Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`ஒன்னு கிடக்க ஒன்னு....' - அப்போலோவில் ஜெயலலிதா பேசியது

Featured Replies

`ஒன்னு கிடக்க ஒன்னு....' - அப்போலோவில் ஜெயலலிதா பேசியது

 
 

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

80_17175.jpg

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் மூச்சுத்திணறலின்போது ஜெயலலிதா பேசிய 52 வினாடிகள் கொண்ட அந்த ஆடியோவில், முதலில் மருத்துவர் சிவகுமாரிடமும், பின்னர் மருத்துவர் அர்ச்சனாவிடமும் ஜெயலலிதா பேசுகிறார். 

ஜெயலலிதா : oh sad எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க.

சிவக்குமார் : vlc  ரெக்கார்டு 

ஜெயலலிதா : கேக்குதா

சிவக்குமார் : பெருசா இல்லை. 

ஜெயலலிதா : அப்போ இருந்தபோது கூப்பிட்டேன். அப்போ எடுக்க முடியலனு சொன்னீங்க. எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு நீங்களும் செய்றீங்க... எடுக்க முடியலான விடுங்க.  

சிவக்குமார் : சரி 

இதேபோல் மருத்துவமனையில் அர்ச்சனாவிடம் பேசிய ஆடியோவில் 

ஜெயலலிதா : நல்லா வருது, மூச்சு விட முடியல, தியேட்டர்ல முன்னாடி சீட்டுல விசில் அடிக்கிற மாதிரி ரத்த அழுத்தம் இருக்கு. எனக்கு எவ்வளவு ரத்த அழுத்தம் இருக்கு

மருத்துவர் அர்ச்சனா : 140 / 80

ஜெயலலிதா : it's ok for me. இது நார்மல் தான்

இவ்வாறு அந்த ஆடியோ முடிவடைகிறது. இந்த ஆடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவைகளால் தமிழகம் திணறி கொண்டிருக்கும் இவ்வேளையில், இதனை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/126019-the-audio-was-released-spoken-by-jayalalitha.html

  • தொடங்கியவர்

மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவின் பின்னணி என்ன?

உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவு எதற்காக வெளியிடப்பட்டது?

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, செப்டம்பர் 27ஆம் தேதியன்று பதிவுசெய்யப்பட்ட ஒலிப்பதிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் சிவகுமார் இந்த ஒலிப்பதிவை இன்று சமர்ப்பித்தார்.

இரு ஒலிப்பதிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 52 வினாடிகள் நீடிக்கும் இந்த ஒலித்தொகுப்பில், ஜெயலலிதா மூச்சுத் திணறலுடன் பேசுவது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவும் மருத்துவர் சிவகுமாரும் உரையாடுகின்றனர். ஜெயலலிதாவின் மூச்சுத் திணறலை ஒலிப்பதிவுசெய்ய முயல்கிறார் சிவகுமார்.

"ஜெயலலிதா: எடுக்க முடியுதா?

சிவகுமார்: இப்ப ஒன்னும் இல்லை.

ஜெயலலிதா: அப்ப இருக்கும்போது கூப்பிட்டேன்.

சிவகுமார்: அப்ப ஆப்ளிகேஷன டவுன்லோடு பண்ண முடியல

ஜெயலலிதா: நீங்க ஒண்ணுகெடக்க ஒன்னு செய்றீங்க

ஜெயலலிதா: எடுக்க முடியலைனா விடுங்க.

ஜெயலலிதா: தியேட்டர்ல ஃப்ரண்ட் சீட்ல விசிலடிக்கறமாதிரி இருக்கு."

இதன் பிறகு, மருத்துவர் அர்ச்சனா, ஜெயலலிதாவின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்கிறார்.

"ஜெயலலிதா: எவ்வளவுமா?

அர்ச்சனா: 140/80 ஹையா இருக்கு.

ஜெயலலிதா: பை?

அர்ச்சனா: 80

ஜெயலலிதா: இட்ஸ் ஓகே ஃபார் மி. நார்மல்".

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைARUN SANKAR

இந்த ஒலிப்பதிவு எந்தப் பின்னணியில் பதிவுசெய்யப்பட்டது என சசிகலா தரப்பு வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்டபோது, "ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அப்போதே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. ஆனால், பிறகு சரியாகிவிட்டது. அதன் பிறகு, நுரையீரல் நிபுணரான டாக்டர் நரசிம்மன் அவரை வந்து பார்த்தார். அவரிடம் மூச்சுத் திணறல் பற்றித் தெரிவித்தார் ஜெயலலிதா. இதைக் கேட்ட நரசிம்மன் அடுத்த முறை மூச்சுத் திணறல் வரும்போது, அந்த சத்தத்தைப் பதிவுசெய்யும்படி கூறினார். அடுத்த முறை மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட ஒலிப்பதிவுதான் இது" என்றார்.

அந்தத் தருணத்தில் பதிவுசெய்வதற்கான செல்போன் ஆப் டவுன்லோடு ஆகவில்லை; அதைத்தான் சிவகுமார் ஜெயலலிதாவிடம் விளக்குகிறார் என்றும் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமாருக்கு சம்மன் அனுப்பியது. அவர் ஜனவரி 8ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலமளித்தார். அப்போதே இதுபோல ஒரு ஆடியோ இருப்பதை சிவகுமார் தனது ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஆணையம் இப்போதுதான் அந்த ஆடியோவைக் கொடுக்கும்படி கோரியதால், இப்போது அந்த ஆடியோ கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பிபிசியிடம் தெரிவித்தார் ராஜா செந்தூர்பாண்டியன்.

https://www.bbc.com/tamil/india-44265670

  • தொடங்கியவர்

சிகிச்சையின் போது என்னென்ன சாப்பிட்டார்?- ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியீடு

 

 

 
download%204

ஜெயலலிதா, அவர் கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் | படம்: சிறப்பு ஏற்பாடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த நேரத்தில் தனக்கு வேண்டிய உணவு குறித்து கைப்பட எழுதிய பதிவுகள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில் உடல் நலம் தேறிவந்த நிலையில் அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

 
 

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரம் அவரை யாரும் சந்திக்கவில்லை என்று ஒரு கருத்தும், சிலர் சந்தித்தார்கள் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓபிஎஸ் உள்ளிட்டோர் பெரிதாக பிரச்சினை கிளப்ப அதுகுறித்து ஒரு நபர் ஆணைய விசாரணை அமைக்கப்பட்டது.

நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதில் பலரும் தங்கள் தரப்பு சாட்சியத்தை அளித்து வருகின்றனர். இடையில் டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ திடீரென ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.

ஆறுமுகசாமி ஆணையத்திலும் அதை அளித்தார். ஜெயலலிதா சிகிச்சையில் நன்கு உடல்நிலை தேறி வந்தார், திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்திற்கு காரணம் என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு வலு சேர்க்கும்விதமாக அந்த வீடியோ அமைந்தது.

இதற்கிடையே ஆறுமுக சாமி ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதா தரப்பு மருத்துவர் சிவகுமார் ஜெயலலிதா பேசிய ஆடியோ தொகுப்பின் பென் டிரைவை அளித்துள்ளார்.

அதில் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட அனுபவத்தை ஜெயலலிதா பேசுவதாக அமைந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 2, 2016 அன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட உணவுப் பட்டியலையும் மருத்துவர் சிவக்குமார் அளித்தார். அதில் பச்சை கலர் மையில் தனக்கு வேண்டியதை எழுதியுள்ளார்.

அதில் அதிகாலை 4.55க்கு லோட்டஸ் தண்ணீர், 5-05 லிருந்து 5.35 காலை உணவு இட்லி 1.5, பிரட் 4 ஸ்லைஸ், காஃபி 400 மில்லி, இளநீர் 230 மில்லி

5.45 மணிக்கு க்ரீன் டீ 200 மில்லி, 8 மணிக்கு ரிவைவ் 200 மில்லி, 8.55க்கு ஒரு ஆப்பிள், 9.40க்கு காஃபி 120 மில்லி, போர்பன் பிஸ்கெட் 5, காலை 11.35 மணிக்கு பாஸ்மதி ரைஸ் ஒரு கப்.

மதிய உணவு 2 மணியிலிருந்து 2.35 வரை பாஸ்மதி ரைஸ் 1.5 கப், தயிர் 1 கப், கிர்னி பழம் அரை கப், மதியம் 2.45க்கு ஜான்வியா என்கிற மாத்திரை, மாலை 5.45க்கு காபி 200 மில்லி.

இரவு உணவு மாலை 6.30 லிருந்து 7.15க்குள் வால்நட், உலர் பழங்கள் அரை கப், இட்லி உப்புமா 1 கப், தோசை 1, பிரட் 2 ஸ்லைஸ், பால் 200 மில்லி, பின்னர் 7.25க்கு மிக்னர் என்ற மாத்திரையும், ஜான்வியா என்ற மாத்திரையும் என தனது கைப்பட எழுதியுள்ளார்.

அவரது எடை 106.9 கிலோவாக இருந்துள்ளது. தனது உணவைக் கடுமையான கட்டுப்பாட்டுடன் கடைப்பிடித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் ஆறுமுகசாமி ஆணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article23999240.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்

 

 


சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ இன்று வெளியானது ஏன்? எப்படி? என்று சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணிப்பதற்கு 68 நாட்களுக்கு முன்பு பேசிய ஆடியோ இன்று ஊடகங்களில் வெளியானது. அவர் மரணம் அடைந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இன்று ஆடியோ வெளியானது பல கேள்விகளை எழுப்புகிறது.

இது குறித்து விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை நடத்தி வரும் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவை மருத்துவர் சிவக்குமார் வைத்திருந்தார். அதனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு கடந்த ஜனவரி மாதமே ஒரு ஆதாரமாக தாக்கல் செய்தும், அதனை ஆணையம் ஏற்று கொண்டு பதிவு செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், இன்றைய குறுக்கு விசாரணையின் போது அந்த ஆடியோவை, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு போட்டுக் காண்பித்தோம். விசாரணை ஆணையம் அதனை பதிவு செய்து கொள்ளாததால், அதனை வெளியிட்டிருக்கிறோம். இதில் வேறு எந்த பின்னணியும் இல்லை என்று கூறியுள்ளார்.

http://www.dinamani.com/tamilnadu/2018/may/26/ஜெயலலிதா-பேசிய-ஆடியோ-வெளியானது-ஏன்-எப்படி-சசிகலாவின்-வழக்குரைஞ-2927327.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.