Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாயில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை!!!

Featured Replies

துபாயில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த 3 இந்தியர்களுக்கு 517 ஆண்டுகள் சிறை!!!

 

 
 

துபாயில் நிதி நிறுவனம் நடத்தி முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த மூன்று இந்தியர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 517 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள மபூசா பகுதியை சேர்ந்த சிட்னி லிமோஸ் அவரது மனைவி வாலனி. இவர்களுடன்  ரியான் டிசோசா என்ற இந்தியரும் சேர்ந்து துபாயில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

தங்களது நிதி நிறுவனத்தில் அமெரிக்க டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை முதலீடு செய்து வந்தால் 120 % லாபம் தருகிறோம் எனக்கூறி பலரை சேர்த்துள்ளனர்.

இவர்களது கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஈர்க்கப்பட்ட பலர் அந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர். ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 7000ற்கும் அதிகமானோரும் இதில் அடங்குவார்கள்.

ஆரம்பத்தில் சந்தைப்படுத்தலின் போது கூறியதைப் போன்று  குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுத்துள்ளது.  நாளடைவில் அவர்கள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத் தொகையை திருப்பி கொடுக்கத் தவறியுள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை திரும்ப தருமாறு வலியுறுத்தியும் நிறுவனம் பணத்தை திருப்பி கொடுத்தப்பாடில்லை

இதுதொடர்பாக முதலீட்டாளர்கள்  பொருளாதார குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து லிமோஸ், ரியான் டிசோசா உட்பட 3 பேர் மீதும் பொலிஸார்  வழக்குப்பதிவு செய்தனர்.

குறித்த வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.

தீர்ப்பு வழங்கிய துபாய் நீதிபதி நிதி நிறுவனத்தின் உரிமையாளரான லிமோஸ், வாலனி மற்றும் டிசோசாவிற்கு 517 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு கோவாவில் நடந்த கால்பந்து போட்டியில் முக்கிய விளம்பரதாரராக லிமோஸின் நிறுவனம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/32454

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.