Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்துக்கு தண்ணி காட்டும் கர்நாடகாவும் பா.ஜா.காவும்

Featured Replies

தமிழகத்துக்கு தண்ணி காட்டும் கர்நாடகாவும் பா.ஜா.காவும்

16-ef84d86a7d0f2de69101421f3782bfd683d487e9.jpg

 

காவிரி நதிநீர் பங்­கீடு விவ­கா­ரத்தில் தமி­ழக மாநில அரசு இரட்­டை­வேடம் போடும் அதே­வேளை, மத்­திய அர­சாங்கம் தமி­ழக மக்­களை வஞ்­சிப்­ப­தாக தமி­ழ­கத்தின் எதிர்க்­கட்­சி­களும் பொது அமைப்­பு­களும் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றன.

காவிரி நதியில் தமி­ழ­கத்­துக்கு திறந்­து ­வி­ட­வேண்­டிய நீரை திறந்­து­வி­டாமல் உச்­ச­நீ­தி­மன்­றத்தின் உத்­த­ர­வையும் உதா­சீ­னம்­செய்து அடம்­பி­டித்துக் கொண்­டி­ருக்­கி­றது கர்­நா­டக மாநி­லத்தின் முத­ல­மைச்சர் சித்­த­ரா­மை­யாவின் அர­சாங்கம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்­ப­த­னூ­டாக காவிரி நீரை தமி­ழகம், கேரளம், புதுச்­சேரி மற்றும் கர்­நா­டகம் ஆகிய நான்கு மாநி­லங்­க­ளுக்கும் முறை­யாக பங்­கீடு செய்­ய­மு­டியும். எனவே இதற்­கு­ரிய நட­வ­டிக்­கையை மத்­திய அரசு மேற்­கொள்ள வேண்டும். ஆனால், மத்­திய அரசு அதனைச் செய்­யாமல் பிற்­போட்­டுக்­கொண்டு வரு­கி­றது. இது முற்­று­மு­ழு­தாக அர­சியல் கார­ணங்­க­ளுக்­கான ஒரு நட­வ­டிக்கை என்றே தமி­ழக எதிர்க்­கட்­சிகள் கூறு­கின்­றன.

மத்­திய அரசின் இந்த அலட்­சி­யப்­போக்குத் தொடர்பில் தமி­ழக மாநில அ.தி.மு.க. அரசு மத்­திய அர­சுக்கு அழுத்தம் கொடுக்­காமல் மத்­திய அரசின் செயற்­பா­டு­களை அங்­கீ­க­ரிக்கும் வகை­யி­லேயே நடந்து கொள்­கி­றது. அதா­வது, மத்­திய அர­சைக்­கண்டு அஞ்சும் நிலை­யையே அ.தி.மு.க. அர­சுக்கு உள்­ளது.

மறு­பு­றத்தில் காவிரி நீருக்­காக மத்­திய அர­சுக்கு பல­மான அழுத்­தங்­களை கொடுப்­ப­தாக தமி­ழக மக்­க­ளிடம் பாவனைக் காட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. கடந்த மாதத்தில் அ.தி.மு.க.எம்.பி.க்களின் பாரா­ளு­மன்­றத்தில் பேசிய பேச்­சுக்கள், எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள், பகிஷ்­க­ரிப்­புகள் என்­ப­வற்றை இதற்கு உதா­ர­ண­மாகக் கூறலாம். ஆனால், அ.தி.மு.க.வினரின் இந்த செயற்­பா­டுகள் இரட்டை வேட­மா­கவே மக்­களால் நோக்­கப்­ப­டு­கி­றது.

மத்­திய அர­சாங்கம் குறிப்­பாக தற்­போ­தைய பா.ஜ.க. அர­சாங்கம் தமி­ழக மக்­களை வஞ்­சிப்­ப­தா­கவே தமி­ழக எதிர்க்­கட்­சிகள் கூறு­கின்­றன. தமி­ழ­கத்­துக்கு திறந்­து­விட வேண்­டிய காவிரி நீரை, பங்­கீடு செய்­வ­தற்­கான காவிரி மேலாண்மை வாரி­யத்தை அமைக்­காமல் இழுத்­த­டிப்புச் செய்­வது ‘ஒரே நாடு, ஒரே மக்கள்’ என்ற இந்­திய கொள்­கைக்கு மாறாக அமைந்­தி­ருப்­ப­தாக எதிர்க்­கட்­சிகள் கூறு­கின்­றன. இது பா.ஜ.க.வின் அர­சியல் நலன்­க­ளுக்­கான ஒரு நட­வ­டிக்கை என்று குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

கர்­நா­டக மாநி­லத்தின் ஆட்­சியைக் கைப்­பற்றும் நோக்­கத்­து­ட­னேயே பா.ஜ.க. அரசு காவிரி மேலாண்மை வாரி­யத்தை அமைக்­காமல் இழுத்­த­டிப்புச் செய்து வந்­தது.

ஒவ்­வொரு வரு­டமும் கர்­நா­ட­காவின் பிலி­குண்­டுலு அணை­யி­லி­ருந்து 177.25 டி.எம்.சி. நீரை காவிரி ஆற்றில் தமி­ழ­கத்­துக்கு திறந்­து­வி­ட­வேண்டும் என்று உச்­ச­நீ­தி­மன்றம் ஏற்­க­னவே உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. இந்த நீர் பங்­கீட்டை முறை­யாக அமுல்­ப­டுத்தும் வகையில், மத்­திய அரசு மார்ச் மாதம் 31 ஆம் திக­திக்குள் ‘ஸ்கீம்’ எனப்­படும் ஒரு­செயல் திட்­டத்தை உரு­வாக்­க­வேண்டும் என்று உச்­ச­நீ­தின்றம் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. ஆனால், ‘ஸ்கீம்’ என்ற வார்த்­தைக்கு விளக்கம் கேட்டு மேலும் மூன்று மாத­கால அவ­காசம் கேட்டு மத்­திய அரசு சார்பில் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் ஒரு மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.

இத­னி­டையே உரிய நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்­கப்­ப­டா­ததை சுட்­டிக்­காட்டி, மத்­திய அர­சுக்கு எதி­ராக தமி­ழக அரசு சார்பில் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் வழக்கு ஒன்று தொட­ரப்­பட்­டது. இதனை விசா­ரித்த உச்­ச­நீ­தி­மன்றம், மத்­திய அர­சுக்கு கண்­ட­னத்தை வெளி­யிட்­டது.

கடந்த 3 ஆம் திகதி இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது மத்­திய அரசு சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி கர்­நா­டக சட்­டப்­பே­ரவைத் தேர்தல் பிர­சா­ரத்தில் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி ஈடு­பட்­டி­ருப்­பதால் 10 நாட்கள் அவ­காசம் வேண்­டு­மென்று கேட்­டி­ருந்தார்.

இந்த பதிலால் அதி­ருப்­தி­ய­டைந்த உச்­ச­நீ­தி­மன்றம், (கடந்த) 8 ஆம் திக­திக்குள் காவிரி நதிநீர் பங்­கீடு தொடர்­பான செயற்­திட்­டத்­துடன் கூடிய பிர­மாணப் பத்­தி­ரத்தைத் தாக்கல் செய்ய வேண்­டு­மென்று மத்­திய அர­சுக்கு உத்­த­ர­விட்­டி­ருந்­தது. அதே­வேளை, கடந்த 7 ஆம் திகதி கர்­நா­டக அரசு தமி­ழ­கத்­துக்­கான நீரை உரிய வகையில் திறந்து விடு­வ­தாக தெரி­வித்­தது.

இத­னை­ய­டுத்து மத்­திய நீர்­வ­ளத்­துறை செய­லாளர் நாளை 14 ஆம் திக­தி­யன்று காவிரி மேலாண்மை வாரி­யத்­துக்­கான செயற்­திட்­டத்­துடன் நீதி­மன்­றத்தில் நேரில் ஆஜ­ராக வேண்­டு­மென்று தலைமை நீதி­பதி உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

எனினும் தமி­ழக அரசின் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி உச்­ச ­நீ­தி­மன்ற உத்­த­ர­வுக்கு அமை­வாக மத்­திய அரசு செயற்­ப­டாமல் உதா­சீனம் செய்­வது நீதி­மன்­றத்தை அவ­ம­திக்கும் செயல் எனவும் எனவே இத­னுடன் தொடர்­பு­டைய ஒரு­வரை அவ­ம­திப்பு குற்­றச்­சாட்­டுக்­காக சிறையில் அடைக்­க­வேண்­டு­மென்றும் நீதி­மன்­றத்தைக் கேட்டுக் கொண்டார். எனினும் அவ்­வாறு செய்­யப்­ப­ட­வில்லை. இந்த நிலையில், நாளைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

கர்­நா­டக மாநில சட்டப் பேர­வைக்­கான தேர்தல் நேற்று நடை­பெற்­றது. இந்த மாநி­லத்தில் காங்­கிரஸ் கட்சி ஆட்­சியே நடை­பெற்று வந்­தது. எனினும் தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்­சி­யைப்­பி­டித்­து­விட வேண்டும் என்ற நோக்­கத்­துடன் பா.ஜ.க. தீவிர பிர­சா­ரத்தில் ஈடு­பட்டு வந்­தது.

பா.ஜ.க. சார்பில் அதன் தலைவர் அமித்ஷா, பிர­தமர் நரேந்­திர மோடி உள்­ளிட்ட முக்­கிய அமைச்­சர்கள் பலரும் தீவிர பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­டனர். அதே­வேளை, மாநி­லத்தில் காங்­கிரஸ் ஆட்­சியை மீண்டும் தக்­க­வைத்­துக்­கொள்ளும் நோக்­குடன் காங்­கிரஸ் தலைவர் ராகுல்­காந்தி, அவ­ரது தாய் சோனியா காந்தி உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்கள் பலரும் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­டனர்.

கர்­நா­டக மாநில காங்­கிரஸ் தலை­வரும் முத­ல­மைச்­ச­ரு­மான சித்­த­ரா­மையா காவிரி நதி­நீரை தமி­ழ­கத்­துக்கு திறந்து விடு­வதில் ஆரம்பம் முதல் எதிர்ப்பு காட்டி வரு­கிறார். காவிரி நதியில் நீர் திறந்­து­வி­டப்­ப­ட­வேண்டும் என்று உச்­ச­நீ­தி­மன்றம் பல­முறை உத்­த­ர­விட்­டி­ருந்­த­போதும் அந்த உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் விட்­டவர். வரட்சி, நீர்­பற்­றாக்­குறை, அணை­களில் நீர்­மட்டம் குறைவு என எதை­யா­வது சொல்லி ‘தண்ணி காட்­டிக்­கொண்டு’ வந்­துள்ளார்.

தவிர, தமி­ழ­கத்­திற்கு காவி­ரியில் தண்ணீர் திறந்­து­விட்டால் கர்­நா­டக மக்­களின் குறிப்­பாக விவ­சா­யி­களின் கோபத்­துக்கு ஆளாக நேரிடும். அதனால் தேர்­தலில் வெற்­றி­பெ­ற­மு­டி­யாமல் போகும் என்ற திட்­டத்­துடன் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வு­க­ளுக்­கெல்லாம் போக்­குக்­காட்டி விட்டு கடை­சி­வரை தமி­ழ­கத்­துக்கு தண்ணீர் திறந்­து­வி­டவே இல்லை. 

சித்­தா­ரா­மை­யா­வும்­கூட சட்டப் பேரவைத் தேர்­தலை இலக்கு வைத்தே அதா­வது வாக்­கு­களைப் பெற்று ஆட்­சி­ய­மைக்க வேண்­டு­மென்ற நோக்­கத்­து­ட­னேயே ‘பிடி­வாதப் போக்­கினை’ கடைப்­பி­டித்தார்.

அதே­வேளை, தேர்­தலில் மக்­களின் வாக்­கு­களைப் பெற்று கர்­நா­டக மாநில ஆட்­சியைக் கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­துக்­காக காவிரி விட­யத்தில் கர்­நா­டக மக்­க­ளு­டைய இரட்­சகன் போலவும் அதே­வேளை, தமி­ழக மக்­களின் எதிரி போலவும் தன்னை வெளிப்­ப­டுத்திக் கொண்டு பிர­தமர் மோடியும் அவ­ரது கட்­சி­யி­னரும் செயற்­பட்­டனர்.

பிர­தமர் மோடி மற்றும் பா.ஜ.க.வின் இந்த செயற்­பாடு, தமி­ழக மக்­களை வெறுப்பின் உச்­சிக்கே கொண்டு சென்­று­விட்­டது என்றே கூற­வேண்டும். இது தமி­ழ­கத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்­சியை மென்­மேலும் இல்­லாமல் செய்யும் ஒரு நட­வ­டிக்­கை­யா­கவே தமி­ழக மக்­களால் பார்க்­கப்­ப­டு­வ­தாக ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும் கர்­நா­டக மாநில தேர்தல் வாக்­க­ளிப்பு முடி­வ­டைந்­து­விட்­டது. நாளை மறு­தினம் 15 ஆம் திகதி தேர்தல் முடி­வுகள் வெளி­யாகும். அப்­போது கர்­நா­ட­கத்தில் யார் முத­ல­மைச்சர் என்­பது தெரிந்­து­விடும். காங்­கி­ரஸைச் சேர்ந்த தற்­போ­தைய முதல்வர் சித்­தா­ரா­மை­யாவா அல்­லது பா.ஜ.க. வைச்­சேர்ந்த எடி­யூ­ரப்­பாவா என்­பது உறு­திப்­பட்­டு­விடும்.

சித்­தா­ரா­மை­யாவின் பத­விக்­காலம் எதிர்­வரும் 28 ஆம் திக­தி­யுடன் முடி­வ­டை­கின்­றது. தேர்­தலில் காங்­கிரஸ் வெற்றி பெறுமா அல்­லது பா.ஜ.க. வெற்­றி­பெ­றுமா என்ற எதிர்­பார்ப்பு சகல தரப்­பி­ன­ரி­டமும் ஏற்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக தமி­ழக மக்கள் அடுத்­த­தாக கர்­நா­ட­கத்தில் ஆட்­சிக்கு வரும் கட்சி காவிரி நதிநீர் பங்­கீடு விவ­கா­ரத்தில் எவ்­வா­றான கொள்­கையை கடைப்­பி­டிக்கப் போகின்­றது. அதனால் தமி­ழ­கத்­துக்கு ஏற்­ப­டப்­போகும் சாத­க–­பா­தக நிலைமை என்­ன­வாக இருக்கும் என்­பது தொடர்பில் ஆராயத் தொடங்­கி­விட்­டனர்.

நாளை மறு­தினம் தேர்தல் முடி­வுகள் வெளி­யா­கி­விடும். எந்­தக்­கட்சி ஆட்­சி­ய­மைக்கும் என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க தேர்தல் முடி­வுகள் வெ ளியாகி , சில வேளை காங்­கிரஸ் வெற்றி பெற்றால், தமக்கு வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்­யாத கர்­நா­டக மாநில மக்­களை பழி­வாங்கும் நோக்­கத்­துடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்­பது உட்­பட தமி­ழ­கத்­துக்கு வழங்­க­வேண்­டிய 177. 25 டி.எம். சி. நீரை திறந்து விடு­வ­தற்கு உட­ன­டி­யா­கவே பா.ஜ..க. வும் பிர­தமர் மோடியும் நட­வ­டிக்கை எடுக்­கக்­ப­கூடும்..

தேர்தல் பா.ஜ.க. வெற்றி பெற்­றாலும் பெரி­தாக எதையும் செய்யப் போவ­தில்லை. நாளை உச்ச நீதி மன்­றத்தில் வழக்கு நடை­பெ­ற­வுள்­ளது. நீதி மன்­றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; ஏற்­க­னவே வழங்­கிய திர்ப்­பின்­படி தமி­ழ­கத்­துக்கு காவி­ரியில் 177.25 டி.எம். சி. நீரை கட்­டாயம் திறந்­து­விட வேண்டும் என்று உத்­த­ர­வி­டப்­ப­டு­மானால், “ நீதி­மன்ற தீர்ப்பை ' மாற்­ற­மு­டி­யாது, எங்­க­ளது மீது தவறு இல்லை" என்று கூறி, பா.ஜ.க. வும் பிர­தமர் மோடியும் தப்­பித்தக் கொள்­ளக்­கூடும். எனவே, எல்லாம் அர­சியல் தான்.

காவிரி நதி நீர் வழக்கை கர்­நா­டக மாநில சட்­டப்­பே­ரவைத் தேர்தல் முடி­யும்­வரை ஒத்திப் பொட வேண்டும் அல்­லது இழுத்­த­டிக்க வேண்டும் என்ற மத்தி அரசின் முயற்­சிக்கு வெற்றி கிடைத்­தது என்றே கூற­வேண்டும்.

ஆனால், தமி­ழக மக்­களின் நாணய தீர்ப்பு உவ்­வா­றா­ன­தாக இருக்கும் என்­பதை பா.ஜ..க. உண­ராமல் இல்லை. அதன் பிர­தி­ப­லிப்பு எதிர்­வரும் தமி­ழக சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்தல் என்­ப­வற்றில் வெ ளிப்­படும். என்­பதை மறுக்க முடி­யாது. திணை விளத்­ததால் மட்­டுமே திணை அறு­வடை செய்ய முடியும் என்­பதை மறந்து விட­மு­டி­யாது.

தற்­போது காவிரி விவ­கா­ரத்தில் தேர்தல் அர­சியல் செய்­த­தாக தமி­ழசை சௌந்­த­ர­ராஜன் தற்­போது தெரி­வி­கத்­துள்­ளார.

பெண் பத்­தி­ரி­கை­யா­ளர்­களை இழிவு செய்யும் வகையில் சமீக வலை­த­ளத்தில் பதி­விட்­டமை தொடர்பில் தேடப்­பட்டு வந்த வரும் பா.ஜ.க. முக்­கி­யஸ்­தரும் , நடி­க­ரு­மான எஸ்.வி. சேகர் உயர் நீதி­மன்­றத்தில் சமர்ப்பித் திருந்த முன்­பிணை மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது .

பெண் பத்­தி­ரி­கை­யாளர் ஒருவர்ன் கன்­னத்தை தமி­ழக ஆளுநர் பின்­வா­ரிலார் புரோஹித் வரு­டி­யமை தொடர்­பான விவ­காரம் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது .

 இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குறித்த பெண் பத்திரிகையாளரை இழிவுபடுத்தி வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எஸ்.வி. சேகர்மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. சென்னை பொலிஸார் பிணையில் வெளியில்வர முடியாதபடி எஸ்.வி. சேகர்மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இதனையடுத்து எஸ்.வி. சேகர் தலைமறைவானார். அவரது நெருங்கிய உறவினரும் தமிழக தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதன் வீட்டில் மறைந்திருப்பதாகக் கூட செய்திகள் வெளியாகின.

இதனிடையே தலைமறைவான நிலையிலிருந்த எஸ்.வி. சேகர், தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கவில்லை.

எனினும் எஸ்.வி. சேகரை கைது செய்யவும் தடை விதிக்கவில்லை. ஆனால், பொலிஸாரும் கைது செய்யவில்லை. அரசியல் பலத்தினால் கைதுசெய்யும் நடவடிக்கையிலிருந்து அவர் சுதந்திரமாக நடமாடுவதாக எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் குற்றஞ்சாட்டுகின்றன. ஆளும் கட்சி அரசியல்வாதிகளை யாரும் ஆளும் கட்சி அரசியல்களை யாரும் கைது செய்ய முடியாது என்பதற்று இதுவும் உதாரணமாகும் .

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-13#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.