Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏரியில் மிதந்து வந்த 7 உடல்களால் பரபரப்பு !!!

Featured Replies

ஏரியில் மிதந்து வந்த 7 உடல்களால் பரபரப்பு !!!

 

 

இந்தியா - திருப்பதி அருகே ஏரியில் 7 உடல்கள் நேற்று மிதந்து வந்ததைத் தொடர்ந்து உடல்களை மீட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

இந்தியா - ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது.

நேற்று இந்த ஏரி வழியாக சென்றவர்கள் ஏரிக்குள் 7 உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த  ஒண்டிமிட்டா பொலிஸாரும், தீயணைப்புத்துறையினரும் அந்த ஏரிக்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்து வந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

7_dead_bodys_found.jpg

சடலங்களாக மிதந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் இது வரை கண்டறியப்படவில்லை

குறித்த  மலைப்பகுதியில் செம்மரங்கள் அதிகமாக உள்ளன. செம்மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வனத்துறையினரின் ரோந்துப் பணிகள் தீவிரமாக உள்ளது. எனவே இரவு நேரத்தில் செம்மரக்கட்டைகளை கடத்த வந்த  கடத்தல் கும்பல் அங்கு வந்த வனத்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடியபோது ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருத்து வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செம்மரக்கட்டை கடத்தும் கும்பலில் தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். எனவே உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

http://www.virakesari.lk/article/30777

 

 

 

ஆந்திர ஏரியில் 5 தமிழர் சடலங்கள் மீட்பு: தொலைபேசி எண்கள் அறிவிப்பு

 

 
aplake

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ராமர் கோயில் ஏரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள் குறித்த விவரம் அறிய ஆந்திர போலீஸார் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் பழைமையான ராமர் கோயில் உள்ளது. ஆந்திர அரசுக்கு சொந்தமான இந்த கோயில் சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனை தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. கோயிலுக்கு எதிரில் வனப் பகுதியை ஒட்டிய இடத்தில் பெரிய ஏரி உள்ளது. 

இந்நிலையில், இந்த ஏரியில் 5 பேரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மிதிப்பதை கண்ட பொது மக்கள் அதுகுறித்து கடப்பா போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏரியில் மேலும் சடலங்கள் உள்ளதா என நீச்சல் வீரர்களின் உதவியுடன் அவற்றை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

அந்த ஏரியின் கரையில் கிடந்த துணிப்பை ஒன்றில் சேலம் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே இவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சனிக்கிழமை இரவு வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சிலர் சென்றனர் என்றும் அவர்களைப் பிடிக்க போலீஸார் விரட்டி சென்றபோது தப்புவதற்காக ஏரியில் குதித்திருக்கலாம் என்றும் நீச்சல் தெரியாமல் அவர்கள் நீரில் மூழ்கி அவர்கள் இறந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 

மேலும் செம்மரம் வெட்டச் சென்றவர்களை பிடித்த ஆந்திர போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதில் அவர்கள் இறந்திருக்கலாம் என்றும், இதனை மறைக்க சடலங்களை போலீஸார் ஏரியில் வீசினார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

இறந்தவர்கள் யார், யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இந்நிலையில், கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட 5 தமிழர்கள் குறித்த விவரம் அறிய, ஆந்திர போலீஸார் 9121100565, 9121100581, 9121100582 என்ற தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர். 

http://www.dinamani.com/latest-news/2018/feb/19/ஆந்திர-ஏரியில்-5-தமிழர்-சடலங்கள்-மீட்பு-தொலைபேசி-எண்கள்-அறிவிப்பு-2866327.html

  • தொடங்கியவர்

ஆந்திர ஏரியில் 5 சடலங்கள்: போலீஸார் அத்துமீறல் என மனித உரிமை குழுக்கள் குற்றச்சாட்டு

cccccccdjpg

இறந்தவர்கள் சட்டைப் பையில் இருந்து ஆந்திர போலீஸார் கைப்பற்றிய புகைப்படங்கள்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிரேத பரிசோதனை நடைபெற்றன. இதில் 2 பேரின் உடல் அடையாளம் தெரிந்தன. அதேசமயம், இது போலீஸாரின் அத்துமீறிய செயல் என மனித உரிமைக் குழுவினர் மருத்துவமனை முன் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில், திருப்பதி-கடப்பா நெடுஞ்சாலையில் ஒண்டிமிட்டா எனும் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று காலை 7 சடலங்கள் மிதப்பதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரவு வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டு, 5 பேரின் சடலங்களை மீட்டனர். மேலும் சிலரின் சடலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இறந்தவர்களின் சடலங்களைப் பார்த்தால் அவர்கள் இறந்து சுமார் 2 அல்லது 3 நாட்கள் ஆகி இருக்கலாமென கருதப்படுகிறது. சிலரின் உடல்களில் கை,கால் முதலான உறுப்புகளில் காயங்கள் உள்ளன. சிலர் செருப்பு அணிந்து உள்ளனர். அவர்களது பைகளும் தோளில் உள்ளன. அனைத்துச் சடலங்களும் ஏறக்குறைய ஒரே இடத்தில் கிடந்தன. இந்த ஏரி முழுவதும் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. ஏரி மற்றும் ஏரியைச் சுற்றிலும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. மேலும், இந்த ஏரியில் அதிகபட்சமாக 6 அடி ஆழம் மட்டுமே தண்ணீர் உள்ளதாக அப்பகுதி கிராமத்தினர் கூறுகின்றனர்.

போலீஸார் கூறுவதுபோல், போலீஸாரிடமிருந்து தப்பி ஓடி செல்லும்போது ஏரியில் குதித்து மறுகரையில் உள்ள வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்த சேற்றில் ஓடக்கூட முடியாது என்கிறார்கள். அப்படியே ஓடினாலும், முன்னால் செல்பவர் சேற்றில் சிக்கி இருந்தால், பின்னால் வந்தவர்கள் அனைவரும் அதே வழியில் சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆதலால், இது வேண்டுமென்றே செய்த சதி என்றே தெரியவந்துள்ளது என்கிறார்கள்.

ஏற்கெனவே திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டனர். இதனால், இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் இது மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆணையமும் எச்சரித்தது. ஆனால் இதனை ஆந்திர அரசு கண்டுக்கொள்ளவில்லை. செம்மரம் கடத்தும் கும்பலை கட்டுப்படுத்த ஆந்திர போலீஸார் இம்முறை என்கவுன்டர் செய்யாமல், இவர்களை அடித்துக் கொன்று ஏரியில் வீசியிருக்கலாமென கூறப்படுகிறது.

இந்நிலையில், கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 சடலங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை போலீஸார் ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்தனர்.

இறந்தவர்களின் பைகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு பெண், ஆண் ஆகியோரின் புகைப்படங்களும், சில செல்போன் எண்களும் இருந்தன. ஒரு காகிதத்தில் ராமு, குமார், சேலம் என எழுதி அவர்களின் செல்போன் எண்களும் உள்ளன. மற்றொரு காதிகத்தில் சக்தி என எழுதப்பட்டு அதில் செல்போன் எண் குறிப்பிட பட்டுள்ளது. மேலும் “ஸ்ரீ லலிதா” டெக்ஸ்டைல்ஸ், கருமந்துறை எனும் ஒரு மஞ்சள் பையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த அடையாளங்களை வைத்து இன்று காலை முதல் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன், முருகேசன் ஆகிய இருவர் என அடையாளம் தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு ஆந்திர போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மீதமுள்ளவர்களின் விவரங்கள் தெரியவேண்டியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விவரங்கள் தெரிந்தாலோ அல்லது தெரிந்து கொள்ள வேண்டியிருந்தாலோ 91211 00565, 91211 00581, 91211 00582 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாமென கடப்பா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம்

பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட கடப்பா மாவட்டம், ரிம்ஸ் அரசு மருத்துவமனை முன், இன்று காலை மனித உரிமை சங்கத்தினர் அதன் தலைவர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஸ்ரீநிவாஸ் பேசியதாவது: அப்பாவி செம்மர கூலித் தொழிலாளர்களைக் கொல்வதே ஆந்திர அரசுக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால், இவர்களை இயக்கும் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள கடத்தல்காரர்களை இவர்கள் ஏன் கைது செய்வதில்லை. ஆந்திரா, தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த கடத்தல்காரர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போதுதான் இதனை கூலித் தொழிலாளர்கள் கைவிடுவார்கள்.

ஏற்கெனவே திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். இதுவரை 30 பேர் என்கவுன் டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறலாகும். ஆனால், தற்போது, கூலித் தொழிலாளர்களை அடித்துக் கொன்று, ஏரியில் வீசி போலீஸார் நாடகமாடுகின்றனர்.

இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். போலீஸாரின் அத்துமீறல்கள் முற்றிலுமாக அடக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் வரை ஆந்திர அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு மனித உரிமை சங்க தலைவர் ஸ்ரீநிவாஸ் கூறினார்.

http://tamil.thehindu.com/india/article22795667.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆந்திரா: இறந்தவர்களுடன் சென்ற 170 தொழிலாளர்களைக் காணவில்லை

100091228whatsappimage2018-02-19at10jpg

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் 170 பேர் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலைமை குறித்து எந்த தகவலும் இல்லை என்று உயிரிழந்தவர்களின் கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் ஒன்டிமிட்டா பகுதியில் ஏரியில், சேலத்தை சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள கல்வராயன் மலையில் சேலம் மாவட்டத்தில் 98 மலை கிராமங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 180 மலைகிராமங்கள் உள்ளன.

இந்த மலை கிராமங்களில் இருப்பவர்கள் கூலி வேலைக்காக மைசூருக்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த நபர்கள் இங்குள்ள தொழிலாளிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்படி அழைத்துச் சென்றவர்களில் அடியனூர் பகுதியை சேர்ந்த முருகேசன், கீரன்காடு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் சின்னபையன், அரசமரம் பகுதியை சேர்ந்த முருகேசன், கீழவாரை பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் ஆகியோர் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கருமந்துரை காவல்நிலைய போலீசார் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

100091227whatsappimage2018-02-19at101jpg

இதனிடையே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பெரியசாமி கூறும்போது, "சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள மலைகிராமங்களில் இருந்து 170 பேர் அழைத்துச் சென்றுள்ளனர். இதில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதி உள்ளவர்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை," என்றார்.

மேலும், ஆந்திராவில் இருந்து சடலங்களை கொண்டுவருவதற்காக உறவினர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து உறவினர்கள் கூறும்போது, "மைசூருக்கு கூலி வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி இங்குள்ளவர்களை அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஆந்திராவிற்கு எதற்காக சென்றார்கள், எப்படி இறந்தார்கள் என்பது குழப்பமாக உள்ளது. இறந்தவர்களின் சடலத்தை சேலம் கொண்டுவருவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடும் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றும் கேட்டுக்கொண்டனர்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22803392.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.