Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்கையற்ற கூட்டுக்கள்

Featured Replies

கொள்கையற்ற கூட்டுக்கள்

a1-d05102ce675ca9f0d1c954bb011f0a3f54f1b63b.jpg

 

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்­றன இணைந்த ஒரு கூட்­டணி உரு­வாகும் என்று பர­வ­லான எதிர்­பார்ப்பு ஒன்று காணப்­பட்­டது. ஆனால் திடீ­ரென, சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் கூட்­டணி வைத்துக் கொண்டார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடு­தலைக் கூட்­டணி, ஜன­நா­யக தமி­ழ­ரசுக் கட்சி, புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட தமிழ் விடு­தலைப் புலிகள் கட்சி, ஈரோஸ் உள்­ளிட்ட சில கட்­சி­களை இணைத்து உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தவ­றான பாதையில் செல்­கி­றது, தேவை­யின்றி அர­சாங்­கத்­துக்கு முண்டு கொடுக்­கி­றது, சம்­பந்­தனும், சுமந்­தி­ரனும் சர்­வா­தி­கா­ரத்­த­ன­மாக முடி­வெ­டுக்­கி­றார்கள், என்­றெல்லாம் குறை சொல்லித் தான், ஈ.பி.ஆர்.எல்.எவ்., கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­தது..

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான அணி என்று தம்மைக் கூறிக் கொண்ட, சுரேஸ் - சங்­கரி அணி, உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்த போதிலும், எங்­குமே பெரி­ய­ளவில் வெற்­றியைப் பெற­வில்லை.

பத்­தோடு பதி­னொன்­றாக இருந்­ததே தவிர, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி போன்று தமக்­கான தனித்­து­வத்தை வெளிப்­ப­டுத்­த­வில்லை.. ஆங்­காங்கே சில உள்­ளூ­ராட்சி சபை­களில் ஆச­னங்­களைக் கைப்­பற்­றி­யது அதுவும், கலப்பு தேர்தல் முறையின் புண்­ணி­யத்­தினால் தான் கிடைத்­தது.

வவு­னி­யாவில் தமக்கு பெரிய செல்­வாக்கு இருப்­ப­தாக நினைத்துக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு, பெரும் ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர், பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி சபைகள் தொங்கு நிலையில் இருந்த போது, தமிழர் விடு­தலைக் கூட்­டணி எந்தத் தரப்­பையும் ஆத­ரிக்­காமல் நடு­வு­நிலை வகிப்­பது என்று முடிவு செய்­யப்­பட்­டது .

அதற்­குள்­ளா­கவே, புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் கட்சி, இந்தக் கூட்­ட­மைப்பில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தது. ஈ.பி.ஆர்.எல்.எவ். தான் அதற்குப் பிர­தான காரணம். தமது கட்­சியைச் சேர்ந்­த­வர்கள் அதிக வாக்­கு­களைப் பெற்ற இடங்­களில், விகி­தா­சார பட்­டியல் ஆச­னங்­களை தமக்கு வழங்­காமல், ஈ.பி.ஆர்.எல்.எவ். தமது ஆட்­களை நிய­மிப்­ப­தா­கவும், அது­கு­றித்து ஆனந்­த­சங்­க­ரி­யிடம் முறை­யிட்ட போதும் அவர் மௌன­மாக இருப்­ப­தா­கவும், புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் கட்சி கூறி­யி­ருந்­தது.

அத்­துடன், கூட்­டணி உரு­வாக்­கப்­பட்ட போது, ஒரு கட்­சியின் உறுப்­பி­னரை இன்­னொரு அங்­கத்­துவ கட்­சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் விதி­முறை வகுக்­கப்­பட்­டது, அதற்கு மாறாக திரு­கோ­ண­ம­லையில் தமது அமைப்­பா­ளரை, ஈ.பி.ஆர்.எல்.எவ். தமது பக்கம் இழுத்துக் கொண்­ட­தா­கவும், புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் கட்சி குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தது.

கூட்­ட­மைப்­புக்குள் தமி­ழ­ரசுக் கட்சி அதி­காரம் செலுத்­து­வ­தா­கவும் பங்­காளிக் கட்­சி­களை ஒழிக்கும் வேலையைச் செய்­வ­தா­கவும் குற்­றம்­சாட்டி அதி­லி­ருந்து வெளியே வந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும், இப்­போது அதையே செய்­வ­தாக அந்தக் கட்­சியின் தலைவர் இன்­ப­ராசா ஓர் அறிக்­கையில் குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

அதனைப் பலரும் அப்­போது கண்­டு­கொள்­ள­வில்லை. பல ஊட­கங்­களும் கூட அந்தச் செய்­தியை வெளி­யி­ட­வில்லை.

இந்­த­நி­லையில், தமிழ்த் தேசிய விடுலைக் கூட்­ட­மைப்பு மீண்டும்

 ஓர் உடைவைச் சந்­தித்­தி­ருக்­கி­றது.

கொள்­கைகள் கொள்ளை போன பின்னர், தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பில் இருப்­பதில் பய­னில்லை, அதை விட்டு வெளியே போகிறோம் என்று ஜன­நா­யக தமி­ழ­ரசுக் கட்சி கடந்த வாரம் அறி­வித்­தி­ருக்­கி­றது. இந்தக் கூட்டில் இருந்து, தாம் வெளி­யே­று­வ­தற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் கொள்­கை­யற்ற நடை­மு­றைகள் தான் காரணம் என்று, அந்தக் கட்­சியின் செய­லாளர் சிவ­கரன் கூறி­யி­ருக்­கிறார். (11ஆம் பக்கம் பார்க்க)

வவு­னியா நக­ர­ச­பையைக் கைப்­பற்­று­வ­தற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்றின் ஆத­ரவை மாத்­தி­ர­மன்றி, ஈ.பி.டி.பி. மற்றும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஆத­ர­வையும் கூட பெற்­றி­ருந்­தது. 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பேரி­ன­வாதக் கட்­சிகள் மற்றும் ஈ.பி.டி.பி. போன்­ற­வற்றின் ஆத­ர­வுடன் ஆட்­சி­ய­மைப்­பதை விமர்­சித்து விட்டு, அதே­வ­ழியில், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயற்­பட்­டது அதை­விட மோச­மான செயல் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

யாழ். மாந­க­ர­ச­பையில், ஆட்­சி­ய­மைக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் முதலில் மோதிய ஈ.பி.டி.பி., பின்னர் ஒத்­து­ழைத்­தது. வேறும் பல சபை­களில் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு அளித்­தி­ருந்­தது ஈ.பி.டி.பி.

இதனை சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் வெட்­கக்­கே­டான செயல் என்று விமர்­சனம் செய்­தி­ருந்தார்.

ஆனால், வவு­னியா நகர சபை­யிலும், வவு­னியா வடக்கு உள்­ளிட்ட ஏனைய பிர­தேச சபை­க­ளிலும் கூட ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஈ.பி.டி.பி. போன்­ற­வற்றின் ஆத­ரவை மாத்­தி­ர­மன்றி, மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஆத­ர­வையும் பெற்று ஆட்­சி­ய­மைத்­தது அல்­லது ஆட்­சியைப் பிடிக்க முயன்­றது சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ்.

அதிலும் 21 உறுப்­பி­னர்­களைக் கொண்ட வவு­னியா நக­ர­ச­பையில், வெறும் 3 உறுப்­பி­னர்­களை மட்டும் வைத்துக் கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆட்­சியைக் கைப்­பற்­றி­யது ஆச்­ச­ரி­ய­மான விடயம்.

பேரி­ன­வாத கட்­சிகள் மற்றும், ஈ.பி.டி.பி.யுடன் கூட்டு அமைத்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைத்­த­தாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்த போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் அதனை நிரா­க­ரித்து ஒரு கருத்தைக் கூறி­யி­ருந்தார்.

கூட்டு வைத்துக் கொள்­வது என்­பது, ஆட்­சியைப் பகிர்ந்து கொள்­வது, தலைவர் பத­விக்­காக, உப தலைவர் பத­வியை விட்டுக் கொடுப்­பது போன்ற பேரங்கள் செய்து தான் கூட்டு வைத்துக் கொள்­ளப்­படும். ஆனால் கூட்­ட­மைப்பு அப்­ப­டி­யான எந்த கூட்­டையும் யாரு­டனும் வைத்துக் கொள்­ள­வில்லை என்று அவர் கூறி­யி­ருந்தார்.

ஆனால் வவு­னியா உள்­ளூ­ராட்சி சபை­களில், நடந்த சம்­ப­வங்­களைத் தொகுத்துப் பார்த்தால், அங்கு ஆட்­சியைப் பிடிக்க ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் மாத்­தி­ர­மன்றி, பொது­ஜன முன்­ன­ணி­யு­டனும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., கூட்டு பேரங்கள் நடத்­தி­யுள்­ளதா என்ற வலு­வான சந்­தே­கங்கள் உள்­ளன.

அதா­வது, வவு­னியா நக­ர­ச­பையின் ஆட்­சியை 3 உறுப்­பி­னர்­க­ளுடன் கைப்­பற்­றி­ய­தற்கு கைம்­மா­றாக, உப தலைவர் பதவி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தாரை வார்க்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு ஆத­ர­வாக ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் வாக்­க­ளித்­தது.

25 உறுப்­பி­னர்­களைக் கொண்ட வவு­னியா வடக்கு பிர­தேச சபையின் தலைவர் பத­விக்கு, வெறும் 3 ஆச­னங்­களைக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். போட்­டி­யிட்­டது. ஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, பொது­ஜன முன்­ன­ணியின் ஆத­ர­வுடன் 11 வாக்­கு­க­ளையும் பெற்றுக் கொண்­டது. ஆனாலும் அதிர்ஷ்டம் அவர்­க­ளுக்கு கைகொ­டுக்­க­வில்லை.

சம வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­ததால், திரு­வு­ளச்­சீட்டு முறையில் தெரிவு நடந்த போது ஈ.பி.ஆர்.எல்.எவ். தோல்­வி­ய­டைந்­தது.

இதை­ய­டுத்து நடந்த உப தலைவர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பொது­ஜன முன்­ன­ணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும் போட்­டி­யிட்­டன. தலைவர் தெரிவில் தம்மை ஆத­ரித்த பொது­ஜன முன்­னணி உதப தலைவர் பத­விக்கு போட்­டி­யிட்­டதால், ஈ.பி.ஆர்.எல்.எவ். விலகிக் கொண்­டது.

இந்த தெரிவின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கூட கூட்­ட­மைப்பு வேட்­பா­ளரை ஆத­ரித்­தது. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எவ். நடு­நிலை வகித்­தது.

வவு­னியா தெற்கு, மற்றும் வெங்­க­லச்­செட்­டிக்­குளம் பிர­தே­ச­ச­பை­க­ளிலும், ஈ.பி.ஆர்.எல்.எவ். நடந்து கொண்ட முறை, தனக்கு மூக்குப் போனாலும் சரி, எதி­ரிக்கு சகுனப் பிழை­யாக அமைந்து விட வேண்டும் என்­ப­தா­கவே இருந்­தது.

உள்­ளூ­ராட்சித் தேர்­தலில், வவு­னியா மாவட்­டத்தில் தாம் அடைந்த பின்­ன­டை­வுக்கு எப்­ப­டி­யா­வது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பழி­வாங்க வேண்டும். அவர்­களை ஆட்­சி­ய­மைக்க விடக்­கூ­டாது என்­ப­தி­லேயே ஈ.பி.ஆர்.எல்.எவ். உறு­தி­யாக இருந்­தது.

அதற்­காக யாருடன் கூட்டுச் சேரவும், எந்த எல்லை வரை செல்­வ­தற்கும் தயா­ராக இருந்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்தில் இதே அணு­கு­மு­றை­களை சில இடங்­களில் பின்­பற்­றிய போது, அதை விமர்­சித்­த­வர்கள் பலரும் இப்­போது வாய் திறக்­க­வில்லை.

ஆனாலும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் இந்த அணு­கு­முறை, தமிழ்த் தேசிய விடு­தலைக் கூட்­ட­மைப்பில் விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஐந்து, ஆறு கட்­சிகள் இணைந்த கூட்­ட­மைப்பு என்றும், மாற்று அணி என்றும் கூறிக் கொண்ட இந்தக் கூட்­ட­ணியில் இப்­போது, எஞ்­சி­யி­ருப்­பது யார் என்று, அதன் தலை­வ­ரான ஆனந்­த­சங்­க­ரிக்கே தெரி­யாது.

ஏனென்றால், இந்தக் கூட்­ட­ணியில் இடம்­பெற்­றி­ருந்த ஒரு கட்­சியின் தலைவர் யாழ். மாந­க­ர­சபை உறுப்­பி­ன­ராக தெரிவு செய்­யப்­பட்ட நிலையில், திருட்டு வழக்கில் 4 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு இப்­போது சிறைச்­சா­லையில் கம்பி எண்ணிக் கொண்­டி­ருக்­கிறார்.

புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் கட்சி எப்­போதோ வெளியே போய் விட்­டது. ஜன­நா­யக தமி­ழ­ரசுக் கட்­சியும் வெளியே போய் விட்­டது. ஈரோஸ் இதில் இடம்­பெற்­றி­ருக்­கி­றதா, இல்­லையா? என்று தெரியாது.

இந்தநிலையில் இப்போது, ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் தான் எஞ்சியிருக்கின்றன. இவையும் கூட எங்காவது இடம் கிடைத்தால் ஒதுங்கிக் கொள்ளத் தயங்கமாட்டா.

ஏனென்றால், உள்ளூராட்சித் தேர்தல் இவர்களின் பலத்தை புடம் போட்டுக் காட்டி விட்டது. எனவே, இந்தக் குதிரையை அவர்கள் இனி நம்பப் போவதில்லை.

புதிய குதிரை ஒன்றை அவர்கள் தேட வேண்டியிருக்கும். அதில் இடம் கிடைத்து விட்டால் தொற்றிக் கொள்வார்கள். இல்லையேல் மீண்டும் கூட்டமைப்பிடம் சரணடைந்தாலும் ஆச்சரியமில்லை.

கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த ரணில் விக்கிரமசிங்கவை காப்பாற்றுவதற்காக அவருக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்தவர்கள், மஹிந்த அணியுடன் இணைந்தேனும் ஆட்சியைப் பிடிக்க முனைந்தவர்கள், மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-04-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.