Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைகளில் ஈடுபட்ட STF அதிகாரிகளின் பட்டியலை ஐ.நா விடம் கையளித்த ITJP

Featured Replies

படுகொலைகளில் ஈடுபட்ட STF அதிகாரிகளின் பட்டியலை ஐ.நா விடம் கையளித்த ITJP

 

ஸ்ரீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் விசேட அதிரடிப்படை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிராக கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளது.

ITJP என்ற ஸ்ரீலங்காவின் நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச அமைப்பு இந்த பட்டியலை வழங்கியுள்ளதுடன், அந்த அமைப்பு நேற்றைய தினம் லண்டனில் வைத்து வெளியிட்ட அறிக்கையொன்றில் வெள்ளைவான் கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை விசேட அதிரடிப்படை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

படுகொலைகளில் ஈடுபட்ட STF அதிகாரிகளின் பட்டியலை ஐ.நா விடம் கையளித்த ITJP

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை தயாரிக்கும் குழுவான தாருஸ்மன் குழுவில் இடம்பெற்றிருந்த சர்வதேச சட்டவல்லுநரான யஸ்மின் சூகா தலைமையிலான ஸ்ரீலங்காவின் நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச அமைப்பு நேற்றைய தினம் லண்டன் நகரிலுள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்பில் புதிய அறிக்கையை வெளியிட்டு வைத்தது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் இணைத்துக்கொள்ளாது தடை செய்யப்பட வேண்டியவர்கள் என்று ஸ்ரீலங்காவின் விசேட அதிரடிப்படை பொலிஸ் சேவையில் பணியாற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய இரகசிய பட்டியலொன்றையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளதாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பு தெரிவித்தது.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் விசேட அதிரடிப்படை பொலிஸ் சேவையில் பணியாற்றிய சிங்கள அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த தமிழர்கள் ஆகியோர் வழங்கிய ரகசிய வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு “ஸ்ரீலங்காவில் விசேட அதிரடிப்படை பொலிசார்” என்ற புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ITJP தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை தயாரிப்பதற்காக தகவல்களை திரட்டும் போது தெரியவந்த குற்றமிழைத்தவர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்கான அலுவலகத்திடமும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ITJP தெரிவிக்கின்றது.

எது எவ்வாறாயினும் அமைதி காக்கும் படையணிக்காக ஸ்ரீலங்கா படை அதிகாரிகளையும் படையினரையும் தெரிவுசெய்யும் போது அவர்களின் பின்புலம் குறித்து ஆராயும் முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் ITJP குற்றம்சாட்டியுள்ளது.

ஆபிரிக்க நாடொன்றில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்காவின் STF அதிகாரியொருவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்காவின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த சம்பவத்துடன் குற்றம்சாட்டப்பட்டவர் என்று ஐ.ரி.ஜே.பி யின் தலைவர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த படை அதிகாரிகளை அமைதிகாக்கும் படையணியில் இணைத்துக்கொள்வதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய அவர்களின் பின்புலத்தை ஆராயும் முன்கூட்டிய ஆய்வை ஐக்கிய நாடுகள் சபை முறையாக மேற்கொள்ளத் தவறியுள்ளதையே உறுதிப்படுத்துவதாகவும் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

இன்னமும் மன உளைச்சலில் இருந்து விடுபடாத சிங்கள நபர் ஒருவர் தெரிவிக்கையில் கொழும்பில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புபட்டியிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த தனது செயற்பாடுகள் திகிலூட்டும் திரைப்படத்தை போன்றது என்று குறிப்பிட்டதாக யஸ்மின் சூகா தலைமையிலான ITJP தெரிவிக்கின்றது.

போரின் இறுதி நாட்களில் பிடிபட்டவர்களின் கழுத்தை அறுத்ததாகவும், கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும், கூரிய கத்திகளால் குத்தியும் வெட்டியும் கொடூரமாக படுகொலை செய்ததாகவும் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மற்றுமொரு அதிரடிப்படை பொலிஸ் அதிகாரியொருவர் விபரித்ததாக ITJP கூறுகின்றது.  

அதேவேளை தங்களின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் இறுதியில் படுகொலை செய்யப்பட்தாகவும் தங்களுக்கு சாட்சியம் அளித்த விசேட அதிரடிப்படை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ITJP தெரிவிக்கின்றது.

ஸ்ரீலங்காவின் ஏனைய படையணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளும் ஆட் கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுவருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், STF என்ற விசேட அதிரடிப்படை பொலிசார் இன்னமும் இவ்வாறான கொடூரங்களில் ஈடுபடுவதற்கான சான்றுகள் தமக்கு கிடைக்கவில்லை என்றும் ITJP தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கடந்த காலங்களில் பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்கா படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட படையினரை பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் ஏனைய நாடுகளில் பணிக்கு அமர்த்துவது மிகவும் ஆபத்தானது என்றும் ITJP எச்சரிக்கை விடுத்துள்ளது.

முறையான முன்கூட்டிய ஆய்வு நடத்தப்படவில்லை என்று ஸ்ரீலங்கா வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் புலம்பெயர்  தமிழ் அமைப்புக்களும் முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து லெபனானில் பணியாற்றிவரும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் இணைந்துகொள்வதற்காக செல்லவிருந்த படையணியினதும் அதன் கட்டளை அதிகாரியாக செல்லவிருந்த லெப்டினன் கேர்ணல் வசந்த ஹேவகேயினதும் பயணங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதற்குப் பின்னர் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்ரீலங்கா அரச தலைவருக்கு அனுப்பிவைத்திருந்த கடிதமொன்றில் லெபனானில் பணியாற்றிவரும் ஐ.நா அமைதி காக்கும் படையணிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள 49 பேரைக் கொண்ட படையணியில் இடம்பெற்றுள்ள படையினர் தொடர்பில் முன்கூட்டிய ஆய்வு நடத்தப்படவில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படை பொலிசாரும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்காக இணைத்துகொள்ளப்படுவதால் ஸ்ரீலங்கா இராணுவத்தைப் போல் அவர்களையும் முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என ITJP யின் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.

விசேட அதிரடிப்படை பொலிசாரினால் இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிராக மிக மோசமான கொடூரங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களினது சாட்சியங்கள் மாத்திரமன்றி விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பல சிங்கள அதிகாரிகளினதும் சாட்சியங்கள் நிழல்பட ஆதாரங்கள் உட்பட ஏராளமான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவிக்கும் யஸ்மின் சூகா சாட்சியாளர்களுக்கான பாதுகாப்பு என்ற நிபந்தனையின் கீழ் செயற்படத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யஸ்மின் சூகா தலைமையிலான ITJP வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பான பட்டியலொன்றையும் உள்ளடக்கியிருந்தது.

இதற்கமைய 1984 ஆம் ஆண்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்திற்கு அனுப்பிவைத்திருந்த அறிக்கையொன்றில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் 10 பேர் கொடூரமாக படுகொலையை விசேட அதிரடிப்படையினரே மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 13 அதிரடிப்படை பொலிசார் கொல்லப்பட்டதை அடுத்து 150 பொது மக்கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் படுகொலையுடனும் விசேட அதிரடிப்படையினரே தொடர்புபட்டியிருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டதையும் ஐ.ரி..ஜே.பி குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருகோணமலை மூதூர் பகுதியில் வைத்து ஏ.சீ.எப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடனும் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளதையும் ஐ.ரி.ஜே.பி தெரிவித்தள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடனும், 2012 ஆம் ஆண்டு யூன் 20 ஆம் திகதி வவுனியா சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடனும் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 இது மாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் கண்டி திகன – தெல்தெனிய பகுதிகளில் முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளின் போது விசேட அதிரடிப்படையினர் வேடிக்கை பார்த்தது மாத்திரமன்றி முஸ்லீம்கள் மீது கொடூரமான தாக்குதல்களையும் கட்டவிழ்த்துவிட்டதாக முஸ்லீம் அமைச்சர்களே பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்ததையும் யஸ்மின் சூகாவின் ஐ.ரி.ஜே.பி தெரிவித்துள்ளது.

https://news.ibctamil.com/ta/politics/ITJP-sends-UN-list-of-alleged-perpetrators-vetting

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.