற்கு மேற்கொண்ட உத்தியோக பூர்வ விஜயத்தையடுத்து அந்தத் திட்டம் விரைவுபடுத்தப்படவுள்ளது

2007 மார்ச் 3 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் சீனத் தலைவர்களுக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூட்டறிக்கையில் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி தொடர்பாகக் குறிப்பிடப்படவில்லை. ஷிங்குவா ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கும் குவாங்ஷு நகரத்திற்குமிடையே நட்புறவு உடன்பாடு ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இலங்கை துறைமுக அதிகார சபையின் உப தலைவரான பிரியந்த பந்து விக்கிரம (இவரும் சீனா சென்ற குழுவில் இடம்பெற்றிருந்தார்) தன்னுடன் சென்ற ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, இன்னும் இரண்டு மாதங்களில் அம்பாந்தோட்டத் துறைமுகப் பணிகளை ஆரம்பிக்கச் சீனா இணங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.விக்கிரமவி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.