Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கியது உயர் நீதிமன்றம்!

Featured Replies

6 நிபந்தனைகளுடன் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கியது உயர் நீதிமன்றம்!

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற கிளை

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன், ஒரு மாதம் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  ``26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்று உள்ளேன். எனக்கு பரோலில் செல்ல உரிமை உண்டு எனத் தமிழக முதன்மைச் செயலர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2012-ல் பரோலில் வந்த நிலையில் 2014-க்குப் பிறகு, பரோலில் வரத் தகுதி உண்டு. எனவே, 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எனது குடும்பத்தின் சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு மாத காலம் நீண்ட பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் விமலா, கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், சிறைத்துறை காவல் துணைத்தலைவர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'முன்னாள் பிரதமரின் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால், அவருக்கு பரோல் வழங்கினால், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளதோடு, அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் அவரை விடுவிப்பது குறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை முன்வைத்தே பரோல் வழங்கவில்லை. ஆகவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து சிறைத்துறைத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த முறை விடுப்பில் சென்றிருந்தபோது எவ்வித சொத்துப்பதிவும் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, கடந்த முறை வீட்டைவிட்டு வெளியே செல்ல அவர் அனுமதி கோராததால், வெளியே செல்ல அனுமதியில்லை என அருப்புக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவிச்சந்திரனுக்கு மார்ச் 5 முதல் 19 வரை பரோல் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், அரசியல் பேசக் கூடாது. பேட்டி அளிக்கக் கூடாது. விடுப்பு காலங்களில் வழக்கறிஞரை சந்திக்கக் கூடாது. பதிவுத்துறை அலுவலகம், மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லலாம். சொத்துகளைப் பார்வையிடலாம் என்று நிபந்தனை விதித்தனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/117894-madurai-hc-grants-parole-for-ravichandran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.