Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர­சாங்கம் தமிழர் பிரச்­சி­னையை தீர்த்­து­ வைக்­காது

Featured Replies

அர­சாங்கம் தமிழர் பிரச்­சி­னையை தீர்த்­து­ வைக்­காது

 

இலங்­கையில் தமிழர் இனப்­பி­ரச்­சி­னையைத் தீhத்­து­வைப்­ப­தற்கு அவ்­வப்­போது பல வாய்ப்­புகள் கிடைத்­தன. இறு­தி­யாக இடம்­பெற்ற உள்ளூ­ராட்­சித்­தேர்­த­லைக்­கூட பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். மக்­க­ளிடம் அபிப்­பி­ரா­யத்தைப் பெற்­றி­ருக்­கலாம். இதெல்­லா­வற்­றையும் யார் கெடுத்­தது? இந்த தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பினர் இருக்­கும்­வரை இந்­த­நாட்டில் இனப்­பி­ரச்­சினை தீராது. தீர்க்­கவும் முடி­யாது.

இவ்­வாறு அடித்­துக்­கூ­று­கின்றார் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லா­ளர் ­நா­யகம் வீ.ஆனந்­த­சங்­கரி.

அம்­பாறை மாவட்­டத்­திற்­கான 3 நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு வரு­கை­ தந்­த­போது கல்­மு­னையில் அவர் தங்­கி­யி­ருந்த விடு­தி­யில் ­வைத்து கேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

85 வய­தான ஆனந்­த­சங்­கரி எத­னையும் ஒளி­வு­ ம­றை­வின்றி வெளிப்­ப­டை­யாக ஆணித்­த­ர­மா­கக்­கூ­று­கின்ற பழக்­க­மு­டை­யவர். பழைய பல விட­யங்­களை மீட்­ப­தற்கு சில சந்­தர்ப்­பங்­களில் அவ­ரது வயது தடை­யா­க­வி­ருந்­த­தையும் இவ்வண் சுட்­டிக்­காட்­டலாம்.

தனது அர­சியல் வாழ்க்­கையில் இது­வரை பொய்­பே­சி­ய­தில்லை. இன்றும் உண்­மைதான் பேசி­வ­ரு­கின்றேன் என்று மகிழ்ச்­சி­யுடன் கூறும் ஆனந்தசங்­கரி எமக்­க­ளித்த பேட்­டியின் முழு விபரம் வருமாறு:

கேள்வி: தமிழர் பிரச்­சினை தீர வழி­யில்­லையா?

பதில்: வர­லாற்றில் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­கான எத்­த­னையோ சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தன.அத்­த­னை­யையும் தவ­ற­விட்­டு­விட்டு இன்று கதை­ய­ளக்­கி­றார்கள். தமிழ்­மக்­க­ளுக்கு உண்­மையில் துரோ­க­மி­ழைத்­த­வர்கள் அவர்­களே.

கேள்வி: ஏன் அவ்­வாறு கூறு­கின்­றீர்கள்?

பதில்: இறு­தி­யாக நடை­பெற்­ற­தேர்­த­லுக்கு முன்­பா­வது தமிழர் அர­சி­யலை ஒன்­று­ப­டுத்­தி­யி­ருக்­கலாம்; அத­னைச்­ செய்­ய­வில்லை.

ஆனால், உள்ளூ­ராட்சி சபை­களில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு அதா­வது சுய­லா­பத்­திற்­காக யாரு­ட­னெல்லாம் கூட்­டுச்­சே­ர­மு­டி­யா­தென்று எள்ளி நகை­யா­டி­னார்­களோ அவர்­க­ளுடன் எல்லாம் கூட்­டு­வைத்­துள்­ளார்கள். இதை­விட துரோ­க­மி­ருக்­குமா?

கேள்வி: அது சாணக்­கி­ய­மா­காதா?

பதில்: இல்­லாத பொய்­யெல்லாம் சொல்லி தலை­மையைப் பெறு­வது சாணக்­கி­யமா? தேர்தல் காலத்தில் துரோ­கி­யாக பார்க்­கப்­பட்­டவர் எல்லாம் தேர்தல் முடிந்­ததும் சக­பா­டி­யாக மாற்­றப்­பட்­டது சரியா?

கேள்வி: இறு­தி­யாக நடை­பெற்ற தேர்தல் பெறு­பேறு தொடர்­பாக உங்­கள் ­க­ருத்து என்ன?

பதில்: வடக்கு, கிழக்கைப் பார்த்தால் த.தே.கூட்­ட­மைப்­பிற்கு படு­தோல்வி. எந்­த­வொரு சபை­யையும் தனித்து ஆட்­சி­ய­மைக்­க­மு­டி­யாத நிலை. இது பெரிய கட்சி என்று மார்­தட்டி நிற்கும் கட்­சிக்கு அழகா? அவர்­க­ளது பேராசை சுய­ந­லத்­திற்கு மக்­களைப் பலிக்­க­டா­வாக்­கி­வ­ரு­கின்­றார்கள். தமிழ்­மக்கள் ஒட்­டு­ மொத்­த­மாக இவர்­களை வெறுத்­து­ வ­ரு­கின்­றார்கள் என்­பதே எனது கருத்து.

கேள்வி: தமிழ்­மக்கள் த.தே.கூட்­ட­மைப்பை ஓரங்­கட்­டி­யுள்­ளார்கள் என்று கூறு­கின்­றீர்­களா?

பதில்: நிச்­ச­ய­மாக. கடந்த 30வருட கால­மாக மக்­களை ஏமாற்­றிப்­பி­ழைத்­து­வந்த த.தே.கூட்­ட­மைப்பை மக்கள் இன்று ஏமாற்­றத்­தொ­டங்­கி­யுள்­ளனர். தேர்தல் பெறு­பேறும் அத­னைத்தான் உணர்த்­து­கின்­றது. வடக்கு, கிழக்கில் 30வீத வாக்­குக்­கூட விழ­வில்லை. மக்­களை தொடர்ந்து ஏமாற்­ற­மு­டி­யாது. மக்கள் பாடம் கற்­பித்­துள்­ளனர். இத்­தோ­டையாவது அவர்கள் திருந்­த­வேண்டும்.

கேள்வி: உங்கள் த.வி.கூட்­டணி தேர்­தலில் பெற்ற பெறு­பேறு திருப்­தியா?

பதில்: எம்­மைப்­பொ­றுத்­த­வரை 78 ஆச­னங்கள் கிடைத்­துள்­ளன. அது திருப்தி. நாம் தான் தமிழ்­மக்­களின் உண்­மை­யா­ன­கட்சி. எதிர்­கா­லத்தில் எம்­முடன் இணையும் கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு முன்­னே­ற ­முடியும்.

கேள்வி: த.வி.கூட்­ட­ணியின் தோற்றம் பற்­றிக்­ கூ­றுங்கள்?

பதில்: 1972இல் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியும் இலங்கைத் தமிழ் ­காங்­கி­ரஸும் இணைந்து தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணி­யாக தோற்­றம்­ பெற்­றது. அப்­போது தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கு தந்தை செல்வா தலை­வ­ரா­கவும் செய­லா­ள­ராக அண்ணன் அமிர்­த­லிங்­கமும் இருந்­தனர். தமிழ் காங்­கி­ர­ஸுக்கு நான் தலை­வ­ரா­கவும் அண்ணன் சிவ­சி­தம்­பரம் செய­லா­ள­ரா­க­வு­மி­ருந்தோம். உரு­வான த.வி.கூட்­ட­ணிக்கு தலை­வ­ராக நானே தெரி­வானேன்.

கேள்வி: அப்­ப­டி­யெனின் த.தே.கூட்­ட­மைப்பு உரு­வா­னதில் தங்­களின் பங்­க­ளிப்பு எவ்­வா­றி­ருந்­தது?

பதில்: 1972இலி­ருந்து 28 – 30 வரு­ட­கா­ல­மாக ஒரு பிரச்­சி­னை­யு­மில்­லாமல் இயங்­கி­வந்தோம். அத­னைக்­கூ­ட­வி­ருந்து பின்னர் கெடுத்­த­வர்­களை உல­க­றியும். த.தே.கூட்­ட­மைப்பு என்­பது இல்­லாத ஒன்று. எமது த.வி.கூட்­ட­ணியை அழிக்க அல்­லது பல­வீ­னப்­ப­டுத்த எம்­மோ­டி­ருந்த சுய­லாப தமிழ்த்­த­லை­மை­களின் சதியின் வெளிப்­பாடே அது.

கேள்வி: த.தே.கூட்­ட­மைப்பின் பிர­தான தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வகி­பாகம் எப்­படி இருந்­தது?

பதில்: அப்­போது த.அ.கட்­சியே இல்லை. இப்­போ­துள்ள செய­லாளர் துரை­ரா­ச­சிங்கம் எப்­போது வந்­தவர். த.அ.கட்­சியின் அங்­கத்­த­வரா? சம்­பந்­த­ரால்தான் இத்­தனை பிரச்­சி­னையும். கூட­வி­ருந்த மாவை ­சே­னா­தி­ராசா குறைந்­த­வ­ரல்ல. தமி­ழி­னத்தின் கோடரிக்­காம்­பு­க­ளாக இவர்­களே இருந்­து­ வந்­துள்­ளனர்.

கேள்வி: தமிழ்­மக்­களின் ஏகப்­பி­ர­தி­நி­திகள் விடு­த­லைப்­பு­லிகள் இல்­லை­யென்று கூறி­னீர்­களா?

பதில்: ஒரு­போதும் இல்லை. இனப்­பி­ரச்­சினை தீர்­வின்­போது விடு­த­லைப்­பு­லி­களை முன்­னி­றுத்­தியே பேச­வேண்டும் என்­பதில் உறு­தி­யா­க­வி­ருந்தேன்.

கேள்வி: இன்­றை­ய ­நி­லையில் சமஷ்டி என்­கி­றார்­களே . இது சாத்­தி­யமா?

பதில்: அன்று ஜனா­தி­பதி தேர்­தலில் சம­ஷ்டியை முன்­வைத்து ரணிலும் ஒற்­றை­யாட்­சியை முன்­வைத்து மஹிந்­தவும் போட்­டி­யிட்­டனர். சமஷ்­டியை வலி­யு­றுத்­து­வ­தா­கக் ­கூறும் சம்­பந்­தனும் மாவையும் புலி­யைப்­ப­யன்­ப­டுத்தி மஹிந்­தவை ஆத­ரிக்கச் சொன்­னதேன்? தேர்­த­லை ­ப­கிஷ்­க­ரிக்­கச்­சொன்­னார்கள். அன்று ரணி­லுக்கு தமிழ் ­ம­க்கள் போட்­டி­ருந்தால் அவர்தான் ஜனா­தி­பதி. சமஷ்டி பற்­றிச்­ சிந்­தித்­தி­ருக்­கலாம். வாய்ப்பைத் தவ­ற­விட்­டார்­கள்.

பின்பு அடுத்த தேர்­தலில் விடு­த­லைப் ­போராட்­டத்தை நசுக்­கிய தமி­ழி­னத்தை அழித்த சரத் ­பொன்­சே­கா­வுக்கு வாக்­க­ளிக்­கச்­சொன்­னார்கள். உண்­மையில் அன்றே இவர்கள் நஞ்சு குடித்­து ­செத்­தி­ருக்­க­வேண்டும். 

கேள்வி: அப்­ப­டி­யெனின் சம்­பந்தனுக்கு அர­சியல் ஞான­மில்­லை­யென்று கூறு­கின்­றீர்­களா?

பதில்: நிச்­ச­ய­மாக இல்­லா­தி­ருந்தால் தமி­ழினம் இது­வ­ரைக்கும் எங்­கேயோ சென்­றி­ருக்கும். என்னை விட பாரா­ளு­மன்ற அனு­பவம் 7 வருடம் அவர் குறைவு . அர­சி­யலில் 12 வரு­டங்கள் குறைவு. இன்று அர­சுடன் ஒட்­டிக்­கொண்டு இவர்கள் இந்த சமூகத்­துக்காக சாதித்­த­தென்ன? துரோ­கத்தைச் செய்­தார்கள்.

கேள்வி: அப்­ப­டி­யென்ன துரோகம் செய்­தார்கள்?

பதில்: 2004 ஆம் ஆண்டு தேர்­தலில் புலி­களை கைக்­குள்­போட்­டுக்­கொண்டு 22 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அனுப்­பி­னார்கள். இவர்­களில் ஒருவர் 1 இலட்­சத்து 20ஆயிரம் வாக்­குகள் எடுத்தார். ஆனால்­ அ­டுத்த 2010 தேர்­தலில் அவர் ஆக அதில் 5 வீத­மான வாக்­கு­க­ளையே எடுத்தார். எனின் எப்­படி 2004 தேர்தல் நடந்­தது என்­பதை அறி­வீர்கள். சரி. இவர்கள் அங்­

கி­ருந்து எதனைச் சாதித்­தார்கள்? புலி­க­ளுக்கு சில­ து­றை­களில் அனு­பவம் போதாது.

கேள்வி: புதிய அர­சி­ய­ல­மைப்பு சரி­வரும் என்­கி­றீர்­களா?

பதில்: கடை­சி­வ­ரைக்கும் சரி­வ­ராது. ஆனால், அதை ­வைத்து த.தே.கூட்­ட­மைப்பு கடந்த தேர்­தலை காய் ­ந­கர்த்­தி­யது. இன்று மாகா­ண­ ச­பைக்­காக மீண்டும் அத­னைப் ­ப­யன்­ப­டுத்­த­வுள்­ளது.

கேள்வி: அப்­ப­டி­யெனின் தங்­களின் மாற்று ஆலோ­சனை என்ன?

பதில்: இருக்­கின்ற 1978ஆம் ஆண்டு யாப்பில் உள்ள சாதக, பாத­கங்­களை இனங்­கண்டு அதில் சில­வற்றை திருத்­தலாம். குறிப்­பாக அடிப்­படை உரி­மைகள் சட்­டத்தை தென்­னா­பி­ரிக்­காவில் இருப்­பது போன்று சேர்த்­து­விட்டால் அதுவே போது­மா­னது. மற்­றது காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கும் பரா­தீ­னப்­ப­டுத்­து­வது.

இவ்­வா­றான சில மாற்­றங்­க­ளுடன் அத­னைத்­ தி­ருத்­தினால் சிறு­பான்­மைக்கு ஒரு காப்­பீ­டாக அமை­யுமே தவிர புதிய யாப்பு இனப்­பி­ரச்­சினை தீர்வு 2020க்குள் ­வ­ரு­மென்று கூறு­வ­தெல்லாம் மக்­களைப் பேய்க்­காட்­டவே தவிர உண்­மை ­ஒன்­று­மில்லை.

கேள்வி: உங்­களை தமி­ழி­னத்­ து­ரோகி என்

றும் சிலர் சொல்­கி­றார்­களே?

பதில்: த.தே.கூட்­ட­மைப்­பி­லி­ருக்கும் இருந்த சில­கட்­சி­கள்தான் ஆலா­ல­சுந்­த­ரத்தைக் கொன்­றார்கள் அமிர்­த­லிங்­கத்தை கொன்­றார்கள். இப்­ப­டிப் ­ப­ல­ரைக் ­கொன்­றார்கள். தமி­ழி­னத்தின் தலை­வர்­க­ளைக்­கொன்­ற­வர்கள் உத்­த­மர்கள். அவ்­வப்­போது ­பொய் ­­சொல்லி ஏமாற்று அர

­சி­ய­லைச்­ செய்து வரு­ப­வர்கள் உத்­த­மர்கள். தியா­கிகள்.

வவு­னி­யாவில் இருந்த ஒரு கட்சி எத்­தனை தமிழ்மக்­களை கொன்­று­ கு­வித்­தது என்­பது உல­க­றியும். இன்று தியா­கி­ வேடம் பூணு­கி­றார்கள்.

அன்றிலிருந்து இன்றுவரை கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் பொய் பேசாமல் ஏமாற்று அரசியல் செய்யாமல் அரசியல் செய்யும் நான் துரோகியா?

கேள்வி: எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு உங்களின் வியூகம் அமையும்?

பதில்: கடந்த தேர்தலில் மக்கள் எம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்­­துள்ளனர். அதனைவிட 100வீதம் மக்களைச் சென்றடைந்து வெற்றிபெற வேண்டு­மென்பதே எமது நோக்கம். ஏனைய தமிழ்க்­கட்சிகளையும் அழைக்கின்றேன். சிலகட்சிகள் திருந்திவர வேண்டும். நாம் கடந்த தேர்தலில் யாருடனும் பேரம் பேச

வில்லை பதவிக்காக போகவும் இல்லை. ஆனால் கல்முனை பிரதி மேயர் பதவி எமது உறுப்பினர் காத்தமுத்து கணேசுக்குக் கிடைத்துள்ளது. நல்ல விடயம். ஒற்றுமை காத்து சமூகத்தை வளப்படுத்துவோம்.

கேள்வி: உங்களது அழைப்பைப் போல் த.தே.கூட்டமைப்பும் எம்முடன் வந்து தமிழ்க் கட்சிகள் சேரலாமென அழைத்தால்..

பதில்: ஒருபோதும் இல்லை. நாம்தான் பழம் பெரும்கட்சி. தமிழினத்திற்கு போலிவார்த்தைகள்கூறி ஏமாற்றாமல் தூய்மையாக அரசியல் செய்து வருகின்­றோம். எனவே எம்முடன் வந்து சேர்ந்தால் தமிழ் மக்களுக்கான சிறந்த வலுவான சக்தியாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-03#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.