Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வுக்கு ஒன்­று­ப­டுவோம்

Featured Replies

சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்­வுக்கு ஒன்­று­ப­டுவோம்

01-4ce9bbd9c7782ff0da47163410adc5fd89cca969.jpg

 

தமிழ் தேசி­யத்தை நேசிக்கும் தமிழ் மக்­களும் தமிழ்­கட்­சி­களும் ஒன்­று­பட்டு சமஷ்டி அடிப்படை­யி­லான அர­சியல் தீர்வு ஒன்றை ஒரு­முகமாக முன்­வைத்து போரா­டு­வ­தற்கு நடை­பெற்ற உள்­ளூராட்சித் தேர்தலின் முடி­வுகள் வழி­வ­குத்­துள்­ளன.

தென் இலங்­கை­யிலும் அர­சியல் மாற்றம் ஏற்­ப­ட­வுள்­ளது.

இலங்கை சுதந்­திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறை­வுற்ற நிலையில் 70 வீத­மான சிங்­கள மக்கள் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்றி சிங்­கள மக்­க­ளையும் சிங்­கள நாட்­டையும் முன்­னேற்றி வரு­வதையும் தமிழ் மக்கள் எல்லா வழி­க­ளிலும் இன­ரீ­தி­யாக ஒதுக்­கப்­பட்டு வரு­வதையும் அறி­வீர்கள்.

எமது அடிப்­படை உரி­மை­களைப் பெறு­வ­தற்கு அகிம்சை வழி­யிலும் ஆயுதப் போராட்ட வழி­யிலும் கடந்த 60 வரு­டங்­க­ளாக தீவி­ரமாக போராடியும் எமது உரி­மை­களைப் பெற்றுக்கொள்ள முடி­ய­வில்லை. அதைத் தொடர்ந்து கடந்­த­ மூன்று வரு­டங்­க­ளாக ராஜ­தந்­திர ரீதி­யான போராட்டம் நடந்து வரு­கி­றது. ஒரு அர­சியல் தீர்வு நிச்­சயம் கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கை­யுடன் இருக்கும் தமிழ்த் தலை­மைகள் உள்­ளூராட்சித் தேர்தல் முடிவால் தென்­ இ­லங்­கையில் ஏற்­படும் அர­சியல் மாற்றம் அர­சியல் தீர்­வுக்கு பாதகம் ஏற்­ப­டுமா என சிந்­திக்க வேண்­டிய நிலையில் உள்­ளன.

தேசிய உணர்வு கொண்ட தமிழ் மக்­களும் தமிழ்க் கட்­சி­களும் ஒன்றுபட்டு சமஷ்டி அடிப்­ப­டையில் ஒரு அர­சியல் தீர்வை முன்­வைத்து போரா­டு­வ­தற்கு இத்­தேர்தல் வழி­வ­குத்­துள்­ளது, வட­கி­ழக்கை வலி­மை­யான முறையில் ஆளு­வ­தற்கு நாம் ஒன்­று­ப­ட­வேண்டும்; ஒற்­று­மையே தமி­ழர்­களின் பலம்

இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்­டுகள் நிறை­வுற்ற நிலையில் 70 வீத­மான சிங்­களப் பெரும்­பான்­மையைக் கொண்ட சிங்­களத் தலை­மைகள் 1948இலிருந்து ஆட்­சியைக் கைப்­பற்றி சிங்­களச் சமூ­கத்­தையும் சிங்­களப் பிரதே­சத்­தையும் முன்­னேற்றி வரு­வ­தையும் அனை­வரும் அறி­வார்கள்.

பிரித்­தா­னிய அரசு நாட்­டை­விட்டு 1948இல் வெளியேறிய போது பிரித்­தா­னி­யாவில் உள்­ளது போன்ற ஒற்­றை­யாட்சி முறையை அறி­முகம் செய்து சிங்­கள மக்­களைப் பலப்­ப­டுத்­தி­யதே தமி­ழ்த்­தே­சிய இனத்திற்கு ஏற்­பட்ட அழி­வாகும்

இந்த ஒற்றை ஆட்சி தமி­ழர்­க­ளுக்கு அழி­வைத்­தரும் என்று உணர்ந்த தந்தை செல்வா 1949இல் தமிழ் அரசுக் கட்­சியை ஆரம்­பித்து சமஷ்டி முறை­யி­லான ஆட்­சிக்கு போராடி வந்தார். அன்று 50க்கு 50 கேட்ட ஜீ.ஜீ.பொன்­னம்­பலம் சமஷ்டிக் கொள்­கையை ஏற்று தந்தை செல்­வா­வு­டன் இணைந்து போரா­டி­யி­ருந்­தால் சிங்­கள அரசு வழிக்கு வந்­தி­ருக்கும். மாறாக சிங்­கள அரசில் அமைச்­ச­ராகி வட, ­கி­ழக்கில் உரு­வாக்­கிய தொழிற்­சா­லைகளும் இன்று அழிந்­து­விட்­டன. வட, ­கி­ழக்கில் நிரந்­தர­மான ஆட்சி அதி­காரம் இல்­லாத நிலையில் எதுவும் சாத்­தி­யப்­ப­டாது. இந்த நிலைப்­பாட்­டை­உ­ணர்ந்த ஜீ.ஜீ.பொன்­னம்­ப­லத்தின் பேரன் கஜேந்­திர குமார் சமஷ்டி முறை­யி­லான ஆட்­சியை ஏற்­றுக்­கொண்டார். ஆனால், சமஷ்டிக் கொள்­கையை ஏற்றுக் கொண்ட தமிழ்­க் கட்­சி­க­ளுடன் இணைந்து போரா­டு­வ­தற்­குப பின் வாங்­கு­வதேன். தமி­ழர்­களின் இன்­றைய நிலையை உணர்ந்த தமிழ்த் தேசி­ய­வா­தி­யா­க­வி­ருந்தால் அவ­ரது பாட்­டனார் ஜீ.ஜீ. பொன்­னம்­பலம் தந்தை செல்­வா­வுடன் இணைந்து வட்டுக்கோட்டை மாநாட்டில் தழிழ் ஈழக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்­டது போல் ஏன் கஜேந்­திர குமார் தமிழ்க்கட்சிக­ளுடன் இணை­ய­க்­கூடாது.

1972இல் இலங்கை அரசு பாரா­ளு­மன்­றத்தின் சிங்­களப் பெரும்பான்மைப் பலத்­துடன் தான் விரும்­பிய ஒற்றை ஆட்சி அர­சியல் சட்­டத்தை நிறை­வேற்­றி­ய­தோடு சிறு­பான்­மை­யினரின் பாது­காப்புக்காக பிரித்­தா­னிய அரசு வழங்­கிய 29ஆவது சட்ட விதி­யையும் நீக்கி தமி­ழர்­களை அநா­தை­க­ளாக்­கியது. அரச ஊழி­ய­ரான கோடீஸ்­வரன் அர­சுக்­கெ­தி­ராக தாக்கல் செய்த வழக்கு பிரித்­தா­னிய பிரிவுக் கவுன்­சிலில் வெற்றி பெற்ற நிலையில் அர­சியல் சட்­டத்தில் 29ஆவது சரத்து நீக்­கப்­பட்­டதால் கோடீஸ்­வரன் வழக்கு தோல்­வியில் முடிந்­தது. அதனால், பெருந்தொகை­யான அரச ஊழி­யர்­கள் அரச பத­வியில் தொடர முடி­யாத நிலை ஏற்­பட்­டது. மேலும் சிங்­களம் மட்டும் சட்­டத்தால் பெருந்­தொ­கை­யான தமிழ் ஊழி­யர்கள் அரச சேவை­யைவிட்டு வில­க­வேண்­டிய நிலை. 29ஆவது சட்ட நீக்­கத்­தால் தமிழர்­க­ளுக்­கான விகி­தா­சார நிய­ம­னங்­களும் மறுக்­கப்­பட்­டன.

இலங்கை சுதந்­திரம் அடை­யும்போது அர­ச­சே­வையில் 24 வீத­மான தமி­ழர்கள் சேவை­யி­லி­ருந்­தனர். இன்று 5 வீதத்­திற்கு வந்­த­ுவிட்­டது. அந்த இடங்கள் எல்லாம் சிங்­க­ள­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கி­ன்றது. ஓர­ள­வு­ முஸ்லிம் மக்­க­ளுக்கும் வழங்­கப்­ப­டு­கின்­றது. சிங்­கள அரசின் இன ஒதுக்கல் இது. இவ்­வாறு எல்லாத் துறைக­ளிலும் தமி­ழர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 இந்த இன ஒதுக்­கலை பாராளுமன்­றத்தில் கேள்­வி­க­ளாக எழுப்பி சர்­வ­தே­சத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரலாம். ஆனால், எமது தமிழ் பாராளுமன்ற உறுப்­பி­னர்கள் அக்­கறை காட்­டு­வ­தா­க­வில்லை. இவர்கள் பாராளுமன்­றத்தில் கேள்­விகள் கேட்­ப­தற்கு ஆதா­ர­மாக தமிழ் அரச ஊழி­யர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் என்று ஒரு நூலை வெளியிட்டு உத­வி­யி­ருந்தும் இவர்கள் அக்­கறை எடுக்கவில்லை. அவ்­வாறு பாரா­ளு­மன்­ற­த்தில் கேள்­விகள் கேட்­ப­த­றகு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்பினர் பண்­டிதர் கா.பொ இரத்­தினம் போன்ற ஒருவர் பிறக்­க­ வேண்டும். இப்­ப­டி­யான கேள்­வி­களை எழுப்பி நல்­லாட்­சிக்கு தலை­யிடி கொடுத்தால் வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் பிரச்­ச­ினையை ஓர­ளவு தீர்க்­கலாம். அன்று பண்­டிதரின் கேள்­வி­க­ளினால் உயர் அரச பத­விகள் பாது­காக்­கப்­பட்­டன.

தமிழ் மக்­களின் ஆத­ரவு பெறாது 1972இல் நிறை­வேற்­றப்­பட்ட சட்­டத்தை முற்­றாக நிரா­க­ரித்த தந்தை செல்வா தமிழ் ஈழம் தான் மாற்று வழி­யென்று வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தை நிறை­வேற்­றினார்.

இத்­தீர்­மா­னத்தை முன்­வைத்து தமிழ் ஆயுதக் குழுக்கள் குறிப்­பாக விடு­தலைப் புலிகள் தீவி­ர­மாகப் போராடி சிங்­கள அரசை கதி­க­லங்க வைத்­தனர். 30ஆண்­டு­கா­ல­மாக தீவி­ர­மாக போரா­டிய விடுதலைப் புலி­களின் வீரப் போராட்­டத்தை சிங்­கள அரசு 20 உலக நாடு­களின் ஆயுத பலத்­துடன் வீழ்ச்­சி­ய­டையச் செய்­தது. 2009இல் முள்­ளி­வாய்க்­காலில் 40,000 தமிழ் மக்­களை இனக்­கொ­லை­செய்த அரசு, மேலும் தமிழ் மக்­களை அடக்­கு­வ­தற்கு 150,000 இரா­ணு­வத்தை வட,­கி­ழக்கில் அமர்த்தி தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய நில­ங­்களை அப­க­ரித்து சிங்­கள மக்­களைக் குடி­யேற்றி வரு­கின்ற கொடு­மை­யையும் அறி­வீர்கள்.

முள்ளிவாய்க்­காலின் பின் தமி­ழர்கள் மிகப் பல­வீனம் அடைந்த நிலை­யி­லுள்­ளனர். இந்த நெருக்­க­டி­யான சூழ்நிலையில் த.தே.கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தமிழ் மக்­களின் தலை­மையை ஏற்று செயற்­பட்டு வரு­கின்றார். இவ­ரிடம் ஆயு­த­மில்லை, ராஜ­தந்­தி­ரத்தை ஆயு­த­மா­கக்­கொண்டு தமிழ் மக்­களின் உரிமைப் போராட்­ட­த்தை படிப்­ப­டி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

முள்­ளி­வாய்க்கால் வெற்­றியினால் தமி­ழர்­களை அடக்கி ஒடுக்­கி­வந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் கொடூர ஆட்­சியை வீழ்த்தி நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­தி­யதில் பெரும் பங்கு வகித்­தவர் சம்­பந்தன். அது­ அ­வ­ரு­டைய ராஜ­தந்­திரம்

2015இல் உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி ஊடாக ஒரு அர­சியல் தீர்வை கொண்­டு­ வ­ரு­வ­தற்கு முயன்று கொண்­டி­ருக்கும் இச் சந்­தர்ப்­பத்தில் அண்­மையில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வுகள், சிங்­கள தேசத்தில் அர­சியல் சூழ்­நி­லையை மாற்­றி­ வ­ரு­கி­றது. திட்­ட­மிட்ட அர­சியல் தீர்வை நல்­லாட்சி நிறைவேற்­றா­து­விடில் நாம் மாற்று வழியை நாடிச்­செல்ல வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­ப­டு­கின்றோம்.

நடை­பெற்ற உள்­ளூராட்சித் தேர்தலில் த.தே. கூட்­ட­மைப்பு தனது பலத்தை இழந்துவிட­வில்லை; கொள்­கையில் உறு­தி­யாக இருக்­கின்­றனர். அவர்­களால் தான் எத்­த­கைய தீர்­வையும் முன­்னெ­டுக்க முடியும். இன்று வெளிநா­டு­களின் முழு­மை­யான ஆத­ரவு த.தே.கூட்­ட­மைப்­புக்கே உண்டு. இது யதார்த்தம். இந்த அரசு மாற்று வழிக்கு த.தே. கூட்­ட­மைப்யை தள்­ளு­மாகில் அது தனி­நா­டாக அமை­யக்­கூடும். உலக நாடு­களும் அதை ஆத­ரிக்­க­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­ப­டும். இரா. சம்­பந்தன் எதிர்­க் கட்சித் தலைவர் என்ற ரீதியில் இது­வரை 35க்கு மேற்­பட்ட வெளிநாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் தலை­வர்­க­ளையும் அரச அதி­கா­ரி­க­ளையும் சந்­தித்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு அடித்­தளம் இட்­டுள்ளார்.

மாற்று அர­சியல் தீர்வு வரும்­போது வெளிநா­டு­களின் உத­வியை நிச்­சயம் பயன்­ப­டுத்­துவார்

நாம் 70 ஆண்­டு­க­ளாக சிங்­கள அர­சுக்கு அடி­மை­யா­க­வி­ருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் உயிர்­களை இழந்தோம். உட­மை­களை இழந்தோம். பொருட்­களை இழந்தோம். அரசதுறை பத­வி­களை இழந்தோம் இனிமேல். எதையும் இழக்க தயா­ரில்லை என திட­சங்­கற்பம் கொள்வோம். வேற்றுமை­களை மறந்து ஒன்றுபட்டு ஒரு சுயட்சியை அமைப்போம். நாம் வீரத் தமிழர்கள் என்ற நிலை மாறாது இருக்க ஒன்றுபடுவோமாக.

பிரிந்து நின்று கண்டனக் குரல் கொடுப்பவர்கள் யதார்த்தமாக சிந்தித்து சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு ஆதரவு நல்க வேண்டியது அவர்களது தார்மீகக் கடமை­யாகும்.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ். அமைப்புகளில் பல சமஷ்டி அடிப்படை­யிலான தீர்வுக்கு ஆதரவு நல்க ஆர்வம் கொண்டுள்ளன. த.தே.கூட்டமைப்பின் உயர்மட்ட அரசியல் குழு வெளிநாடு சென்று தமிழ் அமைப்புகளை சந்தித்து அவற்றினது ஆதரவைத் திரட்ட வேண்டும். தமிழ் மக்களிடையில் மேலும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு இச் சந்திப்பு அவசியமாகும்.

சர்வதேச நாடுகளின் ஆதரவை தொடாந்து வளர்க்க த.தே.கூட்டமைப்பு சர்வதேச உயர் மட்ட அரசியல் குழுவை அமைத்து செயற்பட வேண்டியது அவசியம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-06#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.