Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப்பார்வை ...இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப்?

Featured Replies

இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப்?

 
 

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

இரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வாரா டிரம்ப் ?

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2015-ல் இரான் உடன் ஏற்படுத்தப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதா இல்லையா என்ற முடிவை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் சமரசத்தை எதிர்பார்க்கின்றன.

இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியளவை டிரம்ப் முறித்துக்கொளலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனாலும், டிரம்பின் முடிவு என்னவாக இருக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. டொனால்டு டிரம்ப் இரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்க நேரிடும் என இரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச்சரிருந்தார்.

இத்தாலி: ஆட்சியமைப்பதில் தொடர்ந்து சிக்கல்

இத்தாலியில் கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஐந்து நட்சத்திர இயக்கம், வலதுசாரி கட்சியான பேர்ஸா இத்தாலியா உடனே அல்லது மைய இடதுசாரி கட்சியான ஜனநாயக கட்சியுடனே கூட்டணி சேர மறுத்துவிட்டது.

இத்தாலி அதிபர் மட்டெரேல்லாபடத்தின் காப்புரிமைEPA Image captionஇத்தாலி அதிபர் மட்டெரேல்லா

இந்நிலையில், மூன்றாம் கட்டமாக நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், இத்தாலி மீண்டும் போது தேர்தலைச் சந்திக்க வேண்டும் அல்லது இந்த ஆண்டு முடிவு வரை ஒரு நடுநிலை காபந்து அரசை உருவாக்க வேண்டும் என்ற இரண்டு முடிவு மட்டுமே உள்ளது.

நடுநிலை காபந்து அரசுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என இத்தாலி அதிபர் மட்டெரேல்லா கோரியுள்ளார்.

லெபனானில் தனது வெற்றியை அறிவித்த ஹெஸ்பொல்லா

லெபனானில்படத்தின் காப்புரிமைREUTERS

2009க்கு பிறகு லெபனானில் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், ஹெஸ்பொல்லா கட்சியும் அதன் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா அறிவித்துள்ளார். ஆனாலும், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தனது ''ப்யூச்சர் மூவ்மெண்ட்'' கட்சி மூன்றில் ஒரு தொகுதியில் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் சாட் ஹரிரி கூறியுள்ளார்.

ஆப்கான் வான் தாக்குதல்: ஐ.நா அறிக்கை

ஆப்கான்படத்தின் காப்புரிமைREUTERS

ஆப்ஃகானிஸ்தானின் வடக்கு-கிழக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் மாகாணத்தில், கடந்த மாதம் நடந்த வான் தாக்குதலில் 30 குழந்தைகள் இறந்துள்ளதாகவும், 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நாவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. தாலிபான் அமைப்பை சேர்ந்த முக்கியமானவர்களை குறி வைத்து ஏப்ரல் 2-ம் தேதி தனது வான் படை இத்தாக்குதலை நடத்தியதாக ஆப்கான் அரசு கூறியது.

https://www.bbc.com/tamil/global-44036015

  • தொடங்கியவர்

இரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

அதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க ஆயத்தம் மேற்கோள்வதாக இரான் கூறியுள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறுகையில், ''தனது ஒப்பந்த்தை மதிக்கப் போவதில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அதனால், இரான் அணு எரிசக்தி அமைப்பை யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

தனது கூட்டாளி நாடுகள் மற்றும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகளுடன் பேசுவதற்காக அடுத்த சில வாரங்கள் காத்திருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

இரான் மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என்றும், 90 மற்றும் 180 நாள் காலக்கெடு நடைமுறைகளின்படி செயல்பட இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹசன் ரூஹானிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஹசன் ரூஹானி

ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் முடிவு வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மதிப்பதில் உறுதியாக இருப்பதாக ஒன்றியத்தின் மூத்த ராஜீய பிரதிநிதி ஃபெடரிகா மொஹெரினி தெரிவித்துள்ளார்.

ஆனால், டிரம்பின் தைரியமான இந்த முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தம், இரான் தனது அணு ஆயுத நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நிறுத்தி வைக்க உதவியதாகவும் ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் அதன் செயல்பாடுகளைத் தடுக்கவில்ல என்றும் டிரம்ப் தொடர்ந்து புகார் கூறிவந்தார்.

மேலும், அமெரிக்கா வழங்கிய 100 பில்லியன் டாலர் நிதியுதவியை ஆயுதங்களுக்காகவும், மத்திய கிழக்கில் அடக்குமுறையை தூண்டவுமே பயன்படுத்தக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

உடன்பாட்டில் இருந்து விலகுவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் எந்த மாதிரி ஆபத்தான நிலையில் இருந்ததோ அதை நிலைக்கு உலகத்தை மீண்டும் இழுத்தும் செல்லும் ஆபத்துக்கு ஆளாக்கியிருப்பதாக அந்த உடன்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44049554

  • தொடங்கியவர்

அணுசக்தி ஒப்பந்தம்குறித்த ட்ரம்ப்பின் முடிவு பெரும் தவறு - ஒபாமா வருத்தம்

 
 

'ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு பெரும் தவறு' என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

obama_08427.jpg

பராக் ஒபமா, அமெரிக்காவின் அதிபராக இருந்துபோது, 2015-ம் ஆண்டு ஈராக், ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்தே ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். இந்த நிலையில் தற்போது, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 'மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் அழிவுக்கான போர் அல்லது அணு ஆயுதப் பரவலைவிட அமெரிக்காவின் பாதுகாப்புக்கு வேறு பல விஷயங்கள் முக்கியமானதாக உள்ளன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் முடிவு பெரிய தவறு' என்று குறிப்பிட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/world/124537-obama-saidits-serious-mistake-about-trump-decision.html

  • தொடங்கியவர்

இரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: மேற்குலக நாடுகள்

இரான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், இரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக மேற்குலக நாடுகள் கூறியுள்ளன.

தற்போது மீதமுள்ள அனைத்து நாடுகளுடன் தொடர்ந்து செயல்படப் போவதாக பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கூறியுள்ளது. தங்களது செயல்பாடுகளை தடுக்க வேண்டாம் எனவும் இந்நாடுகள் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளன.

2015 இரான் அணு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ரஷ்யா மற்றும் சீனாவும் தங்களது ஆதரவைத் தொடரவுள்ளதாக கூறியுள்ளது.

முன்னதாக, இரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதனை உளுத்துப்போன ஒப்பந்தம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், நாட்டின் குடிமகன் என்ற முறையில் அது தமக்கு மிகுந்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தனது ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் ஆலோசனைக்கு மாறாக, 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதற்கு பதிலடியாக, அணு எரிசக்தி மற்றும் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படும் யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க ஆயத்தம் மேற்கோள்வதாக இரான் கூறியுள்ளது.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறுகையில், ''தனது ஒப்பந்த்தை மதிக்கப் போவதில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அதனால், இரான் அணு எரிசக்தி அமைப்பை யுரேனியம் செறிவூட்டும் பணியை மீண்டும் தொடங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

தனது கூட்டாளி நாடுகள் மற்றும் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிற நாடுகளுடன் பேசுவதற்காக அடுத்த சில வாரங்கள் காத்திருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

இரான் மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என்றும், 90 மற்றும் 180 நாள் காலக்கெடு நடைமுறைகளின்படி செயல்பட இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஹசன் ரூஹானிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஹசன் ரூஹானி

ஐரோப்பிய ஒன்றியம் அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மதிப்பதில் உறுதியாக இருப்பதாக ஒன்றியத்தின் மூத்த ராஜீய பிரதிநிதி ஃபெடரிகா மொஹெரினி தெரிவித்துள்ளார்.

ஆனால், டிரம்பின் தைரியமான இந்த முடிவை ஆதரிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தம், இரான் தனது அணு ஆயுத நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே நிறுத்தி வைக்க உதவியதாகவும் ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் அதன் செயல்பாடுகளைத் தடுக்கவில்ல என்றும் டிரம்ப் தொடர்ந்து புகார் கூறிவந்தார்.

மேலும், அமெரிக்கா வழங்கிய 100 பில்லியன் டாலர் நிதியுதவியை ஆயுதங்களுக்காகவும், மத்திய கிழக்கில் அடக்குமுறையை தூண்டவுமே பயன்படுத்தக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

உடன்பாட்டில் இருந்து விலகுவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகம் எந்த மாதிரி ஆபத்தான நிலையில் இருந்ததோ அதை நிலைக்கு உலகத்தை மீண்டும் இழுத்தும் செல்லும் ஆபத்துக்கு ஆளாக்கியிருப்பதாக அந்த உடன்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த முன்னாள் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44049554

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.