Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது

Featured Replies

மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது

 

 
Ddo1tGKU0AAQVWJjpg

மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ப்ட்ட்ன்ர்.

இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மெரினாவில் நடத்துவதற்காக சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதாக உளவுப் பிரிவு போலீஸார், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

 

அதில், “நினைவேந்தல் நிகழ்வினை பெரும்பாலான அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் உள்ளரங்குகளிலும் நடத்திய போதும் சில அமைப்புகள், பொதுமக்கள் கூடும் மெரினாவில் கூடுவதாக அறிவித்துள்ளன. எனவே, யாரும் போராட்டம் என்ற பெயரில் மெரினாவில் தடையை மீறி கூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம். மீறி போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவேந்தல் என்ற பெயரில் ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

மெரினா பொழுதுபோக்கு இடம் என்பதால் நினைவேந்தல் நடத்த அனுமதியில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்தது. ஆனால், மெரினா கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் மெரினா கடற்கரைக்குள் எந்த இயக்கமும் நுழைய முடியாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னை மெரினா, சேப்பாக்கம், நேப்பியர் மேம்பாலம், கலங்கரை விளக்கம் பகுதிகளில் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக பாரதி சாலையின் முக்கிய இடத்தில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி சாலை முழுவதும் தடுப்புகள் அமைத்து, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாரதி சாலை வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இதையடுத்து பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலையை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

DdpC8waU0AE27Lyjpg
 

வைகோ ஆதங்கம்

இது தொடர்பாக வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்; இலங்கை ராணுவத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். இலங்கை போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு கடற்கரையில் கூடி கண்ணீர் சிந்தக்கூடாதா?; இந்தியாவில் அரசுகள் மாறின. துரோகம் மாறவில்லை'' என்றார் ஆதங்கத்துடன்.

இதைத் தொடர்ந்து மெரினாவை நோக்கி பேரணியாகச் சென்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நினைவேந்தல் பேரணியில் கலந்துகொண்டு மெரினாவை நோக்கிச் சென்றவர்கள் கைதாகுமாறு காவல்துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து பேரணியில் பங்கேற்ற 1000க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article23943237.ece?homepage=true

  • தொடங்கியவர்

"மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்"

மெரினா

சென்னை மெரினா கடற்கரையில் ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடத்தவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக மே17அமைப்பின் நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

மே 17அமைப்பு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பிற இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய நினைவேந்தல் நிகழ்வில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலச்சந்திரனின் படத்தைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி நடந்துவந்து அவர்கள் முழக்கமிட்டனர்.

நினைவேந்தல் நிகழ்வின்போது பிபிசி தமிழிடம் பேசிய திருமுருகன் காந்தி, இறந்த தமிழ் சொந்தங்களுளாக, ஒரு நிகழ்வை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுப்பது மனித உரிமை மீறல் என்றார்.

 
 

''இறந்தவர்களை நினைவு கூர கடலுக்கு சென்று நினைவேந்தலை நடத்துவது காலங்காலமாக பின்பற்றப்படும் தமிழ் மரபு. இதற்கு அரசு அனுமதி மறுப்பது குற்றமாகும். ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடம் போன்ற இடங்களில் நினைவேந்தல் நடத்துவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நாங்கள் நடத்தும் நினைவேந்தலுக்கு ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? இந்த நிகழ்வுக்கு அரசின் அனுமதி தேவையில்லை, இந்த ஆண்டு புதுக்கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.

நிகழ்வின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய அவர், இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் நினைவேந்தலை நடத்த முடியும் என்பது சாத்தியமாகியுள்ள நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மெரினா கடற்கரையில் நடத்துவற்கு ஏன் தடை விதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மெரினா

''இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு துணை போனதாக நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். அதற்கான ஆதாரங்களை நாங்கள் நிறுவி வந்துள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் இங்கு நினைவேந்தல் நடத்த தடை விதிக்கிறார்கள். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில்(Universal Declaration of Human Rights) இந்தியா கையெழுத்திட்டிருந்தாலும், இங்கு இறந்தவர்களை நினைவு கூறும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை சர்வதேச அமைப்புகளிடம் நாங்கள் எடுத்துச்செல்வோம்'' என்று தெரிவித்தார்.

நிகழ்வில் பங்கேற்ற வைகோ, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவு இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

''எத்தனை தடைகள் வந்தாலும், இளைஞர்கள் பலர் உணர்வு ரீதியாக இந்த நிகழ்வில் பங்குபெறுவதை தடுக்கமுடியாது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்'' என்று அவர் கூறினார்.

ஐஸ்ஹவுஸ் பகுதியில், பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலையை நோக்கி வந்த பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/india-44191283

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.