Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு

Featured Replies

அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அனுஸ்டிப்பு

ff13a8d6-7bef-4b6e-9525-a8c75ab947f7.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன், அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்

 

இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும் எனக் கோரி மட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில், கடந்த 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00ea00d2-51bc-42cd-bd64-b4a12b407bfc.jpg8ca81d40-a1ff-4313-a61a-108d67808c91.jpg568a5ec2-c47b-4500-8e11-312910c74d45.jpg4432bedc-b4b4-47bd-90cc-5c70cb999984.jpg7137d13d-a193-46b9-9e14-6c4ca7858ee4.jpg404186a8-587e-40d5-93e1-54dccee2977a.jpg

http://globaltamilnews.net/2018/75667/

  • தொடங்கியவர்

தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு

 

 

தியா தீபம் அன்னையின் பூபதியின் 30ஆவது ஆண்டு நினைவு இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 

New_Layout__3__copy.jpg

தியாக தீபம் அன்னை பூபதியின் 30 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களை அங்கிருந்துவெளியேற்றினார்.

New_Layout__3__copy_2.jpg

அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம். எனவே தயவுசெய்து உங்களது பாதணிகளை வெளியே அகற்றுங்கள் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/32635

  • தொடங்கியவர்

‘வெளியேறுங்கள்’ மட்டு மேயரின் உத்தரவால் தடுமாறிய பொலிஸ் அதிகாரிகள்

இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்வோரை புனிதர்கள் என்று கூறுவார்கள். அவ்வாறு இறந்த பின்பும் மக்கள் மனதில் இன்றும் வாழ்வோர் பலர் உள்ளனர்.

அந்த வகையில் தமிழ் மக்களுக்காக போராடி, அவர்களுக்காக உயிர்விட்ட பலரின் வரலாறுகளும் உண்டு. தமிழ் மக்கள் என்றும் அவர்களை மறக்க மாட்டார்கள். அவ்வாறு மறந்தால் அவர்களை தமிழர்கள் என்று கூறுவதற்கே வெட்கம்...

தமிழர்கள் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழ்கின்றார்கள். அவர்கள் மனதில் கடவுளாக வாழும் புனிதர்களில் அன்னை பூபதியும் ஒருவராவார்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவரே அன்னை பூபதி.

உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். என்ற இரண்டு கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.

1988 மார்ச் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 1988 ஏப்பிரல் 19ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தது. அன்றைய தினம் உயிர் நீத்தார் இந்த தாய்.

அன்னை பூபதியின் நினைவு தினம் நேற்று அனைத்து தமிழர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.

இதற்காக தாயின் சமாதி அமைந்துள்ள மட்டக்களப்பு கல்லடி, நாவலடிக்கு பலர் சென்று தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவனும் ஏனைய உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

இதன்போது அன்னை பூபதியின் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதை கண்ட மாநகர மேயர் பொலிஸாருக்கு விடுத்த உத்தரவு அனைவராலும் பெரிதும் பேசப்படுகின்றது.

“அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம். எனவே தயவு செய்து உங்களது பாதணிகளை வெளியே கழற்றி விட்டு வாருங்கள்” என்று மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து அனைதது பொலிஸாரும் அன்னை பூபதியின் நினைவிடத்திலிருந்து வெளியேறி வெளியில் நின்று தமது கடமைகளை செய்திருந்தார்கள்.

மேயரின் இந்த உத்தரவு தமிழ் மக்களுக்கும் புனிதத்தன்மை இருக்கின்றது, எங்கள் மனதிலும் தமிழ் உணர்வு இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/180365?ref=home-feed

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.