Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருந்துமா தரப்புகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருந்துமா தரப்புகள்?

நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதல், இலங்கை இனப்போர் புதிய கட்டம் ஒன்றுக்குள் பிரவேசித்திருப்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.

இலங்கை இனப்போரில் முதல் வான் தாக்குதல் 1986 பெப்ரவரியில் யாழ்ப்பாணம், தாவடியில் இலங்கை விமா னப்படையின் "சியாமாச்செட்டி' விமானம் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வான் வழித்தாக்குதல் நடவடிக்கைக் குள், பதிலடியாகப் புலிகள் தரப்பு தமிழர் தரப்பு 22 ஆண்டுகள் கழித்து இப்போது பிரவேசித்திருக்கின்றது.

வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பல நூறு மைல்கள் ஒரு தாக்குதல் விமானத்தில் அல்லது இரண்டு விமானங்களில் பறந்து வந்து, இலங்கை விமானப்படை யின் மைய மூளையான கட்டுநாயக்காத் தளத்தின் மத்திய பகுதியில் குண்டுவீச்சுத்தாக்குதலைப் புலிகள் நடத்திவிட் டுப் பாதுகாப்பாகத் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கின்றார் கள். இது இலங்கை அரசுக்குப் பெரும் சீற்றத்தையும் எரிச் சலையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்றாம் ஈழ யுத்தத்தின் போது தமது கடற்புலிகளை வலுவுள்ள ஒரு புதிய படையணியாக அறிமுகப்படுத்தி, அதன் மூலம் இந்த யுத்தத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் புலிகள். இப்போது நான் காவது ஈழ யுத்தம் பரிணமிக்கும் கால கட்டத்தில் புலிகளின் வான் படையணி அறிமுகமாகின்றது. இனி வெடிக்கப்போகும் மோசமான யுத்தத்தில் அதன் பாதிப்பும், தாக்கமும், பங்களிப்பும் எவ்வாறு அமையப் போகின்றன என்பதை இனிப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனினும், இப்போது புலிகள் நடத்திய வான் தாக்குதலும் கணிசமான விளைவுகளை உருவாக்கியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

நேரடியாக இத்தாக்குதல் பெரிய சேதத்தை பாதிப்பை இலங்கை அரசுத்தரப்புக்கு ஏற்படுத்தி விட்டது என்று கூறுவதற்கில்லை. மூன்று விமானப் படையினர் உயிரிழந்து, பதினாறு படையினர் காயமடைந்து, ஒரு சில வான்கலங்கள் சேதமடைந்தமை தற்போது இடம்பெற்றுவரும் மோதல்களின் இழப்புகளுடன் ஒப்பிடுகையில் அப்படி ஒன்றும் பெரிய விவகாரமே அல்ல. அது மட்டுமல்ல, அரசுசார்பு ஆங்கில ஊடகமான ஏரிக்கரைப் பத்திரிகை நேற்றுத் தனது தலைநகர்ப் பதிப்பில் முன்பக்கத் தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டமை போல, கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தில் தரித்து நின்ற "மிக்' குண்டு வீச்சு விமானங்களைத் தாக்கும் விடுதலைப்புலிகளின் இலக்கு இந்த முயற்சியில் தவறிவிட்டது என்று கருதி தென்னிலங்கை புளங்காகிதம் கூட அடையலாம்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் சில விடயங்களையும், செய்திகளையும் இத்தாக்குதல் வெளிப்படுத்தியிருப்பதையும் மோசமான சில பாதிப்புகளை மறைமுகமாக அது ஏற்படுத்தியிருப்பதையும் அரசுத் தலைமை கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது. அவை கருதி, பல பதில் நடவடிக்கைகளையும் கட்டு மட்டில்லா செலவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய வினை எதிர்வுகளை அது மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.

விமானப்படையின் மைய மூளைக்கே வான் புலிகளின் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தி விட்டுப் பாதுகாப்பாகத் திரும்பியிருப்பதால் இத்தகைய தாக்குதல் ஆபத்துகள் இலங்கை முழுவதும் விரிந்திருக்கும் ஏது நிலை இப்போது உருவாகியுள்ளது. வான் புலிகளின் ஆபத்தை எதிர்கொண்டு முறியடிக்கக்கூடியதான முன்னேற்பாடுகளை அதாவது விமான எதிர்ப்பு கட்டமைப்பு வலிமையை இலங்கை முழுவதும் அவசரமாகவும் விரைந்தும் விஸ்தரித்து, நிலை நிறுத்த வேண்டிய தேவையும் அரசுக்கு உருவாகியிருக்கின்றது.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, நாடாளுமன்றம் என்று தொடங்கி, துறைமுகங் கள், விமான நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள், முக்கிய தொழில் மையங்கள், நாடு முழுவதும் பரந்து கிடக்கும் படைமுகாம்கள் மற்றும் படைத்தளபதிகள், மூத்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரின் இல்லங்கள், பிரபலமான சமய, சமூக மையங்கள் எனக் கேந்திர ஸ்தானங்கள் எல்லாவற்றுக்கும் விமான எதிர்ப்பு ஆயுதங்களையும், அவற்றைக் கையாள்வதற்கான படையணிகளையும் கொண்ட கட்டமைப்புப் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்துள்ளது.

யுத்த முனைக்குத் துருப்புக்களைக் காவிச்செல்லும் கப்பல்கள், கடல் ரோந்துக்கான படையணிக்கப்பல்கள் என்பன தொடக்கம் யுத்தமுனைவரையும் கூட இத்தகைய பாதுகாப்புக் கட்டமைப்பு முன்னேற்பாடுகள் அவசியமாகின்றன. அது மாத்திரமல்ல. வானில் பறந்து தாக்கும் புலிகளின் வான் கலங்களைத் துரத்தி வானில் வைத்தே தாக்கி அழிப்பதற்கான உயர்தர நவீனரக யுத்தக் கருவிகளை தனது யுத்த விமானங்களில் அரசு பொருத்த வேண்டியும் நேரிடும். தற்போது அரசிடம் உள்ள விமானங்கள் வானிலிருந்து தரைக்கு இலக்கு வைத்துத் தாக்கும் வசதியையே கொண்டவை. வானில் இன்னொரு வான் கலத்துடன் வான் யுத்தம் புரியும் உயர் தொழில் நுட்பம் கொண்டவை அல்ல அவை.

எனவே, இவ்வளவு கேந்திர முக்கிய மையங்களுக்கும் விமான எதிர்ப்பு ஆயுதக்கட்டமைப்பை ஏற்படுத்தி, அவற்றைக் கையாள்வதற்கான ஆளணியை 24 மணி நேரமும் தயாராக நிறுத்துவது என்பதும், யுத்த விமானங்களை வான் வழி யுத்தங்களுக்கு உரியவையாக மாற்றுவது என்பதும் நினைத்துப்பார்க்க முடியாத செலவையும் வளத்தையும் கபளீகரம் செய்யக்கூடியவை.

புலிகள் தமது வான் படையணியைக் கட்டமைக்க செலவிட்ட நிதியைப்போல அந்தக்கட்டமைப்பால் நேரக் கூடிய ஆபத்தை முறியடிப்பதற்குத் தன்னைத் தயார் நிலையில் நிறுத்துவதற்காக அரசுத்தரப்பு பல நூறு மடங்கு செலவிட வேண்டி நேரும் என்பதே யதார்த்தம். அப்படித் தன்னைத் தயார் நிலையில் நிறுத்த அரசுத் தரப்பு தயாராகாவிட்டால், இப்போது இலங்கை விமானப் படையிடம் தினசரி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வாங்கிக் கட்டுவது போல, புலிகளின் வான் படையணியிடம் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் அவ்வப் போது வாங்கிக்கட்ட வேண்டி நேரும்.

தவிரவும், புலிகளின் தற்போதைய தாக்குதல் நேரடியாக இலங்கையின் பொருளாதாரத்தின் அடிமடியிலேயே மீண்டும் கை வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தத் தாக்குதலினால், இலங்கையின் வர்த்தகத் துறையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் காப்புறுதிக் கட்டணங்கள் எகிறப் போகின்றன. ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் உல்லாசப்பயணத்துறை நிரந்தரமாகவே படுத்துவிடும் ஆபத்தும் உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் தொய்யும்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், அரசின் ஸ்திரத் தன்மை பாதிக்கப்படலாம். படையினரின் மனோபலம் சிதறும். இப்படி இத்தாக்குதலின் விளைவுகள் நீண்ட பட்டியலிடக் கூடியவை. அதே சமயம் இத்தாக்குதல் ஒரு திட்டவட்டமான உறுதியான செய்தியையும் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்கும் தெரியப்படுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். வெல்லப்படமுடியாத இந்த யுத்தத்தில் திமிர்த்தன அணுகு முறையும், பேரினவாத மமதையும் பயன் தரப் போவதில்லை. இராணுவ வெற்றி மற்றும் இராணுவ சம நிலை என்பன ஊசல் போல இரு பக்கமும் மாறி மாறி இடம் மாறி அசையக்கூடியவை என்பதே அந்தச் செய்தியாகும். இது புரியுமானால், இராணுவ அணுகுமுறை என்ற அழி வுப் பாதையைத் துறந்து, அமைதி வழித்தீர்வு என்ற சம ரச வழிக்குத் இரண்டு தரப்புகளும் திரும்ப வேண்டும்.

அதற்கு இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை. திருந்துமா தரப்புகள்?

நன்றி உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம முதலில் இலங்கை அரசு தன்னுடைய தாக்குதல்களை நிறுத்தட்டும்... அதுக்கப்புறம் தமிழர் தரப்பும் பேச்சுவார்த்தைக்கு செல்லும்...

முதலில்

திரும்பட்டும் அரசு தரப்புகள்

பிறகு

திருத்தம் பற்றி பேசலாம்

அரசு தரப்பு நாய் வால் போலத்தான் நீட்ட நீட்ட சுருளுறது போல எப்படி சமாதானத்துகு போனாலும் அவர்கள் இன அழிப்பிற்க்கே போவாரகள அவர்களை நம்பி இனியும் தமிழ் மக்கள் ஏமாறத்தாயாரில்லை ஏமாறவும் மாட்டார்கள்

திருந்துமா தரப்புகள்?

நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வான் தாக்குதல், இலங்கை இனப்போர் புதிய கட்டம் ஒன்றுக்குள் பிரவேசித்திருப்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.

இலங்கை இனப்போரில் முதல் வான் தாக்குதல் 1986 பெப்ரவரியில் யாழ்ப்பாணம், தாவடியில் இலங்கை விமா னப்படையின் "சியாமாச்செட்டி' விமானம் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வான் வழித்தாக்குதல் நடவடிக்கைக் குள், பதிலடியாகப் புலிகள் தரப்பு தமிழர் தரப்பு 22 ஆண்டுகள் கழித்து இப்போது பிரவேசித்திருக்கின்றது.

வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து பல நூறு மைல்கள் ஒரு தாக்குதல் விமானத்தில் அல்லது இரண்டு விமானங்களில் பறந்து வந்து, இலங்கை விமானப்படை யின் மைய மூளையான கட்டுநாயக்காத் தளத்தின் மத்திய பகுதியில் குண்டுவீச்சுத்தாக்குதலைப் புலிகள் நடத்திவிட் டுப் பாதுகாப்பாகத் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கின்றார் கள். இது இலங்கை அரசுக்குப் பெரும் சீற்றத்தையும் எரிச் சலையும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மூன்றாம் ஈழ யுத்தத்தின் போது தமது கடற்புலிகளை வலுவுள்ள ஒரு புதிய படையணியாக அறிமுகப்படுத்தி, அதன் மூலம் இந்த யுத்தத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் புலிகள். இப்போது நான் காவது ஈழ யுத்தம் பரிணமிக்கும் கால கட்டத்தில் புலிகளின் வான் படையணி அறிமுகமாகின்றது. இனி வெடிக்கப்போகும் மோசமான யுத்தத்தில் அதன் பாதிப்பும், தாக்கமும், பங்களிப்பும் எவ்வாறு அமையப் போகின்றன என்பதை இனிப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனினும், இப்போது புலிகள் நடத்திய வான் தாக்குதலும் கணிசமான விளைவுகளை உருவாக்கியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.

நேரடியாக இத்தாக்குதல் பெரிய சேதத்தை பாதிப்பை இலங்கை அரசுத்தரப்புக்கு ஏற்படுத்தி விட்டது என்று கூறுவதற்கில்லை. மூன்று விமானப் படையினர் உயிரிழந்து, பதினாறு படையினர் காயமடைந்து, ஒரு சில வான்கலங்கள் சேதமடைந்தமை தற்போது இடம்பெற்றுவரும் மோதல்களின் இழப்புகளுடன் ஒப்பிடுகையில் அப்படி ஒன்றும் பெரிய விவகாரமே அல்ல. அது மட்டுமல்ல, அரசுசார்பு ஆங்கில ஊடகமான ஏரிக்கரைப் பத்திரிகை நேற்றுத் தனது தலைநகர்ப் பதிப்பில் முன்பக்கத் தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டமை போல, கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தில் தரித்து நின்ற "மிக்' குண்டு வீச்சு விமானங்களைத் தாக்கும் விடுதலைப்புலிகளின் இலக்கு இந்த முயற்சியில் தவறிவிட்டது என்று கருதி தென்னிலங்கை புளங்காகிதம் கூட அடையலாம்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பால் சில விடயங்களையும், செய்திகளையும் இத்தாக்குதல் வெளிப்படுத்தியிருப்பதையும் மோசமான சில பாதிப்புகளை மறைமுகமாக அது ஏற்படுத்தியிருப்பதையும் அரசுத் தலைமை கவனத்தில் எடுக்கவேண்டியுள்ளது. அவை கருதி, பல பதில் நடவடிக்கைகளையும் கட்டு மட்டில்லா செலவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய வினை எதிர்வுகளை அது மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.

விமானப்படையின் மைய மூளைக்கே வான் புலிகளின் விமானங்கள் வந்து தாக்குதல் நடத்தி விட்டுப் பாதுகாப்பாகத் திரும்பியிருப்பதால் இத்தகைய தாக்குதல் ஆபத்துகள் இலங்கை முழுவதும் விரிந்திருக்கும் ஏது நிலை இப்போது உருவாகியுள்ளது. வான் புலிகளின் ஆபத்தை எதிர்கொண்டு முறியடிக்கக்கூடியதான முன்னேற்பாடுகளை அதாவது விமான எதிர்ப்பு கட்டமைப்பு வலிமையை இலங்கை முழுவதும் அவசரமாகவும் விரைந்தும் விஸ்தரித்து, நிலை நிறுத்த வேண்டிய தேவையும் அரசுக்கு உருவாகியிருக்கின்றது.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, நாடாளுமன்றம் என்று தொடங்கி, துறைமுகங் கள், விமான நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள், முக்கிய தொழில் மையங்கள், நாடு முழுவதும் பரந்து கிடக்கும் படைமுகாம்கள் மற்றும் படைத்தளபதிகள், மூத்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரின் இல்லங்கள், பிரபலமான சமய, சமூக மையங்கள் எனக் கேந்திர ஸ்தானங்கள் எல்லாவற்றுக்கும் விமான எதிர்ப்பு ஆயுதங்களையும், அவற்றைக் கையாள்வதற்கான படையணிகளையும் கொண்ட கட்டமைப்புப் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்ய வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்துள்ளது.

யுத்த முனைக்குத் துருப்புக்களைக் காவிச்செல்லும் கப்பல்கள், கடல் ரோந்துக்கான படையணிக்கப்பல்கள் என்பன தொடக்கம் யுத்தமுனைவரையும் கூட இத்தகைய பாதுகாப்புக் கட்டமைப்பு முன்னேற்பாடுகள் அவசியமாகின்றன. அது மாத்திரமல்ல. வானில் பறந்து தாக்கும் புலிகளின் வான் கலங்களைத் துரத்தி வானில் வைத்தே தாக்கி அழிப்பதற்கான உயர்தர நவீனரக யுத்தக் கருவிகளை தனது யுத்த விமானங்களில் அரசு பொருத்த வேண்டியும் நேரிடும். தற்போது அரசிடம் உள்ள விமானங்கள் வானிலிருந்து தரைக்கு இலக்கு வைத்துத் தாக்கும் வசதியையே கொண்டவை. வானில் இன்னொரு வான் கலத்துடன் வான் யுத்தம் புரியும் உயர் தொழில் நுட்பம் கொண்டவை அல்ல அவை.

எனவே, இவ்வளவு கேந்திர முக்கிய மையங்களுக்கும் விமான எதிர்ப்பு ஆயுதக்கட்டமைப்பை ஏற்படுத்தி, அவற்றைக் கையாள்வதற்கான ஆளணியை 24 மணி நேரமும் தயாராக நிறுத்துவது என்பதும், யுத்த விமானங்களை வான் வழி யுத்தங்களுக்கு உரியவையாக மாற்றுவது என்பதும் நினைத்துப்பார்க்க முடியாத செலவையும் வளத்தையும் கபளீகரம் செய்யக்கூடியவை.

புலிகள் தமது வான் படையணியைக் கட்டமைக்க செலவிட்ட நிதியைப்போல அந்தக்கட்டமைப்பால் நேரக் கூடிய ஆபத்தை முறியடிப்பதற்குத் தன்னைத் தயார் நிலையில் நிறுத்துவதற்காக அரசுத்தரப்பு பல நூறு மடங்கு செலவிட வேண்டி நேரும் என்பதே யதார்த்தம். அப்படித் தன்னைத் தயார் நிலையில் நிறுத்த அரசுத் தரப்பு தயாராகாவிட்டால், இப்போது இலங்கை விமானப் படையிடம் தினசரி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி வாங்கிக் கட்டுவது போல, புலிகளின் வான் படையணியிடம் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் அவ்வப் போது வாங்கிக்கட்ட வேண்டி நேரும்.

தவிரவும், புலிகளின் தற்போதைய தாக்குதல் நேரடியாக இலங்கையின் பொருளாதாரத்தின் அடிமடியிலேயே மீண்டும் கை வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தத் தாக்குதலினால், இலங்கையின் வர்த்தகத் துறையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் காப்புறுதிக் கட்டணங்கள் எகிறப் போகின்றன. ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் உல்லாசப்பயணத்துறை நிரந்தரமாகவே படுத்துவிடும் ஆபத்தும் உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் தொய்யும்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், அரசின் ஸ்திரத் தன்மை பாதிக்கப்படலாம். படையினரின் மனோபலம் சிதறும். இப்படி இத்தாக்குதலின் விளைவுகள் நீண்ட பட்டியலிடக் கூடியவை. அதே சமயம் இத்தாக்குதல் ஒரு திட்டவட்டமான உறுதியான செய்தியையும் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்கும் தெரியப்படுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். வெல்லப்படமுடியாத இந்த யுத்தத்தில் திமிர்த்தன அணுகு முறையும், பேரினவாத மமதையும் பயன் தரப் போவதில்லை. இராணுவ வெற்றி மற்றும் இராணுவ சம நிலை என்பன ஊசல் போல இரு பக்கமும் மாறி மாறி இடம் மாறி அசையக்கூடியவை என்பதே அந்தச் செய்தியாகும். இது புரியுமானால், இராணுவ அணுகுமுறை என்ற அழி வுப் பாதையைத் துறந்து, அமைதி வழித்தீர்வு என்ற சம ரச வழிக்குத் இரண்டு தரப்புகளும் திரும்ப வேண்டும்.

அதற்கு இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை. திருந்துமா தரப்புகள்?

நன்றி உதயன்

இந்த சிந்தனை ஏன் இவ்வளவு காலமும் உமக்கு வரவில்லை நீர் "உதயன் " அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்ததாலா? அல்லது உமக்கும் தமிழர் படை குண்டு வீசி அழித்திடும் என்ற என்னமா? நிச்சயம் தமிழர் சாக மாட்டார்கள் அல்லது சிங்கள அப்பாவி சனம் சாகாது என்பது மட்டும் உண்மை ஆதலால் உமது வாயை வைத்து கொண்டு உமக்கு கிடைக்கும் செய்திகளை தரமாய் தாரும் அது தான் நீர் செய்ய வேண்டியது!

சிங்களம் அடி வாங்கும் என்ற எண்ணத்தில் சிங்களவன்ர அடிவருடிகள் யாராவது உமக்கு இப்படி எழுத சொன்னவையோ?????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.