Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க கப்பலில் வந்த இரு யுவதிகள் மீது பாலியல் தொல்லை : விடுதி ஊழியர் கைது

Featured Replies

அமெரிக்க கப்பலில் வந்த இரு  யுவதிகள் மீது பாலியல் தொல்லை : விடுதி ஊழியர் கைது 

 

(எம்.எப்.எம்.பஸீர்)

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த  விடுதியின் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

usa.jpg

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை வைத்தியசாலை கப்பலில் வந்த இரு அமெரிக்க யுவதிகள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உப்புவெளி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்தவாறு தமக்கு மென்பானம் கொண்டு வந்து தருமாறு விடுதியின் சேவையாளரிடம் தெரிவித்தனர்.

இதன்போது மென்பானத்துடன் குறித்த அறைக்கு சென்ற ஊழியர் அங்கு தனிமையிலிருந்த யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளார். 

இச் சம்பவத்தை அந்த யுவதிகள் இருவரும் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/33248

 

 

 

இலங்கையில் இருந்து இன்று விடைபெறுகிறது மேர்சி கப்பல்

(எம்.எப்.எம்.பஸீர்)

2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கை பணிகளை இலங்கையில் மேற்கொண்ட உலகின் மிகப் பெரிய யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான வைத்தியசாலை கப்பலானது,  தனது பணிகளை நிறைவு செய்துகொண்டு நாளை புதன்கிழமை  திருமலை துறைமுகத்திலிருந்து விடைபெறவுள்ளது. 

us-ship.jpg

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி திருணோமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலில்  கடற்படை வீரர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவினர், இலங்கை கடற்படையுடன் இணைந்து சுமார் 13 நாட்கள் திருமலையின் பல பகுதிகளிலும் பல்வேறு மனிதாபிமான உதவிகள் , அனர்த்த பாதிப்பு நிலைமைகளைக் கையாளும் விதம், கலை கலாசார பறிமாற்றங்கள் தொடர்பான செயற்றிட்டங்களை முன்னெடுத்தனர்.

 இந் நிலையிலேயே பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கையின் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை நேற்றுடன்  நிறைவுசெய்துகொண்ட யூ.எஸ்.என்.எஸ். மேர்சி கப்பலும் அதில் வருகை தந்த குழுவினரும்  நாளை இலங்கையிலிருந்து விடைபெற்று வியட்நாமிலும் அங்கிருந்து ஜப்பானுக்கும் பயணித்து அங்கும் தமது பங்காண்மை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/33249

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.