Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!!

Featured Replies

  •  
  • 2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!!
 
 

2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யால் மாத்­தி ­ரமே நாட்­டில் நிலை­யான தன் மையை ஏற்­ப­டுத்த முடி­யும். அர­சி­யல் எதிர்­கா­ல­மும் அந்­தக் கட்­சிக்கு மட் டுமே இருக்­கின்­றது. ஐந்­தாண்­டு­கள் அல்ல 2030ஆம் ஆண்­டு­வரை ஐ.தே.கவின் ஆட்சி தொட­ர­வேண் டும் என்­பதே எமது இலக்கு. இதை இலக்­கு­வைத்தே இரண்­டாம் தலை­ மைத்­து­வம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அனை­வ­ரும் இணைந்து 2020இல் தனி­யாட்சி அமைப்­போம்.

இவ்­வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.
ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மே தினக் கூட்­டம் கொழும்பு சுத­தாஸ உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்­தா­வது,

நாடு சுதந்­தி­ர­ம­டைந்­தது முதல் ஐக்­கிய தேசி­யக் கட்­சியே தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­க­ளைப் பெற்­றுக்­கொ­டுத்­தது. நாம் மாத்­தி­ரமே தொழி­லா­ளர் தினத்தை கௌர­மா­கக் கொண்­டாட முடி­யும். ஏனை­யோர் என்ன செய்­துள்­ள­னர்?. இந்த நாட்­டில் தொழிற்­சா­லை­கள் முதல் விடு­தி­கள் வரை அனைத்­தும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே அமைக்­கப்­பட்­டன. அவற்­றா­லேயே இன்று அனை­வ­ரும் மே தினத்­துக்கு ஊர்­வ­ல­மா­க­வும் செல்­கின்­ற­னர்.

நாட்­டில் ஏகா­தி­பத்­திய ஆட்­சி­மு­றையை ஏற்­ப­டுத்த பார்த்­த­மையே அவர்­கள் செய்த வேலை. ஆனால், அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து ராஜ­பக்­சக்­க­ளின் ஆட்­சியை வீழ்த்­தி­னோம். ஐ.தே.க. பயப்­ப­ட­வில்லை. ஜன­நா­ய­கத்தை நேசிக்­கும் அனை­வ­ரு­ட­னும் இணைந்து செயற்­ப­டு­மாறு அன்று எனக்கு அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்­தீர்­கள். பொது­வேட்­பா­ளர் ஒரு­வரை நிறுத்­தி­னோம். ஆனால், நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தேவை­யான பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை. தேசிய அரசை அமைத்­தோம்.

இன்று பய­மில்­லாது நாட்­டில் வாழ­மு­டி­யும். உல­கம் முழு­வ­தும் எமக்கு ஆத­ர­வுள்­ளது. எவ­ரும் தமது நாட்­டுக்கு அரச தலை­வரை வர­வேண்­டா­மெ­னக் கூற­வில்லை. இதைத்­தான் செய்­துள்­ளோம். இன்று ஜெனிவா சென்­றால் அரசை எவ­ரும் விமர்­சிக்­க­வில்லை. சரத் விர­சே­க­ர­வும் சில புலம்­பெ­யர் தமிழ் அமைப்­பு­க­ளும்­தான் எம்மை விமர்­சிக்­கின்­ற­னர். வேறு எவ­ரும் இல்லை.

அன்று உல­கில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தோம். ஆனால், இன்று சட்­டம் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கட­னுக்­கான வட்டி வீதத்­தைக் கூட செலுத்த முடி­யா­தி­ருந்­தது. இன்று வட்­டி­யை­யும் கட­னை­யும் செலுத்­த­மு­டிந்­துள்­ளது. பொரு­ளா­தா­ரம் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தால் எவ்­வாறு ஏற்­று­மதி, இறக்­கு­மதி செய்­ய­மு­டி­யும். வேலை­வாய்ப்­பு­கள் முதல் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்­கான அடித்­த­ளத்தை இட்­டுள்­ளோம். மூல­த­னம் நாட்டை நோக்கி நக­ரும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளோம். இளை­ஞர், யுவ­தி­க­ளுக்­கான எதிர்­கா­லத்தை உரு­வாக்­க­வேண்­டும்.

பொய் சொல்­வ­தில் அர்த்­த­மில்லை. கஷ்­ட­மான காலம் ஏற்­ப­டும். 2016ஆம் ஆண்டு பொரு­ளா­தா­ரம் வளர்ச்­சியை நோக்கி நகர்­வ­தாக இருந்­தது. ஆனால், வெள்­ளப் பெருக்கு, மண்­ச­ரிவு என இயற்கை இடர்­க­ளைச் சந்­திக்க நேரிட்­டது. 2018 மற்­றும் 2019ஆம் ஆண்­டு­க­ளில்­தான் அதி­கூ­டிய வட்­டி­யும், கட­னும் செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. அத­னை­யும் செலுத்தி நாங்­கள் முன்­னோக்­கிச் செல்­வோம்.

தேர்­த­லில் நாங்­கள் தோல்­வி­ய­டைந்­தோம். கடந்த மே மாதத்­தில் தேர்­தலை வைத்­தி­ருந்­தால் பெரும் வெற்­றி­யைப் பெற்­றி­ருப்­போம். கட்­சி­யி­ன­ரின் தேவை­க­ளை­யும் நிறை­வேற்­றி­யி­ருக்­க­வில்லை. இன்­ன­மும் அர­சி­யல் பழி­வாங்­கல்­கள் உள்­ளன. தற்­போது அனைத்­தை­யும் சீர்­செய்­துள்­ளோம். 18 மாதங்­கள் நாங்­கள் ஓட­வேண்­டி­யுள்­ளது. கட்­சிக்­குப் புதிய தலை­வர்­களை உரு­வாக்­கி­யுள்­ளோம். அனை­வ­ரும் ஒன்­றாக பய­ணிக்­க­வேண்­டும்.
ஜே.ஆர். மூன்று தலை­வர்­களை உரு­வாக்­கி­யி­ருந்­தார். ஆனால் அவ­ருக்­குப் பின்­னர் எவ­ரும் இருக்­க­வில்லை. கட்­சி­யின் தலை­வர் முதல் அடி­மட்­டத் தலை­வர்­கள் வரை இல்­லாது போயி­ருந்­த­னர். ஐ.தே.க. முடிந்­து­விட்­டது என்­ற­னர். அனைத்­தை­யும் மாற்­ற­ய­மைத்­தேன்.

சமுர்த்தி அமைச்சை பெற்­றுக்­கொண்­டுள்­ளோம். சமுர்த்தி கிடைக்­கா­த­வர்­கள் உள்­ள­னர். சமுர்த்தி அமைச்­சுக்­கான 25 பில்­லி­யன் வரு­டத்­திற்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், 52 வீத­மான நிதி மூன்று மாதத்­தில் செல­வி­டப்­பட்­டுள்­ளது. என்ன நடந்­துள்­ளது? அதற்­கான விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்த பொரு­ளா­தா­ரத்­து­டன்­தான் நாட்டை பொறுப்­பேற்­றுக்­கொண்­டோம். அடுத்த தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அரசை அமைப்­ப­தற்­காக செய்­ய­வேண்­டிய அனைத்­தை­யும் செய்து முடிப்­போம். எனக்கு 5 வருட ஐ.தே.க. அரசு அல்ல தேவை. 20, 30 வரு­டம் ஆட்­சி­செய்­யும் ஐ.தே.கவின் அரசே வேண்­டும். அதற்­கா­க­தான் புதிய தலை­வர்­களை உரு­வாக்­கி­யுள்­ளேன்.

பூரண மறு­சீ­ர­மைப்பை உரு­வாக்கி அடுத்­து­வ­ரும் 20, 30 வரு­டங்­க­ளுக்­கான அரசை அமைக்­க­வேண்­டும். அனை­வ­ரும் ஒன்­றாக இணைந்து குழு­வா­கச் செயற்­ப­ட­வேண்­டும். அப்­போ­து­தான் 20 வரு­டம் செல்ல முடி­யும். இல்­லா­விட்­டால் முடி­யாது. அடி­மட்­டத்­தி­லி­ருந்து மேல் செல்­ல­வேண்­டும். அனைத்து கிரா­மங்­க­ளி­லும் சிறிய சிறி­கொத்­தாவை உரு­வாக்க வேண்­டும்.

தாமரை மொட்டு ஓர் அர­சி­யல் கட்­சி­யல்ல. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் பின்­ன­டை­வொன்று ஏற்­பட்­டது. அதற்­கான கார­ணங்­க­ளைக் கண்­டி­றிந்து பய­ணிக்­க­வேண்­டும். 2014ஆம் ஆண்டு இதை­விட ஐ.தே.க. வீழ்ச்சி கண்­டி­ருந்­தது. ஆனால் 2015ஆம் ஆண்டு வெற்­றி­கொண்­டோம்.

18 மாதங்­கள் உள்­ளன. பயப்­பட வேண்­டாம். இந்த நாட்­டில் ஐ.தே.கவுக்கு மாத்­தி­ரமே எதிர்­கா­ல­மொன்று உள்­ளது. எதிர்­கா­லத் தலை­வர்­கள் உள்ள கட்­சி­யொன்று உள்­ளதா?. பல தலை­வர்­கள் எமக்கு உள்­ள­னர். 20, 30 வரு­டங்­கள் பய­ணிக்­கக்­கூ­டிய வகை­யில் தலை­வர்­கள் உள்­ள­னர். நாட்­டில் நிலை­யான தன்­மையை ஐ.தே.கவால் மாத்­தி­ரமே ஏற்­ப­டுத்­த­மு­டி­யும். அடுத்த தேர்­தலை வெற்­றி­கொள்­ளும் வகை­யில் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோம்.-என்­றார்.

http://newuthayan.com/story/90741.html

  • தொடங்கியவர்

அடுத்த தேர்தலில் ஐ.தே.க.வின் ஆட்சி

07052018-ca9b8ea2b943bab7f52f0bf4e92e17969be1ba30.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

20 வருடங்கள் தொடரும்; மேதினக் கூட்டத்தில் ரணில்

ஜெனிவாவில் யாரும் கேள்வியெழுப்பவில்லை

அச்சப்பட வேண்டாம் ஓட்டத்துக்கு தயாராகுங்கள்

எதிர்காலம் உள்ள கட்சி ஐ.தே.க.மட்டுமேயாகும்

உலகம் எம்மை அங்கீகரித்துள்ளது

வட்டி கட்ட முடியாமலேயே மஹிந்த தேர்தலை நடத்தினார்

 

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கமொன்றை அமைப்போம். அதுமாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை 20 வருடங்களுக்கு கொண்டு செல்வதே  எனது ஆசையாகும். என்றாலும் அந்த காலப்பகுதியில் நான் இருப்பேனா என்பது தெரியாது. ஆனாலும் அதற் கான தலைமைத்துவத்தை நான் தற்போது உருவாக் கியுள்ளேன். எவ்வாறாயினும் 20,30 வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை உருவாக்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக யாரும் இல்லை. அரசாங்கத்திற்கு எதிராக சரத் வீரசேகரவும் லண்டனில் உள்ள ஒரு சில தமிழ் அமைப்பினருமே ஜெனி வாவில் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். எனினும் சர்வதேச நாடுகளில் ஜனாதிபதிக்கும் எனக்கும் அதிக வரவேற்பு வழங்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் நேற்று கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேறகண்டவாறு தெரிவித்தார்.

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் உரையாற்றுகையில்,

 

தொழிலாளர்களுக்கு உபகாரம் செய்யும் நோக்குடனே சுகதாஸவில் கூட்டம் நடத்த தீர்மானித்தோம். இங்கு மே தின கூட்டம் வைத்தமை தொடர்பி்ல் பல்வேறு விதமான கருத்துகளை கூறுகின்றனர். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி புதிதாக சிந்திக்கும் கட்சியாகும். அதன் காரணமாகவே தொழிலாளர்களுக்கு மதிப்பளிப்பதற்கு இம்முறை எமது மே தின கூட்டத்தை நடத்த தீர்மானித்தோம். நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் இவ்வளவு காலம் நம்பிக்கை வைத்திருந்தமைக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். வழமையாக மே முதலாம் திகதிதான் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. எனினும் வெசாக் பண்டிகை காரணமாக மே தினத்தை ஏழாம் திகதிக்கு பிற்போட்டோம். இவ்வாறான சம்பவம் டட்லி சேனாநாயக்க காலத்திலும் நடந்துள்ளது. என்றாலும் முதலாம் திகதி பேரணியும் கூட்டமும் நடத்துவதற்கு நாம் தடை விதிக்கவில்லை.

 

இந்த நாட்டில் தொழிலாளர்களின் தொகை சுதந்திரத்திற்கு முன்னரான காலப்பகுதியில் குறைவாக காணப்பட்டது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டில் ஹோட்டல்கள், தொழிற்சாலை, துறைமுக அபிவிருத்தி மற்றும் சுற்றுலா துறையின் ஊடாக அதிகளவிலான தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்கியது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சியை தவிர்ந்த வேறு எந்த கட்சியாவது தொழிற்சாலைகளை நிறுவி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதா? இல்லை என்றே கூற வேண்டும்.

 

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியாக களமிறங்க முடியுமாக இருந்த போதிலும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதான நோக்கம் ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை இல்லாதொழிப்பதாக இருந்ததால் நாம் பொதுவேட்பாளரை களமிறக்கினோம். ஐக்கிய தேசியக் கட்சியின் குறிக்கோளும் அதுவாகதான் இருந்தது. ஆகவே எமது நோக்கம் ஒன்றாக இருந்தமையினால் பொது வேட்பாளரை களமிறக்க தீர்மானித்தோம். இந்நிலையில் தற்போது ராஜபக்ஷவினர் மீதான பயத்தை இல்லாமல் செய்துள்ளோம்.

 

வெள்ளை வேன் கடத்தலை ஒழித்து கட்டியுள்ளோம். ஊடக சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஆனாலும் ஊடக சுதந்திரத்தை தற்போது நாம் ஏற்படுத்தி கொடுத்தாலும் என் மீதே ஊடகங்கள் அதிக விமர்சனங்களை முன்வைக்கின்றன. ராஜபக்ஷ ஆட்சியின் போது இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் ஊடகங்கள் மயானத்திற்கே சென்றிருக்கும். எவ்வாறாயினும் ஊடகங்கள் என் மீது தாக்குதல் நடத்தினால் தாக்குதல் நடத்தும் ஊடகங்களுக்கான பார்வையாளர் எண்ணிக்கை குறைவடைந்து விடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

 தற்போது நாட்டின் ஏற்றுமதியை நாம் அதிகரித்துள்ளோம். வரலாற்றில் கடந்த ஆண்டின் போதே அதிகளவிலான ஏற்றுமதி வருமானமும் வெளிநாட்டு முதலீடும் பதிவானது. ஆனால் இவ்வருடத்தில் அதனை விடவும் பன்மடங்காக வெளிநாட்டு முதலீடுகளையும் ஏற்றுமதி வருமானத்தையும் அதிகரிப்போம். ஆகவே பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி ஆக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் எடுத்து வருகின்றோம்.

 

ஜெனீவாவில் எதிர்ப்பில்லை

 

 தற்போது ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக செயற்படகூடியவர்கள் யாரும் இல்லை. எனினும் அரசாங்கத்திற்கு எதிராக சரத் வீரசேகரவும் லண்டனில் உள்ள ஒரு சில தமிழ் அமைப்புகளுமே எதிர்ப்பு வெளியிடுகின்றன. எனவே ஜெனீவாவின் நிலைமையை அந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம். சர்வதேச நாடுகளில் ஜனாதிபதிக்கும் எனக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. பல நாடுகளுக்கு நாம் செல்கின்றோம்.

 

 எனினும் தற்போது அதிகளவிலான கடன் சுமையே பெரும் பிரச்சினையாக உள்ள. து கடன் சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். நடப்பாண்டிலும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளிலுமேயே அதிகளவில் கடன் தவனை செலுத்த வேண்டியுள்ளது.

 

அம்பாந்தோட்டை துறைமுக கடன்

 

எனினும் தற்போது கஷ்டப்பட்டு பொருளாதாரத்தில் நல்லதொரு நிலைமையை உருவாக்கியுள்ளோம். அபிவிருத்தி என்ற பெயரில் பெரிதாக அம்பாந்தோட்டையில் கடன் பெற்று துறைமுகமொன்று நிர்மாணித்தனர். எனினும் எந்தவொரு பிரயோசனமும் கிடையாது. தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கடன் சுமையை நாம் தீர்த்து விட்டோம். தற்போது அம்பாந்தோட்டை துறைமுக கடன் பிரச்சினை இல்லை. தற்போது அத்துறைமுகம் பெரும் வளர்ச்சி காணவுள்ளது.

 

கட்சியினரிடம் மன்னிப்பு கோரிய பிரதமர்

 

கடந்த ஆண்டின் போது வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றினால் பெரும் சிரமத்திற்கு உள்ளானோம். பொருளாதாரத்தை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வருவதற்கு மக்களின் மீது அதிக சுமைகளை சுமத்த வேண்டி ஏற்பட்டது. இதன்படி அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியினர் கிராமத்தில் மக்களின் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பீர்கள். ஆகவே அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். ஒரு சில குறை பாடுகளின் காரணமாக மக்கள் மீது அதீத சுமை சுமத்த வேண்டி ஏற்பட்டது. என்றாலும் கடன் சுமையை நீக்கியே ஆக வேண்டும். கடன் சுமையை போக்கா விட்டால் நாட்டு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படாது. அடுத்த தலைமுறையினரே இதனால் பாதிக்கப்படுவர். ஆகவே கடன் சுமையை அடுத்த தலைமுறைக்கு விட்டு விடாமல் தற்போது தீர்த்து வைக்க வேண்டும்.

 

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அடுத்த தலைவர்கள் பலரை உருவாக்கி விட்டே சென்றார். எனினும் பின்னர் எமது கட்சியின் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். அதில் நான் சாதாரணமானராகவே இருந்தேன். கட்சியின் நிலைமையை பார்த்தபோது போது தலைமை பதவிக்கு யாருமே கிடையாது. இந்நிலைமையிலேயே கட்சியின் தலைமை பொறுப்பை நான் ஏற்றேன். அதுமாத்திரமின்றி கட்சியின் மாவட்ட மட்டத்திலும் தலைவர்கள் இருக்கவில்லை. இந்நிலையில் கட்சியில் புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு எனக்கு பெரும் சவால் ஏற்பட்டது.

 

 தற்போது கட்சியின் தலைமைத்துவத்தை புதிய தலைமுறைக்கு வழங்க தயாராக உள்ளேன். ஆகவே தற்போது இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்கியுள்ளேன். இன்னும் பல தலைவர்களை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நான் முன்னெடுத்து வருகின்றேன். எவ்வாறாயினும் அடுத்த தேர்தலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்போம்.

 

20 வருடங்களுக்கு ஐ.தே.க ஆட்சி

 

அடுத்த தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கத்தை உருவாக்குவோம். அதுமாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை 20 வருடங்கள், முப்பது வருடங்களுக்கு கொண்டு செல்வதே எனது ஆசையாகும். என்றாலும் அந்த காலப்பகுதியில் நான் இருப்பேனோ தெரியாது. அதற்கான தலைமைத்துவத்தை நான் தற்போது உருவாக்கியுள்ளேன்.

 

மேலும் தற்போது சமுர்த்தியை ஐக்கிய தேசியக் கட்சி வசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சியினருக்கு சமுர்த்தி வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். கடந்த காலங்களில் போது சமுர்த்தி விநியோகத்திலும் மோசடிகள் நடந்துள்ளன. சமுர்த்திக்கு மூன்று நாளைக்கு 25 வீதம் நிதி செலவிட வேண்டியதற்கு 52 வீதம் செலவிட்டுள்ளனர். ஆகவே இது தொடர்பில் நிதி அமைச்சினால் விசாரணை செய்யவுள்ளோம். எவ்வாறாயினும் சமுர்த்தி மோசடிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

வேலைவாய்ப்பு

  பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். அதுமாத்திரமின்றி கல்வி பொதுதராதர சாதாண தர மற்றும் உயர் தர பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கும் தொழில்வாய்ப்புகளை வழங்குதவற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.