Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படை வச­முள்ள காணி­களை குறைத்­துக் கூறு­கி­றது அரசு!!

Featured Replies

  • படை வச­முள்ள காணி­களை குறைத்­துக் கூறு­கி­றது அரசு!!
 
 

படை வச­முள்ள காணி­களை குறைத்­துக் கூறு­கி­றது அரசு!!

முல்­லைத்­தீவு மற்­றும் வவு­னியா மாவட்­டங்­க­ளில் படை­யி­னர் வச­முள்ள காணி­க­ளின் ஏக்­கர் அள­வைக் குறைத்து, இந்த அரசு பன்­னா­டு­க­ளுக்கு பொய்­யான தக­வல்­களை வழங்­கி­வ­ரு­கி­ற­தா­கவே எண்­ணத்­தோன்­று­கி­றது.

இது அர­சின் ஆரோக்­கி­ய­மான செய­லல்ல. இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கம், து.ரவி­க­ரன் ஆகி­யோர் விச­னம் தெரி­வித்­த­னர். பன்­னா­டு­க­ளி­லி­ருந்து அரசு தப்­ப­வேண்­டும் என்­ப­தற்­காக அரசு இப்­ப­டிச் செய்­யக்­கூ­டாது என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

வவு­னியா நிலை தொடர்­பில் உறுப்­பி­னர் சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­த­தா­வது:

வவு­னியா மாவட்­டத்­தில் படை­யி­னர் வச­முள்ள நிலம் 7 ஆயி­ரத்து 504 ஏக்­கர் என்று தேசிய நல்­லி­ணக்க செய­ல­ணி­யும், ஆயி­ரத்து 872 ஏக்­கர் நிலம் என்று மீள்­கு­டி­யேற்ற அமைச்­சும் மாறு­பட்ட தக­வல்­க­ளைக்­கூறி பன்­னா­டு­களை வேண்­டு­மென்றே திசை திருப்­பு­வ­தா­கவே எண்­ணத்­தோன்­று­கின்­றது.

“வவு­னியா மாவட்­டத்­தில் இரா­ணு­வத்­தி­ன­ரின் பிடி­யில் 68.46 ஏக்­கர் தனி­யார் காணி­க­ளும் 5 ஆயி­ரத்து 864.07 ஏக்­கர் அரச காணி­யும் உள்­ளது. கடற்­ப­டை­யி­னர் வசம் எந்த நிலங்­க­ளும் கிடை­யாது. விமா­னப் படை­யி­னர் வசம் தனி­யார் காணி­கள் கிடை­யாது 1571.60 ஏக்­கர் அரச காணி­யு­மாக மொத்­தம் 68.46 ஏக்­கர் தனி­யார் காணி­க­ளும 7 ஆயி­ரத்து 435.67 ஏக்­கர் அரச காணி­க­ளு­மாக மொத்­தம் 7 ஆயி­ரத்து 504.13 ஏக்­கர் நிலம் மட்­டுமே படை­யி­னர் வசம் உள்­ளது” என்று தேசிய நல்­லி­ணக்க செய­லணி கடந்த ஆண்டு இறு­தி­யில் வெளி­யி­டப்­பட்ட தக­வ­லில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அரச தலை­வர் மாளி­கை­யில் அரச தலை­வ­ரின் செய­லா­ளர் ஒஸ்­ரின் பெர்­னான்டோ தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்ற நிலம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லில் மீள்­கு­டி­யேற்ற அமைச்சோ வவு­னி­யா­வில் ஆயி­ரத்து 872 ஏக்­கர் மட்­டுமே உள்­ள­தா­கக் கூறி­யுள்­ளது.

தனி­யார் மற்­றும் அரச காணி­களை விட வன­வ­ளத் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மா­னது என்ற பெய­ரில் 3 முக்­கிய படை நிலை­கள் உள்­ளன. அவை இங்கே கணக்­கி­டப்­ப­டவே இல்லை. கணக்­கி­டப்­ப­டாத அளவு நிலம் செய­ல­ணி­யால் கூறப்­பட்ட அளவை விட அதி­க­மா­னது.

செட்­டி­கு­ளம் மெனிக்­பாம் பகு­தி­யில் மக்­க­ளின் இடைத்­தங்­கல் முகாம் என்­னும் பெய­ரில் அப­க­ரிக்­கப்­பட்ட 6 ஆயி­ரத்து 200 ஏக்­கர் நிலத்தை படை­யி­னரே ஆளு­கின்­ற­னர். இரணை இலுப்­பைக்­கு­ளம் வனப் பகு­தி­யில் 2 ஆயி­ரம் ஏக்­க­ருக்­கும் அதி­க­மா­ன­வற்­றில் இரா­ணுவ பயிற்சி முகா­மும், மடுக்­க­ரை­யில் 3 ஆயி­ரத்து 100 ஏக்­க­ரில் விமா­னப்­படை முகா­முக்­கா­க­வும் என்று மொத்­த­மாக 11 ஆயி­ரத்து 300 ஏக்­க­ரும் மறைக்­கப்­பட்­டுள்­ளதா? என்ற சந்­தே­கம் எழு­கின்­றது.
இவற்­று­டன் தனி­யார் மற்­றும் அரச காணி­க­ளான 7 ஆயி­ரத்து 504 ஏக்­கர் நிலம் உட்­பட மொத்­த­மாக 18 ஆயி­ரத்து 500 ஏக்­கர் நிலம் படை­யி­னர் வசம் உள்­ளது. என்­பதே உண்மை.

அதனை விடுத்து பன்­னா­டு­க­ளுக்­கா­கப் போலி­யா­கத் தயா­ரித்து வெளி­யி­டப்­ப­டும் தவ­றான தர­வு­க­ளால் திசை திருப்ப முய­லவோ அல்­லது வடக்­கில் படை­யி­ன­ரின் பிர­சன்­னம் குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் காட்­டவோ முய­லக்­கூ­டாது.

வடக்கு மாகா­ணத்­தில் மட்­டும் படை­யி­னர் 70 ஆயி­ரம் ஏக்­க­ரில் குந்­தி­யி­ருக்க நிரந்­தர வாழ் மக்­கள் கால் ஏக்­கர் அரை ஏக்­கர் நிலத்­துக்கு மாவட்­டச் செய­ல­கத்­துக்­கும் பிர­தேச செய­ல­கத்­துக்­கும் ஆண்­டுக் கணக்­கில் அலை­கின்­ற­னர். வடக்­கில் படை­யி­ன­ரி­டம் 27 ஆயி­ரத்து 230 ஏக்­கர்­தான் உள்­ளது. என்­பது அப்­பட்­ட­மான பொய்”– என்­றார்.

முல்­லைத்­தீவு நிலை தொடர்­பில் உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­த­தா­வது:
பன்­னாட்டு நெருக்­க­டிக்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் படை­யி­னர் வச­முள்ள நிலங்­கள் தொடர்­பில் அர­சின் சகல இயந்­தி­ரங்­க­ளுமே திட்­ட­மிட்டு மூடி மறைத்து பெயர் எடுக்க முனை­கின்­ற­னரா என்ற சந்­தே­கம் எழு­கி­றது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான ஆயி­ரத்து 150 ஏக்­கர் நிலம் மட்­டுமே தற்­போது படை­யி­னர் வச­முள்­ள­தாக மீள்­கு­டி­யேற்ற அமைச்சு அரச தலை­வர் செய­ல­கத்­துக்­கு அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளது. அதே­நே­ரம் தேசிய நல்­லி­ணக்கச் செய­ல­ணியோ 9 ஆயி­ரத்து 148 ஏக்­கர் நிலங்­கள் உள்­ள­தா­கக் கடந்த ஆண்டு தெரி­வித்­தி­ருந்­தது.

தேசிய நல்­லி­ணக்கச் செய­லணி வெளி­யிட்ட தக­வ­லில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் 540.29 ஏக்­கர் தனி­யார் காணி­க­ளும் 6 ஆயி­ரத்து 934.38 ஏக்­கர் அரச காணி­களும் உள்­ள­து­டன் கடற்­ப­டை­யி­னர் வசம் 671 ஏக்­கர் தனி­யார் காணி­களும் 44.80 ஏக்­கர் அரச காணி­யும், விமா­னப் படை­யி­னர் வசம் 958 ஏக்­கர் அரச காணி­யு­மாக மொத்­தம் ஆயி­ரத்து 211.29 ஏக்­கர் தனி­யார் காணி­க­ளும் 7 ஆயி­ரத்து 937.18 ஏக்­கர் அரச காணி­யும் உள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 60 ஆயி­ரம் ஏக்­கர் நிலம் அர­சால் விழுங்­கப்­பட்டு விட்­டது. இந்த நிலை­யில் 60 ஆயி­ரம் ஏக்­க­ரில் படை­யி­னர் வசம் மட்­டும் 40 ஆயி­ரம் ஏக்­கர் வரை­யில் உள்­ளது.

படை வச­முள்­ள­தாக நல்­லி­ணக்கச் செய­லணி கூறிய 9 ஆயி­ரத்து 148 ஏக்­கர் நிலங்­கள் தனி­யா­ருக்­கும் அர­சுக்­கும் சொந்­த­மா­னவை. கேப்­பா­பி­ல­வில் மட்­டும் சிறு­ப­குதி நிலம் விடு­விக்­கப் பட்­டது.

ஒட்­டு­சுட்­டா­னின் அம்­ப­கா­மம் பகு­தி­யில் 8 ஆயி­ரத்து 500 ஏக்­கர் நிலத்­தில் விமா­னப் படை­யி­ன­ரும், கரிப்­பட்­ட­மு­றிப்பு காட்­டுப்­ப­கு­தி­யில் 2 ஆயி­ரத்து 500 ஏக்­க­ரில் விமான நிலை­யத்­து­ டன் கூடிய முகா­மும் , ஏ9 வீதி­யில் முறி­கண்­டி ­யில் 2 ஆயி­ரம் ஏக்கர் நிலத்­தில் இரா­ணுவ முகா­மும், கேப்­பா­பி­ல­வில் பொது­மக்­க­ளின் நிலத்­துக்கு அப்­பால் 2 ஆயி­ரத்து 200 ஏக்­கர் வனப்­ப­கு­தி­யில் விமா­னப்­படை முகாம் உள்­ளது.

நில ஆக்­கி­ரமிப்­புத் தொடர்­பில் கூட்­ட­மைப்­பால் வெளி­நா­டு­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்ட ஆவ­ணங்­க­ளில் இவை தொடர்­பில் தெளி­வா­கக் குறிப்­பி­டப்­பட்­டது. அதை மூடி மறைக்­கும் நோக்­கில் வேண்­டு­மென்றே வெளி­யி­டப்­பட்ட அர­சி­யல் கலப்­புள்ள புள்­ளி­வி­வ­ரங்­க­ளா­கவே இத­னைப் பார்க்­கின்­றோம் – என்­றார்.

http://newuthayan.com/story/86062.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.