Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் போராட்டத்தை புறமொதுக்கிவிட முடியாது

Featured Replies

 
 
 

தமிழர்களின் போராட்டத்தை புறமொதுக்கிவிட முடியாது

அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­க­ளில் அரசு தொடர்ந்­தும் பாரா­மு­க­மாக இருக்­கு­மா­யின், வடக்­குக் கிழக்­கில் அரச நிர்­வா­கத்தை முடக்­கு­வ­தற்­கான போராட்­டம் முன்­னெ­டுக்­கப்ப ­டுமென நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரு­மான எம். ஏ. சுமந்­தி­ரன் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளமை அரசியல் அரங்கில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கூட்­ட­மைப்­புக்கு தமிழ் மக்­கள்மீது சிறி­தும் அக்­க­றை­யில்லை, அர­சு­டன் ஒட்­டி­யி­ருந்து கொண்டு சுக­போ­கத்தை அனு­ப­வித்­துக் கொண்டி­ருக்­கி­றார்­கள் என்­றெல்­லாம் கூறி­ய­வர்­கள், சுமந்­திர­னின் அறி­விப்­பை­ய­டுத்து வாய­டைத்­துப்போய் நிற்­கின்ற­னர். கூட்­ட­மைப்­பின் தற்­போ­தைய மன­நி­லை­யையே சுமந்­தி­ரன் எடுத்­துக் கூறி­யுள்­ளார்.

ஈழத்தமி­ழர்­க­ளது வாழ்க்கை இன்­ன­மும் பிரச்­சி­னை­க­ளின்
மத்­தி­யில் தான்

ஈழத் தமி­ழர்­க­ளின் வாழ்க்கை வர­லாற்­றைப் புரட்­டி­னால் அதில் ஏரா­ள­மான அத்­தி­யா­யங்­கள் அவர்­க­ளுக்கு ஏற்­பட்ட ஏமாற்­றங்­க­ளை­யும், அவர்­கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட அநி­யா­யங்­க­ளை­யும் எடுத்­துக் கூறு­வ­ன­வா­கவே அமைந்­துள்­ளன. நாடு சுதந்­தி­ரம் அடைந்த நாளில் இருந்து இன்று வரை­யில் பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில் தான் தமிழ் மக்­க­ளது வாழ்க்கை கழிந்து வரு­கின்­றது.

தந்தை செல்வா போன்ற மித­வா­தத் தலை­வர்­கள் இனி­யும் பொறுமை காக்க முடி­யாது என உணர்ந்து கொண்­ட­தால்­தான் தமி­ழர்­க­ளுக்­கான உரி­மைப் போராட்­டங்­களை அகிம்சை முறை­யில் ஆரம்­பித்­த­னர். ஆனால் இன­வா­தி­கள் இரும்­புக் கரங்­கொண்டு அவற்றை அடக்­கு­வ­தி­லேயே குறி­யா­கச் செயற்­பட்­ட­னர்.

தமது முயற்­சி­க­ளுக்கு ஏற்­பட்ட தோல்­வி­க­ளால் ஏமாற்­ற­முற்று உள­ரீ­தி­யா­கப் பாதிக்­கப்­பட்ட தந்தை செல்வா, அந்த ஏக்­கம் கலை­யாத நிலை­யில் இவ்­வு­ல­கை­விட்டு நீங்­கிச் சென்­றார். அவ­ருக்­குப் பின்­வந்த தலை­வர்­க­ளா­லும் எதை­யுமே சாதிக்க முடி­ய­வில்லை.

இனி­யும் பொறுக்க முடி­யாது என்ற நிலை­யில் தான் தமிழ் இளை­ஞர்­கள் ஆயு­தங்­க­ளைக் கைக­ளில் ஏந்­தி­னர். சுமார் முப்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நீடித்த ஆயு­தப் போராட்­டம் இந்த நாட்­டின் அடித்­த­ளத்­தையே ஆட்­டிப்­பார்த்து விட்­டது. பல ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­கள் காவு கொள்­ளப்­பட்­டன.

கணக்­கி­ட­மு­டி­யாத அள­வுக்கு பொரு­ளா­தார இழப்­புக்­கள் ஏற்­பட்­டன. மீள முடி­யாத கடன் சுமைக்­குள் நாடு தள்­ளப்­பட்­ட­மைக்கு இந்த நீண்ட போரே கார­ண­மா­கும். கடந்த 2009ஆம் ஆண்டு புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்­டமை தமி­ழர்­க­ளின் பாது­காப்­பைக் கேள்­விக் குறி­யாக மாற்­றி­விட்­டது. அது மட்­டு­மல்­லாது, எதை­யும் கேட்டு வாங்­கும் நிலைக்­குள் அவர்­களைத் தள்­ளி­விட்­டது.

தமிழ்த் தலை­வர்­கள் கேட்­டுக் கொண்­டதை நிறை­வேற்றி வைக்­கின்ற நிலை­யில் அரசு இல்­லா­த­தால், தமிழ் மக்­கள் பொறு­மை­யி­ழந்த நிலை­யில் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­வ­தைக் காண முடி­கின்­றது.

இனி­யும் பொறு­மை­காக்க இய­லாது என்ற நிலை­யில்
மேற்­கொள்­ளப்­பட்ட  தீர்­மா­னம் இது

சுமந்­தி­ர­னின் தற்போதைய அறி­விப்பு இனி­யும் பொறுமை காக்க முடி­யாது என்ற நிலை­யில் வௌிவந்த ஒன்று என்­பதை நாம் முத­லில் புரிந்துகொள்ள வேண்­டும்.

நாட்­டின் இன்­றைய சூழ்­நிலை­ யில் தமி­ழர்­க­ள் மற்­று­மொரு போராட்­டத்­தைக் கையில் எடுப்­பது என்­பது சாதா­ரண விட­ய­மல்ல. அது­வும் ஆரம்­பப் புள்­ளி­யி­லி­ருந்து ஆரம்­பிப்­பது என்­பது மிக­வும் சிர­மா­ன­தொரு காரி­ய­மா­கும். கூட்­ட­மைப்­பின் தலை­வர்­கள் தீர ஆலோ­சித்­த­தன் பின்­னரே இத்­த­கை­ய­தொரு முடிவை எடுத்­தி­ருப்­பார்­க­ளென நம்­ப­லாம்.

தமி­ழர்­கள் மிக அதி­க­ள­வில் வாழ்­கின்ற தமிழ் நாட்­டி­லும் பல்­வேறு போராட்­டங்­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. மத்­தி­யில் ஆளு­கின்ற பா.ஜ. க அர­சுக்கு எதி­ரான போராட்­டங்­க­ளா­கவே இவற்­றைப் பார்க்க முடி­கின்­றது. இந்த நிலை­யில் ஈழத் தமி­ழர்­க­ளும் போராட்­டத்­தில் மீண்­டும் குறிப்­பது குறித்­துச் சிந்­திப்­பது இந்­திய, இலங்கை அர­சு­க­ளுக்கு உவப்­பா­ன­தாக இருக்­கப்­போ­வ­தில்லை.

தந்தை செல்­வா­வின் தலை­மை­யி­லும் அரச நிர்­வா­கத்தை முடக்­கும் பொருட்டு மாவட்­டச் செய­ல­கங்களுக்கு முன்­பாக மறி­யல் போராட்­டங்­கள் இடம்­பெற்­றன. அவற்­றில் தமிழ் மக்­கள் ஆர்­வத்­து­டன் கலந்து கொண்­ட­தை­யும் காண­மு­டிந்­தது. ஆனால் அப்­போ­தைய அரசு, மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­புக் கொடுக்­க­வில்லை. அந்த அகிம்சை வழிப் போராட்­டங்­க­ளும் அடக்கி ஒடுக்­கப்­பட்­டன.

போருக்­குப் பின்­ன­ரான காலத்தில் தீர்­வுக்­கான முயற்சி எது­வும் எடுக்கப்படவில்லை

போர் ஓய்ந்த பின்­ன­ரும் அர­சி­யல் தீர்­வுக்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டாமை தவ­றான தொரு முடிவு ஆகும். பேரி­ன­வா­தத் தரப்­பி­னர் தமி­ழர்­க­ளைக் கிள்­ளுக்கீரை­யாக மதிக்­கின்ற மனப்­பான்­மை­யையே இது எடுத்­துக் காட்­டு­கின்­றது. இனி­யும் பொறுக்க முடி­யாது என்ற நிலை­யில் தமி­ழர்­கள் போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­வதை பன்­னாட்­டுச் சமூ­கம் ஏற்­றுக்­கொள்­ளவே செய்­யும்.

ஏற்­க­னவே இலங்கை மீது அதி­ருப்­தி­யில் உள்­ள­தால், ஆயு­தம் ஏந்­தாத அகிம்­சைப் போராட்­டம் பன்­னாட்­டுத் தரப்­பு­க­ளால் ஏற்­றுக் கொள்­ளப்படத்தக்க சூழ்­நிலை உரு­வா­கவே செய்­யும்.
தமிழ்த் தலை­வர்­கள் தரப்­பி­னர் கட்சி பேதங்­களை மறந்து கூட்­ட­மைப்­பின் தலை­மை­யில் இடம் பெறு­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருக்­கும் போராட்­டத்­துக்கு ஆத­ரவை வழங்க வேண்­டும்.

தமி­ழர்­கள் அனை­வ­ரும் ஒரே குடை­யின் கீழ் ஒன்று திர­ளும்போது அதற்­குத் தனி­யா­ன­தொரு மதிப்பு ஏற்­பட்­டு­வி­டும். இத­னால் எமது தமிழ்த் தலை­மை­கள் பத­வி­க­ளுக்­கா­கச் சண்­டை­யி­டு­வதை விடுத்து உரி­மைக்­கான போராட்­டத்­தில் ஈடு­பட்­டுத் தமி­ழர்­க­ளின் பலத்தை உல­கறி­யச் செய்ய வேண்­டும்.

இதே­வேளை ஆளும் தரப்­பி­ன­ரும் இன­வா­தி­க­ளும் இனி­யும் தமி­ழர்­க­ளைக் குறை­வாக எடை போடு­வார்­க­ளா­யின் அதுவே அவர்­க­ளுக்கு வினை­யாக முடிந்­து­வி­டும். இந்த நாட்­டின் அர­சி­யல் தீர்வு நீண்ட கால­மா­கவே இழு­ப­றி­யான நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

இதன் கார­ண­மாக பல அனர்த்­தங்­க­ளை­யும் நாம் எதிர் கொண்­டு­விட்­டோம். தமி­ழர்­கள் இதற்­காக மீண்­டும் போரா­டியே ஆக­வேண்­டும் என்­றால் அதில் நியா­யம் இருப்­பதை ஏற்­றுக்­கொண்­டு­தான் ஆக­வேண்­டும்.

 

http://newuthayan.com/story/87516.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.