Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 ஆவது திருத்தத்திலும் பொலிஸ், காணி அதிகாரங்கள் ஜனாதிபதி வசமே இருக்கும்

Featured Replies

20 ஆவது திருத்தத்திலும் பொலிஸ், காணி அதிகாரங்கள் ஜனாதிபதி வசமே இருக்கும்

09-84ec57b4257657ba5fde77c8c05632aac96e9a01.jpg

 

(ஆர்.யசி)

அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க இணங்க மாட்டோம் என்கிறது ஜே.வி.பி. 

 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுகின்ற போதிலும் மாகாண காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஜனா திபதி வசமே இருக்க வேண்டும். அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க நாம் இணங்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன் னணி தெரிவித்துள்ளது. 

நாம் கொண்டுவரும் 20ஆவது திருத்த யோசனை நாட்டின் ஐக்கியத்தை சீரழிக்கும் ஒன்றல்ல என்பதை மாநா யக்க தேரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் 

எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.  

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

மக்கள் விடுதலை முன்னணியினால் தனி நபர் பிரேரணையாக கொண்டுவரும் 20ஆம் திருத்த சட்டம் குறித்து பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவது என்பதை அடிப்படையாக வைத்தே 20ஆம் திருத்த சட்ட யோசனை கொண்டுவரப்படுகின்றது. 1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட்ட காலத்தில் இருந்தே இந்த நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது. 

இப்போது வரையில் பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இதனை ஆரோக்கியமான விடயமாக நாம் கருதுகின்றோம். அவர்களின் கருத்துக்களை நாம் செவிமடுத்து அதற்கமைய எமது செயற்பாடுகளை கையாண்டும் வருகின்றோம். 20ஆம் திருத்தம் எவ்வாறான ஒன்று என்பது குறித்து பலருக்கு தெரியாது. ஆனால் மாயையான கருத்துக்களை சிலர் முன்வைத்து குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தமது நிறைவேற்று அதிகாரங்கள் பறிபோனதை அடுத்து பொய்யான கருத்துக்களை முன்வைத்தும் வருகின்றனர். 

கடந்த வாரம் மாநாயக்க தேரர்களும் சில கருத்துக்களை முன்வைத்திருந்தனர். ஆகவே 20ஆம் திருத்தம் குறித்து நாம் உள்ளடக்கியுள்ள காரணிகளுக்கு முரண்பாடான விமர்சனங்களே முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் பிரதான காரணி நிறைவேற்று முறைமையினை நீக்குதலாகும். மக்கள் மூலமாக நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்தல் முறைமை நீக்கப்பட்டு பாரளுமன்றத்தின் மூலமாக ஜனாதிபதியை தெரிவு செய்யும் முறைமை கொண்டுவரப்படும். அதேபோல் ஜனாதிபதியிடம் உள்ள பல அதிகாரங்கள் அமைச்சரவைக்கு வழங்கப்படும், மேலும் சில அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கும். ஆனால் நாமமூலமான ஜனாதிபதியாக கருத வேண்டாம். இவர் அதிகாரம் உள்ள ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதியாக இருப்பார். 

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி காலம் முடிவிற்கு வந்த பின்னரே 20ஆம் திருத்தம் நடைமுறைக்கு வரும். அதாவது 2020ஆம் ஆண்டு அடுத்த ஜனாதிபதி தெரிவின் போதே பாராளுமன்றத்தின் மூலமாக ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். அதேபோன்று 2020ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியுடன் 20ஆம் திருத்தம் நடைமுறைக்கு வரும் நிலையில் அதன் பின்னர் பாரளுமன்றம் கலைக்கப்படும் என இதில் யோசனையாக முன்வைக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி தொடந்தும் இந்த நாட்டின் அரச தலைவராக செயற்படுவார். இவர் அரசாங்கத்தின் தலைவர் அல்ல அரச தலைவர். முப்படை தளபதியாக அவர் தொடர்ந்தும் செயற்படுவார். தேசிய பாதுகாப்பு அவரிடம் தான் இருக்கும். அவர் தான் தேசிய பாதுகாப்பு குறித்த தீர்மானங்களையும் எடுப்பார். மேலும் அவர் அமைச்சராக செயற்பட மாட்டார், அமைச்சரவையில் பங்குகொள்ள மாட்டார், அமைச்சரவை தலைவராகவும் செயற்பட முடியாது. 

ஆனால் அமைச்சரவையில் அவர் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றால் அந்த அதிகாரம் அவருக்கு உள்ளது. அத்துடன் ஏனையவர் முன்வைக்கும் யோசனைகளை தெரிந்து கொள்ளவும் அவருக்கு உரிமை உள்ளது. அதேபோல் 13ஆம் திருத்தம் குறித்து சில கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. எனினும் 13ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள் எவையும் ஒருபோதும் மாற்றமடையப்போவதில்லை. மாகாணசபை தொடர்பில் ஆளுநர்களை நியமித்தல், நீக்கும் அதிகாரம், காணி, பொலிஸ் அதிகாரங்கள் அனைத்துமே தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் இருக்கும். 

வரதராஜ பெருமாள் தனி இராஜ்ஜிய கோரிக்கையினை முன்வைத்தார். அப்போது அதனை தடுக்கும் அதிகாரம் 1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் நிறைவேற்று ஜனாதிபதியிடம் இருக்கவில்லை. அன்று நிறைவேற்று ஜனாதிபதியினால் தான் இவை தடுக்கப்பட்டதாக பலர் தவறாக கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால் அன்று அவ்வாறான சட்ட அதிகாரம் இருக்கவில்லை. ஆகவே தான் அவசர அவசரமாக பாராளுமன்றம் கூடி இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கும் அதிகாரம் உருவாக்கப்பட்டது. அதனால் தான் வரதராஜ பெருமாளின் தனி இராஜ்ஜிய கொள்கையை அழிக்க முடிந்தது. 

மேலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது நாட்டினை துண்டாடும் என கூறுகின்றனர். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி நாட்டினை பிளவு படுத்தவிடாது பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக செயற்பட்ட கட்சியாகும். யுத்தம் முன்னெடுக்கபட வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பி யுத்தத்தை முன்னெடுத்த கட்சி நாங்கள். நாம் எப்போதும் நாட்டினை பாதுகாக்கும் பாதையில் தான் பயணிக்கின்றோம். ஆகவே எப்போதும் நாம் நாட்டினை பிரிக்கவோ பிளவுபடுத்தவோ ஒருநாளும் முன்வர மாட்டோம் என மாநாயக்க தேரர்களுக்கு உறுதியளிக்கிறோம். 

ஆகவே 20ஆம் திருத்தம் மூலம் மாகாணசபை காணி, பொலிஸ், மற்றும் தனி இராஜ்ஜிய அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு கிடைக்கப்போவதில்லை, அவை தொடர்ந்தும் ஜனாதிபதியிடமே நிலைத்திருக்கும். அதேபோல் இந்த யோசனையை கொண்டுவந்த பின்னர் செயற்குழு விவாதத்தின் போது அதிகார பரவலாக்கல் குறித்த எந்தவொரு யோசனையையும் உள்ளடக்க நாம் இடமளிக்கப்போவதுமில்லை. அத்துடன் ஒற்றையாட்சி, பெளத்த மாதத்திற்கான முன்னுரிமை என்பவற்றின் எந்த மாற்றமும் செய்யப்படவும் இல்லை. 

எனினும் உயர்ஸ்தானிகர், தூதுவர்கள் நியமனம் நேரடியாக ஜனாதிபதி மூலம் நியமிக்கப்படாது. இது அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்படும். அதேபோல் பொது மன்னிப்பு வழங்கும் முறைமையிலும் மாற்றம் ஏற்படும். அதுவும் அமைச்சரவை அனுமதியுடன் பொது மன்னிப்பு வழங்கப்படுமே தவிர தனி நபர் தீர்மானமாக முன்னெடுக்க முடியாது. 

அத்துடன் தான் விரும்பிய நேரத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் இருக்க கூடாது. அதேபோல் ஜனாதிபதியை நீதிமன்றத்திற்கு பொறுப்பு கூறும் 19ஆம் திருத்த யோசனை தொடர்ந்தும் அவ்வாறே நடைமுறையாகும். இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக நாடு பலவீனமடைய போவதில்லை. மாற்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் அமைச்சர்கள் கட்சி மாறும் செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். 

மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதி தனது அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டு கட்சி மாறுவதை நிறுத்த வேண்டும். அதனையும் நாம் 20ஆம் திருத்தத்தில் உள்ளடக்கியுள்ளோம். 

இவற்றையே நாம் பிரதான காரணிகளாக உள்ளடக்கியுள்ளோம். ஆகவே இது குறித்து சகல தரப்புடன் நாம் பேச்சுவேர்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் ஜனாதிபதி, மத தலைவர்கள், சிவில் அமைப்புகள் என சகல தரப்புடனும் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு ஒன்றை நோக்கி பயணிக்க வேண்டும். 

சகல மக்களின் கலாசாரம், உரிமைகள் என அனைத்தையும் பாதுகாத்து செயற்படவேண்டும். வடக்கில் ஒரு நீண்டகால போராட்டம் இருந்தது, அதன் நோக்கம் வேறாகும். அதேபோல் தெற்கில் ஒரு போராட்டம் இருந்தது அதன் நோக்க வேறாகும். உண்மையில் வடக்கில் போராட்டமும், தெற்கில் போராட்டமும் இருவேறு நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டன. ஆனால் வடக்கு தெற்கு இரண்டையும் இணைத்து பொதுவான போராட்டமாக அன்று நாம் முன்னெடுத்திருக்க வேண்டும். உரிமைக்கான, நியாயத்திற்கான ஊழல் இல்லாத நாட்டினை உருவாக்க முன்னெடுக்க வேண்டிய போராட்டம். அதனை இனியாவது முன்னெடுக்க வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.