Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு

Featured Replies

முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு

முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்புபடத்தின் காப்புரிமைEPA

ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயினால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன், டென்மார்க்கில் இருந்து பெல்ஜியத்திற்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜயுமே அலன்சோ-குயவில்லா கூறியுள்ளார்.

கேட்டலோனியா பிரிந்து தனிநாடு ஆவதற்கு ஆதரவளித்த, தடை செய்யப்பட்ட மக்கள் கருத்து கணிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தியதில் இருந்து, பெல்ஜியத்திற்கு நாடு கடந்து பூஜ்டிமோன் வாழ்ந்து வருகிறார்.

ஐரோப்பிய கைது வாரண்ட் ஒன்று சமீபத்தில் அவருக்கு எதிராக வழங்கப்பட்டது.

ஸ்பெயினில் பூஜ்டிமோன் எதிர்கொண்டு வருகின்ற தேச துரோகம் மற்றும் கலக குற்றச்சாட்டுக்கள் 30 ஆண்டுகால சிறை தண்டனையை அவருக்கு பெற்று தரலாம்.

முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்புபடத்தின் காப்புரிமைEPA

சமீபத்திய தலைவர் வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, புதிய தலைவரை தேர்தெடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக வெள்ளிக்கிழமை பிரிவினைவாத தலைவர்கள் அறிவித்துள்ளதால், கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கலகம், மோசடி அல்லது நாட்டுக்கு கீழ்படியாமை போன்ற குற்றங்களுக்காக 25 கேட்டலோனிய தலைவர்கள் விசாரிக்கப்பட்ட வேண்டும் என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, வெள்ளிக்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பெருங்கூட்டமாக போலீஸோடு மோதியுள்ளனர்.

இந்த நீதிமன்ற தீர்ப்புக்கள் கேட்டலோனிய விடுதலை இயக்கத்திற்கு கடுமையான சவால் என்று கருதப்படுகிறது.

பெரும்பாலான தலைவர்கள் அனைவரும் பெரிய சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

பிரிவினையை ஆதரித்து நடத்திய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து, கேட்டலோனிய பிரதேச அரசை கலைத்த ஸ்பெயின் மத்திய அரசு, நேரடி ஆட்சியை அமல்படுத்தியது.

பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கேட்டலோனிய விடுதலைக்கு ஆதரவான கட்சிகள் பெரும்பான்மைக்கு சற்று அதிக இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-43532737

  • தொடங்கியவர்

காட்டலோனியாவை தனிநாடாக அறிவித்த கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனி எல்லையில் கைது செய்யப்பட்டார்…

Catalonia-pr.jpg?resize=940%2C627 Catalan Regional President Carles Puigdemont 

காட்டலோனியாவை தனிநாடாக அறிவித்து, ஸ்பெயின் அரசின் நடவடிக்கைக்கு பயந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்ற கார்லஸ் பூஜ்டிமோன், டென்மார்க் – ஜெர்மனி எல்லையில் இன்று கைது செய்யப்பட்டார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, காட்டலோனியாவே. ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இந்த மாகாணம்தான் நிறைவு செய்கிறது. ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் காட்டலோனியாவின் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் இந்த மாகாணத்துக்குப் போகிறது.

 

காட்டலோனியா மாகாணத்துக்கு கூடுதலாக சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயின் நாட்டின் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. தங்களது தலையெழுத்தை தாங்களே நிர்ணயித்துக்கொள்வதற்காக சுய நிர்ணய அதிகாரம் (தனி நாடு) வேண்டும் என்ற உணர்வு காட்டலோனியா மக்களிடையே கடந்த 5 ஆண்டுகளாக தலைதூக்கி வந்தது. ஆனால் ஸ்பெயின் ஒற்றுமையாளர்கள், “காட்டலோனியா அதிகாரமிக்க தன்னாட்சி மாகாணமாக திகழ்கிறதே என்ற வாதத்தை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஸ்பெயினில் இருந்து தனி நாடாக வேண்டுமா அல்லது ஸ்பெயினுடன் இணைந்தே இருக்கலாமா? என்பது பற்றி பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த அந்த காட்டலோனியா அரசு முடிவு செய்தது. ஆனால், இதனை ஸ்பெயின் அரசு அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றும் அங்கீகாரம் வழங்கவில்லை.

இவற்றை எல்லாம் மீறி கடந்த 2017-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் 90 சதவித மக்கள் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர் என காட்டலோனியா தனிநாடு ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், காட்டலோனியாவில் சுயநிர்ணய பொதுவாக்கெடுப்பு நடைபெறவில்லை என ஸ்பெயின் பிரதமர் மரியன்னோ ராஜோய் அறிவித்தார். இது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து எனவும் அவர் விமர்சனம் செய்தார்.

காட்டலோனியா அரசின் நடவடிக்கையினால் ஸ்பெயினில் கடும் விமர்சனங்கள், எதிர்ப்புக்கள் எழுந்த நிலையில், ஸ்பெயின் அரசின் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்ததாது என தெரிவித்த கார்லஸ், காட்டலோனியா விடுதலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். ஸ்பெயினில் இருந்து விடுதலை பெற்றதாக காட்டலோனியா பாராளுமன்றம் கடந்த ஆண்டில் அறிவித்தது.

இதனையடுத்து காட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தை பறிப்பது தொடர்பாக ஸ்பெயின் பாராளுமன்றம் எதிர் நடவடிக்கைகளை தொடங்கியது. பூஜ்டிமோன்ட் மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் 4 பேர் பெல்ஜியம் நாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

தேசத்துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயின் அரசால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன்ட், அவரது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜோர்டி டுருல் உள்பட 13 எதிர்பாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப் போவதாக சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. கார்லஸ் பூஜ்டிமோனை கைது செய்யும் சர்வதேச கைது உத்தரவை கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் பிறப்பித்தது.

கடந்த வியாழக்கிழமையில் இருந்து பின்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் கார்லஸ் பூஜ்டிமோன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு எழுந்தது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து காட்டலோனியா பகுதியை துண்டாட முயன்ற குற்றச்சாட்டின்கீழ் பூஜ்டிமோன்ட் உள்ளிட்டவர்களுக்கு சுமார் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என அந்நாட்டின் சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், கார்லஸ் பூஜ்டிமோன் இன்று ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.

டென்மார்க்கில் இருந்து பெல்ஜியத்திற்கு காரில் செல்லும் வழியில் ஸ்க்லெஸ்விக்-ஹோல்ஸ்ட்டெய்ன் நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் நாட்டு காவற்துறையினர் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 11.19 மணியளவில் கைது செய்து, காவலில் அடைத்து வைத்துள்ளதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன

http://globaltamilnews.net/2018/72314/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.