Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!!

Featured Replies

  • கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!!
 
 

கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!!

கூட்டு அரசு இந்த வருட ஆரம்­பத்­தி­லி­ருந்து பல வித­மான அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­குள் சிக்­கித்­த­வித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. அர­ச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி சேன, தலைமை அமைச்­ச­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரது தலை­மை­யி­லான இரு பெரும் தேசி­யக் கட்­சி­கள் கூட்டுச் சேர்ந்து 40 மாதங்­கள் கால­மாக கூட்டு அரசை நாட்­டில் முன்­னெ­டுத்­துச் சென்­றுெ­காண்­டி­ருந்­தா­லும், அது பல­வீ­ன­முள்­ள­தொரு அர­சாக இருக்­கின்­ற­ப­டி­யால் எதிர்க்­கட்­சி­க­ளின் ஒன்­று­பட்ட எதிர்ப்­பு­க­ளுக்­கும் பஞ்­ச­மில்­லா­தி­ருக்­கின்றது.

மைத்­தி­ரி­பால சிறிசேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உள்­ள­கப் பிள­வு­கள், அர­ச தலை­வ­ரைக் குழப்­ப­மான­ தொரு நிலைக்கு இட்­டுச் செல்­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பலம் குறைந்த உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட எதிர்க்­கட்­சித் தலை­மைப் பத­வியை ஏற்­றுக்­கொண்டு, முதன்மை எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட்­டா­லும், முன்­னை­நாள் அர­ச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியே பல­மா­ன­தொரு எதிர்க்­கட்­சி­போல் நாட்­டில் இயங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது அர­சி­யல் ஆய்­வா­ளர்­க­ளின் கருத்­தா­க­வுள்­ளது.

தமி­ழர் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்­டிய
கடப்­பாடு அரச  தலை­வ­ருக்கு உள்­ளது

அர­ச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன ஈழத்­த­மிழ் மக்­க­ளின் பிரச்சினை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டிய முக்­கி­ய­மான கடப்­பாடு கொண்­ட­வ­ராக இருக்­கின்­றார். 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்­டாம் திகதி நாட்­டில் இடம்­பெற்ற அர­ச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் ஆட்சி மாற்­றம் தேவை என்ற விதத்­தில் இந்­தியா உட்­பட மேற்­கு­ல­கம் மாற்­ற­மொன்றை எதிர்­பார்த்­தி­ருந்­தது.

தென்­னி­லங்கை மக்­க­ளில் ஒரு தரப்­பி­ன­ரும், தமிழ், முஸ்­லிம் மக்­க­ளில் பெரும்­பா­லோ­ரும் மகிந்­த­வின் அரசை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தில் நாள்களை எண்­ணிக்­கொண்­டி­ருந்­த­னர். அதன் அடிப்­ப­டை­யில் மக்­க­ளின் விருப்­பப்­படி ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு, தற்­போது நாற்­பது மாதங்­கள் கடந்­துள்­ளன.

இடைப்­பட்ட இந்­தக் காலப்­ப­கு­தி­யில், அர­சு­டன் இணைந்து செயற்­ப­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, முதன்மை எதிர்க்­கட்­சி­யாக நாடா­ளு­மன்­றத்­தில் செயற்­ப­டு­கி­றது. இன்­றைய நல்­லாட்சி அர­சில் அங்­கம் வகிக்­கும் பிர­தான பெரும்­பான்­மை­யி­னத்­தைச் சார்ந்த இரு கட்­சி­க­ளின் கூட்­டாட்சி மீது தமிழ் மக்­கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யைத் தற்­போது அவர்­கள் படிப்­ப­டி­யாக இழந்து வரு­கின்­ற­னர்.

ஊழல் மோச­டியை ஒழிப்­போம் என்ற பரப்­புரை வாச­கத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­ச தலை­வர் தெரி­விற்­கான தேர்­த­லில் வெற்­றி­பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம­சிங்­க­வுக்­ குமி­டை­யில் ஏற்­பட்­டுள்ள மோதல் கள் தீர்க்­கப்­ப­டாத நிலை­யில், கூட்டு அர­சி­லும் ஊழல் மோச­டி­கள் மலிந்­து­விட்­டன என்ற குற்­றச்­சாட்­டுக்­கள் அர­ச த­லை­வர் உட்­பட இரு கட்­சி­க­ளைச் சேர்ந்த அமைச்­சர்­க­ளா­லும் முன்­வைக்­கப்­பட்ட­தைய­ டுத்து, அர­சின் உறுதித் தன்மை பின்­ன­டைவு கண்­டுள்­ளது.

நாடா­ளு­மன்ற  அமர்­வு­க­ளின்­போது உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில்
எப்­போ­தும்­ மோ­தல்­க­ளும்  வாக்­கு­வா­தங்­க­ளும்

இந்த வருட ஆரம்­பத்­தி­லி­ருந்து கூட்டு அர­சில் அங்­கம் வகிக்­கும் உறுப்­பி­னர்­கள் மற்­றும் அமைச்­சர்­கள் ஒரு­வர்­மீது ஒரு­வர் சீறிப்­பாய்­வ­தும், காறி உமிழ்­வ­தும், சண்டை சச்­ச­ர­வு­க­ளில் ஈடு­ப­டு­வ­து­மாக அமை­தி­யற்ற சூழலை நாடா­ளு­மன்­றில் ஏற்­ப­டுத்தி வந்­த­னர். நாடா­ளு­மன்­றக் கூட்­டங்­க­ளும் குழப்­ப­மும் கூச்­சலு ­மாக அமைந்­தன. நாடா­ளு­மன்­றத்­தில் ஏற்­பட்ட கருத்து மோதல்­கள், தர்க்­க­வா­தங்­கள், தகாத வார்த்­தைப் பயன்பாடுகள் ஆட்­சி­யா­ளர்­கள், எதிர்­த­ரப்பு அர­சி­யல்­வா­தி­கள் ஆகிய தரப்­பி­னர்­க­ளால் தாரா­ள­மா­க மேற்கொள் ளப்பட்டு கருத்து முரண்­பாடுகள் உச்­சத்­துக்­குச் சென்­றி­ருந்­தன.

மகிந்த தலை­மை­யி­லான எதி­ர­ணிக்­கட்­சி­கள், கூட்டு அரசை நிம்­ம­தி­யாக ஆட்சி நடத்த ­வி­டாது இடை­யூ­று­க­ளை­யும், அழுத்­தங்­க­ளை­யும் உள்­ளே­யும், வௌி யே­யு­மி­ருந்து கொடுத்தவண்­ண­மி­ருந்­த­ன. அரசு மீது பலத்த கண்­ட­னங்­க­ளைத் தெரி­விப்­பதுடன், ஆர்ப்­பாட்­டங்­கள், பேர­ணி­கள், போராட்­டங்­களை தொடர்ச்­சி­யாக நடத்­து­வ­தில் தாம் ஒரு­போ­தும் சளைத்­த­வர்­க­ளல்ல எனக் காட்­டிக் கொண்டு, மீண்­டும் ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றத் துடித்­துக்­கொண் டி­ருந்த மகிந்த ராஜ­பக்ச ‘‘இந்த அரசை வீட்­டுக்கு கூடிய சீக்­கி­ரமே அனுப்பி ­வைப்­போம். எமது ஆட்­சியை மீண்­டும் அமைப்­போம்’’ என அடிக்­கடி சூளு­ரைத்து வந்­தார்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் பெறுபேறுகளின் பின்­ன­டைவு, கூட்டு அர­சைப் பாதித்­தமை கண்­கூடு

கடந்த பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நாட்­டில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­த­ லில் மகிந்த தலை­மை­யி­லான பொது மக்­கள் முன்­னணி அதி­க­மான சபை­க­ளின் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்றி பெரு­வெற்­றி­யைப் பெற்­றது. மகிந்த ராஜா­பக்ச அணி­யி­னர், மக்­கள் ஆத­ரவு தங்­கள் பக்­க­மே­யி­ருப்­ப­தாக உறு­திப்­ப­டுத்­திக் கொண்­ட­பின்­னர், தொடர்ச்­சி­யாக கூட்டு அர­சுக்­கான நெருக்­க­டி­களை ஏற் படுத்­தத் தயா­ரா­யி­னர்.

அர­ச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன ­வின் தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்­றும் தலைமை அமைச்­ச­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐ. தே. கட்சி என்­ப­வற்­றுக்கு உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஏற்­பட்ட தோல்­வி­யை­யும், அதன் தொடர்ச்­சி­ யாக அவ்­வி­ரு­வ­ருக்­கு­மி­டை­யில் ஏற்­பட்ட கருத்து வேறு­பா­டு­க­ளை­யும், மகிந்த தனக்­குச் சாத­க­மாக ஆக்­கிக்­கொண்டு, தலைமை அமைச்­சர் மீது நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை ஒன்­றைக்­கொண்­டு­வந்து ரணிலை பத­வி­யி­றக்­கச் செய்­ய­வும், மேலும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தி ஆட்­சி­யைக் கைப்­பற்­று­கின்ற சூட்­சும­ மான திட்­டத்­தை­யும் தயா­ரித்து வைத்­தி­ருந்­தா­லும், இறு­தி­யில் ரணில் மீது கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை தோல்வி கண்­ட­மை­யால் மகிந்த தமது அந்­தத் திட்­டத்­தில் தோல்­வி­யைத் தழுவ நேர்ந்­தது.

கூட்டு அரசு 40 மாதங்­க­ளாக ஆட்சி அதி­கா­ரத்­தில் இருந்­த­தா­லும், முன்­னாள் அர­சுத் தலை­வ­ரான மகிந்த ராஜபக்ச, கூட்டு அர­சின் கொள்கை வகுப்­பா­ள­ராக இருக்­கின்­றாரா? என்ற சந்­தே­கம் நாட்டு மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டா­ம­லில்லை.

தென்­னி­லங்­கை­யில் அண்­மைய நாள்­க­ளாக ஏற்­பட்­டுள்ள குழப்­ப­மான அர­சி­யல் சூழ்­நி­லைக்கு மத்­தி­யில், தமி­ழர்­க­ளி­னது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு முயச்சியாவும் தற்­போது ஓரம் கட்­டப்­ப­டக்­கூ­டிய சூழ் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

தமிழ்த்­த­லை­மை­க­ளும் தமது இருப்­பைத் தக்­க­வைக்க அர­சுக்­குத் துணை­ போ­கும் விதத்­தில் தங்­க­ளது அர­சி­யலை நகர்த்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். தமி­ழர்­க­ளு­டைய விட­யத்­தைப் பொறுத்­த­வ­ரை ­யில் அர­சு வழங்­கு­கின்ற வாக்­கு­று­தி­கள் யாவும் காற்­றோடு காற்­றாக கலைந்து போய்­வி­டு­கின்றன.

கூட்டு அர­சின்  போக்குக் குறித்து தமிழ்­மக்­கள் அதி­ருப்தி

கூட்டு அரசு, தனது பத­விக்­கா­லத்­தில் பாதி­யைக்­க­டந்து முடித்­து ­விட்­டா­லும், அர­சின் போக்­கா­னது, தமிழ் மக்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யீ­னத்­தை­யும், விரக்­தி­யை­யும் உரு­வாக்­கி­விட்­டது. உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் முடி­வு­க­ளுக்குப் பின்­னர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­சி­யல் மீளெ­ழுச்சி என்­பது, கூட்டு அர­சுக்­குப் பெரும் பின்­ன­டைவையும், வீழ்ச்­சியையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது மட்­டு­மின்றி தமிழ் மக்­கள் மீதான அவரது பார்­வை­யும், கரி­ச­னை­யும் குறைந்­துள்ள­ தென்­பதை அவ­தா­னிக்­கக்­கூடியதா­க­வுள்ளது.

மகிந்த தரப்­பின் உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல் வெற்றி , மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை பாதிப்­ப­டை­யச் செய்­துள்­ள­து­டன், ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யின் பின்­னர் அது சுதந்­தி­ரக் கட்­சியை மேலும் பிளவு பட­வைத்­துள்­ளது. மகிந்­த­வின் சூழ்ச்சி அர­சி­யல் வியூ­கம், கூட்டு அர­சுக்கு நிம்­ம­தி­யற்ற சூழ்­நி­லை­யைத் தோற்­று­வித்­துள்­ளது.

2017 மற்­றும் 2018 ஆம் ஆண்­டு­க­ளில் கூட்டு அர­சைத் தூக்கி எறி­வோம் என்று மகிந்த தலை­மை­யி­லான எதி­ர­ணிக் கட்­சி­கள் ஒன்­று­சேர்ந்து போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­த­ன. போராட்­டங்­கள் பல­வற்றை நடத்­தி­யி­ருந்­த­ன. மகிந்த ராஜபக்ச தலை­மை­யில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கிற புதிய கட்­சி­யான சிறி­லங்கா பொது மக்­கள் முன்­னணி என்ற அர­சி­யல் கட்சி, நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லில் பெரி­ய­தொரு வெற்­றி­யைப் பெற்­றுக் கொண்ட பின்­னர், கூட்டு அர­ சுக்கு தலை­யி­டி­யா­கவே இருப்­ப­த­னால், மக்­க­ளின் விரக்­தி­யும், வெறுப்­பும் அதி­க­ரித்­துச் சென்று கொண்­டி­ருக்­கின்­றன.

தற்­போது கூட்டு அரசு பல­வீ­ன­ மா­கி­விட்ட நிலை­யில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து 16 உறுப்­பி­னர்­கள் வில­கி­விட் டுள்­ள­ தால் மீண்­டும் மீண்­டும் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­கள் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்த் தரப்­பி­ன­ரால் கொண்டு வரப்­ப­டு­கின்ற பல காட்­சி­களே நாடா­ளு­மன்­றத்­தில் அரங்­கே­றக் கூ­டி­ய­தா­க­வி­ருக்­கும்.

கிரா­மிய மட்­டத்­தில்  மகிந்­த­வுக்­கான ஆத­ரவு
கணி­ச­மான அளவில்  அதி­க­ரிப்பு

கிரா­மப்­புற மட்­டங்­க­ளில் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு அதி­க­ரித்­துக் கொண்­டி­ருப்­ப­தா­கக் கொள்­ள­மு­டி­கின்­றது. உள்­ளூ­ராட்­சிச் சபை­ களுக்­கான தேர்­த­லில் பெற்ற வெற்­றி­கள் இனி­வ­ரு­கின்ற காலங் க­ளில் நடை­பெ­றப்­போ­கின்ற மாகா­ண­ ச­பைத் தேர்­த­லி­லும் மகிந்த அணி­யி­னர் சாத­க­மாக வெற்­றி­யைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கும், இன்­றைய கூட்டு அர­சின் மீதான நெருக்­க­டி­க­ளைத் தொடர்ந்து ஏற்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­கும் மகிந்ட தரப்­பிற்கு வாய்ப்பு வழங்­கி­யுள்­ளது.

மகிந்த ராஜபக்ச சந்­தர்ப்­பத்­திற்கு ஏற்­ற­வாறு காய்­களை நகர்த்­து­வ­தில் வல்­ல­வர். அர­சி­யல் நெளிவு, சுழி­வு­கள் யாவும் அவ­ருக்­குக் கைவந்த கலை­யா­கும். இன­வா­தம் என்ற அர­சி­யல் ஆயு­த­மும், போர் வெற்­றி­யும், தமி­ழி­னத்­திற்­கான எந்த வித­மான உரி­மை­க­ளும் வழங்­கக்­கூ­டாது என்­ப­தி­லும், புதிய அர­ச­மைப்­புச் சீர்தி­ ருத்­தச் சட்­ட­ மூ­லம், தமி­ழி­னத்­திற்­கான சாத­க­மான விட­யங்­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறி எதிர்ப்­பது போன்­ற­வற்றை உட­னுக்­கு­டன் எதிர்ப்புப்பரப்புரையாக்கு­வ­தும் அதனை சிங்­க­ள­மக்­க­ளுக் குத் தௌிவு­ப­டுத்தி, தொடர்ந்து மகிந்த தன்­னைக் கதா­நா­ய­க­னாக சித்த­ ரித்­துக் காட்­டு­வ­தி­லும், நல்­லாட்சி அர­சைக் கவிழ்ப்­ப­தி­லும் குறி­யாக இருக்­கும் வரை­யில், மைத்­தி­ரியோ ரணிலோ நிம்­ம­தி ­யாக ஆட்­சி­யைத் தொட­ர­மு­டி­யாது. தமிழ் மக்­கள் மீதான பல அடிப்­ப­டைப்­பி­ரச்சினைக­ளுக்­கும் முடிவு கிடைக்­கக்­கூ­டிய சாத­க­மான நிலை­யும் இல்­லா­மல் போகக் கூ­டிய நிலையே தொட­ரும் என்றே கருத வேண்­டி­யுள்ளது.

http://newuthayan.com/story/85684.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.