Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019- உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதல்

Featured Replies

2019- உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16-ந் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதல்

 
 

லகக் கோப்பை (2019) போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 4- ந் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை சந்திக்கிறது. 

உலகக் கோப்பை கிரிக்கெட்ட்டில் இந்தியா அட்டவணை

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ந் தேதி நிறைவடைகிறது. கொல்கத்தாவில் ஐ.சி.சி செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது அதன்படி,பாகிஸ்தான் அணியுடன் ஜூன் 16-ந் தேதி இந்தியா மோதுகிறது. ஓல்ட் ட்ராஃபோர்டில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 2-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பின்னர் 15 நாள்கள் இடைவேளி தேவை என பி.சி.சி.ஐ, ஐ.சி.சியிடம் தெரிவித்தது,

இதையடுத்து, இந்தியாவின் முதல் ஆட்டம் ஜூன் 4- ந் தேதிக்கு மாற்றப்பட்டது. 2019-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மார்ச் - 20 முதல் மே 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. 2015 -ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி பாகிஸ்தானை சந்தித்து, வெற்றி பெற்றது. முழு அட்டவணை ஏப்ரல் 30-ந் தேதி வெளியிடப்படும். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் என்றும் சொல்லப்படுகிறது. 

 

ரவுண்ட் ராபின் முறையில் என்றால் பிரிவுகள் பிரிக்கப்படாது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் நான்கு  இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் இந்த முறையில்தான் நடைபெற்றது. 

https://www.vikatan.com/news/sports/123201-world-cup-2019-india-to-take-on-arch-rivals-pakistan-on-june-16.html

  • தொடங்கியவர்

2019 உலகக்கோப்பை: ஜூன் 5-ல் இந்தியா-தெ.ஆப்பிரிக்கா போட்டி, இந்தியா-பாக். மோதல் எப்போது தெரியுமா?

 

 
world-cup-2019-1

கோப்புப்படம்   -  படம்உதவி: ஐசிசி ட்விட்டர்

இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஜூன் 5-ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்தியஅணி.

உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும்தான் முதல்போட்டியில் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்படும். இந்த முறை தென் ஆப்பிரிக்காவுடன் மோதும் வகையில் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30-ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி, ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியைச் சந்திக்கிறது. இதற்கு முன் ஜூன் 2-ம் தேதி தென் ஆப்பிரிக்க, இந்திய அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) கடும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டது.

ஏனென்றால் 2019ம் ஆண்டு ஐபில் போட்டி முடிவதற்கும் அடுத்த தொடர் தொடங்குவதற்கும் இடையே வீரர்களுக்கு 15 நாட்கள் இடைவெளி தேவை என லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

அந்த வகையில், 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 29-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின் இந்திய அணிக்கு 15 நாட்கள் இடைவெளி வேண்டும் என்பதால், ஜூன் 2-ம் தேதி உலகக்கோப்பை போட்டி ஆட்டம் இருந்தால் அது சரியாக வராது என பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதனால், போட்டி ஜூன் 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று பிசிசிஐ உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டம், ஜூன் 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி. வழக்கமாக இந்தியாவுடனான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி மோதும் வகையில்தான் அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கும். இந்த முறை மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால், இந்த முறை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 2-வதாக நடக்கிறது. கடந்த 1992-ம் ஆண்டு நடந்ததைப் போன்று ரவுண்ட் ராபின் முறையில், அதாவது ஒவ்வொரு அணியும் அனைத்து அணியுடனும் ஒருமுறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்தியா பாகிஸ்தான் 2-வதாக மோதுகின்றன.

ICC-jpg

படம் உதவி: ஐசிசி

 

கடந்த 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டம் அடிலெய்டில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்துடன் தொடங்கியது. 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியும் பர்மிங்ஹாம் நகரில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துடன் தொடங்கியது.

அந்த வகையில் முதல்முறையாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் முதல்முறையாகத் தொடங்காமல் உலகக்கோப்பை போட்டி தொடங்குகிறது. இதற்கு காரணம் ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடப்பதாகும்.இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16-ம் தேதி, மான்செஸ்டர் நகரில் நடக்கிறது.

http://tamil.thehindu.com/sports/

  • தொடங்கியவர்

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடும் அட்டவணை

 
அ-அ+

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள் விவரம் வெளியாகியுள்ளது. #WorldCup2019

 
 
 
 
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடும் அட்டவணை
 
கொல்கத்தா:

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை இறுதி செய்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) செயல் அதிகாரிகள் கமிட்டி ஐ.சி.சி. போர்டுக்கு அனுப்பியுள்ளது. ஐ.சி.சி. போர்டு குழு ஒப்புதல் அளித்ததும் போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக இன்று வெளியிடப்படும். இதற்கிடையே ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது.

1992-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு முதல் முறையாக ரவுன்ட் ராபின் அடிப்படையில் லீக் சுற்று நடக்கிறது. அதாவது பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை சந்திக்க வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய துணை கண்டத்து ரசிகர்கள் போட்டியை இரவு 11 மணிக்குள் டி.வி.யில் ஆட்டங்களை பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்-இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

அரைஇறுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டியை பகல் ஆட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பரமவைரிகள் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கிறது. இதே போல் எதிர்பார்ப்புக்குரிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான ஆட்டம் ஜூன் 9-ந்தேதி லண்டன் ஓவலில் அரங்கேறுகிறது. இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14-ந்தேதி நடக்கிறது. ஜூலை 15-ந்தேதி இறுதிப்போட்டிக்குரிய மாற்று நாளாக வைக்கப்படும்.

இந்திய அணி விளையாடும் லீக் ஆட்டங்கள் விவரம் வருமாறு:-

தேதி                      எதிரணி                      மைதானம்

ஜூன்.5         தென்ஆப்பிரிக்கா          சவுதம்டன்

ஜூன்.9           ஆஸ்திரேலியா              தி ஓவல்

ஜூன்.13           நியூசிலாந்து               நாட்டிங்காம்

ஜூன்.16            பாகிஸ்தான்             மான்செஸ்டர்

ஜூன்.22         ஆப்கானிஸ்தான்        சவுதம்டன்

ஜூன்.27         வெஸ்ட் இண்டீஸ்       மான்செஸ்டர்

ஜூன்.30             இங்கிலாந்து             பர்மிங்காம்

ஜூலை.2        வங்காளதேசம்           பர்மிங்காம் #WorldCup2019
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/04/26104256/1159112/Indian-team-playing-2019-World-Cup-schedule.vpf

  • தொடங்கியவர்

கார்டிப் போட்டியுடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை ஆரம்பிக்கும் இலங்கை

sl-cricket-1-696x463.jpg
 

ஐ.சி.சி. இன் 2019ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டித் தொடர், மே மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளது.

 

12 ஆவது முறையாக இடம்பெறவிருக்கும் இந்த கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் நேரடித் தகுதி பெறும் எட்டு அணிகள், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ஐ.சி.சி. இன் ஒரு நாள் அணி தரவரிசையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் 10 அணிகள் பங்கேற்க வேண்டும் என்பதால், மேலதிக இரண்டு அணிகளும் கடந்த மாதம் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில் 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் நேரடி தகுதிபெற்ற அணிகளாக அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகியவை அமைந்ததோடு, உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் மூலம் மேற்கிந்திய தீவுகளும், ஆப்கானிஸ்தானும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டன.

2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம் மொத்தம் 48 போட்டிகளை கொண்டதாக அமைகின்றது. உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில், தொடரில் பங்கேற்கும் நாடுகள் யாவும் எதிரணிகளுடன் ஒரு தடவை மோதிக் கொள்ளும். முதல் சுற்றில் போட்டிகளுக்கு வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெறும் முதல் நான்கு அணிகள், அரையிறுதிப் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொள்ளும். 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகள் ஓல்ட் ட்ரபோர்ட் நகரிலும், எட்ஜ்பாஸ்டன் நகரிலும் இடம்பெறவுள்ளன.

அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகளும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் 2019ஆம் ஆண்டின் வெற்றியாளர் யார்? என்பதைப் பார்ப்பதற்காக போட்டியிடும்.

உலகக் கிண்ணப் போட்டிகள் அனைத்தும் மொத்தமாக 11 மைதானங்களில் இடம்பெறவுள்ளதோடு, 46 நாட்களில் தொடரினை நடாத்தி முடிக்க ஐ.சி.சி தீர்மானித்துள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களாக லோர்ட்ஸ், ஓவல், ஓல்ட் ட்ரபோட், எட்ஜ்பாஸ்டன், ஹீடிங்லி, ட்ரென்ட் ப்ரிஜ், செளத்தம்ப்டன், கார்டிப், செஸ்டெர்-லே-ஸ்ரிட், டோன்டன் மற்றும் பிரிஸ்டல் ஆகியவை அமைகின்றன.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சம்பியன்களாகவும், 2007ஆம் மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் தொடர்களில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்ட இலங்கை அணி, 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஜூன் மாதம் முதலாம் திகதி கார்டிப் மைதானத்தில் தம்முடைய முதல் போட்டியில் நியூசிலாந்தினை எதிர்கொள்ளவுள்ளது.

இதன் பின்னர் இலங்கை, மூன்று நாட்களில் குறித்த மைதானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தான் அணியினை எதிர் கொள்கின்றது.

தொடர்ந்து பிரிஸ்டல் மைதானத்திற்கு செல்லும் இலங்கை அணி அங்கே ஜூன் மாதம் 7ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள போட்டிகளில் முறையே ஆசிய அணிகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றை எதிர்கொள்கின்றது.

இதனையடுத்து ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் 15ஆம் திகதி இலங்கை அணி அவுஸ்திரேலியாவுடன் மோதுவதுடன், ஜூன் மாதம் 21ஆம் திகதி லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தினை சந்திக்கின்றது.

 

இப்போட்டிகளை அடுத்து டர்கம் நகருக்கு பயணிக்கும் இலங்கை, அங்கே செஸ்டெர்-லே-ஸ்ரிட் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளை எதிர்கொள்கின்றது.

2018 ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் இறுதியாக, இலங்கை அணி தமது அண்டை நாடான இந்தியாவுடன் மோதுகின்றது.

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இலங்கை பங்குபெறும் போட்டிகளின் அட்டவணை

ஜூன் 1 – நியூசிலாந்து – கார்டிப்
ஜூன் 4 – ஆப்கானிஸ்தான் – கார்டிப்
ஜூன் 7 – பாகிஸ்தான் – பிரிஸ்டல்
ஜூன் 11 – பங்களாதேஷ் – பிரிஸ்டல்
ஜூன் 15 – அவுஸ்திரேலியா – ஓவல்
ஜூன் 21 – இங்கிலாந்து – லீட்ஸ்
ஜூன் 28 – தென்னாபிரிக்கா – செஸ்டர்-லே-ஸ்ரிட்
ஜூலை 1 – மேற்கிந்திய தீவுகள் – செஸ்டர்-லே-ஸ்ரிட்
ஜூலை 6 – இந்தியா – லீட்ஸ்

http://www.thepapare.com

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.