Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் இருந்து வந்தோர் மாதகலில் அதிரடிக் கைது!!

Featured Replies

தமிழகத்தில் இருந்து வந்தோர் மாதகலில் அதிரடிக் கைது!!

படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

maxresdefault-1-1-750x430.jpg
 
 

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகு மூலம் நாடு திரும்பியபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/13/தமிழகத்தில்-இருந்து-வந்தோர்-மாதகலில்-அதிரடிக்-கைது.html

  • தொடங்கியவர்

அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது!

 
 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை சென்ற இரு குழந்தைகள் உள்ளிட்ட 4 பேரை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரையும் இலங்கை போலீஸார் கைது செய்தனர்.

akathi_16361_18588.jpg

 

இலங்கை ராணுவத்தினரின் தாக்குதலிலிருந்து அகதிகளாகத் தப்பிவந்த ஆயிரக்கணக்கானோர், தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியிருக்கும் அகதிகளுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்தியக் குடியுரிமை கிடையாது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இவர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி நிலவுவதால் பலர் தங்கள் தாயகத்துக்குத் திரும்பி வருகின்றனர். இவர்களில் சிலர் இந்திய, இலங்கை அரசுகளின் முறையான அனுமதியுடனும், சிலர் எந்த அனுமதி இன்றியும் இலங்கைக்குச் செல்கின்றனர்.

 

கடந்த 2006- ம் ஆண்டு இலங்கை திரிகோணமலை பகுதியிலிருந்து அகதிகளாக வந்து தமிழக முகாமில் தங்கியிருந்த சஜன், சந்திரலேகா, சாதனா மற்றும் 11 மாத கைக்குழந்தை ஆகியோர் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்றின் மூலம் இலங்கை கடல் பகுதியில் பயணித்துள்ளனர். இவர்களை கண்ட இலங்கை கடற்படையினர் படகினை வழிமறித்து விசாரணை நடத்திய போது இவர்கள் ஆவணங்களின்றி கள்ளத்தனமாக தாயகம் திரும்பியது தெரியவந்தது. இதையடுத்து அகதிகள் 4 பேர் மற்றும் இலங்கை படகோட்டிகள் 2 பேர் உள்ளிட்ட 6 பேரையும் காங்கேசன்துறை போலீஸாரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரனைக்குப் பின் இவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/125195-sri-lankan-navy-arrested-sl-refugee-family-with-11monthold-child.html

தமிழகத்தில் இருந்து அழைத்து வந்த படகோட்டிகளுக்கு நேர்ந்த கதி!!

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 4 பேர் யாழ்ப்பாணம், மாதகலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் இருந்து படகு மூலம் தாயகம் திரும்பியவேளை மாதகல் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் பிணை அனுமதி வழங்கியது மல்லாகம் நீதிமன்று.

அவர்களைப் படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டுக்கு அழைந்து வந்த படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டது.

http://newuthayan.com/story/17/தமிழகத்தில்-இருந்து-அழைத்து-வந்த-படகோட்டிகளுக்கு-நேர்ந்த-கதி.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.