Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன்வெல்த் போட்டி- 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடம்

Featured Replies

காமன்வெல்த் போட்டி- 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடம்

 

 
 

காமன்வெல்த் 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. #CWG2018 #GC2018

 
 
 
 
காமன்வெல்த் போட்டி- 14 தங்கத்துடன் 36 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடம்
 
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 4-ந்தேதி) கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று போட்டிகள் தொடங்கியது. தொடக்க நாளில் இங்கிலாந்து 6 தங்கம், தலா மூன்று வெள்ளி, வெண்கலத்துடன் 12 பதக்கங்கள் வென்று முதல் இடத்தை பிடித்தது.

போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 15 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தை பிடித்திருந்தது. மலேசியா 2 தங்கங்களுடன் 3-வது இடத்தையும், இந்தியா தலா ஒரு தங்கம், வெள்ளியுடன் 7-வது இடத்தையும் பிடித்திருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா தங்கள் உள்பட அனைத்து பதக்கங்களுக்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. இன்றைய 2-வது நாளில் மட்டும் 21 பதக்கங்களை பெற்றுள்ளது.

14 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 36 பதக்கங்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 9 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 18 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்தியா 2 தங்கம், தலா ஒரு வெள்ளி, வெண்கலத்துடன் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/06202354/1155555/commonwealth-games-2018-australia-1st-place-with-14.vpf

  • தொடங்கியவர்

காமன்வெல்த் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற தமிழர்

சதீஷ் குமார் சிவலிங்கம்படத்தின் காப்புரிமைMARK METCALFE Image captionசதீஷ் குமார் சிவலிங்கம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தற்போது வெற்றிப் பெற்றுள்ள சதீஷ் குமார் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார் சதீஷ். பதக்கம் வென்றது தன் வாழ்வின் திருப்புமுனைத் தருணம் என்று அப்போது பேசிய சதீஷ் குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

இந்நிலையில், சதீஷ்குமார் தங்கப் பதக்கம் வென்றதற்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
 

Weightlifters continue to make us proud on Day3 at #GC2018. Congratulations to Sathish Kumar Sivalingam for bagging the Gold in Men's 77Kg #PresidentKovind

 

பளு தூக்குவதில் ஒரு பிரிவில் 144 கிலோவும், மற்றொரு பிரிவில் 173 கிலோவும் மொத்தம் 317 கிலோ எடை தூக்கி தங்கத்தை கைப்பற்றியுள்ளார் சதீஷ்.

தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதங்கப் பதக்கம் வென்ற சதீஷ்

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதை பெற்றுள்ளார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே பளு தூக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

 

முன்னாள் ராணுவ வீரரான சதீஷ் குமாரின் தந்தையும் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவரது பணி காரணமாக அவரால் இதில் பெரிதளவில் வெற்றிப்பெற முடியவில்லை.

எனவே, தன் மகனை பெரிய பளு தூக்கும் வீரராக்க வேண்டும் என்ற கணவில் சதீஷுக்கு 12 வயதிலிருந்தே பயிற்சி அளித்து வந்தார்.

அப்போதிலிருந்தே தினமும் கடும் பயிற்சி எடுத்து வந்த சதீஷ், 2006ஆம் ஆண்டில் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு 50 கிலோ எடை தூக்கி முதலிடம் பெற்றார். பின்பு மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட இவர் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

http://www.bbc.com/tamil/sport-43679162

  • தொடங்கியவர்

காமன்வெல்த் போட்டி: 4 நாட்களில் 10 பதக்கங்களை வென்ற இந்தியா

மனு பேகர் மற்றும் ஹீனா சித்துபடத்தின் காப்புரிமைREUTERS Image captionமனு பேகர் மற்றும் ஹீனா சித்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதான மனு பேகர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்து வெள்ளியை கைப்பற்றி உள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ள 16 வயதான மனு, ஹரியானவை சேர்ந்தவர் ஆவார். மனு மொத்தம் 240.9 புள்ளிகள் எடுத்தும், ஹீனா 234 புள்ளிகள் எடுத்தும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

இதனையடுத்து, ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியாவை சேர்ந்த ரவிகுமார்.

தற்போது 6 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா, காமன்வெல்த் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இத்துடன் இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

வெள்ளி வென்ற ஹீனா சித்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவெள்ளி வென்ற ஹீனா சித்து

முன்னதாக, பெண்களுக்கான 69 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பூனம் யாதவ் தங்கம் வென்றுள்ளார்.

பெனாரசை சேர்ந்த பூனம், மொத்தம் 222 கிலோ எடையை தூக்கி இந்த பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் இந்தியா இதுவரை 4 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

http://www.bbc.com/tamil/sport-43687227

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.