Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கிழக்கு மக்கள் கூறும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் சுமந்திரன் :

Featured Replies

வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கிழக்கு மக்கள் கூறும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கிறார் சுமந்திரன் :

sumanthiran_4271.jpg?resize=800%2C600
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ‘ தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண முதலமைச்சர் யார்? என கேட்டார்கள். நான் அதற்கு திருப்பி ஒரு கேள்வி கேட்டேன். கிழக்கு மாகாண சபை செயலிழந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வைக்க அழுத்தம் கொடுப்பீர்களா ? கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் ? என ஏன் ஒரு ஊடகம் கேள்வி எழுப்பவில்லை ? உங்களுக்கு கிழக்கு மாகாணம் தேவையில்லையா ? வடகிழக்கு இணைப்பு தேவையற்றது என இவர் கூறினார் என கோடிட்டு காட்டி கொண்டு இருப்பது தான் உங்கள் வேலையா ? என கேட்டேன்.

அதற்கு அவர்கள் இந்த பதிலை மறுநாள் ஊடகத்தில் எழுதி இருக்க தானே வேண்டும், நாங்கள் இப்படி கேட்டோம். அவர் இப்படி கூறினார் என ஒரு ஊடகமும் அதனை பிரசுரிக்க வில்லை

கிழக்கு மாகாணத்தில் இவர்களுக்கு உள்ள கரிசனை இல்லை. ஆனால் வடகிழக்கு இணைப்பு வேண்டும். இன்றைக்கு முஸ்லீம் மக்கள் தான் வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என்கிறார்கள். தற்போது கணிசமான தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். வெகு சீக்கிரம் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்களும் வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்.

கோசத்திற்கு மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும். இணைக்க விருப்பமான நாங்கள் அதற்கான சாத்தியங்களை நோக்கி நகரும் போது , தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுடன் இணங்கி போனாலே வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் என நான் கூறினால் அந்த உறவை வேண்டாம் என்கிறார்கள்.

இப்போதைக்கு சத்தியம் இல்லை என்று கூறினேன். அதில் இப்போதைக்கு என்பதனை விட்டு விட்டு சாத்தியம் இல்லை என போட்டார்கள். இப்பவும் சொல்லுறேன். அந்த உறவு மேம்பட வேண்டும். மேம்பட்டால் தான் அது சாத்தியமாகும். என தெரிவித்தார்.

IMG_4270.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/77406/

  • தொடங்கியவர்

வடக்கு கிழக்கு இணைப்பு எப்போது சாத்தியமாகும்? சுமந்திரன் விளக்கம்

0d2d9cd01683688bc91c063ca422a320?s=48&d=

தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் இணங்கிப் போனாலே வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்குத் தமிழ் மக்கள் தற்போது கோர ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதன்கிழமை யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

31714882_456505131474415_307047297031392

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “எமக்கு வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும். இன்றைக்கு முஸ்லிம் மக்கள் தான் வட. கிழக்கு இணைப்பு வேண்டாம் என்கிறார்கள். தற்போது கணிசமான தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் எனக்கூற ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்குத் தமிழ் மக்கள் வட. கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்.

இணைக்க விருப்பமான நாங்கள் அதற்கான சாத்தியங்களை நோக்கி நகரும் போது , தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இணங்கி போனாலே வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமாகும். ஆனால் அதனை நான் கூறினால் அந்த உறவு வேண்டாம் என்கிறார்கள்.

வடக்கு கிழக்கு இணைப்பு இப்போதைக்கு சத்தியம் இல்லை என்று கூறினால். அதில் இப்போதைக்கு என்பதை விடுத்து சாத்தியம் இல்லை என்பதையே செய்தியில் வெளியிடுகிறார்கள்.

இப்பவும் சொல்கிறேன். வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டுமானால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவு மேம்பட வேண்டும். அவ்வாறு மேம்பட்டாலே அது சாத்தியமாகும்” எனத் தெரிவித்தார்.

http://www.newsuthanthiran.com/2018/05/03/வடக்கு-கிழக்கு-இணைப்பு-எ/

  • தொடங்கியவர்

யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் நேற்றைய தினம் புதன்கிழமை கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் " தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்" எனும் தொனிப்பொருளில் சிறப்புரையாற்றினார்.

உரையின் முழு வடிவம்.

 

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.