Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிரியா 'ரசாயன' தாக்குதல்: சம்பவ இடத்துக்கு புறப்பட்டது நிபுணர் குழு"

Featured Replies

"சிரியா 'ரசாயன' தாக்குதல்: சம்பவ இடத்துக்கு புறப்பட்டது நிபுணர் குழு"

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடந்ததாக சந்தேகப்படும் இடத்திற்கு சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் புறப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

ஐநா வாகனங்கள்படத்தின் காப்புரிமைAFP

ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழு சனிக்கிழமையன்று தலைநகர் டமாஸ்கஸின் அருகிலுள்ள டூமா நகருக்கு புறப்பட்டுள்ளதாக அது கூறியுள்ளது.

பலர் பலியாக காரணமான ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்பட்ட இந்த ரசாயன வான்வழி தாக்குதலை சிரியா அரசு நடத்தியுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன.

கிளர்ச்சியாளர்கள் வெளியேறிய பின்னர் டூமா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிரியாவும், ரஷ்யாவும் இதனை மறுத்துள்ளன.

வான்வழி தாக்குதலை தவிர்ப்பதற்காக டூமாவிலுள்ள சுரங்கப் பாதைகளை பத்திரிகையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.படத்தின் காப்புரிமைEPA Image captionவான்வழி தாக்குதலை தவிர்ப்பதற்காக டூமாவிலுள்ள சுரங்கப் பாதைகளை பத்திரிகையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

40க்கு அதிகமானோர் பலியாக காரணமாக இருந்த ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா அரசு தளங்களின் மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த நகரில் பயணம் மேற்கொண்டு சோதனை நடத்த 9 பேர் அடங்கிய ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் குழு ஒரு வாரமாக சிரியாவின் தலைநகரில் காத்திருந்துள்ளது.

புதன்கிழமை டூமா நகருக்குள் இந்த குழுவினர் செல்ல இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த சம்பவ இடங்களை சோதனை செய்த ஐக்கிய நாடுகள் அவையின் ஆபத்து சோதனை குழுவினர் விடுத்த தாக்குதல் எச்சரிக்கைக்கு பின்னர், அவர்களின் பயணம் தாமதமாகியது.

ஆனால், நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரட்டை ரசாயன தாக்குதல்களின் சான்றுகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று மேற்குலக அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-43851864

  • தொடங்கியவர்

சிரியா 'ரசாயன' தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு செய்தது நிபுணர் குழு

சிரியாபடத்தின் காப்புரிமைAFP Image captionரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழுவினர், ஆய்வின் போது அணிந்திருந்த ஆடை

சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் அருகே ரசாயன தாக்குதல் நடந்ததாகச் சந்தேகப்படும் இடத்தில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழு டூமா நகருக்குப் பயணம் செய்து, அங்கிருந்த மாதிரிகளையும், பிற பொருட்களையும் சேகரித்தனர்.

ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்பட்ட இந்த ரசாயன வான்வழித் தாக்குதலை சிரியா அரசு நடத்தியுள்ளதாக மேற்குலக நாடுகள் கூறுகின்றன. இதற்குப் பதிலடியாக, சிரியா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல பகுதிகளில் மேற்குலக நாடுகள் குண்டுவீச்சு நடத்தின.

டூமா நகரை தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிரியாவும், ரஷ்யாவும் ரசாயன தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவதை மறுக்கின்றன.

40க்கு அதிகமானோர் பலியாக காரணமாக இருந்த ரசாயன தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா அரசு தளங்களின் மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.

சிரியாபடத்தின் காப்புரிமைEPA

புதன்கிழமை டூமா நகருக்குள் இந்த குழுவினர் செல்ல இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த சம்பவ இடங்களைச் சோதனை செய்த ஐக்கிய நாடுகள் அவையின் ஆபத்து சோதனை குழுவினர் விடுத்த தாக்குதல் எச்சரிக்கைக்குப் பின்னர், அவர்களின் பயணம் தாமதமாகியது.

பிறகு இறுதியாக, தாக்குதல் நடந்த இரண்டு இடங்களில் ஒரு இடத்தை இக்குழு ஆய்வு செய்தது.

சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட குறிப்பிடப்படாத மாதிரிகள் நெதர்லாந்தின் நிஜ்ஸ்விஜ்க் நகரத்தில் உள்ள ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவனத்தின் ஆய்விடத்திற்கு எடுத்து செல்லப்படும்.

ஆய்வாளர்களால் மற்ற தகவல்களும், பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/global-43854238

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.