Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! (படங்கள்)

Featured Replies

சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! (படங்கள்)

 

 
chennai_dhoni11

 

ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது.

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை எடுத்தது. சென்னை தரப்பில் கிடி, தாகுர், சர்மா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.  

18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்து சென்னை வெற்றி பெற்றது. 8 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து வாட்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

நேற்றைய பரிசளிப்பு விழாவில், வெற்றியோ தோல்வியோ நாளை சென்னை செல்வதாக முடிவெடுத்தோம். ரசிகர்களைச் சந்திக்கவுள்ளோம் என்று தெரிவித்தார். இதனால் தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களை நேரில் காண ரசிகர்கள் பெரும்திரளாக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்கள்.

இன்று மாலை சிஎஸ்கே அணியினர் விமானம் மூலமாக மும்பையிலிருந்து சென்னைக்கு வந்திறங்கினார்கள். அங்கு, சிஎஸ்கே வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பழைய விமான நிலையத்துக்கு வீரர்கள் அழைத்து வரப்பட்டார்கள். பிறகு, அங்கிருந்து நட்சத்திர விடுதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

 

chennai22.jpg

chennai1.jpg

chennai33.jpg

 

chennai44.jpg

http://www.dinamani.com/sports/special/2018/may/28/chennai-super-kings-return-home-after-lifting-3rd-ipl-title-2928539--2.html

 

  • தொடங்கியவர்

சிஎஸ்கே அணிக்கு உற்சாக வரவேற்பு

 

 
SAN-DHONI-MALA

வரவேற்பில் மாலையுடன் தோனி.   -  PTI

11-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று திரும்பிய சென்னை சூப் பர் கிங்ஸ் அணிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

 

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் நேற்று மாலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். வீரர்கள் விமான நிலையம் வந்ததும் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் அவர்களைப் பார்த்து உற்சாகக் குரல் எழுப்பினர். பின்னர் சென்னை வீரர்கள் பேருந்துகள் மூலம் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “இறுதிப்போட்டியில் வாட்சனின் அதிரடி பேட்டிங்கால் எளிதாக வென்றோம். சென்னைக்கு பதிலாக புனேயில் விளையாடியது சவாலான விஷயமாக இருந்தது. சென்னை மைதானத்திற்கு ஏற்பவே, ஏலத்தில் நாங்கள் வீரர்களை தேர்வு செய்திருந்தோம். கேப்டன் தோனியின் தாக்கம் அணியில் மிக அதிகமாக உள்ளது. மற்ற வீரர்களை விளையாடவைக்கும் தலைமைப்பண்பு தோனிக்கு உள்ளது” என்றார். சென்னை அணி கோப்பையை வெல்ல தோனி, பிளெமிங்தான் காரணம் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/article24020002.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்த துரைமுருகன்..!

 

சென்னையில், கேப்டன் தோனியை நேரில் சந்தித்து வாழ்த்திய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அவரிடமிருந்து கையெழுத்துப் போட்ட டி-ஷர்ட்டை வாங்கி மகிழ்ந்தார்.

தோனி - துரைமுருகன்

 

ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதைத் தொடர்ந்து, சிஎஸ்கே அணியை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிவருகிறார்கள். அதிலும், இரண்டாண்டுகள் இடைவெளிக்குப்பிறகு, கிரிக்கெட்டில் களமாடிய தோனி ரசிகர்கள், கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார். இந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் முக்கிய நபர்களை கேப்டன் தோனி சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. இதில் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு தோனியை வாழ்த்தினார்.

அப்போது தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற டி-ஷர்ட்டில் கையெழுத்துப் போட்டு, அதை துரைமுருகனுக்கு பரிசளித்தார். அதை மகிழ்ச்சியுடன் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். "தமிழக அரசியலில் இடைவிடாமல் இயங்கினாலும், அத்தனை கிரிக்கெட் மேட்சுகளையும் விடாமல் பார்த்துவிடுவார். கிரிக்கெட் என்றால் அண்ணனுக்கு கொள்ளைப் பிரியம்" என்கிறார்கள் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள்.

 

 

https://www.vikatan.com/news/tamilnadu/126190-dmk-mla-durai-murugan-meets-csk-captain-dhoni.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் உற்சாகம்

 

 
san-csk-4

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடைபெற்ற விருந்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.

san-csk-3

கோயிலில் கோப்பையை வைத்து ஆசிர்வாதம் செய்த கோயில் குருக்கள்.

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

11-வது ஐபிஎல் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. சிஎஸ்கே அணி வீரர் ஷேன் வாட்சன் அபாரமாக ஆடி 117 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

2 ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்கியபோதும் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது வீரர்களிடையேயும், அணி நிர்வாகிகளிடையும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் நேற்றுமுன்தினம் மாலை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். வீரர்கள் விமான நிலையம் வந்ததும் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் அவர்களை வரவேற்று வாழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு அணி நிர்வாகம் சார்பில் சிஎஸ்கே அணி வீரர்கள், பயிற்சியாளர், நிர்வாகிகளுக்கு தனியார் ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது. இதில் வீரர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அணி நிர்வாகிளுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்று அணி வீரர்கள் வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணி வீரர்கள், நிர்வாகிகளின் குடும்பத்தாரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக விமானத்தில் வந்தபோது சிஎஸ்கே வீரர்களுடன் விமான பணிப்பெண்கள், விமானிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

http://tamil.thehindu.com/sports/article24029950.ece

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.