Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Featured Replies

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா? - உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

 
 

ஓபிஎஸ்


அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அக்கட்சியின் பொருளாளராக இருந்த நிதிமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பொறுப்பேற்றார். சில நாள்களில், சசிகலா குடும்பத்தோடு ஏற்பட்ட மோதலால் முதல்வர் பதவியில்  இருந்து திடீரென்று ராஜினாமாசெய்தார். அவருக்கு ஆதரவாக 10 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இந்நிலையில், சசிகலா ஆதரவாளராக இருந்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். அப்போது, 'ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் அவரிடம் இல்லை' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தனது அரசுமீது சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள் ஓட்டுப்போட்டனர். 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களாக இருந்துகொண்டு முதல்வருக்கு எதிராக ஓட்டு போட்ட அந்த 11 எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் தனபாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை' என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் புகார் மனு கொடுத்தனர். இது, 'சட்டவிரோதம்' என்று அ.தி.மு.க கொறாடா, சபாநாயகரிடம் புகார் செய்தார். அதில், 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அந்த 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த நிலையில், தி.மு.க கொறாடா சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.

அதில், ''ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ-க்கள், ஆளும் கட்சிக்கு எதிராக ஓட்டு போட்டுள்ளனர். அவர்கள்மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த 11 பேரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார். இதே கோரிக்கையுடன் வெற்றிவேல் உள்பட 4 பேர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து முடித்து,  தீர்ப்புத் தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. அந்த வழக்கில், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணையும் முடிந்து தீர்ப்புக்காகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பு, சனிக்கிழமை சொல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுமா, இல்லையா..? என்பது இன்று தெரிந்துவிடும்.

https://www.vikatan.com/news/tamilnadu/123437-opaneerselvam-and-10-other-admk-mlas-disqualification-case-judgement-today.html

  • தொடங்கியவர்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யகோரிய வழக்கு தள்ளுபடி

உயர்நீதிமன்றம்

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியபோது அவருக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அ.தி.மு.க. கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி கே. பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தி.மு.கவின் சட்டமன்றக் கொறடா சக்கரபாணி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய முதன்மை அமர்வு, இந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், ஒரு முடிவை எடுக்கும்படி நீதிமன்றம் வலியுறுத்த முடியாது என்பதால், சக்கரபாணியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.

ஓ. பன்னீர் செல்வம்

வழக்கின் பின்னணி

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி காலமான நிலையில், நிதியமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சி படிப்படியாக, அவரது தோழி வி.கே. சசிகலாவின் கையில் வந்ததையடுத்து, பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதன் பிறகு, வி.கே. சசிகலா தலைமையிலான அ.தி.மு.கவை எதிர்த்து தனி அணியாகவும் செயல்பட்டார். அந்த அணியில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், புதிய முதல்வராக எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றார். முதலமைச்சராகப் பதவியேற்ற எடப்பாடி கே. பழனிச்சாமி 2017 பிப்ரவரி 18ஆம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். பெரும் அமளியில் முடிவடைந்த இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அவர் வெற்றிபெற்றார்.

பன்னீர் செல்வம்படத்தின் காப்புரிமைTV GRAB Image captionஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர் செல்வம்

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, எடப்பாடி அணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 18 பேர், சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரன் தலைமையில் ஒன்றாகத் திரண்டனர். அப்போதைய ஆளுனர் வித்யாசாகர் ராவைச் சந்தித்த அவர்கள், முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லையென கடிதங்களை அளித்தனர்.

இதையடுத்து இவர்கள் கொறடா உத்தரவை மீறியதாகக்கூறி, இவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்தத் தகுதி நீக்கத்தை எதிர்த்து, இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதற்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வமும் அவரது அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் அரசில் இணைந்தனர். பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தி.மு.கவின் கொறடாவான சக்கரபாணி, பிப்ரவரி 18ல் நடந்த வாக்கெடுப்பில் அ.தி.மு.கவின் கொறடா உத்தரவுக்கு மாறாக அரசை எதிர்த்து வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென வழக்குத் தொடர்ந்தார்.

தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுனரிடம் கடிதம் அளித்ததற்காகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டிருக்கும் நிலையில் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; இதற்கு சபாநாயகர் தனபாலுக்கு உத்தரவிட வேண்டுமென சக்கரபாணி தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த விவகாரத்தில், அ.தி.மு.கவின் கொறடா உத்தரவு தங்களுக்கு வரவில்லையென ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பை பொறுத்தவரை கொறடா உத்தரவு என்பது, அந்த சமயத்தில் தங்கள் பக்கம் இருந்த 122 பேருக்குத்தான் பொருந்தும் என்றும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பளித்த முதன்மை அமர்வு, இந்த விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் தாங்களால் இதில் தலையிட முடியாது என்றும் சபாநாயகரின் முடிவில் எந்த அளவுக்கு நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றும் நீதிமன்றம் கூறியது. தவிர, நீதிமன்றத்தைப் பயன்படுத்தி எதிர்த்தரப்பினர் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய முயல்கிறார்கள் என்றும் கூறியது.

234 இடங்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் தற்போது தி.மு.கவிற்கு 89 இடங்களும் காங்கிரசிற்கு 8 இடங்களும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு ஒரு இடமும் உள்ளன. மீதமுள்ள 136 இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற்றிருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 135ஆகக் குறைந்தது.

https://www.bbc.com/tamil/india-43921630

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.