Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்! #WeWantCMB

Featured Replies

தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம்! #WeWantCMB

 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, இன்று தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் துவங்கியுள்ளது.

முழு அடைப்பு போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதைச் செயல்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோ, வேன்கள் ஆகியவை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 80 சதவிகித பேருந்துகள் இயங்காது என தொழிற்சங்கங்கள் முன்னதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், அனைத்துப் பேருந்துகளும் இயங்கும் என நேற்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழக - கர்நாடக எல்லையில் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு எந்தப் பேருந்தும் இயக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக சுமார்  ஒரு லட்சம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

முழுஅடைப்பு! - புதுச்சேரியில் தமிழக அரசுப்பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு #BandhUpdates #WeWantCMB

 
 

புதுச்சேரியில் தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. 

பேருந்து உடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தடையாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதுச்சேரியில் தி.மு.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்பு காரணமாக நேரு வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, குபேர் அங்காடி உள்ளிட்ட நகரமுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக அமைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பேருந்து சேவைகளை பொறுத்தவரையில் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. 

இதனிடையே தமிழகத்தின் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து புதுச்சேரி பேருந்து நிலையம் வந்த 4 தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம உடைத்தனர். இதனால் தமிழக அரசு பேருந்துகளும் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் புதுச்சேரி முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்து கண்ணாடி உடைப்பு

திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் பேருந்து நிலையம் வளாகம், இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/121242-cauvery-management-board-tamil-nadu-bandh.html

  • தொடங்கியவர்

மெரினாவில் ஆர்ப்பாட்டம் : அதிரடியாக ஸ்டாலின் கைது : தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைப்பு!!!

 

 
 

சென்னை - அண்ணாசாலையை தொடர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்தியதால் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று தி.மு.க சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

New_Layout__3_.jpg

மேலும் சென்னையில் 5ஆம் நாளாக இன்று தி.மு.க போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

ஸ்டாலின் தலைமையில் மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள அண்ணா சமாதியை நோக்கி பேரணியில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோரும் கருப்புக் கொடி ஏந்தியபடி ஸ்டாலினுடன் பேரணியாக சென்றனர். 

பேரணியில் அவர்கள் மோடிக்கு எதிராக குரல் எழுப்பிய போது பொலிஸார் தடுத்து நிறுத்தியும் பொருட்படுத்தாமல் தி.மு.கவினர் அண்ணா சமாதியை நோக்கி  செல்ல முயன்றதால் பொலிஸாருக்கும் தி.மு.கவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் பின் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  எனவே அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே ஸ்டாலின் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மெரினா சாலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/32258

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.