Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழப்பத்தில் தமிழ் மக்கள் பேரவை

Featured Replies

குழப்பத்தில் தமிழ் மக்கள் பேரவை

Heading-a39a2b045f926be41a3bbfaa216eb67561223a2b.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் நடந்த தமிழ் மக்கள் பேர­வையின் கூட்டம் பெரும் பர­ப­ரப்­பையும், விமர்­ச­னங்­க­ளையும் தோன்­று­வித்­தி­ருக்­கி­றது. காரணம், பேர­வையில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளி­க­ளுக்குள் தோன்­றி­யுள்ள முரண்­பா­டுகள் தான்.

இதனால், தமிழ் மக்கள் பேர­வையின் எதிர்­காலம் குறித்த கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்ற நிலையும் தோன்­றி­யி­ருக்­கி­றது.

தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கப்­பட்­டதே, ஒரு குழப்­ப­மான அர­சியல் நிகழ்ச்சி நிர­லுடன் தான். பேரவை உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியும், அதற்குப் பின்னால் இருந்த தரப்­பு­களும், தமிழ்த் தேசிய அர­சி­யலை வலுப்­ப­டுத்­து­வது என்ற பெயரில், முன்­னெ­டுத்த அர­சியல், பலத்த சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் என்ற ஒற்றைத் தூணைச் சுற்றிக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட மாளிகை அது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அர­சியல் சக்­தி­யாக வளர்த்­தெ­டுக்­கப்­பட வேண்டும் என்­பதே அதனை உரு­வாக்­கி­யோரின் இலக்­காக இருந்­தது.

கூட்­ட­மைப்புத் தலை­மையின், அர­சியல் நடத்­தை­களும், முடி­வு­களை எடுப்­பதில் காட்­டிய எதேச்­சா­தி­கார போக்கும், பேர­வையின் பக்கம் காற்று வீசக் கார­ண­மாக இருந்­தன. இதனால் கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்டே, பேர­வையின் பங்­கா­ளி­க­ளா­கவும் சில கட்­சிகள் இணைந்து கொண்­டன.

அர­சியல் கட்­சிகள், பொது அமைப்­புகள் இணைந்த- என்ற சிக்­க­லான தளம் ஒன்­றுக்குள், பேரவை நுழைந்த போதே அதன் எதிர்­காலம் பற்­றிய கேள்­விகள் எழுந்­தி­ருந்­தன.

பல்­வே­று­பட்ட அர­சியல் எதிர்­பார்ப்­பு­க­ளுடன் உள்ள கட்­சிகள், தமது சுய அடை­யா­ளத்தைக் கைவிட்டு, மற்­றொரு அடை­யா­ளத்தை தேடிக்­கொள்ள விரும்­ப­மாட்டா.

தமிழ்த் தேசிய அர­சி­யலில், இப்­போ­துள்ள அர­சியல் கட்­சிகள் ஒவ்­வொன்றும் தமக்­கான தனி அடை­யா­ளத்தைப் பேண விரும்­பு­கின்­றன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்டு தமிழரசுக் கட்சி தனது தனித்­து­வத்தைக் காப்­பாற்ற முனை­கி­றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, தமிழ் தேசிய பேரவை என்று பல்­வேறு முகங்­களைக் காட்­டி­னாலும், தமிழ் காங்­கி­ரசை கைவிட கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தயா­ரில்லை.

தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு என்று இறங்­கி­னாலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்போ, தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியோ தமது அடை­யா­ளங்­களை இழக்க விரும்­ப­வில்லை.

இப்­ப­டியே ஒவ்­வொரு அர­சியல் கட்­சியும் சுய­அ­டை­யா­ளத்தை பேணிக்­கொள்­வ­தற்கே முன்­னு­ரிமை கொடுக்­கின்ற நிலையில், தமிழ் மக்கள் பேரவை என்ற பொதுத்­த­ளத்தில் குறைந்­த­பட்ச விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுடன் கூட, அர­சியல் கட்­சி­களால் நிலைத்­தி­ருக்க முடி­யாது.

தமிழ் மக்கள் பேர­வையின் அண்­மைய நிகழ்­வுகள், அதில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சிகள் அந்­நி­யப்­பட்டு நிற்­பதைக் காண்­பிக்­கின்­றன. அதற்குப் பிர­தான காரணம், தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கப்­பட்­ட­தற்­கான தளம் பற்­றிய தெளி­வின்மை தான்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வழிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு மக்கள் அமைப்­பா­கவே பேரவை செயற்­படும் என்றும், அது அர­சி­யலில் ஈடு­ப­டாது, தேர்­தலில் போட்­டி­யி­டாது என்றும், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஆரம்­பத்தில் இருந்தே வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கிறார்.

ஆனாலும், பேர­வையில் அங்கம் வகித்த எல்­லோ­ரி­னது நிலைப்­பா­டு­களும் அத்­த­கை­ய­தாக இருக்­க­வில்லை. பேர­வையை ஒர் அர­சியல் தள­மாக கட்­டி­யெ­ழுப்­பு­வதும், கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான ஓர் அர­சியல் கூட்­ட­ணி­யாக மாற்­று­வதும், பல­ரதும் எதிர்­பார்ப்­பாக இருந்­தது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு இருக்­கின்ற தனிப்­பட்ட செல்­வாக்கைப் பயன்­ப­டுத்திக் கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான சக்­தி­யாக பேர­வையை உரு­வாக்கி, அதன் மூலம் அர­சியல் ரீதி­யாகத் தம்­மையும் வலுப்­ப­டுத்திக் கொள்­ளலாம் என்ற எதிர்­பார்ப்பு இதில் அங்கம் வகித்த கட்­சி­க­ளுக்கு இருந்­தது.

அது­போ­லவே, கூட்­ட­மைப்பின் மீது சின­ம­டைந்­தி­ருந்த சில தனிப்­பட்ட நபர்­க­ளுக்கும்- அத்­த­கைய ஆவல் இருந்­தது என்­பதும் மறுப்­ப­தற்­கில்லை.

ஆனால், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், பேர­வையை ஒரு மாற்று அர­சியல் தள­மாக கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இட­ம­ளிக்­க­வில்லை. அதற்கு அவ­ருடன் இருந்த சிலரும் ஒத்­து­ழைப்பு அளித்­தனர்.

தேர்­தல்­களின் போது அறிக்­கை­களின் மூலம் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான அர­சி­யலைச் செய்த விக்­னேஸ்­வரன், அதன்­மூலம், பேர­வையின் பங்­காளிக் கட்­சி­களின் வளர்ச்­சிக்கு உத­வி­யி­ருந்தார். குறிப்­பாக, விக்­னேஸ்­வ­ரனின் இந்த எதிர்­நி­லைப்­பாடு, தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்கு சாத­க­மான களத்தை திறந்து விட்­டது என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஆனாலும், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், யாழ்ப்­பா­ணத்தில், கூட்­ட­மைப்­புக்கு சவா­லான ஒரு கட்­சி­யாக தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி அடை­யாளம் காணப்­படும் நிலை வந்த சூழலில், முத­ல­மைச்சர் தனது நிலைப்­பாட்டை மாற்­றி­யுள்­ளாரோ என்ற சந்­தேகம் பல­ருக்கும் ஏற்­பட்­டுள்­ளது.

கடை­சி­யாக நடந்த பேரவைக் கூட்­டத்தில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் நிகழ்த்­திய உரையில், வழக்­கம்­போ­லவே கூட்­ட­மைப்­பையும் அதன் தலை­மைத்­து­வத்­தையும் சாடி­யி­ருந்தார். அதே­வேளை, உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் அவர்­களின் போக்கை வர­வேற்றும் இருந்தார்.

அதா­வது வடக்கு- கிழக்கு.இணைப்பு, சமஷ்டி உள்­ளிட்ட விட­யங்­களில் கூட்­ட­மைப்பின் தலை­மையில் உள்­ள­வர்கள் வெளி­யிடும் கருத்­துக்கள் மாறி­யி­ருப்­பதை முத­ல­மைச்சர் வர­வேற்­றி­ருக்­கிறார்.

இதன்­மூலம், உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் பின்னர் கூட்­ட­மைப்பு கடந்­த­கால கொள்கை நெறியைக் கடைப்­பி­டிக்கத் தொடங்­கி­யுள்­ள­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன என்­பது போல அவர் அடை­யா­ளப்­ப­டுத்த முயன்­றி­ருந்தார். அவ­ரது இந்தக் கருத்தில் ஒரு திருப்தி நிலையை உணர முடிந்­தது.

ஆரம்­பத்தில் இருந்தே, முத­ல­மைச்சர் கூறி வந்த, கூட்­ட­மைப்பை வழிப்­ப­டுத்தும் ஒரு மக்கள் இயக்­க­மாக பேரவை செயற்­படும் என்ற கூற்று இங்கு நினைவில் வரு­கி­றது.

கூட்­ட­மைப்பை சரி­யான பாதையில் வழிப்­ப­டுத்தும் வேலையை செய்­வது தான் பேர­வையின் வேலை என்­பது போலவே அவ­ரது கருத்­துக்கள் உணர்த்­து­கின்­றன.

இந்­த­நி­லையில் தான் பங்­கா­ளி­க­ளாக உள்ள கட்­சிகள் மத்­தியில் எரிச்­சலும் புகைச்­சலும் எழுந்­தி­ருக்­கி­றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி பேர­வையின் கடைசிக் கூட்­டத்தில் பங்­கேற்­க­வில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் அந்தக் கூட்­டத்தில் கடு­மை­யான வாக்­கு­வா­தங்­களைச் செய்­தி­ருந்­தது.

மாற்று அர­சியல் தளத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய தருணம் என்று சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் கடு­மை­யாக வாக்­கு­வாதம் செய்­தி­ருக்­கிறார். ஆனால் முத­ல­மைச்சர் அதற்கு இடம்­கொ­டாத நிலை­யி­லேயே, வெளியே வந்து இர­க­சி­யங்­களை ஊட­கங்­க­ளுக்கு கசிய விட்­ட­தா­கவும் ஒரு தகவல் உள்­ளது.

அதே­வேளை, அர­சியல் சார்­பற்­ற­வர்­களைக் கொண்ட ஒரு செயற்­கு­ழுவை தன்­னிச்­சை­யாக முத­ல­மைச்சர் வெளி­யிட்­டதும், கடும் விமர்­ச­னங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது. தான்­தோன்­றித்­த­ன­மாக எப்­படி அவரால் செயற்­பட முடியும் என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது.

இளைஞர் அணி­களை உரு­வாக்கி அர­சி­யலை மக்கள் மயப்­ப­டுத்தும் வேலையைச் செய்­யப்­போ­வ­தாக முத­ல­மைச்சர் அறி­வித்­தி­ருப்­பதும், அர­சியல் கட்­சி­க­ளுக்கு கிலியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இவரும் தனி­யா­ன­தொரு கட்­சியைத் தொடங்கி விடு­வாரோ என்ற கவலை அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கலாம்.

அதே­வேளை, கூட்­ட­மைப்பைக் காப்­பாற்றும் அர­சி­யலை அவர் கச்­சி­த­மாக முன்­னெ­டுக்­கிறார் என்ற விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கூட்­ட­மைப்பின் வாக்கு வங்கி சரிந்­துள்ள சூழலைப் பயன்­ப­டுத்திக் கொண்டு எப்­ப­டி­யா­வது, பேர­வையை மாற்றுத் தலை­மை­யாக கட்­டி­யெ­ழுப்பி விடலாம் என்று எதிர்­பார்த்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு முத­ல­மைச்­சரின் நட­வ­டிக்­கை­களும், முடி­வு­களும் கடும் எரிச்­சலைத் தோற்­று­வித்­தி­ருக்­கின்­றன.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் ஆகப்­பிந்­திய நிலைப்­பா­டு­களும், முடி­வு­களும், தமிழ் மக்கள் பேர­வைக்குள் கல­கத்­தையும், பிள­வு­க­ளையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

அதில் அங்கம் வகித்த அர­சியல் கட்­சிகள் இனிமேல் எவ்­வாறு செயற்­படப் போகின்­றன, எந்­த­ள­வுக்கு ஒத்­து­ழைக்கும் என்ற கேள்­விக்கு இனிமேல் தான் விடை கிடைக்க வேண்டும்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தாலும், அதற்கு மாற்­றான ஓர் அர­சியல் கட்­ட­மைப்பை பேர­வையின் ஊடாக கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இப்­போ­தைக்குத் தான் தயா­ரில்லை என்­பதை முத­ல­மைச்சர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இது நிலை­யான- நிரந்­த­ர­மான முடி­வாக இருக்­குமா என்­பதை இப்­போது கூற முடி­யாது. ஏனென்றால், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் அர­சியல் எதிர்­காலம் குறித்து முடி­வெ­டுக்க வேண்­டிய கால­கட்டம் நெருங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

இன்னும் சில மாதங்­களில் வடக்கு மாகா­ண­ச­பையின் ஆயுள் முடி­வுக்கு வரப்­போ­கின்ற நிலையில், நடக்­கப்­போகும் தேர்­தலில் முத­ல­மைச்­சரின் நிலைப்­பாடு என்ன என்ற கேள்வி உள்­ளது.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை மீண்டும் தமது தரப்பில் போட்­டியில் நிறுத்­துமா கூட்­ட­மைப்பு என்ற கேள்­விக்கு, இல்லை என்ற பதிலே கடந்த மாதம் 10ஆம் திகதி வரை இருந்­தது.

ஆனால், இப்­போது அப்­படிக் கூற முடி­யாது. அதற்­கான வாய்ப்­பு­களை யோசிக்க வேண்­டிய நிலையை கூட்டமைப்புக்கு ஏற்படுத்தியிருக்கிறது தேர்தல் முடிவு.

கூட்டமைப்பில் போட்டியிடாது போனால், அவர் அரசியலில் தொடர்ந்து நீடிப்பாரா?- தேர்தலில் போட்டியிடுவாரா-? ஓய்வு பெறுவாரா-? தேர்தலில் போட்டியிடுவாராயின் எந்தக் கட்சியின் ஊடாக அதனை செய்வார் என்றெல்லாம் கேள்விகள் நீளுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்தாலும், தமிழ் மக்கள் பேரவையை அதற்கு மாற்றான தளமாக கட்டியெழுப்ப அனுமதிக்காத முதலமைச்சர் விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியலுக்கான முடிவை நீண்ட காலத்துக்குப் பிற்போட முடியாது.

கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்து வழிப்படுத்துகின்ற அரசியலை மாத்திரம் அவர் முன்னெடுக்கப் போகிறாரா, அல்லது கூட்டமைப்புக்கு எதிரான அரசியலை அவர் முன்னெடுக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்தே, தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும்.

எதுஎவ்வாறாயினும், தமிழ் மக்கள் பேரவை தொடங்கப்பட்ட காலத்தில் காணப்பட்ட தெளிவானதொரு குழப்பம், இன்னமும் கூட நீடிக்கிறது என்பது தான் ஆச்சரியம்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-03-11#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.