Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊசலாடும் நல்லாட்சி பின்வாங்கும் மஹிந்த

Featured Replies

ஊசலாடும் நல்லாட்சி பின்வாங்கும் மஹிந்த

 

உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வுகள் வெளி­வந்­ததி­லி­ருந்து நாட்டில் தேசிய அர­சி­யலில் பாரிய கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் உள்­ளூ­ராட்சி தேர்தல் ஒன்றின் கார­ண­மாக தேசிய அர­சியல் மட்­டத்தில் இந்­த­ளவு தூரம் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டமை மிக முக்­கி­ய­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்தத் தேர்தல் மிகத்­தா­ம­த­மா­கவே நடை­பெற்­றது. 2015 ஆம் ஆண்டு நடை­பெற்­றி­ருக்­க­வேண்­டிய உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை மாற்றம் கார­ண­மாக பாரிய தாம­தத்தின் பின்­னரே நடை­பெற்­றது.

தேர்தல் நடை­பெறும் முன்­னரே இந்தத் தேர்­தலின் பின்னர் பாரிய அர­சியல் நெருக்­க­டிகள் ஏற்­படும் என கூறப்­பட்ட நிலையில் பல்­வேறு எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் நடை­பெற்­றது. அந்த வகையில் தேர்தல் முடி­வுகள் யாரும் எதிர்­பா­ராத வகையில் பாரிய அதிர்ச்­சியை ஆளும் தேசிய அர­சாங்­கத்­திற்கு கொடுத்­துள்­ளது. அதா­வது தேசிய அர­சாங்கம் ஆட்­டம்­காணும் வகையில் தேர்தல் முடி­வுகள் அமைந்­துள்­ளன. எதிர்­பா­ராத வகையில் சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து பிரிந்­து­சென்ற மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன இந்தத் தேர்­தலில் 340 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் 244 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அதி­கா­ரத்தை கைப்­பற்றி வெற்­றி­யீட்­டி­யது. இவ்­வா­றா­ன­தொரு எழுச்­சியை மஹிந்­த­ ராஜ­பக் ஷவிடம் அர­சியல் கட்­சி­களோ அல்­லது மக்­களோ எதிர்­பார்க்­க­வில்லை.

 அந்­த­வ­கையில் ஸ்ரீ­­லங்கா பொது­ஜன பெர­முன 44 வீத­மான வாக்­கு­க­ளையும் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 35 வீத­மான வாக்­கு­க­ளையும் வெற்­றி­கொண்­டுள்­ளன. அதே­நி­லையில் பல்­வேறு சின்­னங்­களில் போட்­டி­யிட்ட ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி 15 வீத­மான வாக்­கு­களை மொத்­த­மாக பெற்­றுள்­ளது. அடுத்­த­டுத்த நிலை­களில் தமிழ்த்தேசி­யக்­கூட்­ட­மைப்பும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் உள்­ளன.

இந்­நி­லையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்­டணி வெற்­றி­பெற்­றது. அதன்­பின்னர் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்சி வெற்­றி­பெற்­றது. அதன் பின்னர் இரண்­டரை வரு­டங்கள் கடந்து இந்த தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இரண்டாம் இடத்­திற்கு சென்­றி­ருக்­கின்­றது. அந்­த­வ­கையில் இந்தத் தேர்தல் முடி­வுகள் அனைத்து மட்­டத்­திலும் நெருக்­க­டிகள் ஏற்­பட்­டு­விட்­டன. தேர்தல் முடிவு வெளி­வந்­த­வு­ட­னேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு அழைத்து பேச்சு நடத்­தினார்.

இதன்­போது மக்கள் ஆணை மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு கிடைத்­துள்­ளதால் அர­சாங்­கத்தில் பாரிய மாற்­றங்­களை செய்­ய­வேண்­டி­யுள்­ளது. எனவே பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க விலகி கரு ஜய­சூ­ரி­யவை அந்தப் பத­விக்கு நிய­மிக்­கு­மாறு ஜனா­தி­பதி கேட்­டுக்­கொண்­ட­துடன் இந்தப் புதிய மாற்­றங்­க­ளுடன் அர­சாங்­கத்தை கொண்டு நடத்த வேண்­டு­மென யோசனை முன்­வைத்­தி­ருக்­கின்றார். இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தியின் கோரிக்­கைக்கு எந்த பதி­லையும் அளிக்­காமல் தான் தனது கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் பேசு­வ­தாக வந்­து­விட்டார்.

அதன்­பின்னர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். இதன்­போது பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே நீடிக்­க­வேண்டும் என தெரி­வித்­தி­ருந்­தனர். எனினும் ஒரு­சிலர் தலை­மைப்­ப­த­வி­யி­லி­ருந்து பிர­தமர் வில­கு­வது தற்­போ­தைய நிலை­மையில் பொருத்­த­மாக அமையும் என யோச­னைகள் முன்­வைத்­தி­ருந்­தனர்.

எவ்­வா­றெ­னினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் பிர­த­ம­ராக நீடிக்­க­வேண்டும் என்­ப­தற்­கான ஒத்­து­ழைப்பை ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளி­டமும் தேசிய முன்­னணி உறுப்­பி­னர்­க­ளி­டமும் பெற்­றுக்­கொண்டார். அதன்­பின்னர் ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் அனைத்தும் ஜனா­தி­ப­தியை சந்­தித்து தேசிய அர­சாங்கம் தொட­ர­வேண்டும் என்றும் பிர­தமர் பத­வியில் ரணிலே நீடிக்­க­வேண்டும் என்றும் தெரி­வித்­தி­ருந்­தனர். இதன்­போது ஜனா­தி­பதி சாத­க­மான பதிலை தெரி­விக்­க­வில்லை என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அதன்­பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு தட­வைகள் காலையும் மாலை­யு­மாக அல­ரி­மா­ளி­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளையும் ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­கா­ளிக்­கட்சி தலை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்சு நடத்தி வரு­கின்றார். இந்த சந்­திப்­புக்கள் வெள்­ளிக்­கி­ழமை மாலை­வரை இடம்­பெற்­றுக்­கொண்­டுதான் இருந்­தன.

மறு­புறம் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் தனது கட்சி உறுப்­பி­னர்­க­ளையும் தனது கூட்­ட­ணிக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளையும் சந்­தித்து தொடர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றார். ஐக்­கிய தேசி­யக்­கட்சி தனித்து ஆட்சி அமைக்­க­வேண்­டு­மென அக்­கட்­சியில் பின்­வ­ரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூறி­னாலும் பெரும்­பா­லான ஐக்­கிய தேசி­யக்­கட்சி உறுப்­பி­னர்கள் இரண்டு பிர­தா­ன­கட்­சி­களும் இணைந்த தேசிய அர­சாங்கம் நீடிக்­க­வேண்­டு­மென தெரி­வித்து வரு­கின்­றனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தேசிய அர­சாங்கம் நீடிக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றார். அத்­துடன் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே அந்தப் பத­வியில் நீடிக்­க­வேண்­டு­மென தெரி­விக்­கின்­றன. அந்­த­வ­கையில் ஒரு­சில எதிர்ப்­புக்கள் இருந்­தாலும் தான்

தொடர்ந்து பிர­தமர் பத­வியில் நீடிக்­க ­வேண்டும் என்ற ஒத்­து­ழைப்பை பெற்­றுக் ­கொண்­டுள்­ளமை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சாணக்­கி­யத்தை வெளிக்­காட்­டு­கின்­றது. இதே­வேளை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருக்கும் அர­சாங்­கத்தில் தாம் அங்கம் வகிக்­கப்­போ­வ­தில்லை என மிகவும் திட்­ட­வட்­ட­மாக கூறி­வ­ரு­கின்­றனர். அதே­போன்று தனித்து ஆட்சி அமைக்க தாம் முயற்­சிப்­ப­தா­கவும் தெரி­வித்து வரு­கின்­றனர். இதன் உச்­ச­பட்­ச­மாக ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் மஹிந்த அம­ர­வீர தமது கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு சந்­தர்ப்பம் தரு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்தார்.

அதே­போன்று சுதந்­தி­ரக்­கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷதலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியின் ஆத­ரவு கிடைக்கும் என்று அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர். இந்த நிலையில் நேற்று முன்­தினம் இரவும் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்­கு­மி­டையில் முக்­கிய சந்­திப்­பொன்று நடை­பெற்­றது. எனினும் இந்த சந்­திப்­பிலும் இணக்­கப்­பா­டான முடி­வுகள் எதுவும் எட்­டப்­ப­ட­வில்லை.

இது இவ்­வா­றி­ருக்க நேற்­றுக்­காலை பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களை சந்­தித்து முக்­கிய அறி­விப்­பொன்றை வெளி­யிட இருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திடீ­ரென நேற்று முன்­தினம் இரவு அந்த சந்­திப்பை ரத்து செய்­தி­ருந்தார். இந்த நிலையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் இந்த நெருக்­கடி தொடர்ந்து நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது­ஜன பெர­முன இந்­நாட்­களில் மகி­ழ்ச்­சி­யாக காலத்தைக் கடத்­திக்­கொண்­டி­ருப்­ப­தாக தெரி­கின்­றது.

இந்த இடத்தில் தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய மஹிந்த ராஜ­பக் ஷ நினைத்­தி­ருந்தால் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி பிர­தமர் பத­வி­யைக்­கூட பெற்­றி­ருக்கும் சாத்­தியம் காணப்­பட்­டது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மக்கள் ஆணை கிடைத்­துள்ள நிலையில் மஹிந்த ராஜ­பக் ஷ சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி இந்த டீலுக்கு வந்­தி­ருக்­கலாம், அதற்­கான சாத்­தியம் இல்லை என்று கூற முடி­யாது. ஆனால் மஹிந்த ராஜ­பக் ஷ அதைப்­பற்றி சிந்­திக்­க­வில்லை.

மாறாக மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் நேற்று முன்­தினம் கூடிய கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்கள் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தனித்து ஆட்சி அமைக்­கு­மானால் அதற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு தயார் என அறி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் மஹிந்த ராஜ­பக் ஷ ஏன் தற்­போ­தைய நிலை­மையில் பிர­தமர் பத­வியைப் பெறு­வ­தற்கு முயற்­சிக்­க­வில்லை என்­பது இங்கு சிந்­திக்­கப்­ப­ட­வேண்­டிய விடயம்.

அதா­வது கடந்த மூன்று வரு­டங்­க­ளாக எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ எதிர்­வரும் இரண்­டு ­வ­ரு­டங்­களும் எதிர்க்­கட்­சியில் இருந்­த­வாறே அடுத்த பிர­தான தேர்­த­லுக்கு முகம் கொடுக்­கலாம் என எண்­ணி­யி­ருக்­கலாம். அதே­போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கீழ் பிர­த­ம­ராக பதவி வகிப்­ப­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷ விரும்­பாமல் இருக்­கலாம். அது­மட்­டு­மன்றி தற்­போது நாடு பொரு­ளா­தார ரீதி­யிலும் ஜெனிவா விவ­கா­ரத்­திலும் நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ளது. எனவே இந்த நேரத்தில் அர­சாங்­கத்தில் பிர­தமர் பத­வியைப் பெறு­வதை மஹிந்த விரும்­பாமல் இருக்­கலாம்.

இந்­தக்­கா­ர­ணங்­க­ளினால் மஹிந்த இதற்­கான முயற்­சியை மேற்­கொள்­ளாமல் இருந்­தி­ருக்­கலாம். அது­மட்­டு­மன்றி மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் ரணி­லுக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்டாம் எனக்­கூ­றி­ய­தாக அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன கூறி­யி­ருந்தார். எவ்­வா­றெ­னினும் மஹிந்த ராஜ­பக் ஷ தற்­போ­தைய நிலை­மையில் சுதந்­தி­ரக்­கட்­சியை இணைத்­துக்­கொண்டு ஆட்சி அமைக்­கவோ, அல்­லது பிர­தமர் பத­வியை பெறு­வ­தற்கோ விரும்­ப­வில்லை என்­பது தெரி­கின்­றது. ஆனால் சுதந்­தி­ரக்­கட்சி மத்­தியில் ஆட்சி அமைப்பின் அதற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு மஹிந்த தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி தயா­ராக இருக்­கி­றது.

இந்த நிலையில் தேசிய அர­சி­யலில் நெருக்­கடி நிலைமை தொடர்ந்து கொண்டே போகின்­றது. இந்த நிலையில் இரண்டு தரப்­பிற்கும் மக்கள் தெளி­வான செய்­தியை இந்தத் தேர்­தலில் வழங்­கி­யுள்­ளதை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது கடந்த மூன்று வரு­டங்­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து சரி­யான முறையில் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­கா­ததன் கார­ண­மாக மக்கள் கடும் எதிர்ப்பை தேர்­தலின் மூலம் வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர். எனவே அடுத்து வரும் இரண்டு வரு­டங்­களில் மக்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்றி செயற்­ப­ட­வேண்­டி­யது நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

அதே­போன்று மஹிந்த தலை­மை­யி­லான பொது­ஜன பெர­மு­னவுக்கும் மக்கள் முக்­கி­ய­மான செய்­தி­யொன்­றையே வழங்­கி­யி­ருக்­கின்­றனர். அதுவும் 50 வீத­மா­ன ­ஆ­த­ரவை வழங்­காமல் 44 வீத­மான ஆத­ர­வையே வழங்­கி­யி­ருக்­கின்­றனர். எனவே எதிர்­வரும் இரண்­டரை வரு­டங்கள் வரை மக்­களின் ஆத­ரவு மஹிந்­த­வுக்கு இருக்­குமா என்­பதை சிந்­திக்­க­வேண்டும். எனவே மஹிந்த தரப்­பி­னரும் மக்கள் தமக்கு வழங்­கி­யுள்ள பொறுப்பு தொடர்பில் சிந்­தித்து செயற்­ப­ட­வேண்டும்.

மக்கள் தீர்ப்பின் வலி­மையை அர­சியல் தலை­வர்கள் புரிந்­து­கொள்­ள­ வேண்டும். எந்­தக்­கட்­சி­யாக இருந்­தாலும் சரி­யாக செயற்­ப­டா­விடின் மக்­களால் தூக்கி எறி­யப்­ப­டு­வார்கள் என்­பதை புரிந்­து­கொள்­ள ­வேண்டும். மக்­களின் இறைமை அந்­த­ள­வுக்கு வலி­மை­யா­னது. தற்­போது ஏற்­பட்­டுள்ள இந்த நெருக்­கடி நிலை எந்­த­வ­கை­யிலும் நீடிக்­கக்­கூ­டாது. கடந்த ஒரு­வா­ர­மாக நாட்டின் ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சியடைந்து வருவதுடன் அர­சியல் ஸ்திர­மற்­ற­தன்மை நீடித்துக்கொண்டிருக்கின்றது.

 இந்த நிலைமை தொடரக்கூடாது. மஹிந்த ராஜ­பக் ஷ தற்போது பிரதமர் பதவியை எதிர்பார்க்கவில்லை என்பதால் இரண்டு கட்சிகளும் இணைந்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக ஆட்சியை தொடரவேண்டும். குறிப்பாக தமிழ் பேசும் மக்களைப்பொறுத்தவரையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டவர்களாகவே உள்ளனர். தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அதிகாரப் போட்டியில் சண்டை பிடித்துக்கொண்டிருக்கின்றனரே தவிர தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

தென்னிலங்கை அரசியல் பரபரப்பாகவே இருக்கின்றது. சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் கூட்டு எதிரணியும் மாறி மாறி தொடர்ந்து தமது கட்சிக்குள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றன. ஆனால் எந்தவொரு சந்திப்பிலும் இறுதி இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. கூட்டு அரசாங்கம் நீடிக்கவேண்டும் என ஐ.தே.க. விரும்புகின்றது. ஆனால் அதனை சுதந்திரக்கட்சி விரும்பாத நிலை வெளிப்படுகின்றது. சுதந்திரக்கட்சி ஆட்சி அமைத்தால் ஆதரவு வழங்குவோம் என மஹிந்த கூறுகிறார். இந்நிலையில் நாட்டின் தேசிய அரசியலில் ஸ்திரமின்மையான நிலைமை நீடிக்கிறது.

முடிவு என்னவாகும் என்பது இதுவரை தெளிவாகவில்லை. ஆனால் தேர்தல் முடிவுகள் தேசிய அரசாங்கத்தையும் தேசிய அரசியலையும் உலுக்கிவிட்டது என்பதே உண்மையாகும்.

ரொபட் அன்­டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-02-17#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.