Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜம்மாள்... ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா? #VikatanExclusive

Featured Replies

ராஜம்மாள்... ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா? #VikatanExclusive

 

ஜெயலலிதா

 

ஜெயலலிதா மரணத்தின் சல்லி வேரை தேடிக்கொண்டிருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன். டாக்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா வீட்டில் பணி செய்யும் ஊழியர்களை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. போயஸ் கார்டன் வீட்டில் சமையல் செய்யும் ராஜம்மாளை நாளை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனை 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே கார்டனில் வேலை பார்த்த சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனை விசாரணை செய்திருக்கிறார்கள். போயஸ் கார்டனில் வேலை பார்ப்பவர்களின் பட்டியலை ஜெயலலிதாவின் பி.ஜே பூங்குன்றன் விசாரணைக் கமிஷனிடம் முன்பே அளித்திருக்கிறார். அதன்படி ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

 

சமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என வெளியே அதிகம் தெரியாத 15 பேர் போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கிறார்கள்; ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து வசித்துவருகிறார்கள். இளவரசியின் மகன் விவேக், இவர்களுக்கு இப்போதும் மாதாமாதம் சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் நிழல்போல இருந்த, அவருடைய தனிப் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) பெருமாள்சாமி, பி.ஏ. பூங்குன்றன் ஆகியோர்கூட போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கவில்லை. ஆனால், சாதாரண வேலையாட்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தங்கள் முதலாளி ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தெரியும் என்பதால், அவர்களை விசாரிக்க முடிவு செய்திருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன்.

ஜெயலலிதா உள்பட கார்டனில் வசித்த மற்றும் வசிக்கும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் சமைத்துப் போட்டவர் ராஜம்மாள். 74 வயதாகும் ராஜம்மாள், பல வருடங்களாக கார்டனிலேயே தங்கி சமையல் வேலை செய்துவருகிறார். கடந்த ஜூன் மாதம் போயஸ் கார்டன் வீட்டுக்குத் தீபா போனபோது, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சகோதரர் தீபக் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில், ராஜம்மாள்தான் வெளியே வந்து தீபாவிடம் பேசியிருக்கிறார். ‘‘ஏன் இங்கே வந்த... உன்னை ஏதாவது செய்திடுவாங்க...’’ என ராஜம்மாள் தன்னிடம் சொன்னதாக தீபா சொல்லியிருந்தார். கமிஷன் முன்பு ராஜம்மாள் என்ன சொல்லப்போகிறார் எனத் தெரியவில்லை.

jayacase2_19389.jpg

 

மணி என்பவரின் மகள் லட்சுமி, ஜெயலலிதாவின் சுற்றுப்பயணங்களில் அவரின் உதவியாளராக உடன் சென்றவர். தேர்தல் பிரசாரம் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்றபோது, அவருடன் லட்சுமியும் பயணம் செய்தார். லட்சுமியைப்போல, நிறைய இளம் வயதுப் பெண்கள் கார்டனில் வேலை பார்த்தார்கள். பிறகு, அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டார்கள். லட்சுமி, தொடர்ந்து அங்கேயே வேலை செய்துவருகிறார். வாட்ச்மேன் உள்பட வடமாநிலப் பணியாளர்கள் சிலரும் ஜெயலலிதா வீட்டிலேயே தங்கியுள்ளனர். வெளியே அறியப்படாத இவர்கள், ஜெயலலிதாவைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

jayacase1_19009.jpg

இவர்கள் தவிர இன்னும் 14 பேர் விசாரணைக்கு அழைக்கப்படலாம். ஆறுமுகசாமி கமிஷனிடம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 15 பேரும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் வீட்டில் வேலை செய்தவர்கள்; இப்போதும் வேலையில் தொடர்பவர்கள். அதற்கு முன்பே அங்கே வேலை செய்த பலரும் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் விவரம்:

வீட்டில் வேலை பார்த்த அந்த முன்னாள் ஊழியர்கள்...

1. ராமசாமி த/பெ சின்னையா (வயது 64)

2. ஐயப்பன் த/பெ மாடசாமி (வயது 47)

3. கண்ணன் த/பெ சின்னசாமி (வயது 46)

4. பொன்னுசாமி த/பெ சின்னு (வயது 46)

5. பிரபாகரன் த/பெ ராஜகோபால் (வயது 43)

6. ஞானசேகர் த/பெ பழனிசாமி (வயது 42)

7. செல்வராஜ் த/பெ லோகநாதன் (வயது 40)

8. வனிதா க/பெ கண்ணன் (வயது 39)

9. தயா த/பெ சந்திரசேகர் (வயது 39)

10. ராஜி த/பெ பிஸ்பதி (வயது 35)

11. சிங்கமுத்து த/பெ சுப்பையா (வயது 33)

12. ராதா த/பெ தனேஷ் (வயது 28)

13. ராணி த/பெ தனவேல் (வயது 28)

14. ராஜேஸ்வரி த/பெ கந்தசாமி (வயது 27)

https://www.vikatan.com/news/coverstory/116901-will-rajammal-speak-out-about-jayalalithaas-mysterious-death.html

  • தொடங்கியவர்

செப்.22-ம் தேதி போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது நான் தூங்கிவிட்டேன்: விசாரணை ஆணையத்தில் சமையல்கார பெண்மணி வாக்குமூலம்

 

 
21CHRGNRAJAMMAL

ஜெயலலிதா மறைவு குறித்து நடைபெறும் விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராக வந்த ஜெயலலிதாவுக்கு சமையல் செய்த ராஜம்மாள்.   -  M_PRABHU

செப்டம்பர் 22-ம் தேதி, போயஸ் கார்டன் வீட்டிலிருந்து ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது நான் தூங்கிவிட்டேன் என்று விசாரணை ஆணையத்தில் சமையல்கார பெண்மணி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ஜெயலலிதா வீட்டில் பணியாற்றிய 31 பேரின் பட்டியலை விசாரணை ஆணையத்தில் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்தவர் ராஜம்மாள். சுமார் 34 ஆண்டுகள் அவர் போயஸ் கார்டனில் வேலை பார்த்துள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ராஜம்மாள் அவரை நேரில் சென்று பார்த்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் போயஸ் கார்டன் வீட்டில் சமையல் வேலையை ராஜம்மாள் செய்து வருகிறார்.

நேற்று விசாரணை ஆணையத்தில் ராஜம்மாள் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ராஜம்மாளுடன் வந்தவர்கள் அவரை நிருபர்களுடன் பேச விடாமல் அழைத்துச் சென்றனர். “2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு போயஸ் கார்டனில் இருந்து மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை அழைத்து சென்றபோது, நான் தூங்கி விட்டேன்.

மறுநாள்தான் எனக்கு விவரம் தெரியும். 23-ம் தேதி மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை பார்த்தேன்” என்று விசாரணை ஆணையத்தில் ராஜம்மாள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் முன்னாள் எம்.பி மனோஜ்பாண்டியன் இன்றும், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் நாளையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22812453.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.