Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் உள்நாட்டுப் போர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கும் உள்நாட்டுப் போர்

[28 - March - 2007]

இலங்கையின் சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் முதற்தடவையாக அரசாங்கப்படைகளுக்கு எதிராக விமானத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்திருக்கிறார்கள். நாட்டின் ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் விமானப்படையின் பிரதான தளத்தின் மீது நேற்று முன்தினம் திங்கட்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப பிரதிபலிப்புகளை வெளியிட்டிருக்கின்ற போதிலும், இப்போது உள்நாட்டுப்போர் புதியதொரு கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வடக்கு, கிழக்கில் முப்படைகளும் தீவிரப்படுத்தியிருக்கின்ற இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக விடுதலைப் புலிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவதாக அரசாங்கத்தரப்பினர் கூறிக்கொண்டிருக்கின்ற வேளையில், கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல் இராணுவ மற்றும் அரசியல் அவதானிகள் மத்தியில் ஒருவகை தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் தொடர்பாக இரு தனித்தனியான விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருக்கும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் அரசாங்கம், பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றும் சர்வதேச விமான நிலையமும் அதன் சுற்றாடலும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறது. இத்தாக்குதலை பாரதூரமான ஒன்றாகக் காட்டிக்கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை என்று தெளிவாகத்தெரிகிறது. நேற்று முன்தினம் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய ஊடகத்துறை மற்றும் தகவல் அமைச்சர் அநுரா பிரியதர்ஷன யாப்பா, `தோல்வியில் முடிந்த விடுதலை புலிகளின் விமானத்தாக்குதல் வடக்கு, கிழக்கின் ஆயுதப்படைகளின் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவிக் கொண்டிருக்கும் மிக் -27 போர் விமானத்தை இலக்காகக் கொண்ட ஒரு சதிமுயற்சியே. விமானப்படையினர் உகந்த நேரத்தில் எடுத்த பொருத்தமான நடவடிக்கை காரணமாகவே, விடுதலைப்புலிகளின் முயற்சி வெற்றி பெறவில்லை ' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு விமானத்தையே விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக இராணுவம் கூறுகின்றது. ஆனால், தங்களின் இரு சிறியரக விமானங்களே தாக்குதல்களை மேற்கொண்டதாக விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருக்கிறார்கள். வன்னியில் இருந்து கிளம்பிய விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அருகே வந்து தாக்குதலை நடத்திவிட்டு எந்தவித எதிர்ப்பையும் சந்திக்காமல் திரும்பிச் சென்றிருக்கின்றன என்றுதான் கூற வேண்டும். பறந்து வரவும் திரும்பிச் செல்லவுமாக குறைந்தது 600 கிலோமீற்றர் தூரம் இந்த விமானங்கள் பயணம் செய்திருக்க வேண்டும்.

சுமார் இரு மணித்தியாலங்களுக்கேனும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் வானத்தில் இருந்திருக்க வேண்டும். இலங்கையின் உள்நாட்டுப் போரின் வரலாற்றில் விடுதலைப்புலிகள் முதற்தடவையாக விமானத் தாக்குதல் நடத்தியிருப்பதன் விளைவாக தோன்றியிருக்கும் நிலைவரத்தை பாரதூரமானது என்று வர்ணித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திடம் உதவியை நாடியிருக்கிறார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகைக்கு அழைத்து நிலைவரங்களை ஆராய்ந்திருக்கிறார். இந்தச் சந்திப்பையடுத்து இக்கட்சிகளினால் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் `விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பொன்றிடம் விமானத் தாக்குதலை நடத்தும் வல்லமை இருக்கின்றமை இலங்கைக்கு மாத்திரமல்ல, தெற்காசியப் பிராந்தியம் முழுவதுக்குமே பாரிய அச்சுறுத்தலாகும். இந்த நிலைவரம் குறித்து உகந்த மதிப்பீட்டை உலக சமுதாயம் செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது தோன்றியிருக்கும் பாதுகாப்பு நெருக்கடியை ஆராய உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் எழுதியிருக்கிறார். அதேவேளை, ஜதனா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களைக் கவனத்தில் எடுக்காமல், அரசாங்கம் சமாதான முயற்சிகள் எனப்படுபவற்றை உடனடியாகக் கைவிட்டு விடுதலைப் புலிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டுவதற்கான போரை முழு மூச்சுடன் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றது. ஜே.வி.பி.யிடமிருந்து இத்தகைய கோரிக்கையொன்றைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை/

உண்மையிலேயே, இன்று தோன்றியிருக்கும் நிலைவரத்தை தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவகையாக நோக்கப்போகின்றது என்பதைப் பொறுத்தே எதிர்கால அரசியல் - இராணுவ நிகழ்வுப் போக்குகள் அமையப்போகின்றன என்பதில் சந்தேகமில்லை. இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் என்று சொல்லப்படுபவை வெறுமனே ஒப்பாசாரத்துக்கானவையாக மாறியிருக்கும் பின்னணியில் அண்மைக்காலமாக இராணுவத் தீர்வை நோக்கிய முனைப்பை தாராளமாகவே காணக்கூடியதாக இருந்திருக்கின்றது.

உள்நாட்டுப் போரில் தற்போது ஏற்பட்டிருக்கும் `திருப்புமுனை'யும் இந்த இராணுவ முனைப்பின் ஒரு விளைவேயாகும். மோதல் தணிவுக்குப் பதிலாக மோதல்களைத் தீவிரப்படுத்தும் அணுகுமுறையைக் கையாளும்போது அனர்த்தத்தனமான விளைவுகளே கிடைக்கும். இன நெருக்கடிக்கு இராணுவ ரீதியான தீர்வொன்றைக் காணமுடியுமென்று சிங்கள மக்களை மீண்டும் நம்பவைக்கும் விபரீதமான பிரசார இயக்கங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கு

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.