Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’

Featured Replies

‘அரசியல்வாதிகளால் கிரிக்கெட் துறைக்கு அழிவு’
 
 

image_5e805e8e50.jpgஅரசியல்வாதிகள் இலங்கை கிரிக்கெட் துறை அழிக்கப்படுவதாக, இலங்கை அணியின்  முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஒருவருடத்திற்குள் மாத்திரம்  இலங்கை அணியில் 60 புதிய வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முரளி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் “ த எக்கொனமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் அரசியல்வாதிகளின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது. கிரிக்கெட் தொடர்பில் குறைந்த அறிவு அல்லது அறிவில்லாதவர்களால் கிரிக்கெட் அழிவடைந்து செல்கின்றது. கிரிக்கெட் என்பத நம்பிக்கை. வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியம் என்று முரளி தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியல்வாதிகளால்-கிரிக்கெட்-துறைக்கு-அழிவு/175-214463

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட்டின் அழிவு குறித்து முரளி ஆவேசம் !

 

இலங்கையின் கிரிக்கெட்டை அரசியல்வாதிகள் அழிக்கின்றனர் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளீதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

muttiah-muralitharan.jpg

இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்சிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட் பாரிய குழப்பநிலையில் உள்ளது என்பதே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இலங்கை கிரிக்கெட்டினை நிர்வகிக்கும் பொறுப்பை அரசியல்வாதிகள் கைப்பற்றியுள்ளனர் என தெரிவித்துள்ள முரளீதரன் கிரிக்கெட் குறித்த அறிவு இல்லாத அவர்கள் நாளாந்தம் இலங்கை கிரிக்கெட்டை அழித்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையுடன் தொடர்புபட்ட விடயம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கான நம்பிக்கையை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள முரளீதரன், நான் ஒரே நாளில் தலைசிறந்த வீரனாக மாறவில்லை, நான்கைந்து வருடங்கள் அர்ஜுண ரணதுங்க எனக்கு தேவையான நம்பிக்கையை வழங்கினார்  எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது துடுப்பாட்ட வீரர் ஒருவர் களத்தில் இறங்கும் ஒவ்வொரு தடவையும் அவர் சிறந்த முறையில் விளையாடாவிட்டால் அடுத்தபோட்டியில் அவரிற்கு இடமில்லை என  தெரிவிக்கின்றனர் என முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

பந்துவீச்சாளர்களின் நிலைமையும் இவ்வாறானாதாகவே காணப்படுகின்றது. கடந்த ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்தில் இலங்கை அணிக்காக 60 வீரர்கள் விளையாடியுள்ளனர். இது தொலைநோக்கம் எதுவும் இல்லாததை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/32582

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட்டின் அழிவுக்கு அரசியல்வாதிகளே காரணம் – முரளிதரன்

Muttiah-Muralitharan-2
 

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவின் தி எகொனமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

”இலங்கையின் கிரிக்கெட்டானது தற்போது குழம்பிப் போயுள்ளது. அரசியல்வாதிகள் தான் இலங்கை கிரிக்கெட்டை நிர்வாகம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எந்தவொரு அனுபவமும், அறிவும் இல்லாதவர்கள் நிர்வாகத்தில் இருப்பதென்பது இலங்கையின் கிரிக்கெட் நாளுக்கு நாள் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்தி நிற்கின்றது. கிரிக்கெட் என்பது நம்பிக்கை. வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு அங்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஒரு காலத்தில் இலங்கை அணியின் ஜேர்சியை கிரிக்கெட் வீரர்கள் அணியும் போது கௌரவமும், மதிப்பும் காணப்பட்டது. எனினும், தற்போது அவ்வாறான நிலை உள்ளதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

”இதேநேரம், 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றது. அதேபோன்று 2014 T-20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது. அவ்வாறான சாதனைகளை அண்மைக்காலமாக படைத்து வந்த இலங்கை அணி தற்போது பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக, நான் ஒரு நாளில் சிறந்த பந்துவீச்சாளராக மாறவில்லை. நான்கைந்து வருடங்கள் அர்ஜுன ரணதுங்க எனக்கு தேவையான நம்பிக்கையை வழங்கினார்” எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்காவிட்டாலோ அல்லது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றாவிட்டாலோ அடுத்துவரும் போட்டிகளில் கதிரைகளில் உட்கார வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். இதுதான் இலங்கை அணியின் தற்போதைய நிலை.

அதேநேரம், கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 60 வீரர்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்கள். வருடமொன்றுக்கு 60 வீரர்களா? இது மிகவும் மோசமான அணுகுமுறை. இது தொலைநோக்கம் எதுவும் இல்லாததை வெளிப்படுத்துகின்றது. ஆனால் இவ்வாறான மாற்றங்களால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பின்னடைவை இலங்கை கிரிக்கெட் சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இளம் வீரர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற கேள்விக்கு முரளிதரன் கருத்து வெளியிடுகையில்,  

”குசெல் மென்டிஸை எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணிக்காக எதிர்காலத்தில் பிரகாசித்து தொடர்ந்து அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர். ஆரம்ப காலங்களில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். எனினும், ஒருசில மாதங்களில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஓரு சுற்றுப்பயணத்தில் அவரால் ஓட்டங்களை குவிக்க முடியாது போன காரணத்தால் அடுத்த தொடரில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே, இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இதுபோன்ற காரணங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது” என்றார்.

 

கடந்த காலங்களில் முன்னாள் தலைவர்களான அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா போன்றவர்கள் இலங்கை அணிக்காக விளையாடியதன் காரணமாகத்தான் இலங்கை அணிக்கு கௌரவமும், வெற்றியும் கிடைத்தது. அதனாலேயே கிரிக்கெட் உலகில் இலங்கையின் பெயரை காண்பிக்க முடிந்ததாகத் தெரிவித்த முரளிதரன், அவ்வாறானதொரு நிலைமை தற்போது இலங்கை அணியில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள், அரசியல்வாதிகளின் பிரவேசம் என்பவற்றால் இலங்கை கிரிக்கெட் அணி அழிவடைந்து வருவதாக முரளிதரன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முரளியின் கருத்துக்கு இலங்கை கிரிக்கெட் பதிலடி

tamil-murali-696x464.jpg
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், நட்சத்திர சுழல் பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், கடந்த கால சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு தவறான நபர்களின் ஆலோசனைப்படி ஊடகங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பி வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக இந்தியாவின் சஞ்சிகையொன்றுக்கு முத்தையா முரளிதரன் அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேர்தல் ஒன்று நெருங்கி வருகின்ற போது இவ்வாறான நாடகங்களை நாங்கள் நிறையவே பார்த்துள்ளோம். இது ஒரு சாதாரண விடயம். ஆனாலும், முரளிதரன் போன்ற உலகப் புகழ் பெற்ற நட்சத்திர வீரரொருவர் இவ்வாறான சூழ்ச்சிகளுக்கு ஆளாகியிருப்பது தொடர்பில் உண்மையில் நாம் கவலையடைகிறோம்.

அதிலும் குறிப்பாக முரளிரதன் கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு இவ்வாறு பேசுகின்றார் என நான் நினைக்கிறேன். 1995ஆம் ஆண்டு முரளிதரனின் பந்துவீச்சு தொடர்பில் முதற்தடவையாக சர்ச்சை எழுந்தது. அப்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இருந்த திலங்க சுமதிபால மற்றும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி திஸாநாயக்கவின் முயற்சியினால் அவருக்கு உதவி செய்தோம்.

அதேபோன்று 2004இல் நான் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக இருந்த போது தூஸ்ரா பந்துவீச்சு தொடர்பாக ஏற்பட்ட குற்றச்சாட்டிலிருந்தும் அவரை நாம் மீட்டிருந்தோம். இதற்காக நாம் அவரை அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்து உதவியிருந்தோம்.

இது இவ்வாறிருக்க, உலகம் அறிந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரொருவர் இவ்வாறு குற்றம் சுமத்துவது தொடர்பில் உண்மையில் நாம் கவலையடைகிறோம். எனவே ஒரு சிலரின் தூண்டுதல் காரணமாக எந்தவொரு உத்தரவாதமுமின்றி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகவே நான் அவருடைய கூற்றை கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவின் த எகொனமிக்ஸ் டைம்ஸ் (The Economic Times) சஞ்சிகைக்கு முத்தையா முரளிதரன் வழங்கிய விசேட நேர்காணலின் போது இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டானது அரசியல்வாதிகளின் தலையீடுகளால் அழிவடைந்து வருவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

அதிலும் குறிப்பாக, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எந்தவொரு அனுபவமும், அறிவும் இல்லாதவர்கள் நிர்வாகத்தில் இருப்பதென்பது இலங்கையின் கிரிக்கெட்டை நாளுக்கு நாள் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

எது எவ்வாறியினும், முரளிதரனுக்கும், தற்போதுள்ள திலங்க சுமதிபால தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையில் இதற்கு முன் பல தடவைகள் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதன்போது 10 நாட்களுக்கு அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக முத்தையா முரளிதரன் செயற்பட்டார்.

இவ்வாறு முரளிதரன் அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியளித்தமைக்கு பல தரப்பிலும் கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, முரளிதரனை துரோகி என பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.

 

இதற்கு முரளிதரன் பதிலளிக்கையில், ”அவுஸ்திரேலிய அணிக்கு போட்டிகள் ஆரம்பமாக முன் வெறும் 10 நாட்களுக்கு பயிற்சியளிக்கவே விருப்பம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் முழு தொடருக்கும் என்னை பணிபுரிய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் இலங்கை அணி வெற்றிக்காக விளையாடும் போது அதை எவ்வாறு அவுஸ்திரேலிய அணியின் உடைமாற்றும் அறையிலிருந்து பார்த்து ரசிக்க முடியும். இலங்கை கிரிக்கெட் எனக்கு நிறைய செய்துள்ளது. அதற்கு நான் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன். ஆனாலும், வீரராக மாத்திரமல்லாது, ஓய்வு பெற்ற பிறகும் இந்த நாட்டுக்காக நான் பல சேவைகளை ஆற்றியுள்ளேன். என்னை இலங்கை கிரிக்கெட் துரோகி என குற்றம் சுமத்தினால் மறுபுறத்தில் அவர்கள் தான் மிகப் பெரிய துரோகி என்று சொல்வேன். அவுஸ்திரேலியா என்னை அழைப்பதற்கு முன் இலங்கை எனது சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பினால் நாட்டுக்காக அதைச் செய்திருப்பேன” எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே குறித்த காலப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விடயத்தில் முரளிதரனுக்கு ஆதரவாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன உள்ளிட்டோர் பேசியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.