Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு

Featured Replies

ஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு

conflict.jpg?resize=259%2C194

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது. மாகாண கல்வி அமைச்சர் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வலியுறுத்தி மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான சர்வேஸ்வரன் பிடிவாதமாக உள்ளார். இதனால் இன்று இடம்பெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டது.

வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று காலை சந்தித்தனர். இதன்போது, மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மோகனதாஸ் மாற்றப்படுவதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாகவிருக்கும் சிவபாதசுந்தரம், மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும் பயிற்சி முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக தெய்வேந்திரன் நியமிக்கப்படுவார் என்று ஆளுநரால் பதில் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நியமனத்தை ஏற்க மறுத்த பதில் முதலமைச்சர், தம்மால் பரிந்துரைக்கப்படுபவர்களை மட்டுமே செயலாளர்களாக நியமிக்க முடியும் என முரண்பட்டார். அத்துடன், இந்தியாவில் இருக்கும் முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்த நியமனங்கள் தொடர்பில் சர்வேஸ்வரன் பேசினார்.

கல்வி அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரன் நியமிக்கப்படாவிடின், அனைத்து நியமனங்களையும் உடன் நிறுத்துமாறு முதலமைச்சர் தொலைபேசியிலேயே கேட்டுக்கொண்டார். அதனையடுத்து ஆளுநரால் இன்று வழங்கப்படவிருந்த செயலாளர் மாற்றலை நிறுத்திவைக்குமாறு பதில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.அதனால் மாற்றல் கடிதங்களை வழங்குவதை ஆளுநர் பிற்போட்டார்.

http://globaltamilnews.net/2018/75662/

  • தொடங்கியவர்
  • வட­மா­காண செய­லா­ளர்­கள் இட­மாற்­றம் திடீர் நிறுத்­தம்!!
 
 

வட­மா­காண செய­லா­ளர்­கள் இட­மாற்­றம் திடீர் நிறுத்­தம்!!

வடக்கு மாகாண அமைச்­சுக்­க­ளின் செய­லா­ளர்­களை இட­மாற்­றம் செய்­வது மீண்­டும் தள்­ளிப்­போ­யுள்­ளது. வடக்கு அமைச்­சர்­கள் தாம் விரும்­பு­ப­வர்­க­ளையே தமது அமைச்­சுக்­க­ளுக்­குச் செய­லா­ள­ராக நிய­மிக்­க­வேண்­டும் என்று பிடி­வா­தம் காட்­டு­வ­தால் இந்த நிலமை ஏற்­ப­ட்டுள்ளது என்று அறியமுடிகிறது.

இவ்­வாறு அமைச்­சர்­கள் நிய­மிக்­கக் கோரு­ப­வர்­க­ளில் ஒரு சிலர் முறை­கே­டு­கள் தொடர்­பான விசா­ரணை வளை­யத்­திற்­குள் இருப்­ப­த­னால் அவர்­களை முக்­கிய அமைச்­சுக்­க­ளின் செய­ல­ராக நிய­மிப்­ப­தற்கு ஆளு­நர் ரெஜினோல்ட் குரே தயக்­கம் காட்டி வரு­கின்­றார். இத­னால் நேற்று நடை­பெ­று­வ­தாக இருந்த செய­லர்­கள் மாற்­றம் இறுதி நேரத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ர­னின் தனது அமைச்­சிற்­குச் செய­ல­ராக நிய­மிக்­கு­மாறு கோரு­ப­வர் மீது நாடா­ளு­மன்ற சிறப்­புக் குழு­வான கோப் குழு­வின் பணிப்­பு­ரைக்கு அமை­வாக விசா­ரணை நடை­பெற்று அறிக்கை வழங்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரைக் கல்வி அமைச்­சின் செய­ல­ராக அவரை நிய­மித்­தால், அந்த விசா­ர­ணைக்கு பெரும் பாதிப்பு ஏற்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வதை அடுத்தே ஆளு­நர் இட­மாற்­றங்­க­ளைச் சடு­தி­யாக நிறுத்தி வைத்­தார்.

வடக்கு மாகாண ஆளு­ந­ராக இரண்­டா­வது தட­வை­யா­க­வும் பொறுப்­பேற்­றுக்­கொண்ட ரெஜி­னோல்ட் குரே, செய­லர்­க­ளின் இட­மாற்­றத்­திற்­கான உத்­த­ரவை நேற்று விடுப்­ப­தற்கு இருந்­தார்.

வடக்கு மாகாண மாகாண கல்வி அமைச்­சின் செய­ல­ராக பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லர் சி.ஏ.மோகன்­ராஸ் மாற்­றப்­ப­டு­வ­து­டன், பொதுச் சேவை­கள் ஆணைக்­கு­ழு­வின் செய­லா­ள­ராக பயிற்சி முகா­மைத்­து­வத்­துக்கு பொறுப்­பா­க­வி­ருக்­கும் சிவ­பா­த­சுந்­த­ரம், பயிற்சி முகா­மைத்­து­வத்­துக்கு பொறுப்­பாக தெய்­வேந்­தி­ர­னை­யும் நிய­மிக்க ஆளு­நர் அலு­வ­ல­கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகாண பதில் முத­ல­மைச்­ச­ரும், கல்வி அமைச்­ச­ரு­மான க.சர்­வேஸ்­வ­ரன், வடக்கு மாகாண ஆளு­நர் குரேயை அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நேற்­றுக் காலை சந்­தித்­தார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­ல­ராக, தான் பரிந்­து­ரைப்­ப­வ­ரையே நிய­மிக்­க­வேண்­டும் என்று விடாப்­பி­டி­யாக நின்­றார். வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ர­னால் பரிந்­து­ரைத்­த­வ­ருக்கு எதி­ராக, நாடா­ளு­மன்ற கணக்­காய்­வுக் குழு (கோப்) பணிப்­பு­ரைக்கு அமை­வாக கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி விசா­ர­ணைக் குழு நிய­மிக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டது. இந்த முதற்­கட்ட விசா­ர­ணை­யின் அறிக்கை வடக்கு மாகா­ணத் தலை­மைச் செய­ல­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

எனி­னும் இது தொடர்­பில் முழு­மை­யான மேல­திக விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய இருக்­கின்­றன என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே நடந்த ஆரம்ப விசா­ர­ணை­யில் வடக்கு மாகாண க்கல்வி அமைச்­சின் அதி­கா­ரி­கள் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ள­னர். விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கும் குழு­வில், வடக்கு மாகாண கல்வி அமைச்சை சேர்ந்த உயர் அதி­கா­ரி­க­ளும் இடம்­பெற்­றுள்­ள­னர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் க.சர்­வேஸ்­வ­ரன் கோரு­ப­வரை நிய­மித்­தால், விசா­ர­ணைக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­ப­டும் என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இந்த இழு­ப­றி­யி­னால் நேற்று வழங்­கப்­பட இருந்த செய­லா­ளர் நிய­ம­னம் வடக்கு மாகாண ஆளு­ந­ரி­னால் ஒத்தி வைக்­கப்­பட்­டது.

http://newuthayan.com/story/86056.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.