Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பல்லின நாடா? பெரின நாடா?

Featured Replies

இலங்கை பல்லின நாடா? பெரின நாடா?

 

இலங்­கையைப் போன்ற பல­மத, பல்­லின, பல்­மொழி, பல கலா­சார நாட்டில் ஒரு மத, ஒரு இன, ஒரு மொழி, ஒரு கலா­சாரம் எனும் ரீதியில் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­படும் யாப்பு இயற்­றப்­ப­டு­மாயின் அது பல்­லின தேசி­யத்­துக்கும் பல்­லின ஒற்­றை­யாட்­சிக்கும் பல்­லின இறை­மைக்கும் பல்­லின சுய­நிர்­ண­யத்­துக்கும் பொருத்­த­மாக அமை­யாது. இதுவே ஆங்­கி­லேயர் இலங்­கைக்குக் கடை­சி­யாக வழங்­கிய சேர் ஐவர் ஜெனிங்ஸின் சோல்­ப­ரி­ யாப்பு முன்­வைத்த வடி­வ­மாகும். எத்­த­னையோ நாடு­களை ஆட்சி புரிந்து அனு­பவம் பெற்ற அவர்­களின் கணிப்­புதான் இது அர­சியல் அறி­விலும் நிர்­வாகத் தந்­தி­ரத்­திலும் அவர்கள் நுட்பம் மிக்­க­வர்­க­ளாக இருந்­தி­ருக்­கின்­றார்கள். அவர்கள் கால, பயின்ற ஊழி­யர்­களை அகற்­றி­யி­ருக்­கவும் கூடாது. அவர்கள் நம்மை கால­னித்­துவப் படுத்­தி­னார்கள் எனும் வைராக்­கி­யத்­துக்­காக அந்த வடி­வ­மைப்பை மறுத்­தி­ருக்கக் கூடாது. கற்­றுக்­கொள்ள வேண்­டி­யதைப் புறக்­க­ணித்தும் இருக்­கக்­கூ­டாது. இலங்­கைக்கு அவர்கள் இனப்­பி­ரச்­சினை ஏற்­ப­டா­தி­ருப்­ப­தற்­காக வழங்­கிய 29 ஆம் ஷரத்து உல­கமே வியந்து புகழும் ஒன்­றாகும்.

1972 ஆம் ஆண்டு கலா­நிதி கொல்வின் ஆர்.டி. சில்வா குடி­ய­ரசு யாப்பை இயற்­றி­யதன் மூலம் சோல்­பரி யாப்பை மாற்­றினார். அவர் கால­னித்­துவ சட்ட மூலங்­களை மட்­டுமே எடுத்­து­விட்­டி­ருக்க வேண்டும். பல்­லின வடிவை மாற்­றி­யி­ருக்கக் கூடாது. அவர் ஒரு சம­தர்­ம­வாதி என்­ப­தா­லேயே ஏகா­தி­பத்­திய வாதம் எனக் கரு­திய ஆங்­கி­லேய கால­னித்­து­வத்தை கன­கச்­சி­த­மாக முடி­வுக்குக் கொண்டு வந்­தி­ருந்தார்.

சோல்­பரி யாப்பை பாரா­ளு­மன்­றத்தால் இரத்­தாக்க முடி­யாது என சேர் ஐவர் ஜெனிங்ஸ் குறிப்­பிட்­டி­ருந்தார் அல்­லவா? அதனால் தான் கலா­நிதி கொல்வின் ஆர்.டி. சில்வா அர­ச­மைப்புப் பொறுப்பை ஏற்று கொழும்பு ரோயல் கல்­லூரி நவ­ரங்­க­ஹல மண்­ட­பத்தில் எம்.பி. க்களைக் கூட்டி இரத்­தாக்­கினார்.

இந்த அள­வுக்கு நுட்­ப­மான ஒருவர் தனது சம­தர்மக் கொள்­கைக்கு மாறாக குடி­ய­ரசு யாப்பில் பௌத்த மத சாசன, சிங்­கள மொழி வடி­வங்­களைச் சேர்த்து சிறு­பான்மைக் காப்­பீ­டான 29 ஆம் ஷரத்தை ஏன் அகற்­றினார். அந்த வகையில் ஒரு சம­தர்­ம­வாதி பேரி­ன­வா­தத்­துக்கு சட்ட வடிவம் வழங்­கி­யி­ருப்­பதன் மூலம் தனது கொள்­கைக்கே மாறு செய்­து­விட்டார் என்றே கூற­வேண்­டி­யி­ருக்­கி­றது.

பௌத்த மதத்­துக்கும் சாச­னத்­துக்கும் சிங்­கள மொழிக்கும் முன்­னு­ரிமை வழங்கி சிறு­பான்­மைக்­காப்­பீ­டான 29 ஆம் ஷரத்­தையும் நீக்­கி­விட்டு அவர் தனது குடி­ய­ரசு யாப்பில் ஜன­நா­யக சம­தர்ம குடி­ய­ரசு என முன்­மொ­ழிவும் செய்­தி­ருக்­கிறார். பேரின ஜன­நா­ய­கமா? பேரின சம­தர்­மமா? பேரினக் குடி­ய­ரசா? அந்த வகையில் முத­லா­ளித்­துவ வாதி­யான சேர் ஐவர் ஜெனிங்ஸ் சம­தர்­ம­வா­தி­யா­கி­யி­ருக்­கிறார். சம­தர்­ம­வா­தி­யான கொல்வின் ஆர்.டி. சில்வா பேரினவாதி­யா­கி­யி­ருக்­கிறார் என்றே கூற வேண்டும்.

முத­லா­ளித்­துவ வாதி­யான ஜே. ஆரும் கூட சம­தர்­ம­வா­தி­யான கொல்வின் ஆர்.டி. சில்­வாவின் குடி­ய­ரசு யாப்பை 1978 ஆம் ஆண்டு பேரி­ன­வ­டி­வுக்­காக மட்டும் கையாண்டு கொண்டார். அதன் அடிப்­ப­டை­யி­லேயே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இயற்றிக் கொண்டார். 1957 ஆம் ஆண்டு பண்டா –செல்வா ஒப்­பந்­தத்தைக் கிழிக்க வைத்த இவர் இப்­படி செய்து கொண்­டதில் வியப்­பில்லை அல்­லவா?

இவர் நினைத்­தி­ருந்தால் 1978 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் ஆறில் ஐந்து பெரும்­பான்­மையைப் பெற்­றி­ருந்­ததால் சேர் ஐவர் ஜெனிங்ஸின் பல்­லின வடிவை இயற்­றி­யி­ருக்­கலாம் சம­தர்ம கொல்­வினைப் போல் முத­லா­ளித்­துவ ஜே.ஆரும் பேரி­ன­வா­திகள் என்­ப­தா­லேயே அது கைகூ­டாமற் போயி­ருந்­தது.

இவ­ரது திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கைக்கு கொல்வின் ஆர்.டி. சில்­வாவின் பேரின யாப்பு முதல்­தர எதி­ரி­யாகும். சேர் ஐவர் ஜெனிங்ஸின் பல்­லின வடிவ யாப்பே இன்­றி­ய­மை­யா­த­தாகும். ஆக பொருந்­தாத ஒன்றை வைத்­துக்­கொண்­ட­தால்தான் அவ­ரது கொள்கை முழு­மை­யான எதிர்­பார்ப்பை அளிக்­க­வில்லை. இன்றேல் சிங்­கப்பூர், மலே­சியா, ஹொங்கொங் மற்றும் சில நாடு­களைப் போல் இலங்­கையும் பாரிய அபி­வி­ருத்­தியை அடைந்­தி­ருக்கும்.

பௌத்த மதமும் சாச­னமும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­தாலும் அரச கரு­ம­மொழி சிங்­க­ளமே எனப்­பட்­ட­தாலும் முழு­நாட்டின் இறை­மையும் சுய­நிர்­ண­யமும் சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டுமே உரி­யன எனும் கருத்­து­ரு­வாக்கம் தோற்றம் பெற்­றது. இத­னா­லேயே இலங்­கையின் சரித்­திரம் பேரின மயப்­ப­டுத்­தப்­பட்டு பூமி­புத்­திர கொள்­கைக்கு வித்­திட்­டி­ருந்­தது.

ஒரு இனம் சனத்­தொ­கையில் அதி­கமோ? குறைவோ? மத, மொழி, கலை, கலா­சார, வாழ்­விட வர­லாறு ஆகி­யவை ஒருங்கே இருப்பின் அதற்­கென சுய­நிர்­ண­யமும் இறை­மையும் உண்டு. இதுவே சர்­வ­தேச சட்­ட­மாகும். பல்­லின நாட்டில் இன்­னொரு இனம் அது சனத்­தொ­கையில் அதிகம் எனக் காரணம் காட்டி இதன் சுய நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் நிரா­ரிக்­கவோ அப­க­ரிக்­கவோ முடி­யாது.

அந்த வகையில் தமி­ழர்­க­ளதும் முஸ்­லிம்­க­ளதும் சம­பங்­குடன் அன்றி சிங்­க­ள­வ­ருக்கு மட்­டுமே இலங்­கையின் முழு சுய­நிர்­ண­யமும் முழு­ இ­றை­மையும் உரித்­தா­காது. எனவே, கூட்டு சுய நிர்­ணயம் மூலமும் கூட்­டு­இ­றைமை மூல­முமே பல்­லின யாப்பு இயற்­றப்­ப­ட­வேண்டும். இன்றேல் மற்ற இனங்­களின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் ஐ.நா. ஏற்கும் தேசிய இனங்­களின் சுயா­தீ­னத்தை சர்­வ­தேசம் அங்­கீ­க­ரித்­து­விடும். நாடு அல்­லது அரசு வேறாகக் கூடாது எனக் கோஷ­மிடும் தேசப்­பற்­றா­ளர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசத்தின் மீது உண்­மை­யான பற்று இவர்­க­ளுக்கு இருக்­கு­மாயின் இலங்­கையைப் பிள­வு­ப­ட­வி­டக்­கூ­டாது அல்­லவா? இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச சட்­டத்­துக்குப் புறம்­பாக போர்க்­குற்றம் செய்­தது என ஐ.நா. குற்றம் சுமத்தி விசா­ரிக்­கவும் தண்­டிக்­கவும் மஹிந்­தவின் ஆட்­சிக்­கா­லத்தில் முனைந்­தது. ஐ.நா. வுக்கு விசா­ரிக்க உரி­மை­யில்லை. நிகழ்ந்­தது மனி­தா­பி­மான நட­வ­டிக்கை என்­றெல்லாம் மஹிந்த சாட்டு கூறினார். இதனால் இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. வின் பிடி மேலும் இறு­கி­யது.

இந்­நி­லை­யில்தான் மைத்­திரி ஆட்­சி­யேற்­றதும் போர்க்­குற்­றத்தை ஒப்­புக்­கொண்டு பொறுப்­புக்­கூ­ற­லையும் ஏற்றுக் கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்றுக் கொண்டு 30/1 ஆம் ஷரத்துக்கும் நிகழ்ச்சி நிர­லுக்கும் இணங்கி, தவணை கேட்டு ஐ.நா. வின் பிடியைத் தளர்த்­திக்­கொண்டார். எனினும் மைத்­திரி ஆட்­சியின் இறுதி ஆயுட்­கா­ல­மான தற்­போதும் கூட யாவும் நிலு­வை­யி­லேயே நிற்­கின்­றன.

தற்­போதும் கூட சமஷ்டி, பிரி­வினை என்றே பேரி­ன­வா­திகள் கருத்­து­ரைக்­கி­றார்கள். பிரி­வினை கோர­மாட்டேன் எனத் தமிழ்த் தரப்­பினர் உயர் நீதி­மன்­றத்தில் சத்­தியம் செய்தும் கூட ஏற்க மறுக்­கி­றார்கள். சிறு­பான்­மைகள் கோரும் சமஷ்டி நிலை­பெற மத்­திய அரசும் பல்­லின வடிவம் பெற்­றி­ருக்க வேண்டும் என நான் முன்பே கூறி­யி­ருக்­கிறேன். இவ்­வா­றுதான் வலு­வற்ற சமஷ்­டி­யையும் கூட எதிர்க்­கி­றார்கள். சிறு­பான்­மை­க­ளுக்­கான அதி­காரப் பர­வலில் எதை­யுமே வழங்க இவர்கள் மறுக்­கி­றார்கள். இவற்­றுக்­கெல்லாம் காரணம் 1972, 1978 ஆம் ஆண்­டு­களின் பேரின யாப்­பு­களின் மூலம் சிங்­களப் பெரும்­பான்­மை­யினர் முழு ஆதிக்­கத்­துக்­கு­மான உணர்வைப் பெற்­றி­ருப்­ப­தே­யாகும்.

இதனால் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தேசியக் கட்­சிகள் எனக் கூறிக்­கொண்­ட­போதும் பேரி­ன­வ­டிவை மீற முடி­யா­தி­ருக்­கின்­றன. இவற்றின் போலி தேசி­யத்தைத் தெரிந்­துதான் காலப்­போக்கில் தமிழ்க்­கட்­சி­களும் முஸ்லிம் கட்­சி­களும் உரு­வா­கின.

1972 ஆம் ஆண்டு பேரின யாப்பை ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இயற்­றி­யது. 1978 ஆம் ஆண்டு பேரின யாப்பை ஐக்­கிய தேசி­யக்­கட்சி இயற்­றி­யது. தற்­போது இரண்டும் கலந்­து­தானே ஆட்சி செய்­கி­ன்றன. பேரின யாப்பை அகற்­றி­வி­டுமா? உண்­மையில் பேரின யாப்பு மாற்­றப்­பட்டு பல்­லின வடிவம் பெறா­த­வரை இலங்­கையைப் போன்ற பல்­லின நாட்டில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­காண முடி­யவே முடி­யாது. இந்­நாட்டின் இன முரண்­பா­டு­க­ளுக்கும் அழி­வு­க­ளுக்கும் இதுவே கார­ண­மாகும்.

கொல்வின் ஆர்.டி. சில்­வாவும் ஜேஆரும். முழு­மை­யா­கவே பேரி­ன­வ­டிவ யாப்­பு­களை இயற்­றி­யி­ருந்­தார்கள். ஜி.எல். பீரிஸ், சந்­தி­ரி­காவின் அரசில் இருக்­கையில் பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் எனப் பல்­லின வடிவைப் பிரஸ்­தா­பித்­து­விட்டு, இப்­போது பல்­லின யாப்­புக்­கான உரு­வாக்­கத்தை எதிர்க்­கிறார். தற்­போது ஜயம்­பதி விக்­ர­ம­ரத்­ன­விடம் புதிய யாப்­புக்­கான பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

பௌத்த மத சாசன முன்­னு­ரி­மையை அகற்­றக்­கூ­டாது எனவும் சிங்­க­ள­வ­ரி­டமே ஏக அதி­கா­ரமும் தங்கி நிற்கும் ஒற்றை யாட்சி முறையை நீக்­கக்­கூ­டாது எனவும் தலைமைப் பிக்­கு­களும் பேரி­ன­வா­தி­களும் அவ­ருக்கு கடும் அழுத்­தங்­களைக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­ன்றார்கள். இவற்றை எதிர்­கொள்ள முடி­யாது இவர், பல்­லின யாப்பை இயற்றத் தவ­று­வா­ராயின் பழைய யாப்­புக்­களைப் போன்றே இதுவும் இனப்­பி­ரச்­சி­னையை மேலும் கூட்­டவே உதவும். புதிய யாப்­புக்­கான அவ­சரத் தேவை என்ன? இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்கு இனங்­க­ளுக்கு மத்­தியில் அதி­காரப் பரவல் செய்­வ­தே­யாகும். அந்த நோக்கம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன அவ்­வாறு இயற்­றி­னாலும் கூட பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மை­யிலும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிலும் நிறை­வே­றுமா? தற்­போ­தைய அர­சியல் சூழலில் அது சாத்­தி­யமா?

முன்பு மஹிந்த தரப்­பினர் அவர் மின்­சாரக் கதி­ரைக்குப் பலி­யாகப் போகிறார் என்று அனு­தா­பத்தைத் திரட்­டி­னார்கள். அது போர்க் குற்­றத்தை மறுத்து ஐ.நா. வுக்கு எதி­ராக அவர் முரண்டு பிடித்­ததால் எழுந்த சூழ­லாகும். மைத்­திரி போர்க் குற்­றத்தை ஏற்றுக் கொண்டு,பொறுப்­புக்­கூ­ற­லையும் ஒப்­புக்­கொண்டு இணை­அ­னு­ச­ர­ணையைப் பெற்று 30/1 ஆம் ஷரத்துக்கும் நிகழ்ச்சி நிர­லுக்கும் இணங்கி தவணை பெற்ற பின் மஹிந்­த­வுக்கு அந்த சூழல் இல்லை, இரா­ணு­வமும் தப்­பி­விட்­டது.

எனினும் பொறுப்­புக்­கூ­றலை ஏற்று இணை அனு­ச­ர­ணை­யை­யும்­பெற்று 30/1 ஆம் ஷரத்தையும் நிகழ்ச்சி நிர­லையும் காலக்­கெ­டு­வையும் ஒப்­புக்­கொண்­ட­படி முழு­தாக நிறை­வேற்­றி­யாக வேண்டும். மைத்­தி­ரியால் மஹிந்த தப்­பி­ய­போதும் மஹிந்­த­வி­னதும் இரா­ணு­வத்­தி­னதும் சுய­ம­ரி­யா­தையை ஐ.நா. வில் மைத்­திரி இழக்கச் செய்­து­விட்டார் என்றே பேரி­ன­வா­திகள் குறிப்­பி­டு­கி­றார்கள்.

ஐ.நா. விடம் பொருந்­தி­ய­படி செயற்­பட உள்­நாட்டு அர­சியல் சூழல் ஒத்­து­வ­ர­வில்லை. சிங்­களப் பெரும்­பான்­மை­களை ஆசு­வா­சப்­ப­டுத்தி மெது­வா­கத்தான் நிறை­வேற்ற வேண்டும். பெரும்­பான்மைச் சமூ­கத்தைப் பகைத்துக் கொண்டு சிறு­பான்­மை­களின் உரி­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்த முடி­யாது. நாம் ஐ.நா. வோடு முரண்­ப­ட­வில்­லையே. நல்­லி­ணக்கம் கண்­டு­தானே இருக்­கின்றோம். இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தா­யினும் நாட்டின் சூழல் முறைப்­படி அமை­ய­வேண்­டுமே 30/1 ஆம் ஷரத்தை நிறை­வேற்றி முடிக்க ஆட்­சியின் ஆயுட்­காலம் போதாது. நிகழ்ச்சி நிரல் அப்­ப­டியே இருக்­கி­றது மேலும் தவ­ணைக்­காலம் வேண்டும் என்­றெல்லாம் கூறிக்­கொண்­டி­ருக்க முடி­யாது.

ஐ.நா. வின் கவ­னத்­தி­லி­ருந்து சிங்­கள மக்­களைத் திசை­தி­ருப்­பவும் தமிழர் பிரச்­சி­னையை மறைக்­கவும் புதுப்­புது பிரச்­சி­னை­களை முன்­வைத்துக் கொண்­டி­ருக்­கின்றார்கள். திடீ­ரென முஸ்­லிம்கள் பர­வ­லாகத் தாக்­கப்­பட்ட காரணம் என்ன? அர­சுக்குள் சிலர் ஊழல் செய்­த­தாக ஜனா­தி­பதி மைத்­திரி குற்றம் சுமத்­தி­விட்டு விசா­ரிக்­காமல் விட்­டது ஏன்? குழப்­ப­க­ர­மான முறையில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­தி­யது ஏன் ? 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைக்கு எதி­ராக மக்­க­ளாணை கிடைத்­தி­ருந்தும் கூட மீண்டும் 2020 ஆம் ஆண்டும் கட்­சி­க­ளுக்குள் இழு­ப­றியை உரு­வாக்­கி­யி­ருப்­பது ஏன்? இனங்­க­ளுக்­கி­டை­யிலான தீர்­வையும் அதற்­கான யாப்­பையும் அடிக்­கட்­டுக்குப் போடு­வ­தற்­கான தந்­தி­ரங்களா?

இவ்­வாறு வேறு பல விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வ­ம­ளித்து இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் அதற்­கான யாப்­பையும் உதா­சீ­னப்­ப­டுத்­து­வார்­க­ளாயின் குறித்த தவ­ணைக்­கா­லத்­துக்குப் பின் ஐ.நா. விடம் மேலும் இறுக வேண்­டி­யி­ருக்கும். தேசியப் பிரச்­சி­னை­களைத் தீர்க்க வேண்­டு­மெனில் அறுதிப் பெரும்­பான்மை இருக்க வேண்டும். அதற்கு இரு பெருங் கட்­சி­களும் இணை­வது அவ­சி­ய­மா­கி­றது. இதன் மூலம் சுல­ப­மாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­க­ளைக்­கண்டு அதற்­கான யாப்­பையும் இயற்­றிக்­கொள்­ளலாம் என்றே எதிர்­பார்க்­கவும் பட்­டது.

எனினும் மைத்­தி­ரி­யோடு அவ­ரது கட்­சி­யி­னரில் முக்காற் பங்­கினர் இல்லை. எனவே, இரு கட்­சி­களின் மூலமும் அறுதிப் பெரும்­பான்­மையைப் பெறும் வாய்ப்பு இல்லை. சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு மூலமும் சாத்­தி­ய­மில்லை. காரணம், இரு பெருங் கட்­சி­க­ளிலும் பேரி­ன­வா­திகள் ஏரா­ள­மாக இருக்கின்றார்கள். அவர்­க­ளிடம் கட்சி ரீதி­யாக எதிர்ப்­பு­நிலை இருந்­த­போதும் சிறு­பான்­மை­களைக் கட்­டுக்குள் வைத்­தி­ருக்கும் விட­யத்தில் வித்­தி­யாசம் இருக்­காது. இவை ஒழுங்­கான தேசிய கட்­சி­க­ளாக இருந்­தால்தான் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்­சிகள் உரு­வாகும் தேவை இருக்காதே.

எனினும் அதி சீக்­கிரம் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு கண்டு அதற்­கு­ரிய யாப்பு இயற்­றப்­ப­டா­விட்டால் ஸ்ரீ மாவோவின் பிர­ஜை­க­ளுக்­கான குடி­ய­ரசும் ஜே.ஆரின் திறந்த பொரு­ளா­தா­ரமும் கண்ட பின்­ன­டை­வு­களை விடவும் பாரி­ய­வி­ளைவே ஏற்­படும். காரணம் அவை சர்­வ­தேச அரங்­குக்குப் போக­வில்லை. இது சர்­வ­தேசக் கூண்டில் ஏற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.

இனப்­பி­ரச்­சி­னையால் எழுந்த உள்­நாட்டு இடர்­க­ளி­லி­ருந்தும் சர்­வ­தேசப் பிடி­யி­லி­ருந்தும் கழ­று­வ­தெனில் இனியும் பாரா­மு­க­மாக இருக்கக் கூடாது. எந்த இனமும் மற்­றைய இனத்தைக் காவு­கொண்டு வாழு­மாயின் அதை சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரிக்­காது. ஓர் இனத்தை அடக்­கு­மு­றைக்கு உட்­ப­டுத்தும் மற்ற இனத்தை சர்­வ­தேச சமூகம் தனி­மைப்­ப­டுத்தி அடக்கு முறைக்கு உள்­ளாக்­கப்­பட்ட இனத்தின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் அங்­கீ­க­ரிக்கும்.

உலகில் பல்­லின நாடுகள் 300 க்கும் அதி­க­மாக இருக்­கின்­றன. பேரின நாடுகள் 10 க்கும் குறை­வா­கவே இருக்­கின்­றன. இலங்கை ஒரு பல்­லின நாடே­யாகும். இதைப் பேரி­ன­வ­டிவில் ஆளவே முடியாது. இதை நான் முன்பும் கூறியிருக்கின்றேன். அப்படி ஆள முற்பட்டதால்தான் இத்தனை அழிவுகளும் ஏற்பட்டு மீளமுடியாதிருக்கிறது.

இது புத்தரின் தேசம், சிங்களவரே பூமிபுத்திரர்கள் என்கிறார்கள். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர், மலே ஆகியோர் வாழும்நாடு என்று மட்டுமே சொல்கிறார்கள். அதாவது புத்தருக்குரிய சிங்களவரின் நாட்டில் மற்றவர்கள் வாழ்கிறார்களாம். அந்த வகையில் முழுநாட்டினதும் இறைமையும் சுயநிர்ணயமும் பௌத்த சிங்களவருக்கே உரியன என்கின்றார்கள். இறைமை என்பது இருப்புரிமையாகும். சுயநிர்ணயம் என்பது தீர்மானிக்கும் உரிமையாகும். இவை இரண்டும் ஒரு பூர்வீக இனத்தின் அடிப்படைகளாகும்.

அந்த வகையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இனக்குழுமங்களுக்கான சகல அடிப்படை அடையாளங்களும் இருப்பதால் தனித்தனி இறைமைகளும் சுய நிர்ணயங்களும் இருக்கவே செய்கின்றன. இத்தகைய இறைமையும் சுய நிர்ணயமும் உள்ளதே தேசியமாகும். ஆக தமிழ்த் தேசியம், முஸ்லிம் தேசியம் எனலாம். இவையாவும் ஒன்று சேர்க்கப்பட்டே பல்லினத் தலைவர்களால் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டு 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் பெறப்பட்டது. ஜே.ஆர். பேரின யாப்பின் மூலம் ஐக்கிய தேசியக்கட்சியை சிங்கள தேசியக் கட்சியாக ஆக்கியிருந்தார். எனவே, ரணில் எதிர்காலத்தில் அதை உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியாக மாற்றியமைக்க வேண்டும். அல்லது ஜாதிக (தேசிய) என்பது ஜாதிய (இனம்) என்றாகி உடரட்ட, பஹதரட்ட, சப்ரகமுவ எனும் முச்சிங்கள மக்களின் ஐக்கிய கட்சியாகிவிடும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.