Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களை நியமிக்க அரசுத் தரப்பு தயாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களை

நியமிக்க அரசுத் தரப்பு தயாரா?

`

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஆட்கடத்தலும், காணாமற் போதலும், அச்சுறுத்தியும் கடத்தியும் கப்பம் அறவிடலும் மிக மோசமான வன்முறைகளாக மனித உரிமை மீறல்களாக இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன.

அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் இவை சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகின்றன. சட்டத்தையும், ஒழுங்கையும் காப்பாற்ற வேண்டியவர்கள் இந்த அராஜகங்கள் குறித்து பாராமுகமாக இருக்கின்றார்கள் என்பதற்கு அப்பால், அவர்களே இவற்றுக்குத் துணை போகின்றனரோ என்ற ஆதங்கம் விசனம் பெரும் சந்தேகம் தமிழர்களுக்கு. இந்த மோசமான கொடூரங்கள் நிகழும் போக்கைப் பார்க்கும்போதும், அவை பற்றிக் கிடைக்கும் தகவல்களை அறியும்போதும் அத்தகைய எண்ணமே தமிழர்கள் மனதில் மேலோங்குகின்றன.

இவை சர்வதேச சமூகத்தின் கவனத்தைஅதிகளவில் ஈர்த்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரங்கேறும் இந்த அட்டூழியங்களை அரசுத் தலைமை நினைத்தால் ஒரு சில மணி நேரத்திலேயே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். "மனமுண்டானால்தான் இடமுண்டு' என்பதே இவ்விடயத்தில் உள்ள பிரச்சினை பின்னடைவுக்குக் காரணம் என்பதை இப்பத்தியிலேயே ஏலவே பல தடவைகள் சுட்டிக்காட்டியாகி விட்டது.

ஆனாலும், இந்தக் கொடூரங்களை குறிப்பாகத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த அவலங்களை தடுத்து நிறுத்துவதற்கான உறுதிப்பாடும் திடசங்கற்பமும் அரசுத் தலைமைக்கு இல்லை என்பதே தமிழர்களின் குற்றச்சாட்டு; மனக்குறை.

எனினும், அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவோ இந்த விடயம் குறித்து வேறு விதமாகக் கருத்து வெளியிடுகின்றார்.

""சர்வதேசத்தின் முன்னால் இலங்கையை ஒரு வியாதி பீடித்த நாடாகக் காட்டும் நோக்கோடு ஆட்கடத்தல்கள், காணாமற்போதல் போன்றவை குறித்து பெரிதுபடுத்திப் பிரசாரப்படுத்தாதீர்கள். ஆதாரங்கள் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவதூறு படுத்தாதீர்கள்!'' என்று கூறுகின்றார் அரசுத் தலைவர்.

அவரது இந்த ஆலோசனை தொடர்பாக இரண்டு முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதும் கட்டாயமானதுமாகும்.

முதலாவது ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவது தவறானதே. ஏற்றுக்கொள்ள முடியாததுதான். ஆனால் தவறுகள், அத்துமீறல்கள், அராஜகங்கள் மேற்கொள்வதற்கு வசதியாக ஆதாரங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள்,சான்றுகள் முன்வைக்கப்பட முடியாத நிலையை உருவாக்கி வைத்துக்கொண்டு அந்த வாய்ப்பின் கீழ் அராஜகங்கள் தொடரப்படுமானால் அவற்றை என்ன செய்வது?

உதாரணத்திற்கு தற்போது தலைநகரிலும் அரசுப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் தாயகத்திலும் சர்வ சாதாரணமாக நிகழும் ஆட்கடத்தல்களுக்கு, நேரடியாக இன்னார்தான் காரணம் எனச் சுட்டிக்காட்டுவதற்கு ஆதாரங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அச்சுறுத்திக் கப்பம் பெறும் அராஜகவாதிகள் குழுவின் தொலைபேசி இலக்கங்கள் வரை துப்புகள், தகவல்கள் கொடுக்கப்பட்டும் பாதுகாப்புத்தரப்பு எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுத்ததாக நம்பகத் தகவல்கள் எவையும் இல்லை. அப்படியிருக்க, இந்த ஆட்கடத்தலும் கப்பம் கோரலும் சர்வ சாதாரணமாக நடக்க அவற்றின் சூத்திரதாரிகளைப் பிடித்து, அம்பலப்படுத்துவதற்கான ஆதாரங்கள் பொதுமக்களிடம் இல்லை என்பதற்காக அந்த அராஜகங்களை மக்களும் ஊடகங்களும் அம்பலப்படுத்தாமல், அமுக்கி வாசித்து, நாட்டுக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரும் கீர்த்தியும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி எதிர்பார்க்கின்றாரா?

அடுத்தது ஜனாதிபதி குறிப்பிடும் இந்த ஆட்கடத்தல், காணாமற் போதல் பற்றிய சர்ச்சை குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே.கவின் பிரதம கொரடாவே நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்திருக்கின்றார். இந்த ஆட்கடத்தல்களின் மூலம் தலா ஐம்பது லட்சம் ரூபாவிலிருந்து ஒரு கோடி ரூபா வரை கப்பம் அறவிடும் அராஜகத்தின் பின்ணியில் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளைத் தங்களுக்குத் தெரியும் என்று அவர் கூறுகிறார். சிறப்புரிமைப்பிரச்சினை காரணமாக அப்பெயர்களை அம்பலப்படுத்த முடியாமல் இருப்பதாகக் குறிப்பிடும் அவர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்தால் அதற்கு முன்னால் இந்த விடயங்களையும் விவரங்களையும் அம்பலப்படுத்திப் பகிரங்கப்படுத்தலாம் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

அதேசமயம், ஜனாதிபதி மஹிந்தர் மற்றும் அவரது சகோதரர் குழுவின் அத்துமீறிய செயற்பாடுகளைப் பகிரங்கமாக விமர்சித்து, குற்றம் சுமத்திவரும் ஸ்ரீல.சுகவின் அதிருப்திக் குழுவினரான முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராய்ச்சி ஆகியோரும் அந்த விவகாரங்கள் குறித்து விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கும்படி கோருகின்றனர்.

ஆக, ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாம் எனக் கூறும் ஜனாதிபதி தரப்பைப் பார்த்து, நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களை நியமியுங்கள், ஆதாரங்கள், சான்றுகள் போன்றவற்றை முன்வைக்கிறோம் என்கிறார்கள் எதிர்த்தரப்பில் உள்ளவர்கள்.

சபாஷ். சரியான போட்டி!

தெரிவுக்குழுக்களை அமைத்து, ஆதாரங்களை முன்வைக்க இடமளித்து, இந்த விவகாரங்களில் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஜனாதிபதித் தரப்புத் தயாரா?

நாட்டு மக்களுக்குப் பதில் தேவை.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.