Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார்

Featured Replies

விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார்

 

இந்திய அணி கேப்டனான விராட் கோலியை ஜூன் மாதம் முழுவதும் விளையாட சர்ரே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. #ViratKohli #Surrey

 
 
விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார்
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் இவர், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் சரியாக சோபிக்கவில்லை.

கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. அப்போது 5 டெஸ்டில் 134 ரன் மட்டுமே எடுத்தார். சராசரி 13.40 ஆகும். இதனால் ஸ்விங் ஆகும் இங்கிலாந்து ஆடுகளத்தில் விராட் கோலி சாதித்து காட்டட்டும். அதன்பின் அவரை சிறந்த வீரராக கருதுகிறோம் என்று முன்னாள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்தியா 2016-ல் இருந்து விராட் கோலி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியது. இனிமேல் இந்தியாவிற்கு தொடர்ந்து வெளிநாட்டு தொடர்தான். முதலாவதாக நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா தொடரில் 1-2 எனத் தோல்வியடைந்தது.

வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள், டி20 தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவது மட்டுமல்ல, இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

201805032020408629_1_ViratKohli003-s._L_styvpf.jpg

இதனால் விராட் கோலி தனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள கவுன்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் பச்சைக் கொடி காட்டியது.

இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னணி கவுன்டி அணியான சர்ரே விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளது. விராட் கோலி ஜூன் மாதம் முழுவதும் அந்த அணிக்காக விளையாட இருக்கிறார்.

சர்ரே அணி ஹாம்ப்ஷைர் அணியை ஜூன் 9-ந்தேதியும், சாமர்செட் அணியை ஜூன் 20-ந்தேதியும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/03202040/1160668/Virat-Kohli-to-play-for-Surrey-in-English-county-in.vpf

  • தொடங்கியவர்

கோலிக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் இல்லை, அணியின் மற்ற வீரர்களைப் போல்தான் அவரும்: சர்ரே அணியின் அலெக்ஸ் ஸ்டூவர்ட்

TH07KOHL

கோப்புப் படம்.

சரே அணிக்காக இந்திய கேப்டன் விராட் கோலியை ஒப்பந்தம் செய்ய 18 மாதங்களாக அலைந்தோம் என்று சரே கிரிக்கெட் அணியின் உயரதிகாரி, முன்னாள் வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

2016-ல் இங்கிலாந்து அணி பயணம் மேற்கொண்ட போதே கவுன்ட்டி கிரிக்கெட் ஆடுவது தனக்கு பிரியமானது என்று கோலி தெரிவித்திருந்தார்.

 

கோலி இவ்வாறு தெரிவித்திருந்ததையடுத்தே தான் கோலியை சரே அணிக்கு ஆடுவதற்காக அவரை அணுக முயற்சி செய்தோம் என்கிறார் முன்னாள் இங்கிலாந்து விக்கெட் கீப்பர், பேட்ஸ்மென் அலெக்ஸ் ஸ்டூவர்ட்.

“அப்போது விராட் கோலியை தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஒரு கட்டத்தில் அவருடனும் அவரது ஆலோசகர்களிடமும் பேசினோம். அப்போது பிசிசிஐ சம்மதம் வேண்டும் என்று உணரப்பட்டது.

கடைசியாக பிசிசிஐ சம்மதம் தெரிவித்தனர், இது மிக நீண்ட அணுகல் முறை, இது இரண்டு தரப்பினருக்குமே நன்மை பயப்பது.

ஆகச்சிறந்த வீரர் இல்லையென்றாலும் இப்போதைய வீரர்களில் சிறந்தவர்களில் ஒருவரான விராட் கோலியை ஒப்பந்தம் செய்தோம். அவர் குறைந்தது மூன்று 50 ஓவர் போட்டியில் ஆடுவார், 3 சாம்பியன்ஷிப் போட்டிகள் உள்ளன, இது அவருக்கும் எங்களுக்கும் போதிய நன்மைப் பயக்கும் என்றே கருதுகிறோம்.

டெஸ்ட் கிரிக்கெடுக்கு அவர் தயாராக இது உதவும் என்று அவர் கூறினார், ஆனால் பார்த்தோமானால் டெஸ்ட் மைதானத்தில் கோலி ஒரேயொரு போட்டியில்தான் ஆடுகிறார். அது ஏஜியஸ் பவுல். ஆனால் இந்த மைதானத்தில் கூட இந்தத் தொடரில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. எப்படியிருந்தாலும் அவருக்கும் ஒரு கிரிக்கெட் கல்வி எங்களுக்கும் ஒரு உலகத்தரமான வீரர் கிடைத்துள்ளார்.

எங்களுக்கு விளையாடும்போது அவர் அணியின் ஒரு அங்கமாகவே இருப்பார், அவருக்காக சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது.

அவர் இங்கு விளையாடுவதை எதிர்நோக்குகிறார், நாங்கள் அவரை எதிர்நோக்குகிறோம்” என்றார் அலெக்ஸ் ஸ்டூவர்ட்.

http://tamil.thehindu.com/sports/article23801993.ece

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

இங்கிலாந்து கவுண்டி அணியில் இருந்து விராட் கோலி விலகல்

 

 
virat11

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் இங்கிலாந்தில் சர்ரே கவுண்டி அணியில் இணைந்து விளையாடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி காயத்தில் இருந்து மீண்டு வர 3 வாரங்கள் கட்டாய ஓய்வு தேவைப்படுவதால், அவர் ஜுன் 15-ம்தேதி நடத்தப்படும் உடற் தகுதித் தேர்வுக்குப் பின்புதான் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

 

இந்த உடற் தகுதித் தேர்வுக்குப் பின்புதான் ஜூன் இறுதியில் அயர்லாந்து அணிக்கு எதிரான இரு டி20 போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா? என்பது குறித்து கூற முடியும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அமிதாப் சவுத்ரி (பிசிசிஐ) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பெங்களூரில், கடந்த 17-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விளையாடியபோது, இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி பீல்டிங் செய்யும் போது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

ஜுன் மாதம் இங்கிலாந்தில் சர்ரே கவுண்டி அணியில் விளையாட விராட் கோலி ஒப்பந்தம் செய்து இருந்தார், காயம் காரணமாக அந்த அணிக்காக அவர் விளையாடமாட்டார். விராட் கோலியின் உடல்நிலையை பிசிசிஐ மருத்துவக்குழு ஆய்வு செய்தபின், அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, சிறப்பு சிகிச்சை நிபுனர் ஆய்வு ஆகியவற்றை முடித்தபின் இந்த முடிவை எடுத்துள்ளது.

வரும் ஜுன் இறுதியில் நடக்கும் அயர்லாந்து அணியுடனான 2 டி20 போட்டிகள், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குள் விராட் கோலி உடல்நலம் தேறிவிடுவார் என நம்புகிறோம். விராட் கோலிக்கு வரும் ஜூன் 15-ம் தேதி உடற்தகுதித் தேர்வு பிசிசிஐ சார்பில் நடத்தப்படுகிறது. அதன்பின் அவரின் பங்கேற்பு குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு பிசிசிஐ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 3-ம்தேதியும், ஒருநாள் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதியும் தொடங்குகிறது.

இங்கிலாந்தில் சர்ரே கவுண்டி அணியில் விளையாடுவதற்காகவே ஜுன் 14-ம் தேதி பெங்களூரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் கோலி இருந்தார்.

கடந்த ஒரு ஆண்டாக விராட் கோலி ஓய்வு இல்லாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த ஒரு ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகள், 29 ஒருநாள் போட்டிகளில், 9 டி20 போட்டிகளில் விராட் கோலி பங்கேற்று விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

http://tamil.thehindu.com/sports/article23976866.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.