Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள்

Featured Replies

ஐந்தாவது நாளாக இரணைதீவில் தங்கியிருந்து போராடும் மக்கள்

 

iranaitivu-300x200.jpgசிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி,  அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைதீவில் தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், முழங்காவில்- இரணைமாதா நகரில் தாம் தங்கியுள்ள பகுதியில் கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

எனினும் சிறிலங்கா கடற்படையினரின் சாதகமான பதில் எதுவும் கிடைக்காத நிலையில், கடந்த 23ஆம் நாள், படகுகளில் இரணைதீவுக்குச் சென்று அங்குள்ள தேவாலயத்தில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

iranaitivu.jpg

அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், தொடர்ந்தும் இன்று ஐந்தாவது நாளாக அந்த தேவாலயத்தில் தங்கியிருந்து தமது காணிகளை விடுவிக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் சிலர் சென்று பார்வையிட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் தேவைக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்று வழங்கியுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/04/27/news/30602

  • தொடங்கியவர்
  •  
  • பதில் கிடைக்­கும்­ வரை இர­ணை­தீவை விட்டு நக­ரப் போவ­தில்லை!!
 
 

பதில் கிடைக்­கும்­ வரை இர­ணை­தீவை விட்டு நக­ரப் போவ­தில்லை!!

spஎமது நிலம் விடு­விக்­கப்­ப­டும் என்ற அர­சி­யல் தலை­வர்­கள், அதி­கா­ரி­க­ளின் வாக்­கு­று­தி­கள் பய­னற்­றுப் போய், போராட்­டங்­கள், ஆர்ப்­பாட்­டங்­கள் செய்­தும் பய­னில்­லாத நிலையில் நாங்­க­ளாக முடி­வெ­டுத்து யாரு­டைய துணை­யும் இன்றி பட­கு­க­ளில் வந்து தங்­கி­யுள்­ளோம்.

இங்கு 26 ஆண்­டு­க­ளின் பின்­னர் சமைத்து உண்­கி­றோம். இனி இந்த இடத்தை விட்டு நக­ரப்­போ­வ­தில்லை என்று கிளி­நொச்சி இரணை தீவு மக்­கள் தெரி­வித்­த­னர்.

கிளி­நொச்சி ‘இரணை தீவு’ மக்­கள் தங்­க­ளைச் சொந்த மண்­ணில்
மீள்­கு­டி­ய­மர்த்­து­மாறு கடந்த திங் கட் கி­ழமை காலை 50 பட­கு­க­ளில் வெள்­ளைக் கொடி­க­ளு­டன் இரணைதீவுக்­குச் சென்­ற­னர்.
காலை 10.30 மணிக்கு அங்­குள்ள தேவா­ல­யத்­தில் வழி­பாட்­டில் ஈடு­பட்­ட­னர்.

தொடர்ந்து தமது சொந்த மண்­ணில் மீள்­கு­டி­ய­மர்த்­து­மாறு கோரி ஆர்ப்­பாட்­டம் செய்ய முயற்­சித்­த­னர். எனி­னும் அந்த மக்­க­ளு­டன் பேச்­சில் ஈடு­பட்ட அங்கு நிலை­கொண் டுள்ள கடற்­ப­டை­யி­னர் உரிய அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி உரிய நவ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கோரிக்கை விடுத்­த­னர்.

கோரிக்­கை­யினை ஏற்­றுக்­கொள்­ளாத மக்­கள் தமது கிரா­மத்­தில் உள்ள கோயி­லுக்கு அரு­கா­மை­யில் போராட்­டத்தை மேற்­கொண்­ட­னர். தீர்வு கிடைக்­காத நிலை­யில் இரணைதீவு கிரா­மத்­தில் தங்கி நின்று போராட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக அந்த மக்­கள் முடி­வு­ செய்­த­னர்.

மாவட்­டச் செய­லர், மற்­றும் முடி­வெ­டுக்­கும் அதி­கா­ர­முள்ள அதி­கா­ரி­கள் தமது போராட்ட இடத்­துக்கு வந்து மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­தாலே அன்றி தாம் அந்த இடத்தை விட்டு நக­ரப் போவ­தில்லை என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர். அந்த மக்­க­ளு­டன் பங்­குத் தந்­தை­யர்­க­ளும் இணைந்து கொண்­ட­னர்.

ஒரு சில அர­சி­யல் தலை­வர்­க­ளைத் தவிர எவ­ரும் மக்­க­ளு­டைய கோரிக்­கைக்கு செவி­சாய்க்­கவே இல்லை. இந்த நிலை­யி­லேயே மக்­கள் இரணை தீவை­விட்டு வெளி­யே­றாது அங்­கேயே தங்­கு­வ­தாக முடிவு செய்­துள்­ள­னர்.

‘‘இரணை தீவில் உள்ள ஆல­யத்­துக்கு முன்­பாக மக்­கள் சமைத்து உண்­கின்­ற­னர். பெண் தலை­மைத்­து­வக் குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­களே அங்கு அதி­க­மாக தங்­கி­யுள்­ள­னர். அவர்­கள் அங்கு அட்டை, மட்­டித் தொழில்­க­ளில் ஈடு­பட ஆரம்­பித்­துள்­ள­னர். பாட­சா­லை­கள் ஆரம்­பித்­துள்­ள­தால் மாண­வர்­கள் பாட­சா­லை­க­ளுக்­குச் செல்ல வேண்­டும் என்ற ஒரே கார­ணத்­துக்­காக சிலர் அங்­கி­ருந்து சென்­றுள்­ள­னர். ஏனை­ய­வர்­கள் 26 ஆண்­டு­க­ளின் பின்­னர் இர­ணை­தீ­வில் வாழத் தொடங்­கி­யுள்­ள­னர் இனி இந்த இடத்தை விட்டு எந்­தக் காண­ரம் கொண்­டும் நக­ரப்­போ­வ­தில்லை. எம்மை வந்து சந்­தித்து எமக்­கான பதில்­க­ளைக் கூறாத அதி­கா­ரி­கள் தான் இதற்கு முழுப் பொறுப்­பு­டை­ய­வர்­க­ளா­வர். கடற்­ப­டை­யி­ன­ருக்கு உள்ள இரக்­கம் கூட அவர்­க­ளுக்கு இல்லை என்றே கூற­வேண்­டும். உரிய தரப்­பு­க­ளு­டன் பேசுங்­கள் என்று கடற்­ப­டை­யி­னர் கூறிய பின்­ன­ரும் அவர்­கள் வாயை மூ­டி­யி­ருப்­பது வேதனை தரு­கி­றது’’ என்று போரா­டும் மக்­கள் தெரி­வித்­த­னர்.

கிளி­நொச்சி இரணைதீவு கிராம மக்­கள் 1992ஆம் ஆண்டு தமது சொந்த மண்­ணில் இருந்து இடம் பெயர்ந்து சென்று முழங்­கா­வில் கிரா­மத்­தில் உள்ள ‘இரணை மாதா’ கிரா­மத்­தில் குடி­யே­றி­னர்.

சுமார் 183 குடும்­பங்­கள் கடந்த 26 வரு­டங்­க­ளுக்கு முன் இடம் பெயர்ந்­துள்ள நிலை­யில் தற்­போது 400 குடும்­பங்­க­ளுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்­க­தி­ யான நிலை­யில் முழங்­கா­விலில் உள்ள ‘இரணை மாதா’ கிரா­மத்­தில் வாழ்ந்து வரு­கின்­றன.

தமது சொந்த மண்­ணில் மீள் குடி­யேற்­றம் செய்ய கோரி சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக தமது போராட்­டத்தை தொடர்ந்த மக்கள் கடந்த வரு­டம் தொடர் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­த­னர்.

இந்­த­நி­லை­யில் அண்­மை­யில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சர் இது­தொ­டர்­பாக கூட்­டம் ஒன்­றைக் கூட்டி ஆலோ­சனை செய்­தி­ருந்­தார்.
போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மக்­களை அவர்­க­ளின் சொந்த இடத்­தில் மீள்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்­கான ஆரம்­ப­க் கட்ட ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளு மா­றும் அவர் அதி­கா­ரி­க­ளைப் பணித்­தி­ருந்­தார் என்­பது குறிப்­பி டத்­தக்­கது.

http://newuthayan.com/story/88287.html

  • தொடங்கியவர்

பாழடைந்த கட்டடங்களில் மன நிறைவுடன் வாழ்வை ஆரம்பித்துள்ள இரணைதீவு மக்கள்.

3247-8.jpg?resize=800%2C533

(ஆக்கம் மற்றும் ஒளிப்படங்கள் :- சிவகரன். )

 

பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து மேற்குப்பக்கமாக சுமார் 12 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு சிறிய அழகிய தீவுதான் இரணைதீவு. சிறிய சிறிய இரண்டு தீவுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருப்பதால் இந்தத்தீவுக்கு இரணை தீவு என பெயர் வந்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 8 கிலோமீற்றர் நீளமும், 3கிலோமீற்றர் அகலமும் கொண்ட இந்த தீவு 1992 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

24 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு அழகிய தீவுக்குள் வாழ்ந்த மக்கள் தமக்கு தேவையைன உணவுப்பொருட்களை அங்கேயே உற்பத்தி செய்வந்திருக்கின்றனர். வயல்,விலங்கு வேளாண்மை, மரக்கறித்தோட்டங்கள், பிரதானமாக மீன்பிடித்தொழில் என வாழ்ந்த மக்கள் கடந்த 26 ஆண்டுகளாய் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.

3247-12.jpg?resize=800%2C533

இரணைதீவில் இருந்து சிறிலங்கா கடற்படையின் தாக்குதலால் 1992 இல் இடம் பெயர்ந்து பூநகரி முழங்காவில் இரணைமாதா நகரில் குடியேறிய மக்கள் கடந்த 26 ஆண்டுகளாகவும் தமது சொந்த இடத்தில் குடியேறுவதற்கு காத்திருந்தனர் ஆனால் இரணைதீவு மக்களை இரணைதீவில் குடியேற்ற அரசாங்கமோ அல்லது அரச அதிகாரிகளோ ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அந்த மக்களை தொடர்ந்தும் இரணை மாதா நகரிலேயே குடியிருக்குமாறும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தாம் வழங்குவதாகவும் கூறிவந்தனர்.

இந்த நிலையில் இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையை இரணைமாதா நகரில் இரண்டு மாடிகள் கொண்ட நிரந்தர பாடசாலையாக அமைத்துக்கொடுத்து அந்த மக்களை இரணைமாதா நகரிலேயே நிரந்தரமாக குடியிருக்கும் ஏற்பாடுகளை அரசாங்கமும் அரச அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

என்ன வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டாலும் எமது சொந்த நிலம் தான் எமக்கு வேண்டும் என்ற குறிகோலுடன்செயற்பட்ட இரணைதீவு மக்கள் தமது சொந்த நிலத்திற்கு செல்ல தங்களை அனுமதிக்க வேண்டும் என கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக முழங்காவில் இரணைமாதா நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

3247-10.jpg?resize=800%2C445
மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒருவருடத்தை எட்டியும் அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான பதில் கிடைக்காததையிட்டு ஆத்திரமடைந்த மக்கள் யாருடைய சொற்களையும் பொருட்படுத்தாது தாங்களாகவே தங்களது மீன்பிடி படகுகளில் ஏறி தமது சொந்த நிலத்திற்கு சென்றுவிட்டனர்.

தற்போது முழுமையும் சிறிலங்கா கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தத்தீவில் இப்போது பற்றைக்காடுகளும், சோடை விழுந்த தென்னை மரங்களும் பாழடைந்த கட்டிடங்களும்,உடைந்த மக்களின் வாழ்விடங்களும்,கட்டாக்காலியாக திரியும் ஒரு தொகுதி மாடுகளுமே அந்த மக்களுக்கு மிச்சமாய் இருக்கின்றன.

 

1992 ஆம் ஆண்டு தாங்கள் தமது சொந்த ஊரை விட்டு இடம் பெயரந்த போது அங்கு 2000 இற்கும் அதிகமான செம்மறி ஆடுகள் இருந்ததாகவும் அந்த செம்மறி ஆடுகளை இரணைதீவு செம்மறி இனம் என்றே எல்லோரும் விரும்பி வேண்டியதாகவும் இரணைதீவு செம்மறி என்ற ஒரு இன ஆடுகள் இப்போது இல்லாமல் போயிருப்பதாகவும் மருந்துக்கு கூட ஒரு செம்மறி ஆட்டை தமது ஊரில் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.

3247-13.jpg?resize=800%2C533

சொந்த ஊரில் குடியேற வேண்டும் என்ற அவாவில் அந்தப்பகுதி மக்கள் இராணுவக்கெடுபிடிகளைத்தாண்டி அங்கு குடியேறுகின்றனர். இருப்பினும் இது வரையில் அரசாங்கத்திடமிருந்தோ அல்லது அரச அதிகாரிகளிடமிருந்தோ இரணைதீவில் மீள் குடியேறுவதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் சொந்த ஊருக்குச் சென்ற மக்களுக்கு அரச தரப்பிலிருந்து இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாழடைந் கட்டிடங்களில் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் நிர்க்கதியான நிலையில் தமது சொந்த ஊரில் இருக்கின்றோம் என்ற மன நின்மதியோடு மட்டும் வாழ்வை தொடங்குகின்றனர்.

3247-1.jpg?resize=800%2C5333247-2.jpg?resize=800%2C5333247-3.jpg?resize=800%2C3983247-4.jpg?resize=550%2C8003247-5.jpg?resize=800%2C4133247-6.jpg?resize=800%2C5333247-7.jpg?resize=800%2C5333247-11.jpg?resize=800%2C459

http://globaltamilnews.net/2018/76750/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.