Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நான் யாருக்கும் அடிமையா இருக்கமுடியாது; எனக்கு அரசியல் வேண்டாம்!" - சத்யராஜ்

Featured Replies

"நான் யாருக்கும் அடிமையா இருக்கமுடியாது; எனக்கு அரசியல் வேண்டாம்!" - சத்யராஜ்

 
 

``எல்லாப் படங்கள்லேயும் என்னை வேற மாதிரியான சத்யராஜா மக்கள்கிட்ட காட்டணும். அதுமாதிரியான கதாபாத்திரங்கள்ல மட்டும்தான் நடிப்பேன். அதனாலதான், 'பாகுபலி' படத்துக்குப் பிறகு சில படங்களைத் தேர்வு செய்யலை'' - சினிமா சார்ந்த கேள்விகளில் ஆரம்பித்து அரசியல் சார்ந்த கேள்விகள் வரை அனைத்திற்கும் பதில் சொல்கிறார், சத்யராஜ். 

``நாளுக்கு நாள் சத்யராஜ் எடுக்குற கதைக்களமே வித்தியாசமா இருக்கு, என்ன மாதிரியான கதைகள் உங்களைத் தேடி வருது?''

 

சத்யராஜ்

``ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு கதை என்னைத் தேடி வரும். இப்போ வர்ற படங்கள்ல என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்குனு பார்த்துட்டுதான் படங்களைத் தேர்வு செய்றேன். பொதுவா, ஒரு படத்துல ஏதோ ஒரு விஷயம் புதுசா இருக்கணும். மார்க்கெட்ல நல்ல இடத்துல இருக்க நடிகர் இருக்கணும், இல்லை வித்தியாசமான ஒரு படத்தை எடுக்கக்கூடிய தன்மை இருக்கிற இயக்குநர்கள் இருக்கணும், அதுவும் இல்லேன்னா ஒரு படத்தைத் தூக்கி நிறுத்துற தயாரிப்பாளர் இருக்கணும். இந்த மூணு விஷயத்துல ஏதாவது ஒரு விஷயம் இருந்தால் மட்டும்தான் அதுக்குள்ள இறங்கணும். அதைத்தான் நான் விரும்புவேன்'' 

`` `பாகுபலி'க்குப் பிறகு நிறைய கதைகளை நீங்க நிராகரிச்சீங்கனு கேள்விப்பட்டோம், அது என்ன மாதிரியான கதைகள்?''

``சில சமயம் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் வரும். சில சமயம் ஹீரோவுக்கு அப்பா, ஹீரோயினுக்கு அப்பானு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களும் வரும். இது மாதிரியான கதாபாத்திரங்கள் பண்றதுல தப்பில்லை. ஆனா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பண்ற மாதிரி இருக்கும். அது சலிப்பையும் ஏற்படுத்திரும். இப்போ நான் பண்ற `எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடம்', `பார்ட்டி'னு ஒவ்வொரு படங்களுக்கும் ஒவ்வொரு வித்தியாசம் இருக்கும். அது படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கைப் பார்த்தாலே தெரியும். ரெண்டுமே வேற வேற சத்யராஜ். அதேமாதிரி சிவகார்த்திகேயன் தயாரிப்புல ஒரு படம் நடிக்கிறேன். இது ரெண்டும் இல்லாத வேற சத்யராஜை அதுல நீங்க பார்க்கலாம். இப்படிப் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்னுதான் இந்த சத்யராஜ்க்கு ஆசை." 

``இயக்குநர் சர்ஜன் இந்தப் படத்தை பத்திச் சொல்லும்போது என்ன தோணுச்சு, படத்துல உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர்?'' 

``வழக்கமான படங்கள்ல இருந்து இந்தப் படத்துல எனக்கு மாறுபட்டுத் தெரிஞ்சது கிளைமாக்ஸ். ஆரம்பத்துல கதை வித்தியாசமான திசையில பயணிச்சாலும், கிளைமாக்ஸ் வரும்போது சண்டை, சென்டிமென்ட்டுனு வழக்கமா முடியும். இது எதுவுமே இல்லாம ரொம்ப புதுசா இருந்ததுதான், இந்தப் படத்துல எனக்குப் பிடிச்ச விஷயம். நடிக்கிறதுக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கு. தவிர, இயக்குநர் சர்ஜன், மணிரத்னம் சாருடைய அசிஸ்டென்ட். நமக்குள்ளே இருக்கிற நடிப்பை வெளியில எடுப்பார்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. என்னை வேற ஒரு சத்யராஜா மக்களுக்குக் காட்டுவார்னுதான், இந்தப் படத்துல கமிட் ஆனேன். படத்துல நான் ரிட்டையர்டு போலீஸ் ஆபீஸர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா ஒருத்தன் நல்லவனா இருப்பான், ஒருத்தன் கெட்டவனா இருப்பான். இதையெல்லாம் உள்வாங்கிய ஒரு கேரக்டர்தான், இந்தப் படத்துல நான் பண்ணியிருக்கேன்.''

``சினிமா எடுக்குறதுல இருந்து அதை ரிலீஸ் பண்ற வரைக்கும் எல்லாமே பிரச்னையாதான் இருக்கு. நீண்ட காலமா சினிமாவுல இருக்க நீங்க இதை எப்படிப் பார்க்குறீங்க?''

சத்யராஜ்

``இதுல ரெண்டு விதமான பிரச்னை வரும். ஒண்ணு எல்லாமே புதுசா இருக்கிற படம். இந்தமாதிரி படங்களுக்கு ரசிகர்கள் நிறைய பேர் வரமாட்டாங்க. அதேமாதிரி பெரிய பட்ஜெட் படங்கள்ல வசூல் 75 கோடியா இருந்தாலும், அதுக்கு ஆன செலவு 85 கோடியா இருக்கும். வசூலை வெச்சு மட்டும் ஒரு படம் ஹிட் லிஸ்ட்ல சேர்ந்தாலும், அதுக்கு ஆன செலவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அது நஷ்டக் கணக்குலதான் சேரும். ரெண்டாவது, சின்ன பட்ஜெட் படங்கள். இந்தப் படங்களுக்குப் பின்னாடி ஏதாவது பலம் இருக்கணும். உதாரணத்துக்கு, 'அருவி' படத்தை சொல்லலாம். அந்தப் படத்துக்குப் பின்னாடி எஸ்.ஆர்.பிரபுனு ஒரு பில்லர் இருந்தனாலதான் அதைத் தாங்கிப் பிடிக்க முடிஞ்சது.''  

``ரஜினி - கமல் மாதிரி உங்களுக்கு நேரடி அரசியலுக்கு வர்ற எண்ணம் இருக்கா?''

``இதைப் பத்தி நான் நினைச்சதே இல்லை. ஏன்னா, எந்த விதத்திலேயும் யாருக்கும் என்னால அடிமையா இருக்க முடியாது. என்னை வாழ வைத்த ரசிகர் மன்றத்துக்குக்கூட என்னால அடிமையா இருக்கமுடியாது. ஒருத்தருக்கு நல்லது செய்யணும்னு ஆசைப்பட்டா, அவங்களுக்கு நல்லதைச் செய்யலாம். ஓட்டு அரசியலுக்கு உள்ளே நான் போயிட்டா, என் கேரக்டருக்கு அது சரியா வராது. என் மனசுக்கு என்ன சரினு படுதோ, அதை மட்டும்தான் என்னால சொல்லமுடியும். இதுக்குள்ள நான் போயிட்டா அது எனக்கு சரியா வராது. இதுல எனக்கு உதாரணமா இருக்கிறது பெரியார் ஐயாதான். இப்போ எனக்குப் பிடிச்ச மாதிரி ஜாலியா இருக்கேன்'' 

இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார், சத்யராஜ். அதற்கான பதில்கள், வீடியோவில்! 

 

 

https://cinema.vikatan.com/tamil-cinema/interview/119181-i-can-never-be-a-slave-politics-dont-suit-me-says-sathyaraj.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.