Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நஷ்­டத்தை தாங்க முடி­யா­மை­யி­னா­லேயே எரி­பொ­ருளின் விலை­களை அதி­க­ரித்தோம்

Featured Replies

நஷ்­டத்தை தாங்க முடி­யா­மை­யி­னா­லேயே எரி­பொ­ருளின் விலை­களை அதி­க­ரித்தோம்

04-f591e3042c90382c22ea6aea2995124225bd1792.jpg

 

ஒரு வரு­டத்தில் குறை­வ­டைய வாய்ப்­புள்­ளது என்­கிறார் பிர­தமர் 

(எம்.எம்.மின்ஹாஜ்)

உலக சந்­தையில் பெற்­றோலின் விலை 41 டொலர்­க­ளினால் அதி­க­ரித்­துள்­ளது. இந்த அதி­க­ரிப்பின் நஷ்­டத்தை தொடர்ந்தும் பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­தினால் சுமக்க முடி­யாது. சவூதி அரே­பியா எரி­பொ­ருளின் விலையை 80 டொலர்களாக அதி­க­ரிக்க  திட்­ட­மிட்­டுள்ள போதிலும் அதற்கு ஏனைய நாடுகள் எதிர்ப்பு வெளி­யி ­டு­கின்­றன. எவ்­வா­றா­யினும் இன்னும்  ஒரு வருட காலப்­ப­கு­திக்குள் உலக சந்­தையில் எரிப்­பொ­ருளின் விலை குறையும் என நம்­பு­கின்றோம். அப்­படி குறையும் போது அந்த சலு­கையை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு நானும் ஜனா­தி­ப­தியும் சந்­தித்து இணக்­கப்­பாட்­டுக்கு வந்தோம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

இலங்கை மின்­சார சபையும் ஸ்ரீலங்கன் எயார் நிறு­வ­னமும் பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்­திற்கு 70 பில்­லியன் ரூபா செலுத்த வேண்­டி­யுள்­ளது. குறு­கிய காலத்­திற்குள் அந்த தொகையை செலுத்த முடி­யாமல் உள்­ளது. இதனால் பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்­திற்கு பெரும் நட்டம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த நட்­டத்தை போக்கும் நோக்கில் மாற்று வழி மூலம் வரு­மானம் ஈட்டும் வகை­யி­லேயே பெற்­றோலின் விலையை அதி­க­ரித்தோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

காலி மாவட்­டத்தில் நான்கு பிர­தேச செய­லக காரி­யா­லத்­திற்­கான புதிய கட்­ட­டங்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க திறந்து வைத்தார். இதன்­படி நேற்று முன் தினம் ஹிக்­க­டுவ பிர­தேச செய­லக கட்­டங்­களை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

2016 ஆம் ஆண்டு தொடக்கம் தற்­போது வரை உலக சந்­தையில் எரிப்­பொ­ருளின் விலை பெரு­ம­ளவில் அதி­க­ரித்­தது. இதன்­படி 41 டொலர்­க­ளினால் எரிப்­பொருள் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­பி­ர­காரம் உலக சந்­தையின் விலை­யேற்­றத்­திற்கு ஏற்ப பெற்­றோ­லிய கூட்­டு­தா­பனம் பெற்றோல், டீசல், மண்­ணெண்­ணெயின் விலை­களை வியா­ழக்­கி­ழமை அதி­க­ரித்­தது. பொது­வாக உலக சந்­தையில் எரிப்­பொ­ருளின் விலை அதி­க­ரிக்கும் போது அதி­க­ரிப்­பதும் குறையும் போது குறைப்­பதும் எமது வழி­மு­றை­யாக இருந்­தது.

உலக சந்­தையில் எரி பொருளின் விலையை எம்மால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. என்­றாலும் உலக சந்­தையில் எரிப்­பொ­ருளின் விலையை அதி­க­ரிக்கும் போது அதி­க­ரிப்­ப­தற்கும் குறைக்கும் போது குறைப்­ப­தற்கும் நானும் ஜனா­தி­ப­தியும் பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்­கப்­பாட்­டுக்கு வந்தோம்.

2014 ஆம் ஆண்டு உலக சந்­தையில் எரி பொருளின் விலை 55 டொலர்கள் என்ற மட்­டத்­திற்கு குறைந்த போது முன்­னைய ஆட்­சியில் அந்த சலு­கையை மக்­க­ளுக்கு வழங்­க­வில்லை. எனினும் நாம் 2015 ஆம் ஆண்டு எரி பொருளின் விலையை குறைத்து மக்­க­ளுக்கு சலுகை வழங்­கினோம். என்­றாலும் 2017 ஆம் ஆண்­ட­ளவில் எரி பொருளின் விலை உலக சந்­தையில் அதி­க­ரிக்க ஆரம்­பித்­தது. இதன்­படி தற்­போது வரைக்கும் 41 டொலர்­க­ளாக எரி பொருளின் விலை உலக சந்­தையில் அதி­க­ரித்­துள்­ளது.

மண்­ணெண்ணெய் விலை அதி­க­ரித்­தமை தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. டீசல் பாவ­னையில் வாக­னங்கள் குறைந்து மண்­ணெ­ணெய்யில் பாவிக்கும் வாக­னங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது. இதனால் நாட்டில் டீசல் வரு­மானம் குறை­வ­டைந்­தது. இதனை கட்­டுப்­பாட்­டுக்கு கொண்டு வரும் நோக்­கி­லேயே மண்­ணெண்ணெய் விலையை அதி­க­ரித்தோம். எனினும் சமுர்த்தி பய­னா­ளி­க­ளுக்கும் மீன­வர்­க­ளுக்கும் சலுகை அடிப்­ப­டையில் மண்­ணெண்ணெய் வழங்­கு­மாறு கூட்­டு­தா­ப­னத்­திற்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளோம்.

 இலங்கை மின்­சார சபையும் ஸ்ரீலங்கன் எயார் நிறு­வ­னமும் பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்­திற்கு 70 பில்­லியன் ரூபா செலுத்த வேண்­டி­யுள்­ளது. குறு­கிய காலத்­திற்குள் அந்த தொகையை செலுத்த முடி­யாமல் உள்­ளது. இதனால் பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்­திற்கு பெரும் நட்டம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த நட்­டத்தை போக்கும் நோக்கில் மாற்று வழி மூலம் வரு­மானம் ஈட்டும் வகை­யி­லேயே பெற்­றோலின் விலையை அதி­க­ரித்தோம்.

2016 முதல் 2017 வரை சீரான பொரு­ளா­தார முகா­மைத்­து­வத்தை முன்­னெ­டுத்தோம். என்­றா­லு்ம இயற்கை அனர்த்தம், விவ­சாய பயிர்ச்­செய்­கையின் வீழ்ச்சி, கிரா­மிய பொரு­ளா­தார வீழ்ச்சி ஆகி­ய­வற்­றினால் பொரு­ளா­தாரம் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­னது. அத்­துடன் வங்­கி­களில் வட்டி வீதம் 5 இலி­ருந்து 7 வீத­மாக அதி­க­ரித்­தது. இந்த தொகையை மக்­க­ளுக்கு செலுத்த முடி­யாது. ஆகவே பொருளாதாரத்தை சீரான நிலைமைக்கு கொண்டு வரும் நோக்கில் எரிப்பொருட்களின் விலைகளை அதிகரித்தோம்.

உலக சந்தையில் பெற்றோலின் விலை 41 டொலரினால் அதிகரித்துள்ளது.இந்த அதிகரிப்பின் நட்டத்தை தொடர்ந்தும் பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் சுமக்க முடியாது. சவூதி அரேபியா எரிப்பொருளின் விலையை 80 டொலராக அதிகரிக்க திட்டமிட்டுள்ள போதிலும் அதற்கு ஏனைய நாடுகள் எதிர்ப்பு வெளியிடுகின்றன என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.