Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தண்ணீர்... தண்ணீர்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜ21 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ

நாளை வியாழக்கிழமை உலக நீர் தினமாகும். ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக (றுழசடன றுயவநச னுயல) அனுஷ்டிப்பதற்கான தீர்மானத்தை 1992 டிசம்பர் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியது. 2007 உலக நீர் தினத்துக்கான தொனிப்பொருள் ஹநீர்ப் பற்றாக்குறையைச் சமாளித்தல்' (ஊழிiபெ றiவா றுயவநச ளுஉயசஉவைல) என்பதாகும். உலகளாவிய ரீதியில் காணப்படும் நீர்ப்பற்றாக்குறையின் பாரதூரத் தன்மையை இத்தொனிப்பொருள் உணர்த்துகிறது. குறைவடைந்து வரும் நீர்வளங்களை உலகளாவிய ரீதியிலும் உள்ளூர் மட்டத்திலும் பயனுறுதியுடைய முறையிலும் ஒப்புரவாகவும் முகாமை செய்வதை உறுதிப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புச் செயற்பாடுகளின் அதிகரித்த தேவையை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இத்தொனிப்பொருள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.

நீர்ச்சிக்கனம்இ நீர்த் தூய்மை மற்றும் நீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு எந்தளவுக்கு எம்மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் பிரகாசமாக விளங்கும். வீதியோரக் குழாயின் நீர் வீணே வடிந்து கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் தாமதித்து நின்று அக்குழாயைப் பூட்டுவதற்கு எம்மில் எத்தனைபேர் உண்மையில் மானசீகமாக அக்கறை காட்டுகின்றோம்? நீர்ச் சிக்கனம் விவகாரத்தில் இது எமது மனச்சாட்சிக்கு ஒரு அமிலப் பரீட்சையாகவே அமைந்து விடுகிறது.

நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரேயொரு கிரகம் இதுவரை எமது பூமிதான். உலக உயிர்களின் ஆரம்பமே நீரில் இருந்துதான் தொடங்குகிறது. ஹநீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். பெரும்பாலான நாகரிகங்களின் வாழ்வியல் நெறிமுறைகளை நதிகளே தீர்மானித்திருக்கின்றன. மனித குலத்தின் இருப்புக்கு நீர் அடிப்படைக் காரணியாகத் திகழ்கிறது. உணவின்றி ஒருவரால் 14 நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால்இ நீரின்றி 8 நாட்கள் மாத்திரமே வாழ முடியும். எமது உடலின் 80 சதவீதம் நீரால் ஆனது. நீர்ச்சத்துக் குறையக் குறைய பல்வேறு நோய்கள் எமது உடலைச் சூழ்ந்துகொள்ளும். உலகில் பாதுகாப்பான நீரின்றி எட்டு செக்கன்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர்இ முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை.

நீர்ப்பற்றாக் குறையும் வெப்பமயமாதலும் உலகம் எதிர்கொள்ளவிருக்கும் பேராபத்துகள் என்று ஐ.நா. சுற்றுச் சூழல் திட்டம் ஒரு தசாப்த காலத்துக்கு முன்னரே எச்சரிக்கை செய்துவிட்டது. ஆனால்இ இவ்விரு பேராபத்துகளையும் எதிர்கொண்டு சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு உருப்படியான முறையில் தயார் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நோக்கும்போது பெரும் வேதனையாக இருக்கிறது. குறைந்த பட்சம் 110 கோடி மக்களுக்கு அல்லது உலக சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதாக இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியாவில் அல்லது ஆபிரிக்காவின் தென் பிராந்திய நாடுகளில் வாழ்கிறார்கள். உலகிலுள்ள மொத்த நீரின் அளவு 34 கோடி கியூபிக் மைல்கள் (140 கோடி கியூபிக் கிலோமீற்றர்) என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 2.5 சதவீதமே புதிய நீராகும். உலகில் போதுமானளவு புதிய நீர் இருக்கின்ற போதிலும் கூடஇ அந்த வளத்தை மக்கள் அடையமுடியாமல் இருப்பதற்கு தவறான முகாமைத்துவமும் ஊழலுமே பிரதான காரணங்கள் என்று ஐ.நா. கூறுகிறது. ஐ.நா. வின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் ஒன்று குடிநீரையும் சுகாதாரத் தேவைகளையும் கிரமமாகப் பெறமுடியாமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை 2015 ஆம் ஆண்டளவில் அரைவாசியாக குறைப்பதாகும். இந்த இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்று இப்போது ஐ.நா. கூறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

உலகளாவிய துரித சனத்தொகைப் பெருக்கம் மற்றும் பரந்தளவிலான மெத்தனப் போக்கு காரணமாக நீர்த் தகராறு தொடர்பான வன்முறை மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் குறித்து விஞ்ஞானிகளும் சமூகவியலாளர்களும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். நீர் மற்றும் சுகாதாரம் தொடர்பிலான மிலேனியம் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு வருடம் ஒன்றுக்கு 670 கோடி டொலர்கள் செலவாகும் என்று ஐ.நா. மதிப்பிட்டிருக்கின்ற அதேவேளைஇ ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் செல்லப் பிராணிகளுக்கான உணவுக்காக வருடாந்தம் 1700 கோடி டொலர்கள் செலவழிக்கப்படுவதாக இன்னொரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. நீரையும் அடிப்படைச் சுகாதாரத் தேவைகளையும் பெற முடியாத காரணத்தால் நீர் தொடர்பான நோய்களுக்கு வருடாந்தம் 20 இலட்சம் பேர் பலியாகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். உலக சனத்தொகையில் 5 சதவீதத்தினர் மாத்திரமே பல்தேசிய நிறுவனங்களிடமிருந்து தண்ணீரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால்இ இதன் பெறுமதி உலக எண்ணெய் வர்த்தகத்தின் பெறுமதியில் 50 சதவீதமாகும்.

நீரைப் பற்றிய இந்த விபரங்கள் நீர்ச் சிக்கனம்இ நீர்ச் சேமிப்பு தொடர்பில் எதிர்வரும் காலத்தில் உலக மக்கள் எதிர்நோக்கப் போகின்ற பாரிய நெருக்கடியை உணர்த்துவதற்கு உதவும் என்று நம்புகின்றோம். ஒரு குடம் நீர் வேண்டி மைல் கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப்புணர்வின்றி வாழக்கூடாது. ஹகாசைத் தண்ணியாகச் செலவழிக்கிறார்கள்' என்று பணத்தை ஊதாரித்தனமாக விரயம் செய்பவர்களைப் பற்றி நாம் பேசுவதுண்டல்லவா? அந்தச் சொல்லாடலைப் பயன்படுத்தும் காலம் மலையேறப் போகிறது. தண்ணீரைத் தங்கமாக நினைத்து சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டிய யுகத்தில் நாம் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும்.

http://www.thinakkural.com/news/2007/3/21/...l_page23665.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.