Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 மாநிலங்களில் நடந்த மக்களவை, சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்; எதிர்க்கட்சிகள் வெற்றி: பாஜக அதிர்ச்சி தோல்வி

Featured Replies

10 மாநிலங்களில் நடந்த மக்களவை, சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்; எதிர்க்கட்சிகள் வெற்றி: பாஜக அதிர்ச்சி தோல்வி- 4 சட்டப்பேரவை தொகுதிகளை காங்கிரஸ் பிடித்தது

 

 
01CHSKOBIHAR

பிஹாரின் ஜோகிஹட் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. தலைநகர் பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேர்தல் வெற்றியை மேள தாளத்துடன் தொண்டர்கள் கொண்டாடினர்.   -  படம்: பிடிஐ

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 4 மக்களவை, 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மேலும், கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் முடிவும் நேற்று வெளியானது. இதில் பெரும்பாலான இடங்களை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிடித்தன. உத்தரப்பிரதேசத்தில் பாஜக அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கைரனா, மகாராஷ்டிராவின் பால்கர் மற்றும் பண்டாரா - காண்டியா, நாகாலாந்து ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதேபோல நூர்பூர் (உத்தரப்பிரதேசம்), ஷாகோட் (பஞ்சாப்), ஜோகிஹட் (பிஹார்), கோமியா மற்றும் சில்லி (ஜார்க்கண்ட்), செங்கணூர் (கேரளா), அம்பட்டி (மேகாலயா), மகேஷ்தலா (மேற்கு வங்கம்), தாரலி (உத்தராகண்ட்) ஆகிய 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

 

காங்கிரஸ் போட்டியின்றி தேர்வு

மகாராஷ்டிராவின் பலூஸ்-காதேகாவ்ன் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் விஸ்வஜித் காதமும் பாஜக தரப்பில் சங்ரம்சிங் தேஷ்முக்கும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. கடைசி நேரத்தில் பாஜக தனது வேட்பாளரை வாபஸ் பெற்றது. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜித் காதம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மே 12-ம் தேதி நடந்தது. அப்போது பெங்களூரு புறநகர்ப் பகுதியான ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஏராளமான வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டதால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அந்த தொகுதிக்கும் கடந்த 28-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

ஒட்டுமொத்தமாக 4 மக்களவை, 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மகாராஷ்டிராவின் பால்கர் மக்களவைத் தொகுதி, உத்தராகண்டின் தாரலி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி கட்சி ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளை காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கைப்பற்றியுள் ளன.

c56ab7f6649c25b3101mrjpg
 

 

கைரனா மக்களவை தொகுதி

உத்தரப்பிரதேசத்தின் கைரனா மக்களவைத் தொகுதியில் பாஜக எம்.பி. ஹுகும் சிங் காலமானதால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. பாஜக சார்பில் ஹுகும் சிங்கின் மகள் மிரிகங்கா போட்டியிட்டார். ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் தபாசம் ஹசன் களமிறங்கினார். அவருக்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தன. இதில், தபாசம் ஹசன் 4,01,464 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியை பாஜக இழந்தது.

 

பால்கரில் பாஜக வெற்றி

மகாராஷ்டிராவின் பால்கர் மக்களவைத் தொகுதியில் பாஜக எம்.பி. சிந்தாமன் வன்கா காலமானதால் அங்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் பாஜக சார்பில் காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ராஜேந்திர காவித் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சிவசேனா தரப்பில் மறைந்த சிந்தாமன் வன்காவின் மகன் ஸ்ரீநிவாஸ் வன்கா, காங்கிரஸ் தரப்பில் தாமோதர் போட்டியிட்டனர். இதில் பாஜக வேட்பாளர் ராஜேந்திர காவித் வெற்றி பெற்றார்.

மகாராஷ்டிராவின் பண்டாரா-காண்டியா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மதுக்கூர் குக்டே வெற்றி பெற்றார். நாகாலாந்து மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் டோக்கிகோ யாப்தோமி 5,48,749 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

 

சட்டப்பேரவைத் தொகுதிகள்

உத்தர பிரதேசத்தின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நாமுல் ஹசன், பஞ்சாபின் ஷாகோட் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தவே சிங் லாடி, பிஹாரின் ஜோகிஹட் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஷானவாஸ் ஆலம் வெற்றி பெற்றனர்.

ஜார்க்கண்டில் 2 சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கேரளாவின் செங்கணூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சாஜி செரியன், மேகாலயாவின் அம்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷைரா, மேற்குவங்கத்தின் மகேஷ்தலா தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் துலால் தாஸ்,உத்தராகண்ட் தாரலி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் பாஜக வேட்பாளர் முன்னி தேவி ஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கர்நாடகாவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா 25,492 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் முனி ராஜு கவுடாவை தோற்கடித்தார்.

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடின.

http://tamil.thehindu.com/india/article24053317.ece?homepage=true

  • தொடங்கியவர்

நான்கு திசைகளிலும் தோல்வி - பாஜகவை எச்சரிக்கும் இடைத்தேர்தல் முடிவுகள்

 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மே 28 அன்று, இடைத்தேர்தல் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் நடத்தப்பட்டது. 11 சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி உத்தராகண்ட் மாநிலம் தராளி தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பிற தொகுதிகளில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி தோல்வியையே தழுவியுள்ளது.

பாஜகபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இவற்றுடன் உத்தரபிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பல்கார் மற்றும் பந்தாரா - கோந்தியா மற்றும் நாகலாந்து ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அவற்றில் பல்கார் தொகுதியில் பாஜகவும், நாகலாந்து தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன. மற்ற இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோல்வியையே சந்தித்துள்ளது.

 

 

2014இல் நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த மக்களவை இடைத் தேர்தல்களில் இதுவரை ஒன்றில்கூட வெற்றிபெறாமல், தொடர்ந்து மக்களவையில் தனது பலத்தை இழந்து வந்த பாஜக முதல் முறையாக ஒரு மக்களவை இடைத்தேர்தலில் வென்றிருப்பதும் இம்முறைதான்.

எனினும், தேர்தல் நடந்த மொத்தமுள்ள 15 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளில் நேரடியாக வெறும் இரண்டில் மட்டுமே வென்றுள்ள பாஜக நிச்சயமாக தற்போது கொண்டாடும் நிலையில் இல்லை.

காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட ராஷ்டிரிய லோக் தள வேட்பாளரை ஆதரித்தன.

தனித்து நின்ற பாஜக, கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த எதிர்க்கட்சிகள் இந்த இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதும் தற்போது கவனிக்கத்தக்கது.

2014இல் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 73ஐ பாரதிய ஜனதா கூட்டணி வென்றது. சமீபத்தில் அம்மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதிகளை இடைத் தேர்தலில் இழந்த பாஜக, இப்போது கைரானா தொகுதியையும் இழந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் பெண் வேட்பாளர் தபசும் பேகம் வெற்றி பெற்று, நடப்பு நாடாளுமன்ற மக்களவையில் உத்தர பிரதேசத்தின் முதல் இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினாராகவுள்ளார்.

 

 

அதே மாநிலத்தில் நுர்பூர் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் வென்றுள்ள சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரும், பிகாரில் ஜோஹிகட் தொகுதியில் வென்றுள்ள ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ஆகியோரும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த ஊடகவியலாளர் மணி, "எதிர்க்கட்சிகளாக உள்ள தேசிய மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பாரதிய ஜனதாவை வீழ்த்த முடியும்," என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதாகக் கூறுகிறார்.

நிதிஷ் குமார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாஜக கூட்டணியுடன் பிகார் முதல்வராக உள்ள நிதிஷ் குமார் பணமதிப்பு நீக்கம் குறித்து சமீபத்தில் விமர்சித்துள்ளார்

"தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக அல்லாமல், முன்கூட்டியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தால் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் வெல்ல வாய்ப்புள்ளது," என்று அவர் கூறுகிறார்.

"தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஒன்று சேராமல் பார்த்துக்கொள்ள அக்கட்சித் தலைவர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, அவர்கள் மீது சிறிய வழக்கு இருந்தாலும் அவற்றை வைத்து அவர்களை அச்சுறுத்தி, அவர்களை ஒன்று சேர விடாமல் செய்வதே பாஜகவின் அடுத்த நகர்வாக இருக்கும்," என்று கணிக்கிறார் மணி.

 

 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்ததே அவர்களின் வெற்றிக்கான காரணம் என்ற மணியின் கருத்தையே பிபிசியிடம் பேசிய இன்னொரு மூத்த ஊடகவியலாளருமான வி.எஸ்.சந்திரசேகரும் தெரிவித்தார்.

"இந்த இடைத் தேர்தலின் முடிவுகள் 2019இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று கூற முடியாது. இடைத் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய வெவ்வேறு விவகாரங்களில் அடிப்படையில் எதிர்கொள்ளப்படுபவை," என்கிறார் அவர்.

பாஜகபடத்தின் காப்புரிமைTWITTER@SHIVSENA Image captionஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்

எல்லா மாநிலங்களிலும் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், காங்கிரஸ் கட்சியால் பாஜகவின் பலத்தை பாதியாகக் குறைக்க முடியும் என்று கூறும் அவர், பாஜக பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அதை எதிர்கொள்ள முடியுமா எனும் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்: "இப்போது தங்களுக்கு தோழமையாக இருக்கும் பிராந்திய கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதே பாஜகவுக்கு சவாலாக இருக்கும். பெட்ரோல் விலை உயர்வு, பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களால் நிதிஷ் குமார் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் பாஜகவுக்கு எதிராக முனுமுனுக்கத் தொடங்கிவிட்டனர்."

மூன்றாவது அணி குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஒரு அணியால் பாஜக அல்லாத அரசை அமைக்க முடியாது," என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-44326564

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.