Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பி.ஜே.பி-க்கு ஸ்டெர்லைட் கொடுத்தது எத்தனை கோடி?

Featured Replies

பி.ஜே.பி-க்கு ஸ்டெர்லைட் கொடுத்தது எத்தனை கோடி?

 
 

 

‘தமிழர்கள் படுகொலை செய்யப் படுகின்றனர். ஏனென்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு அடிபணிய மறுக்கின்றனர். மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது’ என ஸ்டெர்லைட் விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். உடனே, பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘‘ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். உண்மையில் ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் மட்டுமல்ல, காங்கிரஸுக்கும்கூடத் தொடர்பு இருக்கிறது.    

P6A_1527243668.jpg

டெல்லி அசோகா ரோட்டில் உள்ள பி.ஜே.பி தலைமை அலுவலகச் செயலாளர் அருண் குமார் ஜெயின், தலைமை தேர்தல் கமிஷனுக்கு 20.12.2014 அன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரையில் பி.ஜே.பி-க்கு நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை அந்தக் கடிதத்துடன் இணைத்திருந்தார். அங்கீகரிக்கப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தனி நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெறும் நன்கொடைகளைத் தேர்தல் கமிஷனில் தெரிவிக்க வேண்டும் என்பது வருமானவரிச் சட்டத்தின் விதி. 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நன்கொடை பெறுகிறவர்களின் பெயர் விவரங்களைத் தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும். அந்த அடிப்படையில், 2013-2014 நிதியாண்டில் பி.ஜே.பி பெற்ற நன்கொடை விவரங்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்த ஆண்டில், 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பி.ஜே.பி-க்கு நன்கொடை கொடுத்தவர்கள் மட்டும் 1,480 பேர். இன்று செய்திகளில் அடிபடும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பி.ஜே.பி-க்கு நன்கொடை அளித்த விவரம் அதில் இடம்பெற்றிருந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் 837331 என்ற எண் கொண்ட ஒரு காசோலையின் மூலம் ரூ.4 கோடியும், 837332 என்ற எண் கொண்ட காசோலை மூலம் ரூ.3.50 கோடியும் பி.ஜே.பி-க்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம். இப்படி, மொத்தமாக பி.ஜே.பி-க்கு அளிக்கப்பட்ட நன்கொடை 7.50 கோடி ரூபாய். மேலும், STERLITE INDUSTRIES I LTD என்ற பெயரில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இரண்டு காசோலைகள் மூலம் மேலும் ரூ.4.50 கோடி, ரூ.3 கோடி ரூபாய் பி.ஜே.பி-க்கு அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து 15 கோடி ரூபாய் பெற்றிருக்கிறது பி.ஜே.பி.

P6_1527243698.jpg

நன்கொடை அளிக்கப்பட்ட காலகட்டம் முக்கியமானது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தத் தொகைகள் தரப்பட்டுள்ளன.  ‘பி.ஜே.பி ஆட்சிக்கு வரும்’ என்கிற நம்பிக்கையில் நன்கொடையை அளித்திருக்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம்.

பி.ஜே.பி-க்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் கோடிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறது ஸ்டெர்லைட். 2004-ம் ஆண்டு முதல் பி.ஜே.பி., காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்கும் அதிக அளவில் நன்கொடை கொடுத்தது இந்த நிறுவனம்தான். 2013-ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தப் பெருமை வேறு நிறுவனங்களுக்குப் போனது. இங்கிலாந்தில் இருக்கும் வேதாந்தா ரிசோர்சஸ் என்ற குழுமத்தின் துணை நிறுவனம்தான் ஸ்டெர்லைட். இதேபோல Sesa Goa என்ற நிறுவனமும் அவர்களுடையதே! 2004 முதல் 2015 வரை ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.6 கோடியும், சேச கோவா நிறுவனம் ரூ.2.78 கோடியும் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளித்துள்ளன.

இந்த விவகாரங்கள் வெளியில் வரக் காரணமாக இருந்தது, டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வந்த ஒரு வழக்கு. Association of Democratic Reforms (ADR) என்ற அமைப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு போட்டது. ‘அரசியல் கட்சிகள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதை மதிக்காமல் பி.ஜே.பி-யும் காங்கிரஸும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பதே அந்த வழக்கு. ‘Foreign Contribution (Regulation) Act எனப்படும் FCRA சட்டப்படி இந்தக் கட்சிகள் செய்தது தவறு’ என்பது அந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதம்.

ஆனால், ‘வேதாந்தா குழுமம் வெளிநாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். அதை நடத்தும் அனில் அகர்வால் இந்தியக் குடியுரிமை பெற்றவர்தான். நன்கொடை கொடுத்த ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில்தான் செயல்படுகின்றன. எனவே, இது அந்நிய நன்கொடை இல்லை’ என இந்தக் கட்சிகள் வாதிட்டன. ஆனால், ‘வேதாந்தா குழுமத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக அந்நிய முதலீடு இருப்பதால், இது வெளிநாட்டு நன்கொடைதான்’ எனத் தீர்ப்பளித்தது டெல்லி உயர் நீதிமன்றம். 2014 மார்ச் 18-ம் தேதி இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், ‘ஆறு மாதங்களுக்குள் இந்தக் கட்சிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸும் ஏதும் செய்யவில்லை; பிறகு வந்த பி.ஜே.பி-யும் ஏதும் செய்யவில்லை. 2018 மார்ச் 13-ம் தேதி பி.ஜே.பி அரசு என்ன செய்தது தெரியுமா? FCRA சட்ட விதிகளை முன்தேதியிட்டுத் திருத்தும் சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து, காங்கிரஸ் ஆதரவுடன் சத்தமில்லாமல் நிறைவேற்றிவிட்டது. ஸ்டெர்லைட்டிடமிருந்து அவர்கள் வாங்கிய ‘நன்கொடை’ இப்போது ‘புனிதத்துவம்’ அடைந்துவிட்டது.

https://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.