Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப் பாரவை: கேன்ஸ் - பாலின பாகுபாடுக்கு எதிராக நடிகைகள் போராட்டம்

Featured Replies

உலகப் பாரவை: கேன்ஸ் - பாலின பாகுபாடுக்கு எதிராக நடிகைகள் போராட்டம்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

'கேன்ஸ்' திரைப்பட விழாவில் போராட்டம்

'கேன்ஸ்' திரைப்பட விழாவில் போராட்டம்படத்தின் காப்புரிமைAFP

திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பல பெண் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Presentational grey line

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும்அரசியல் பதற்றம்

அதிகரிக்கும் அரசியல் பதற்றம்படத்தின் காப்புரிமைREUTERS

சிக்னலில் நிக்காமல் காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்ததாக கூறப்படும் அமெரிக்க ராஜிய அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

அமெரிக்க ராணுவ இணைப்பு அதிகாரியான கோல் ஜோசஃப் இமானுவேல் ஹாலை அழைக்க அமெரிக்கா, விமானம் ஒன்றினை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. ஆனால், அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

முன்னதாக, கோல் ஜோசஃப் ராஜதந்திர விவகாரங்களில் இருப்பதினால் அவரை கைது செய்ய முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், இந்த இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

Presentational grey line

பாரீஸ்: பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் பலி

பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் பலிபடத்தின் காப்புரிமைAFP

பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் ஒருவரை கொன்றுள்ளார்.. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

ஒபேரா பகுதியில் இந்த தாக்குதல்காரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'அல்லாஹ் அக்பர்' என்று தாக்குதல்தாரி கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலை, தங்கள் படைவீரர் ஒருவர்தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க :பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி

Presentational grey line

மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆடம்பர வீட்டில் சோதனை

நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவிபடத்தின் காப்புரிமைAFP Image captionநஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு தொடர்புடைய ஆடம்பர வீடு ஒன்றில் காவல்துறை சோதனை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியே எடுத்துச்செல்லப்படும் என்று அஞ்சிய சில முக்கிய ஆவணங்களை கண்டுபிடிக்க இச்சோதனை நடத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

அரசு முதலீட்டு நிதியில் ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக நஜிப் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டில் இருந்து வெளியேற ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது

https://www.bbc.com/tamil/global-44097902

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.