Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!" நீதிபதியின் உறுதி

Featured Replies

"எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு!" நீதிபதியின் உறுதி

 
 

ஈபிஎஸ் ஓபிஎஸ்

``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்'' என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், ``இந்த வழக்குத் தொடர்பாக ஏதாவது, தனி கோரிக்கை இருந்தால் அதை வழக்காகத் தாக்கல் செய்யுங்கள்'' என்று வக்கீல் குமாஸ்தா தேவராஜனுக்கு உத்தரவிட்டுள்ளார். 

சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் செய்த எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஒன்றுசேர்ந்தனர். அன்று மாலையே வித்யாசாகர் ராவ் (அன்றைய தமிழகப் பொறுப்பு கவர்னர்) முன்னிலையில், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனும் அமைச்சராகப் பதவி ஏற்றார். இதையடுத்து, ஆகஸ்ட் 22-ம் தேதி, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, தாங்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறிக் கடிதம் கொடுத்தார்கள். மேலும், ``முதல்வரை மாற்ற வேண்டும்; சபாநாயகர் தனபாலுக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்'' என்று நிருபர்களுக்குப் பேட்டி கொடுத்தனர். 

இந்த நிலையில், கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதாக 19 எம்.எல்.ஏ-க்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. தமிழக அரசின் தலைமைக் கொறடா  ராஜேந்திரனின் பரிந்துரையின் பேரில்... சபாநாயகர் தனபால், ``19 எம்.எல்.ஏ-க்களும் ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று நோட்டீஸ் அனுப்பினார். அதில், ஜக்கையன் எம்.எல்.ஏ கொடுத்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 18 எம்.எல்.ஏ-க்களைத்  தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தமிழக அரசின் அரசிதழில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து, அந்த 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் பல்வேறுகட்ட விசாரணைகள் முடிந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜனவரி 23-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர், ஆளும்கட்சி கொறடா, மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் எழுத்துப்பூர்வமான மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு ஒத்திவைத்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு முன்பு இன்று வழக்கம்போல் வழக்குகளை விசாரிக்கத்தொடங்கினார்கள். அப்போது, சென்னைச் செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் ஆஜராகி, ``டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்காகத் தள்ளி வைக்கப்பட்டது. 18 எம்.எல்.ஏ-க்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அந்தத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் செயல்பாடு ஒன்றும் இல்லாமல் இருக்கிறது. அந்த வழக்கின் தீர்ப்பை விரைவாக வெளியிட வேண்டும் அல்லது 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கைவைத்தார்.

 

அதற்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ``அந்த வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு விரைவில் வழங்கப்படும். இதில் ஏதாவது, தனி கோரிக்கை இருந்தால் அதை வழக்காகத் தாக்கல் செய்யுங்கள்'' என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தார். பின்னர், வேறு வழக்குகளை வழக்கம்போல அந்த அமர்வு விசாரித்தது. 18.09.2017 அன்று 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்  செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு, வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புத் தேதி குறிப்பிடப்படாமல் ஜனவரி 23-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 113 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. 234 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட சட்சபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்று தி.மு.க ஏற்கெனவே குற்றம்சாட்டி உள்ள நிலையில், இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி இருக்கிறார் தேவராஜன்.

https://www.vikatan.com/news/coverstory/121697-political-crisis-in-aiadmk-government.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.