Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறு­பான்மைக் கட்­சி­களின் ஒன்­றி­ணைந்த செயற்­பாடு அவ­சியம்

Featured Replies

சிறு­பான்மைக் கட்­சி­களின் ஒன்­றி­ணைந்த செயற்­பாடு அவ­சியம்

 

நான்கு சிறு­பான்மைக் கட்­சிகள் ஒன்­று­கூடி தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் தொடர்பில் ஆராய்ந்­துள்­ள­துடன் பல தீர்­மா­னங்­க­ளையும் நிறை­வேற்­றி­யுள்­ளன. இந்தத் தீர்­மா­னங்கள் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கும் முடிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா தலை­மை­யி­லான ஈ.பி.டி.பி. ஆகிய நான்கு கட்­சி­களே ஒன்­று­கூடி தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளன.

கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற இந்தக் கலந்­து­ரை­யா­டலில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை கால­தா­ம­த­மின்றி நடத்­த­வேண்டும். எல்லை மீள் நிர்­ண­யத்தை மேற்­கொண்டு புதிய முறையின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கால­தா­மதம் ஆகு­மென்றால் பழைய முறை­யின்­­படி தேர்­தலை உரிய காலத்தில் நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று அர­சாங்­கத்தை கோரு­வ­தற்கு இந்த நான்கு கட்­சி­களின் தலை­வர்­களும் தீர்­மா­னித்­துள்­ளனர்.

நல்­லாட்சி அர­சாங்கம் என்ன நோக்­கத்­துக்­காக உரு­வாக்­கப்­பட்­டதோ அந்த நோக்­கங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் இந்தச் சந்­திப்­பின்­போது வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை மாற்­றி­ய­மைத்தல், தேர்தல் முறை மாற்றம், இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான அதி­காரப் பர­வ­லாக்கல் ஆகிய மூன்று விட­யங்­களும் ஒரு­மித்த வகையில் மேற்­கொள்­ளப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். அதி­காரப் பர­வ­லாக்­கலை விடுத்து ஏனைய இரு விட­யங்­களை மேற்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் முயன்றால் அதற்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தற்கும் இந்த நான்கு கட்­சி­களும் முடி­வு­செய்­துள்­ளன.

இத­னை­விட தற்­போ­தைய தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­கான உடன்­ப­டிக்­கைகள் தொடர்பில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறு­பான்மை இன கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சி­க­ளான தம்மைப் புறக்­க­ணித்து உடன்­ப­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டாது என்றும் இந்தக் கட்­சி­களின் தலை­வர்கள் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளனர்.

மாகாண சபைத் தேர்­தலைப் பொறுத்­த­வ­ரையில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதத்­துடன் வடக்கு, மத்­திய, வடமேல் மாகாண சபை­களின் பத­விக்­காலம் முடி­வ­டை­கின்­றது. ஏற்­க­னவே கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய மாகாண சபை­க­ளுக்­கான பத­விக்­காலம் முடி­வ­டைந்­து­விட்­டது. எனவே மாகா­ண­சபைத் தேர்­தலை இந்த வரு­டத்­துக்குள் நடத்­த­வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. பாரா­ளு­மன்­ற­மானது தேர்­தலை நடத்­து­வ­தற்கு ஏதேனும் ஒரு முறையை அங்­கீ­க­ரித்தால் இந்த வருட இறு­திக்குள் மாகாண சபைத் தேர்­தலை நடத்­த­மு­டி­யு­மென்று தேர்­தல்கள் ஆணைக்­குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தாயின் எல்லை மீள் நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அவ்­வாறு நிறை­வேற்­றப்­ப­டாத சந்­தர்ப்­பத்தில் பிர­தமர் தலை­மையில் அமைக்­கப்­படும் குழு இவ்­வி­டயம் தொடர்பில் ஆராய்ந்து மீளாய்வு செய்­ய­வேண்டும். தற்­போ­தைய நிலையில் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் தோல்­வி­ய­டைந்­துள்ள நிலையில் இந்தக் கட்­சிகள் உட­ன­டி­யாக மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­வ­ருமா என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது.

இதனால் எல்லை மீள் நிர்­ணய விவ­கா­ரத்தை சாட்­டாக வைத்து தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கான சாத்­தி­யங்­களும் காணப்­ப­டு­கின்­றன. இதே­போன்றே புதிய தேர்தல் முறைமை தொடர்பில் கட்­சிகள் அதி­ருப்­தியைக் கொண்­டி­ருக்­கின்­றன. உள்­ளூ­ராட்சித் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் குள­று­ப­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 50 வீதத்தால் அதி­க­ரித்­துள்­ளது. மக்­களின் ஆத­ரவைப் பெற்ற கட்­சிகள் கூட உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைக்­க­மு­டி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

இதன் கார­ண­மாக உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முறை­மை­யினை மாற்­றி­ய­மைக்க வேண்­டு­மென்ற கோரிக்கை தற்­போது மேலெ­ழுந்­துள்­ளது. அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­க­ளுக்கு முன்னர் இந்த முறையில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­படும் என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கின்றார். இந்த உதா­ர­ணத்தை முன்­வைத்து மாகாண சபைத் தேர்தல் புதிய முறையின் கீழ் நடத்­தப்­ப­டு­வ­தற்கு பெரும்­பா­லான கட்­சிகள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளன. பழைய விகி­தா­சார முறை­யின்­ப­டியே இந்தத் தேர்தல் நடை­பெ­ற­வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் மாகாண சபைத் தேர்­தலை பழைய முறை­யின்­படி நடத்­த­வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இதற்கு இணக்­கமும் காணப்­பட்­டது. ஆனால் அடுத்­த­வாரம் உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்­தபா கலந்­து­கொண்ட கூட்­டத்தில் புதிய முறை­யின்கீழ் நடத்­து­வது குறித்து பரி­சீ­லிக்க வேண்­டு­மென்று தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இவ்­வாறு எந்த முறையில் தேர்­தலை நடத்­து­வது என்­பது குறித்து தெளி­வற்ற தன்மை தொடர்ந்து வரு­கின்­றது.

இத்­த­கைய நிலை­யில்தான் நான்கு சிறு­பான்மைக் கட்­சி­களின் தலை­வர்­களும் ஒன்­று­கூடி மாகா­ண­சபைத் தேர்­தலை கால­தா­ம­த­மின்றி நடத்த வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். புதிய முறை­யின்கீழ் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கால­தா­மதம் செல்­லு­மா­க­வி­ருந்தால் பழைய முறை­யின்­படி உரிய காலத்தில் தேர்­தலை நடத்­த­வேண்­டு­மென்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. உண்­மை­யி­லேயே தேர்­தல்கள் உரி­ய­கா­லத்தில் நடத்­தப்­பட வேண்டும். மக்­களின் அடிப்­படை உரி­மை­யான வாக்­கு­ரிமை உரிய காலத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

தற்­போ­தைய நிலையில் நான்கு கட்சித் தலை­வர்­களும் ஒன்­று­கூடி இந்த விட­யத்தில் உறு­தி­யான தீர்­மானம் எடுத்­தமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மா­கவே அமைந்­துள்­ளது.

இதே­போன்றே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை இல்­லா­தொ­ழிக்க வேண்­டு­மென்று கோரி ஜே.வி.பி.யானது எதிர்­வரும் 8ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ர­ணை­யொன்­றினை முன்­வைக்­க­வுள்­ளது. அந்தப் பிரே­ர­ணைக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியும் மேலோட்­ட­மாக ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­போது நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­திகள் வழங்­க­ப்­பட்­டன. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்தல், தேர்தல் முறை­யினை மாற்­றி­ய­மைத்தல், இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­காரப் பர­வ­லாக்கல் மூலம் தீர்வு காணுதல் ஆகிய 3 விட­யங்­களை உள்­ள­டக்கி புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­படும் என்று உறுதி வழங்­கப்­பட்­டது. இதற்­கி­ணங்க பாரா­ளு­மன்­ற­மா­னது அர­சியல் யாப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­த­ நி­லையில் தற்­போது நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை இல்­லா­தொ­ழிக்கும் விட­யத்தை மாத்­திரம் ஜே.வி.பி. பிரே­ர­ணை­யாக சமர்ப்­பிப்­பது குறித்தும் நான்கு கட்­சி­களின் தலை­வர்­களும் ஆராய்ந்­துள்­ளனர். மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியைப் போன்று இந்த 3 விட­யங்­க­ளையும் ஒரு­மித்­த­வ­கையில் நிறை­வேற்றி புதிய அர­சியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து அதிகாரப் பரவலாக்கலைத் தவிர்த்து எடுக்கப்படும் எந்த முயற்சியையும் ஆதரிப்பது இல்லை என்று சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

இந்த விடயங்களில் சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவேண்டும். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமையும் இந்த விடயங்களில் அக்கறை காண்பிக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடு­கள் அனைத்துக்கும் ஆதரவை வழங்கும் கொள்கையில் கூட்டமைப்பு இனியும் பயணிக்கக் கூடாது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து இத்தகைய தீர்மானங்களை எடுக்கும்போது கூட்டமைப்பானது ஒதுங்கியிருப்பது முறையான செயற்பாடாக அமையாது. எனவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-30#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.