Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்

Featured Replies

ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்

 

 

காலி மைதானத்தை இலங்கை அணிக்கு சாதகமானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து இலங்கைக்கான இங்கிலாந்து அணியின்  சுற்றுப்பயணம் பாதிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

அல்ஜசீரா தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ள  விவரணச்சித்திரத்தில் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

புலனாய்வு செய்தியாளர் ஒருவர் ஆட்டநிர்ணய சதியில் ஆர்வமுள்ள வர்த்தகர் போன்று நடித்து காலி சர்வசே மைதானத்தின் அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார்.

முன்னாள் வீரர் ஒருவரும் தற்போது விளையாடும் வீரர் ஒருவரும் அந்த பத்திரிகையாளருடன் இது குறித்து பேசியுள்ளனர்.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடும் மும்பாயை சேர்ந்த ரொபின் மொறிஸ்,இந்திய வர்த்தகர் கௌரவ் ராஜ்குமார், காலி மைதானத்தின் உதவி முகாமையாளர் தரங்க இன்டிக ஆகியோர் உரையாடுவதை இரகசிய கமராக்கள் மூலம் குறிப்பிட்ட பத்திரிகையாளர்  பதிவு செய்துள்ளார்.

தரிண்டு மென்டிஸ் என்ற வீரர் ஒருவரும் இதில் பங்கெடுத்துள்ளார்.

ஐசிசி இது குறித்து ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ளது  அதன் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரி அலெக்ஸ் மார்சல் தற்போது இது குjறித்து தீவிரமாக ஆராயப்போவதாக  தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/33947

  • தொடங்கியவர்

இலங்கையுடனான டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறும் அல்-ஜெசீரா

unnamed-39-1-696x464.jpg
 

இரகசியமான முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட அல்-ஜெசிரா செய்திச் சேவையின் ஆவணப் படம் ஒன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதிகள் இடம்பெற்றதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை (27) ஒளிபரப்பு செய்யப்படவிருக்கும் இந்த ஆவணப்படத்தில், காலி மைதானத்தின் உதவி முகாமையாளரும், பராமரிப்பாளருமான (Curator) தரங்க இந்திக்க குறித்த போட்டிகளின் முடிவுகளை தங்களுக்கு சாதகமாக ஆக்க துடுப்பாட்ட ஆடுகளத்தை (Pitch) மாற்றி ஆட்ட நிர்ணயக்காரர்களுடன் இணைந்து செயற்பட்டதை அவரது வாயினாலேயே கூறியது பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

அதாவது, 2016 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்றும் 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்றும் காலி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மையை மாற்றி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதை இந்திக்க ஒப்புக் கொண்டதே அல் ஜெசிராவின் இந்த ஆவணப் படத்தில் இருப்பதாக  குறிப்பிடப்படுகின்றது.

இந்திக்க, இந்த ஆவணப்படத்தில் இலங்கையின் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தை துடுப்பாட்ட வீரர்களுக்கு ஏற்றவாறு தயார் செய்ததனை ஒப்புக் கொண்டதும்,  அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் ஆடுகளத்தை பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாற்றியதை ஒப்புக் கொண்டதும் தெளிவாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த குற்றச் செயலில் எந்தவித கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பும் இல்லை எனக் கூறப்படுகின்றது.

குறித்த போட்டிகளில் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி 600 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன், அவுஸ்திரேலிய அணியினர் இரண்டு இன்னிங்சுகளிலும் வெறும் 85 ஓவர்களைக் கூட தாண்டாமல் 18 விக்கெட்டுக்களை இலங்கையின் சுழல் வீரர்களிடம் பறிகொடுத்து 229 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியிருந்தனர். அத்துடன், அவுஸ்திரேலிய அணியின் போட்டி இரண்டரை நாட்களுக்குள்ளும் முடிவடைந்திருந்தது.

மேலும் இந்த ஆவணப்படத்தில், இலங்கையின் முதல் தர கிரிக்கெட் வீரர் தரிந்து மெண்டிஸ் மற்றும் இந்தியாவின் தொழில்முறை கிரிக்கெட் வீரர் ரொபின் மொர்ரிஸ் ஆகியோர் இந்திக்கவுடன் இணைந்து காலியில் இந்த நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் மீண்டும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட திட்டம் போட்டதும் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தில் ஆட்ட நிர்ணயம் இடம்பெறும் எனக் கூறப்பட்டிருக்கின்றதால்  இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருப்பதாக தெரிவித்திருந்ததோடு, ஐ.சி.சி. இற்கும் முழு ஆதரவை வழங்கி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றது

 

மறுமுனையில் இந்த ஆவணப்படம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐ.சி.சி. இந்த ஆவணப்படத்தில் வருவதாக  சொல்லப்படும் விடயங்களை வைத்து ஏற்கனவே சுயாதீன விசாரணை ஒன்றை ஆரம்பித்து விட்டதாக கூறியிருக்கின்றது.

இந்த ஆவணப் படத்தில் ஆடுகளத்தை மாற்றியமைக்கும் இந்த சட்டவிரோத வேலைகளைச் செய்வதற்காக டெஸ்ட் போட்டியொன்றுக்கு 37,000 அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப்படி 58 இலட்ச ரூபாய்) ஆட்ட நிர்ணயக்காரர்கள் மைதான பராமரிப்பாளருக்கு  கொடுப்பதாக கூறியதும் இந்த நிர்ணயத்தில் கிடைக்கும் தவறான பணத்தில் 30 சதவீதத்தை ஆட்ட நிர்ணயத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கு தர வேண்டும் எனக் கூறியதும் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் சபை 2017 ஆம் ஆண்டு ஏற்கனவே உள்ளூர் போட்டி ஒன்றில் இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதியை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியான ரோஹினி மாரசிங்கவை நேற்று நியமித்த நிலையிலையே இந்த புதிய சர்ச்சை கிளம்பியிருக்கின்றது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இரு பயிற்றுவிப்பாளர்கள் இடைநிறுத்தம்

 

 
 

ஆல் ஜசீராவின் வீடியோவில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுவது குறித்து கருத்து தெரிவித்த  இரு முன்னாள் வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களுமான இருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை அணிக்காக இரு ரி20 போட்டிகளில் விளையாடியவரும் இலங்கை மகளிர் அணிக்கு தலைமை தாங்கியவரும் மேல்மாகாண அணியின் பயிற்றுவிப்பாளருமாகவும் பணியாற்றுவருமான ஜீவந்த குலதுங்கவையும்,கம்பஹாவின் பயிற்றுவிப்பாளர் தரிந்து மென்டிசையும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  இடைநிறுத்தியுள்ளது.

இருவரும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட நபருடனும் அல்ஜசீரா செய்தியாளருடனும் உரையாடுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பித்துள்ளது.

ஆடுகள சதி குறித்த விசாரணையின் போது தரிந்து மென்டிஸ் காணப்படுகின்றார்.

இதேவேளை குலதுங்க ஆட்டநிர்ணய சதியில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பதை அல்ஜசீராவின் வீடியோ காண்பித்துள்ளது.

கிரிக்கெட் விளையாடுவது எங்களிற்கு காலையில் பல்துலக்குவது போன்ற விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் உங்களின் திட்டத்தின் படி கிரிக்கெட் விளையாடுவதே இலகுவான விடயம் ஏனென்றால் எங்களிற்கு அழுத்தங்கள் எதுவும் இல்லை என குறிப்பிடுகின்றார்.

அல்ஜசீராவின் விவரணசித்திரம் மூலம் நாங்கள்  ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களை அறிந்தவுடன் அவர்களை உடனடியாக இடைநிறுத்திவிட்டோம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீடியோவில் காணப்பட்ட மூன்றாவது வீரரான டில்கார லொக்குஹெட்டிகே தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பதாலும் அவர் பதவிகள் எதனையும் வகிக்காததாலும் அவரிற்கு எதிராக நடவடிக்கைகள் எதனையும் எடுக்க யுமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

http://www.virakesari.lk/article/34049

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.