Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தரப்­புக்­க­ளுக்கு மக்கள் வழங்­கிய ஆணை

Featured Replies

தமிழ் தரப்­புக்­க­ளுக்கு மக்கள் வழங்­கிய ஆணை

sfas-ee659ff965a8a7752c01ee6a46416556afd18bc5.jpg

 

இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதில் இருந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அணு­கு­மு­றை­களில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்­களின் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின்னர் அந்த மக்­களின் உரிமை கோரிக்­கையை தொடர்ச்­சி­யாக ஜன­நா­யக ரீதி­யாக முன்­னெ­டுக்க வேண்­டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தோள்­களில் விழுந்­தி­ருந்­தது. மாறி­வந்த சர்­வ­தேச சூழலை அதா­வது இறுதிப் போரின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனிதஉரிமை மீறல்கள்,போர்க்­குற்­றங்கள் என்­ப­வற்றை மூல­த­ன­மாகக் கொண்டு தமிழ் மக்­க­ளது அடிப்­படை பிர­ச­்­சி­னைகள் தொடக்கம் நிரந்­தர தீர்வு வரை தீர்க்கக் கூடிய வாய்ப்பி­ருந்தும் அதில் கூட்­ட­மைப்பு தலை­மையின் இரா­ஜ­தந்­திரம் தோற்­று­விட்­ட­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. மாறாக இலங்கை அர­சாங்கம் ஐ.நா.மனி­த­ உ­ரிமைகள் பேர­வையில் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றிய தீர்­மா­னத்தைக் கூட நடை­மு­றைப்­ப­டுத்­தாது மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­கா­சத்தை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் ஆத­ர­வுடன் பெற்­றி­ருந்­தது. இந்­த ­நி­லையில் கால அவ­கா­சத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அர­சாங்கம் மக்­க­ளது நாளாந்த பிரச்­ச­ினை­களைக் கூட தீர்ப்­ப­தற்கு தயக்கம் காட்டி வரும் நிலை­மையே உள்­ளது.

வடக்கு,கிழக்கு பிர­தே­சங்­களில் காணி ­களை விடு­விக்கக் கோரியும், காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு நீதி கோரியும், அர­சியல் கைதி­களை விடு­விக்கக் கோரியும் ஜன­நா­யக ரீதி­யாக மக்­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தொடர் போராட்­டங்கள் ஒரு வரு­டத்தை எட்­டி­யுள்­ளது. தமது குடும்­பங்­களை பிரிந்து, வீடு­களை விட்டு தமக்கு கிடைக்க வேண்­டிய நீதி, நியா­யத்­திற்­காக அந்த மக்கள் வீதி­யோ­ரங்­களில் இருந்து போரா­டு­கின்ற நிலை­யிலும், நல்­லாட்சி என்று சொல்­லப்­படும் இந்த அர­சாங்கம் அந்த மக்கள் விட­யத்தில் குறைந்­த­பட்சம் மனி­தா­பி­மான ரீதியில் கூட நடந்து கொள்­ள­வில்லை. ஆட்சி மாற்­றத்­திற்கு உத­விய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­க்கட்சி வரி­சையில் இருந்து அர­சாங்­கத்­துடன் இணக்க அர­சியல் செய்து வரு­கின்ற போதும், இந்த விட­யத்தில் காத்­தி­ர­மாக செயற்­ப­ட­வில்லை. அர­சாங்­கத்­தி­னதும் தமது தலை­மை­க­ளி­னதும் செயற்­பா­டு­களால் விரக்­தி­ய­டைந்த மக்கள் தாமா­கவே தமது உரி­மைக்­கா­கவும் நீதிக்­கா­கவும் ஜன­நா­யக போராட்ட களங்­களை உரு­வாக்­கி­யுள்­ள­துடன் தமக்­கான ஒரு மாற்றுத் தலைமை பற்­றிய தேடல்­க­ளையும் ஆரம்­பித்­தி­ருந்­தனர். 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தவ­று­களை சுட்­டிக்­காட்டி தமிழ் மக்­களின் நியா­ய­பூர்­வ­மான கோரிக்­கை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் வலி­யு­றுத்தி, மக்கள் எழுச்­சி­யுடன் கூடிய 'எழுக தமிழ் 'மக்கள் எழுச்­சியை ஏற்­ப­டுத்­தியும் இருந்த வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரனின் இணைத் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் பேரவை கூட ஒரு மக்கள் இயக்கம் என்ற வகையில் தமது தலை­மைகள் மீது வெறுப்­ப­டைந்த மக்­க­ளுக்கு சரி­யான அர­சியல் தலை­மையை இனங்­காட்ட தவ­றி­யி­ருக்­கி­றது. வடக்கு முத­ல­மைச்சர் தலை­மையில் ஒரு மாற்றுத் தலைமை உரு­வாகும் என பர­வ­லாக பேசப்­பட்ட நிலையில் வடக்கு முத­ல­மைச்சர் மாற்று தலை­­மைக்கு தலைமை கொடுக்க தயக்கம் காட்டி வரு­கின்றார். இந்த நிலையில் தமிழ் மக்கள் தமது தலை­மைகள் மேல் அதி­ருப்­தி­ய­டைந்­த­வர்­க­ளாக மேய்ப்பார் அற்ற மந்­தை­க­ளாக வாக்குச்சீட்­டினை பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். இதுவே தென்­னி­லங்கை தேசிய கட்­சிகள் வடக்கு, கிழக்கில் அதி­க­மாக கால் ஊன்­று­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்கள் தமது தலை­மைகள் மீது கொண்­டுள்ள அதி­ருப்­தியை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி தென்­னி­லங்கை ஆளும் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளாக வடக்கு, கிழக்கில் செயற்­ப­டு­கின்­ற­வர்கள். தங்­களை தமிழ் தேசிய இனத்தின் மீது பற்­றுள்­ள­வர்­க­ளா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவே குரல் கொடுப்­ப­வர்­க­ளா­கவும் காட்டிக்கொள்­வதன் மூலம் தென்­னி­லங்கை தேசிய கட்­சி­களின் வாக்கு வங்­கியை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளனர். வட மாகா­ணத்தைப் பொறுத்­த­வரை ஐக்­கிய தேசியக் கட்சி  92 ஆச­னங்­க­ளையும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி 73 ஆச­னங்­க­ளையும் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 27 ஆச­னங்­க­ளையும் பெற்­றுள்­ளன. தமிழ் மக்­க­ளுக்கு சரி­யான அர­சியல் விழிப்­பு­ணர்வு ஊட்­டப்­ப­டா­மையும் தமது தலை­மை­களின் மீதான வெறுப்பும் மாற்றுத் தலைமை பற்­றிய தேடல்­க­ளுமே தென்­னி­லங்கை தேசியக் கட்­சி­களின் வாக்கு வங்­கியை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது. இந்த நிலையில் தமிழ் மக்கள் பேர­வை­யாக இருந்­தாலும் சரி அல்­லது ஏனைய தமிழ் கட்­சி­க­ளாக இருந்­தாலும் சரி மக்கள் நலன்சார் அர­சி­ய­லையும் வேலைத் திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்து மக்­களை ஒரு அர­சியல் அணி­யாக அணி திரட்­டாத பட்­சத்தில் அடுத்து வரும் தேர்­தல்­களில் இந்த நிலை மேலும் மோச­ம­டையக் கூடிய சூழலை உரு­வாக்கும்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான ஒரு மாற்று அணி­யாக கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் சுரேஷ் பிரே­மச்சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.­ஆர்.­எல்.எப். அணியும் இணைந்து புதிய கூட்டு ஒன்­றினை உரு­வாக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­தன. அவ்­வா­றான ஒரு கூட்டு உரு­வா­கி­யி­ருக்கும் பட்­சத்தில் பல தரப்­புக்­களும் அத­னுடன் இணைந்து கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்­களும் தமிழ் மக்கள் பேர­வை­யினது ஆத­ரவை முழு­மை­யாக பெறக்கூடிய சூழலும் உரு­வா­கி­யி­ருக்கும். இதனால் வாக்குச் சித­றலை கட்­டுப்­ப­டுத்தி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்று அணி­யாக அந்த அணி எழுச்சி பெறக் கூடிய நிலை உரு­வா­கி­யி­ருக்கும். தமிழ் தேசிய மக்கள் முன்­னணி வடக்கில் பெற்றுக் கொண்ட 90 ஆச­னங்­க­ளையும் தமிழர் விடு­தலைக் கூட்­டணி வடக்கில் பெற்றுக் கொண்ட 40 ஆச­னங்­க­ளையும் விட மேலும் பல ஆச­னங்­களை பெற்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பாரிய நெருக்­க­டி­களை உரு­வாக்கி மாற்று அணி­யாக தமிழ் தேசிய அர­சி­யலை முன்­ன­கர்த்­தி­யி­ருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பை ஈ.பி.­ஆர்­.எல்.எப். தவ­ற­விட்­டி­ருக்­கின்­றது. 

தேர்தல் முடி­வு­களின் படி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றீ­டாக தமிழ் தேசிய அர­சி­யலை முன்­ன­கர்த்தும் மாற்று அணி­யாக தமிழ் தேசிய மக்கள் முன்­னனி மாறி­யி­ருக்­கின்­றது. இந்த மாற்றம் சாதா­ர­ண­மாக ஏற்­பட்­ட­தொன்­றல்ல. கடந்த 2010 ஆண்டில் இருந்து அந்தக் கட்சி தனது கொள்­கையில் உறு­தி­யா­க­வி­ருந்து தொடர்ச்­சி­யான தோல்­வி­க­ளுக்கு மத்­தியில் முன்­னெ­டுத்து வந்த அர­சியல் வேலைத்­திட்­டங்­களின் அறு­வ­டையே. வடக்கு, கிழக்கு பகு­தி­களின் எல்லா மாவட்­டங்­க­ளிலும் தமது கட்­சியின் பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ளூ­ராட்சி சபை­க­ளினூ­டாக நிலை­நி­றுத்­தி­யுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்­னணி யாழ்ப்­பா­ணத்தில் இரு நக­ர­ச­பை­க­ளையும் கைப்­பற்றி கூட்­ட­மைப்­புக்கு அதிர்ச்சி கொடுத்­தி­ருக்­கின்­றது. தமிழ் மக்கள் மனங்­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அணு­கு­மு­றை­களால் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த மாற்­றத்­தையே தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும் தமிழர் விடு­தலைக் கூட்­டணியும் தென்­னி­லங்கை கட்­சி­களும் சில சுயேச்சைக் குழுக்­களும் ஈ.பி.­டி.­பி.யும் அறு­வடை செய்­தி­ருக்­கின்­றன. தமிழ் தேசிய அர­சி­யலை முன்­ன­கர்த்தும் தரப்­புக்­களை தவிர, தென்­னி­லங்கை சக்­திகள் பெற்றுக் கொண்ட வாக்­கினை எதிர்­வரும் தேர்­தல்­களில் தமிழ் தேசிய கட்­சி­களின் வாக்கு வங்­கி­யாக மாற்ற வேண்­டிய ஒரு நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதன் மூலமே தமிழ் தேசி­யத்தின் இருப்பை தக்க வைக்க முடியும்.

மக்கள் வழங்­கிய ஆணையை மதித்து தமிழ் தலைமைகள் தமக்கு கிடைத்த உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வினைத்திறனுடனும் திட்டமிடலுடனும் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு கட்சி அரசியல் பாராது தமிழ் தரப்புக்கள் ஆதரவு வழங்கி போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும். இதன் மூலமே வெறுப்படைந்துள்ள மக்கள் மீது அரசியல் ரீதியான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களது ஏக பிரதிநிதிகள் என்ற நிலை மாறியிருக்கின்றது. இந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் தரப்புக்களை ஒன்றிணைத்து நிரந்தர தீர்வுக்கான பயணத்தை மேற்கொள்ள தமிழ் தரப்புக்கள் முன்வரவேண்டும். இதுவே மக்கள் வழங்கிய ஆணையை மதிப்பதாக அமையும்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-17#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.